விஜய் நடத்திய அரசியல் மாநாட்டின் அதிர்வுகள் தொடர்கிறது. ‘பாஜகவால் களத்தில் இறக்கிவிடப்பட்டவர்’ என்ற பேச்சுக்கள் உண்மையா. ..? தொடக்கம் சிறப்பாக உள்ளது என்றாலும், தொடர்ந்து நடை போடுவதற்கான இரண்டாம் கட்டத் தலைவர்களும், கட்சி கட்டமைப்புகளும் எப்படி உள்ளன? ஒரு அலசல்;
எந்தவித முன் முடிவும் இல்லாமல் திறந்த மனதோடு விஜய்யின் த.வெ.க அரசியல் மாநாடு குறித்து நான் நேற்றைய தினம் எழுதிய கட்டுரை பெரும்பாலானவர்களின் வரவேற்பை பெற்றுள்ள போதிலும், சிலர் நீங்களா இப்படி எழுதுகிறீர்கள்? விஜய்யின் அரசியல் மாநாட்டை தறுமாறாக கிழித்து தொங்கவிடுவீர்கள் என்றல்லவா எதிர்பார்த்தோம்..? என்றெல்லாம் கேட்டனர்.
இது வரையிலான நடிகர் விஜய்யின் பூடகமான அரசியல் பற்றியும், கொள்கை இல்லாத நிலைபாடு குறித்தும் கடுமையாக நான் பல கட்டுரைகள் அறம் இதழில் எழுதியுள்ளேன்! ஆனால், தற்போது தன் கொள்கை நிலைபாட்டை இன்னதென தெளிவாக கூறிய பிறகு – அது சரியானதென – நான் உணரும் போது தாக்க வேண்டிய அவசியமில்லை. அதே சமயம் சொல்லொன்றும், செயலொன்றுமாக நடந்தால் விமர்சிப்பேன்.
மேலும், ஒரு மாற்று அரசியல் சக்திக்கான எதிர்பார்ப்பு நீண்டகாலமாகவே தமிழக மக்களிடம் மேலோங்கியுள்ள நிலையில், அந்த மாற்று சக்தியாக ஒருவர் நல்ல கொள்கைகளை முன்னிறுத்தி வரும் போது, எடுத்த எடுப்பிலேயே சந்தேகமாகவோ, குதர்க்கமாகவோ பார்ப்பது ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்காது.
இப்போதும் சொல்கிறேன். நல்ல கொள்கையை பேசியதாலேயே ஒருவரை முழுமையாக ஆதரித்துவிட முடியாது. ஆனால், தொடக்கம் சிறப்பாக இருக்கிறது என்று சொல்லத் தோன்றியது. எனவே, அதை ஏன் மனதிற்குள் மறைக்க வேண்டும்.
விஜய்யின் த.வெ.கவை எதிர்ப்பவர்கள் வைக்கும் கடும் தாக்குதல்களை பார்ப்போம்;
# திமுகவை எதிர்ப்பதற்காக களம் இறக்கப்பட்டு இருக்கிறார். அதனால், திராவிடக் கருத்தியலையே பேசியவாறு எதிர்த்து அதை காலி பண்ணப் பார்க்கிறார்.
# விஜய் பேசியதெல்லாம் பாஜகவினர் எழுதி தந்த வசனங்கள்.
# எம்.ஜி.ஆரை புகழ்ந்தார். ஆகவே, எம்.ஜி.ஆரை போல மோசமான ஆட்சியையே தருவார்.
# திமுகவை அழிக்க களம் இறக்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர். அவர்கள் தான் அழிந்தனரே அன்றி, திமுக அழியவில்லை.
இப்படியான கருத்துக்களை பேசுபவர்களின் நோக்கம், ‘திமுகவை பாதுகாக்க வேண்டும். விஜய் வருகையால் அது வலுவிழந்துவிடக் கூடாது’ என்ற பதற்றமே மேற்படி விமர்சனங்களுக்கு காரணமாகும்.
தமிழகத்தில் திராவிடக் கருத்தியலுக்கான தேவை இப்போதும் இருக்கிறது. அந்தத் தேவையை எந்த இயக்கம் சிறப்பாக நிறைவேற்றுகிறதோ, அந்த இயக்கத்தை மக்கள் அழியவிட மாட்டார்கள். திமுக அழிகிறதென்றால், அது திராவிடக் கருத்தியலை வெறும் பேச்சளவில் கொண்டு, நிஜத்தில் அதற்கு எதிராக செயல்படுகிறது என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியும். ஆக, திமுகவை அதன் இன்றைய தலைமை தான் அழித்துக் கொண்டுள்ளது.
விஜய் பாஜகவோடு மறைமுக உறவு வைத்திருக்கிறார் என குற்றம் சாட்டும் திமுக ஆதரவாளர்கள், இன்றைய திமுக தலைமை பாஜகவின் செயல் திட்டங்களை திமுக அரசு தமிழகத்தில் அமல்படுத்தி வருவதை ஏன் பேச மறுக்கிறார்கள்?
# தேசிய கல்வித் திட்டம் பள்ளிக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரை வெகு தீவிரமாக அமலாக்கப்படுகிறது. கல்வித் துறையில் சனாதன நோக்கங்கள் அமைதியாக சாத்தியப்படுத்தப்படுகின்றன.
# விவசாய விளை நிலங்களை உள்ளாட்சிகளின் விருப்பத்தை மீறி கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கும் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி அமல்படுத்தி வருகிறது.
# பாஜக கொண்டு வந்த தொழிலாளர் விரோத சட்டங்கள் அச்சுபிசகாமல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.
# போக்குவரத்து விதிமீறல்களுக்கான கொடூரமான அபராதங்கள் பாஜக கொண்டு வந்த சட்டமே!
இது போல பத்துக்கு மேற்பட்ட விவகாரங்களை பட்டியலிட முடியும். தங்கள் விழாக்களுக்கு பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் அழைத்து நெருக்கம் பாராட்டி வரும் திமுகவினர நோக்கி பாஜகவுடன் கள்ள உறவு பேணிக் கொண்டு திராவிட மாடல் வசனம் எதற்கு? எனக் கேட்கலாமே!
திமுக தலைமையும், அமைச்சர்களும் பாஜக தலைமைக்கு கப்பம் கட்டி சரி கட்டினாலும் , பாஜக தலைமை எப்போது வேண்டுமானாலும் இவர்களை தூக்கும். அமலாக்கத் துறை, வருமான வரித் துறையை ஏவும். அப்போது வெளிப்படையாக சரணாகதியாகி கூட்டணி வைக்கும் சூழல் உருவாகிடும்.
இன்றைய ஆளும் ஊழல் திமுக அரசை வலுவாக கேள்வி கேட்கவும், அதன் ஊழல்களை தட்டிக் கேட்கவும் பிரதான எதிர்கட்சியான அதிமுக தன் தார்மீகத் தகுதியை இழந்து கிடக்கிறது.
இது தான் விஜய்யின் அரசியல் மாநாட்டுக்கு கிடைத்த வரவேற்புக்கான பிரதான காரணமாகும். ’விஜய்க்கு பின்னணியில் பாஜக இருக்கலாம்’ என்ற யூகத்தின் அடிப்படையில் நாம் எதிர்க்க முடியாது. அப்படி இருந்தால், அது விரைவில் வெளிப்பட்டுவிடும். அப்போது கண்டிப்பாக எதிர்க்கலாம்.
அதே சமயம் மிக நெருக்கத்தில் இருக்கும் வலுவான எதிரியை சமாளித்து எதிர்கொள்ள, அந்த எதிரிக்கு எதிரியை பயன்படுத்திக் கொள்வதும் அரசியல் ராஜதந்திரங்களில் ஒன்றே. அதனால், மத்தியில் உள்ள பெரிய எதிரியையும், மாநிலத்தில் உள்ள வலுவான எதிரியையும் இப்போது தான் பிறந்த ஒரு புதிய கட்சியால் ஒரே நேரத்தில் எதிர்க்க முடியாது…என்பதே யதார்த்தம். திமுகவை எதிர்ப்பதால் த.வெ.கவை உடனே அழித்துவிடாமல், பாஜகவானது ‘பிறகு பார்க்கலாம்’ என சற்றே விட்டு வைக்கும். ஆம் ஆத்மியை சற்றே விட்டுப் பார்த்து அழிப்பது போல, த.வெ.கவிற்கும் நேரம் குறித்து வைத்திருக்கும்.
அதே சமயம், ’75 வருட அடித்தளமுள்ள திமுகவை எதிர்க்கும் அளவுக்கு வலுவானது தானா தமிழக வெற்றிக் கழகம்’ என்ற சந்தேகம் எழாமலில்லை.
தற்போது வரை அந்தக் கட்சியில் விஜய்க்கு அடுத்தபடியாக நன்றாக அறியப்பட்ட ஒரே நபர் புஸ்லி ஆனந்த் தான்! அவரைப் பற்றியும் இது வரை ஒரு ஆரோக்கியமான பிம்பம் ஏற்படவில்லை.
இரண்டாம் கட்ட வலுவான தலைவர்களின் அணி வகுப்பு இல்லாமல் ஒரு இயக்கம் நிலைத்து காலூன்ற முடியாது. ‘ஒன்மேன் ஷோ’வாக செயல்படும் இயக்கம் ஒரு கட்டத்திற்கு மேல் நகராது. இது தான் நாம் தமிழர் இயக்கத்தின் பிரதான பலவீனம்.
இவ்வளவு பெரிய அரசியல் மாநாட்டில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பற்றிய அறிமுகம் சரியாக கிடைக்கவில்லை. சும்மா பேருக்கு நான்கு பேரை தன்னோடு விஜய் அமர வைத்து பேச வைத்துள்ளார்.
மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் பக்கத்து மேடையில் கொலு பொம்மையாக உட்கார்ந்து எழுந்து சென்றனர். ஒவ்வொருவரையும் அழைத்து குறைந்தபட்சம் ஒரு நிமிட அறிமுகத்திலாவது வெளிச்சம் தந்திருக்கலாம். அது அந்தந்த மாவட்டத்தில் அவர்கள் மேலும் வீரியமாக செயல்படும் உத்வேகத்தை தந்திருக்கும்.
பல சிற்றூர்களில், மாநகர்களில் தவெகவின் கிளை அலுவலகத்திற்கு இடம் கிடைப்பதைக் கூட லோக்கல் திமுக- அதிமுக புள்ளிகள் சேர்ந்து தடுத்துக் கொண்டிருப்பது விஜய்க்கு தெரியுமா? தெரியாதா?
பல ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கூட விஜய்யை சுலபமாக சந்தித்து பேச முடியாத நிலை உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், அந்த இயக்கத்திற்கு எதிர்காலமே கிடையாது.
த.வெ.க.வில் முக்கிய பொறுப்புக்கு வருவதற்கே பணம் தந்தால் தான் வாய்ப்பு என்ற பேச்சை கேட்க முடிந்தது. இந்த நிலை ஆரோக்கியமான ஒரு இயக்கத்திற்கு அடையாளமல்ல.
ஆகவே, மக்கள் பணி என வந்துவிட்ட பிறகு, விஜய் தன்னுடைய உச்சபட்ச நடிகர் என்ற பிம்பத்தை தூக்கி எறிந்து விட்டு, தொண்டனுக்கு தொண்டனாக பட்டி தொட்டி எங்கும் களம் காணவில்லை என்றால், பெருகியுள்ள ஆதரவை தக்க வைக்க முடியாது.
இன்றைய நிலையில் மாவட்டம், ஒன்றியம் கிளை என பகுதி வாரியான முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி என பத்து அணிகளின் நிர்வாகிகள், 122 கவுன்சிலர்கள், இரண்டு பஞ்சாயத்து தலைவர்கள் என அந்தக் கட்சியில் பல்லாயிரக் கணக்கில் நிர்வாகிகள் உள்ளனர். இவர்களில் ஐநூறு பேர்களிடமாவது விஜய் தனிப்பட்ட முறையில் நல்ல தொடர்பில் இருக்காவிட்டால், கட்சி அடுத்த கட்டத்திற்கு ஆரோக்கியமாக வளராது.
அரசியல் கட்சி என்பது மனித உறவுகளை, உணர்வுகளை சரியாக கையாளும் ஒரு கலையாகும். மாநாட்டுக்கு வருகின்ற வழியில் உயிர் நீத்த கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு கூட , இது வரை விஜய் இரங்கல் தெரிவிக்கவில்லை என்பதை எளிதல் கடக்க முடியாது.
சாவித்திரி கண்ணன்
Utterly disappointing… Savithiri kannan(SK) is habitually joyful whenever he sees something anti-dmk. The matter of support for TVK is also in this line only. Instead of ciritically analysing the ideology( if any!?) put forth by TVK, he keeps his advising TVK on building the party which he can very well advise the concerned privately. Alternate politics is not new to TN. SK should attempt to compare TVK ideologically with VCK, Left parties and say what TVK says new now which the VCK, left parties have not said or struggled for so far. What Cutouts put there also show a different story… In TN political arena, dravida concept was well articulated and estabilished by Aydheedasar much before Periyar… When periyar, kamaraj, anjalai,velu naachi,etc are there in cutouts, why the likes of Aydheedasar, irattaimalai seenivasan,gurusamy,etc were ‘hidden’ or sidelined? is it the alternate SK is praising? TVK kept quiet on so many important issues like globalisation, privatisiation,crony capitalism, land reforms (yet to happen in TN), decentralisation of TN land,economical,social, religious, political,ruling power centres, etc… Is this the alternate of TVK, SK is gleeful to support? Altleast let SK try to compare the TVK with alternate political forces like VCK,left and periyar movements and come out with logics to show why people have to support TVK?
அறம் இணைய இதழ் ஆசிரியர் சாவித்திரி கண்ணன் எப்போதுமே எதிர்வினை கருத்தினை கூறுபவர் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஆங்கிலத்தில் கன்ஸ் எழுதியுள்ள கருத்தும் அதனையே பிரதிபலித்து உள்ளது.
இன்றைய தேவை திமுக எதிர்ப்பு. ஏன் தெரியுமா? இன்றைய அரசியல் களத்தில் என்ன காரணத்தினாலோ திமுகவின் கூட்டணி கட்சிகளோ எதிர்க்கட்சிகளோ திமுகவை விமர்சிக்க காணோம். ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற விடுதலை சிறுத்தைகள் அடுத்த 24 மணி நேரத்தில் பல்டி அடித்து விட்டது.
கம்யூனிஸ்டு கட்சிகள் பற்றி சொல்லவே வேண்டாம். நான் அறிந்து கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்ட என் நண்பர் ஒருவர் கல்வி பிரச்சினைகள் குறித்து அதிமுக ஆட்சியின் போது தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்து விமர்சனம் செய்து வந்தார். அப்போது திமுகவும் அதே கருத்துக்களை முன்னெடுத்து செய்தது.
ஆனால் ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு திமுக, கல்வி மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் எதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்ததோ அத்தனையையும் நடைமுறைப்படுத்தியது. ஒரு உதாரணம் மக்கள் இன்றுவரை வேண்டாம் என்று போராடிவரும் பரந்தூர் விமான நிலையம். இது போல் இன்னும் பல. கல்வியில் சிறு குறை இருந்தாலே என் கம்யூனிஸ்ட் நண்பர் குதித்து எழுவார். இப்போது பாஜகவின் பல கல்வி கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது ஆனால் அவரது குரல்?
தான் ஆட்சியில் இல்லாத போது எதிர்த்த அத்தனைக்கும் மு க ஸ்டாலின் இன்று மறைமுகமாக ஆதரவு தெரிவித்து மௌனமாக முன்னெடுத்து செல்கிறார். தீவிரமான திமுக தொண்டனுக்கு இது இன்னும் எத்தனை ஆண்டு கழித்து புரிய வருமோ தெரியவில்லை. மற்றவர்கள் தெரிந்தும் ஆட்சி பசை போதை காரணமாக எல்லாவற்றுக்கும் அமைதியாக இருக்கிறார்கள்.
திமுக பேசிப்பேசியே ஆட்சிக்கு வந்தது என்று நேற்று மு க ஸ்டாலின் கூறியுள்ளார். அப்போது படிப்பறிவு இல்லாதவர்கள் அதிகம்.இவர்களுடைய பேச்சுக்கு மகுடி பாம்பாக ஆடினார்கள். இப்போது அப்படியல்ல. பாஜகவை காரணம் காட்டி தன் சொந்த கட்சி தொண்டர்களையே திமுக ஏமாற்றி வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நின்று ஏமாற்றுவதற்கு ஒரு தளம் தேவைப்பட்டது. ஆவின் பால் விலையை குறைத்தார்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள் அனைவரும் முடிந்தார்கள் அவர்கள் மீது ஏறி நின்று அதற்கு பின்னர் விலை உயர்வு கட்டணம் உயர்வு என்று திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீர் ஆனால் குடிக்க முடியாது என்பது போல் ஆட்சி நிர்வாகம். இந்த மூன்றாண்டு காலத்தில் சாதனை என்று சொன்னால் அது துணை முதல்வர் பதவியை உருவாக்கி மகனுக்கு பட்டாபிஷேகம் செய்தது மட்டுமே. இவற்றையெல்லாம் யார் கேட்பது என்பதுதான் கட்சித் தொண்டர்கள் மக்கள் ஆகியோரின் எதிர்பார்ப்பாக இருந்தது. விஜய் செய்வார் என்று நம்புகிறார்கள். நம்புகிறோம் மாநாட்டை பாராட்டும் அதே நேரத்தில் ஏழு பேர் மரணத்திற்கு இரங்கல் கூட தெரிவிக்காத விஜயை கடந்து போவது சற்று கடினமாக தான் உள்ளது. மாநாட்டில் அவருடைய கன்னி பேச்சு. அடுத்து பேசட்டும் பார்க்கலாம்!!
Sir,
Critics can not be just hopeful or believers, rather unbiased analysis is the key requirement. Nobody blindly supports DMK or its rule… eventhough in India alliance, the stand of VCK,left parties on many issues are definitely exerting pressures and people are watching them. Hence this is a sweeping statement//திமுகவின் கூட்டணி கட்சிகளோ எதிர்க்கட்சிகளோ திமுகவை விமர்சிக்க காணோம்//. When every party was started (like ADMK,MDMK,DMDK,TMC,etc), people were expecting… did something useful happened or not?. The likes of VCK,left parties and periyar movements have certain ideological stand on things many important issues like globalisation, privatisiation,crony capitalism, land reforms (yet to happen in TN), panchami land retrieval, social justice( even though confined to govt posts only),secularism… What is the stand of TVK on these? will it be similar to Facism vs Payasam? As SK has been covering, not just TN local bodies, definitely decentralisation of TN’s other spheres like land,economical,social, religious, political,ruling power centres, etc is a must… what is TVK saying abt these?. Why is TVK party, which hurriedly talks abt capturing power in 2026 and willing to give power-sharing to other parties even before knowing its vote share or strength, not brought out its policy document highlighting and placing its core ideologies before the people.. Yes people do expect changes but the question is whether TVK is fit for it or not… Interestingly, SAC as a film director and his wife as a producer,did pattabishegam and made their son as hero. why shedding crocodile-tears over varisu arasiyal?
அரி பரந்தாமன் கட்டுரை அருமை. கட்டுரையைப் படித்தவுடன் முன்னாள் முதலமைச்சர்,இந்நாள் முதலமைச்சரின் தந்தையும் ஆகிய கலைஞர் கருணாநிதி நினைவிற்கு வருகிறார்.
உயர் மட்ட சிகிச்சைக்காக எம் ஜி ஆர் அமெரிக்கா புரூக்ளின் மருத்துவமனையில் இருந்தபோது என்னிடம் ஆட்சியை தாருங்கள் அவர் வந்தவுடன் திரும்ப கொடுத்து விடுகிறேன் என்று பேசினார். அந்த அளவிற்கு பதவி ஆசை.
அதே பதவி ஆசையின் காரணமாக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நடவடிக்கை எடுப்பேன் என்றார் மு.க.ஸ்டாலின். அதில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒன்று. 13 உயிர்கள் பலியாகின. அதனை தொலைக்காட்சி பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்றார் எடப்பாடி. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை ஆண்டு காலம் சென்று விட்டது. ஒரு நடவடிக்கையும் அவர் மீது எடுக்கவில்லை.
மு.க. ஸ்டாலின் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடுத்த தேர்தலுக்கு தயாராகி விட்டார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் மீது எடுக்கப்படாத நடவடிக்கை. இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சரிடம் எப்படி நியாயம் கிடைக்கும் அல்லது எதிர்பார்க்க முடியும்?
கூத்தாடி கையில் நாட்டை கொடுத்தால் அவன் கூத்தாடி கையில் கொடுப்பான்…..சொன்னவர் காமராஜர்…. நடந்ததா இல்லையா??