ஒரு லட்சம் கோடிகளுக்கும் அதிகமான சொத்துள்ள காஞ்சி சங்கரமடத்தின் அடுத்த வாரிசுக்கான நியமணத்தில் உருவான தடைகளை, போட்டிகளை களைந்து, ஒருவழியாக தான் விரும்பியபடியே தன் தெலுங்கு வம்சத்தில் இருந்து ஒரு வாரிசை மடத்தின் அடுத்த பீடாதிபதியாக்கிய விஜயேந்திரரின் காய் நகர்த்தல்கள் சுவாராசியமானதாகும்;
பார்ப்பதற்கு எளிமையாக ஒரு சன்யாசி போல காட்சியளிக்கும் சங்கராச்சாரியார்களும், அந்த மடமும் உண்மையில் ஒரு மாபெரும் சாம்ராஜ்யம். கோடிக் கணக்கில் பணம் புழங்கும் பெரிய கல்லூரிகள், காஸ்டிலியான பள்ளிக் கூடங்கள், அதிக பணம் வசூலிக்கும் மருத்துவமனைகள், ஏராளமான விடுதிகள், ரியல் எஸ்டேட் முதலீடுகள்… என பல வகைத் தொழில்களை அந்த மடம் செய்கிறது.
சரி விஷயத்திற்கு வருவோம்; தற்போதைய சங்கர மடத்தின் அறிக்கை இவ்விதம் தெரிவிக்கிறது;
காஞ்சி காமகோடி பீடம் அதன் 71 வது மடாதிபதியாக ( ஆச்சார்யா ) துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமணிய கணேச சர்மா டிராவிட்டை அபிஷேகம் செய்ய தயாராக உள்ளது. ஏப்ரல் 30-ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் விழாவில், தற்போதைய சாமியார் விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளால் மடத்தில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார். ஆந்திராவின் அன்னவரம் க்ஷேத்திரத்தைச் சேர்ந்த ரிக் வேத அறிஞர் கணேச சர்மா டிராவிட், தெலுங்கானா மாநிலம் பாசராவில் உள்ள ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் பணியாற்றினார். அவர் 2006 இல் வேதப் படிப்பில் தொடங்கினார். ரிக்வேதம் தவிர, யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்கங்கள் மற்றும் தசோபநிஷத்களிலும் அவர் படிப்பை முடித்துள்ளார். சாஸ்திரப் படிப்பையும் படித்து வருகிறார்…’’
இது குறித்து நாம் விசாரித்த போது, ஜெயேந்திரர் ஒரு பெண்ணிடம் ஏற்பட்ட சகவாசம் காரணமாக 1986 ஆம் ஆண்டு தண்டத்தை விட்டுவிட்டு தலைக் காவிரிக்கு ஓடிப் போனார். அப்போதே அவரை தலை முழுகிவிட்டு பெரிய சங்கராச்சாரியாரான சுவாமிநாதன் என்ற சந்திரசேகர் ஆந்திராவில் இருந்த விஜயேந்திரர் என்ற 15 வயது சிறுவனை பீடாதிபதி ஆக்கினார். பிறகு பலரும் தலையிட்டு ஜெயேந்திரரை மடத்திற்கு அழைத்து வந்து பெரியவரை சமாதானப்படுத்தி மூன்று சங்கராச்சாரிகள் கொண்ட மடமாக்கினார்கள்.
பெரியவர் 1994 ஆம் ஆண்டு மறைந்தார். அதன் பிறகு இரண்டு சங்கராச்சாரிகளுக்கும் இடையில் தொடர்ந்து அதிகாரப் போட்டி நிலவி வந்தது. இதில் 2004 ஆம் ஆண்டு கைது செய்யப்படும் வரை ஜெயேந்திரரே ஆதிக்கம் செலுத்தி வந்தார். அதன் பிறகு விஜயேந்திரர் கை ஓங்கியது. சிறையில் இருந்து வந்த பிறகு மீண்டும் தன் அதிகாரத்தை நிலை நாட்ட ஜெயேந்திரர் செய்த முயற்சிகளால் மடத்தில் பல மோதல்கள் நிகழ்ந்தன. கடைசியில் ஜெயேந்திரரை மீறி விஜயேந்திரர் கோடி நாட்டினார் என்பதே வரலாறாகும்.
இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பீடாதிபதி கணேச சர்மா திராவிட்டை அவரது எட்டு வயதிலேயே அடையாளம் கண்டு வளர்த்தெடுத்து வந்தார் விஜயேந்திரர். அவரது அறிவுரைப்படியே அவரும் சொல்வதைக் கேட்டு, படிப்பனவற்றை படித்து, பயின்று தன்னை தயார்படுத்தி வந்துள்ளார்.
இந்தச் சூழலில் மடத்தின் அதிகார மையங்களில் ஒருவரான குருமூர்த்தி, ‘விஜய்மேத்தா’ என்பவரை அடுத்த சங்கராச்சாரியாராக கொண்டுவர முயற்சி செய்தார். அவர் பிராமணர் அல்லாதவர் எனினும், தொழில் அதிபர் அதானியின் சொந்தக்காராம். இதனால் சங்கர கடுமையான எதிர்ப்புக் கிளம்பவே அந்த முயற்சியைக் கைவிட்டார் குருமூர்த்தி. அந்தக் கடுமையான எதிர்ப்பை முன்னின்று நடத்தி விஜயேந்திரருக்கு வெற்றியை ஈட்டித் தந்தவர் சங்கர மடத்தின் மற்றொரு அதிகார மையமான சுப்பிரணியசாமி என்கிறார்கள்.
அவருடைய ஆலோசனைப்படி தான் சங்கர மடத்துக்குள் நிலவும் போட்டி, பகை மற்றும் குழப்பங்களால் மனம் வெதும்பி போயிருந்த விஜயேந்திர சாமிகள் 2023 ஆம் ஆண்டு முழுமையும் காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு வரவே இல்லை. அப்போது அவர் வாரணாசியில் தங்கியபடி கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.
சங்கரராமன் கொலை அனைவருக்கும் ஞாபகம் இருக்கலாம். அவர் சங்கர மடத்தில் நடக்கும் பல மோசடிகளை செய்து வரும் சங்கராச்சாரியார்களை கடுமையாக கடிந்து கொண்டதால் தான் கொல்லப்பட்டார் என்பது கவனத்திற்கு உரியதாகும்.

2004 ஆம் ஆண்டு காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திரர் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் கைது செய்யப்பட்ட போது நடந்த பல கட்ட விசாரணையில் வெளியான ஒரு தகவல் சங்கரமடத்திற்கு 183 வங்கி கணக்குகள் பல்வேறு வங்கிகளில் இருந்தன. அவை அனைத்தும் அப்போது முடக்கப்பட்டன. இந்த வங்கி கணக்கு முடக்கத்தை விலக்கிக் கொண்டு எங்கள் பரோபகாரப் பணிகள் தொடர உதவ வேண்டும் என்றது சங்கரமடம். 183 வங்கிகளில் பல ஆயிரம் கோடிகள் கணக்கு வைத்திருக்கும் சங்கர மடம் என்பது வெளிப் பார்வைக்கு துறவிகள் போல தோற்றமளிக்கும் ஒரு மாபெரும் கார்பரேட் நிறுவனமாகும்.
இதனால் தான் இந்த மடத்தில் பொருளாதார சச்சரவுகள் அடிக்கடி எழும். அதை பஞ்சாயத்து செய்ய ஆடிட்டர் குருமூர்த்தியும், அரசியல்வாதி சுப்பிரமணியசாமியின் தலையீட்டு சமாதானம் செய்வார்கள்.
மேலும் மடத்தில் பணியாற்றுபவர்கள் பல கோடிகளை தங்கள் பங்கிற்கு ஒதுக்கிக் கொள்வதும் சர்ச்சையாகி உள்ளது. ஒவ்வொரு நாளும் பல கோடி ரூபாய் தினசரிப் புழக்கத்தில் இருக்கும் மடத்தின் ஆன்மீகச் செயல்பாடுகளும் நடந்த வண்ணம் இருப்பது தான் விசேசம்..! இப்படிப்பட்ட பெருந்தொகைகளை விஜயேந்திரர் தம்பி ரகுதான் பெரும்பாலும் டீல் செய்கிறார்.
கடந்த 2012ம் ஆண்டு மே 30ம் தேதி பெங்களூரைச் சேர்ந்த ஜெனிசிஸ் நிதி ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ். அசோக் குமார், ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதில், சங்கர மடத்தின் ஐ.சி.சி.ஐ., ஆக்சிஸ், சிட்டி யூனியன் வங்கிக் கணக்குகளில் ரூ. 3,992 கோடி செலுத்தப்பட்டுவிட்டது. இதை மடத்தின் நிர்வாகி ஸ்ரீதரன் என்பவர் உறுதியும் செய்திருக்கிறார். இந்த நன்கொடையைத் திரட்டிக் கொடுத்ததற்கு 2.5% “கமிஷன்” அடிப்படையில் மொத்தம் ரூ. 99.8 கோடி தரப்பட வேண்டும் என்று கோரியது பெரும் சர்ச்சையானது.
முதலாவதாக ஒரே ஆண்டில் சங்கர மடத்திற்கு கிட்டத்தட்ட நாலாயிரம் கோடிகள் கிடைத்துள்ளது என்பது இந்த இரண்டு வங்கி சம்பந்தப்பட்டதில் இருந்து மட்டுமே புலனாகிறது. இதை நன்கொடைத் திரட்டல் என்றும் அதற்கு கமிஷன் வேண்டும் என்றும் கேட்கப்பட்டது.
இறுதியில் அப்படி நன்கொடை திரட்டித் தந்த ஜெனீசிஸ் நிறுவனத்திற்கு கமிஷன் தருவதை தவிர்க்க அந்த நிறுவனத்தின் மீதே சங்கரமடம் குற்றம் சுமத்தி காவல்துறையில் புகார் அளித்தது. ஆயினும் இதில் ’க்ரைம் பிரான்ச்’ சங்கர மடத்தை தோண்டித் துறுவி விசாரித்த நிலையில் அடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக அரசாங்கம் சங்கரமடத்தை காப்பாற்றியது.
அறக்கட்டளை நிறுவனம் என்றால் கம்பெனிகள் சட்டத்தின் (1956) 25-வது செக்சனின் கீழ் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் வருமானவரித்துறைச் சட்டம் செக்சன் ‘80-ஜி’யின் கீழ் சான்றிதழ் பெற வேண்டும். இவற்றை செய்யாமல், தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கிகள் மூலம் அரசு பத்திரத்தில் முதலீடு செய்து ரிசர்வ் வங்கியின் கண்டணங்களைப் பெற்றது, காஞ்சி மடம்.

காஞ்சி சங்கர மடம் என்பதே பொய்யில் கட்டி எழுப்பட்டதேயாகும். இந்த மடம் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டதாக கதை கட்டி வருகிறார்கள். உண்மை அதுவல்ல. 1821ல் கும்பகோணத்தில் தஞ்சாவூர் மராட்டிய மன்னர் பிரதாப்சிங் துள்ஜாஜி என்பவரால் சிருங்கேரி மடக்கிளையாகத் தொடங்கப்பட்டது தான் சங்கர மடம். இந்தக் காலங்களில் மராட்டியர்கள் சிருங்கேரி மடத்துக்கு ஆதரவு கொடுத்து வந்தனர்.1842 ல் கும்பகோணத்தில் சில சர்சைகளில் அடிப்பட்டதால் இடம் விலகி , அப்போது முதல் காஞ்சிபுரத்திலிருந்து செயல்படுகிறது என்பதே உண்மை. அந்த வகையில், தற்போது அடுத்த பீடாதிபதியாக வர உள்ளவர் நிச்சயமாக 71 வது பீடாதிபதி அல்ல.
1921 ஆம் ஆண்டு முதல் சங்காராச்சாரி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பவர். அவரையடுத்தவர் ஸ்ரீ மஹாதேவேந்திர சரஸ்வதி. அவரையடுத்து,
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி (மகா பெரியவர்) (1907–1994)
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி (1954 -2018)
ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி (1983 முதல் )
தற்போது துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமணிய கணேச சர்மா டிராவிட் ஏழாவது பீடாதிபதியாகும்.
சாவித்திரி கண்ணன்
ஆமாங்க. வக்ஃப் 1000 லட்சம் கோடி வசிருக்களாம் . மிசனரி அதுக்கு மேலயும் வச்சுக்காலாம் . அது மட்டும் அறம். அனைவருக்கும் அண்ண தானம். கல்வி சேவை மருத்துவ சேவைகளை தரும் இந்து மத அமைப்பு கூடாது. என்ன ஒரு ஹிந்து மத வெறுப்பு தூண்டல் உங்களின் கட்டுரையில். நீங்க மதமாற்ற நிறுவனத்தின் கைக்கூலி என்று நிரூபணம் ஆகிவிட்டது.
இந்த பத்திரிக்கையே ஒரு அற வேக்காடு பொறம்போக்கு பன்னாடை திக மாதிரி நடத்துவது என்பதால் யாரும் இவன் சொல்வதை நம்புவதில்லை என்பது தான் உண்மை..
Ni ellam thiriyaradhu naala dhan Tamilnadu sabakedu pudichirukku. Mazha illai, panjam eppodhum. Ni poi parthaya da venna, jeyendra Saraswati swamigala pathi pesa unakku enna yogidhai irukku. Ippude seinjavanga kadasi kaalalathula suya ninaive illama, paridhabama poi sendhanga. Ni dhan madathoda auditor pola pesara. Endha religious institute kum funding vara dhan seyyum. Unakku en nogudhu. Tamilnadoda mudhalamaichar kudumba arasiyal pandrangale, adha pesa mateengale. Nalla mannar rule seidhal dhan nalla mazha irukkum. Illana naasa mazha dhan irukkum. Thirundhi pozhaikara vazhiya parunga.
All Corrupt Buggers