மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் விரோதச் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும்,; மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் மாநில அதிமுக அரசு மக்கள், விவசாயிகள் விரோதசட்டங்களை ஆதரிக்கக் கூடாது என வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தஞ்சாவூர் திலகர் திடலில் விவசாயிகளின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
விவசாயத்தையும் விவசாயிகளையும் பொதுமக்களையும் பட்டினிக்கொலை செய்யப்போகும் மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியிலே நடைப்பெரும் “டெல்லிசலோ”(Delhi Chalo )
என்கின்ற விவசாயிகளின் மாபெரும் தலைநகர் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது!
உலகப் பந்தின் மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டமாக கிட்டதட்ட ஒன்றரைக் கோடி மக்களை அணிதிரட்டிய அந்த போராட்டத்தை AIKSCC எனப்படும்(All India Kisan sangrash coordination Committee) அகிலஇந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தான் நடத்தி வருகிறது.
அகில இந்திய கிஸான் மஸ்தூர் யூனியன் தலைவர் திரு.V.M.சிங் அவர்களை தலைவராகவும் திரு.அவிக்ஷா திரு.அக்னிவேஷ் திரு. யோகேந்திரயாதவ் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட அக்குழு கடந்த இரண்டு வருடங்களாக வட இந்திய விவசாயிகள் சங்கங்களை ஒன்று திரட்டி பாஜக அரசுக்கு எதிரான இந்த மாபெரும் எழுட்சி போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
பஞ்சாப் அரியானா இராஜதான் உத்திரபிரதேசம் ,மகாராஷ்டிரா பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு போராடினாலும் தமிழகத்தில் அதன் தாக்கம் குறைவாகவே இருந்தது…
அதைமுடுக்கி விடும் வண்ணம் AIKSCC குழுவின் தமிழகபிரிவு அதன் தலைவர் தோழர்.திரு.பாலகிருஷ்ணன் தலமையில் தஞ்சையில் 29/12/2020 அன்று ஒரு விவசாயப்பேரணியும் தஞ்சை திலகர் திடலில் விவசாயிகளுக்கான பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்தது…
கிட்டதட்ட 50 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை ஒன்று திரட்டி பல்வேறு இயங்கங்களை கலந்து பேசி இதற்கான திட்டமிடல் நடத்த பெற்றது..!
அடிமை எடப்பாடி அரசின் அடக்குமுறைகள்
கொரனா 144 ஊரடங்கு இப்போதும் தொடருவதால் தஞ்சை மாநகராட்சியில் வாய்மொழியாகவே அனுமதிப்பெறப்பட்டது. முதலில் அனுமதித்த அரசு பிறகு யாருடைய நெருக்கடியினாலோ பேரணி நடத்த தடைவிதித்து பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதியளித்தது.
தமிழகம் தழுவிய அந்த பொதுக்கூட்டத்திற்கு ஒருநாள் முன்னதாக வெளிமாவட்டங்களிலிருந்து விவசாயிகள் வருவதற்கு தடைவிதித்தது …
கன்யாக்குமரியில் புறப்பட்ட விவசாய சங்க தோழர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்..அது போல மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகனம் அமர்த்தி புறப்பட்ட விவசாயிகளை தடுத்து நிறுத்தி வாகன உரிமையாளர்களை மிரட்டி தஞ்சை பொதுக்கூட்டத்திற்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது தமிழக காவல் துறை.
இந்த சூழ்நிலையில் தஞ்சையில் அந்த விவசாய பொதுகூட்டம் நடைப்பெற்றது..
ஒருபக்கம் காவதுறை அடக்குமுறை மறுபக்கம் மழை வேறு காலைமுதல் பெய்ந்து கொண்டிருக்க திறந்தவெளி மைதானமான திலகர்திடலில் எந்த அளவு கூட்டம் வருமா? என்ற ஐயப்பாடு நிலவியது.
ஆனால் அனைத்து தடைகளையும் தவிடுபொடியாக்கி விவசாயிகள் அணி அணியாக குடும்பம் குடும்பமாக கூட்டம் கூட்டமாக ஒரு மிகப்பெரிய மாநாடு போல ஆயிரக்கணக்கில் திரண்டிருந்து தஞ்சை மண்ணில் ஒரு மிகப்பெரிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள்…
மாலை சரியாக 5:00 மணிக்கு மக்கள் கலைஇலக்கிய கழகத்தை (மகஇக) திரு. கோவனின் குழுவினரின் கலைநிகழ்ச்சி மற்றும் பறையாட்டம் என மிகச்சிறப்பாக துவங்கியது… அதைத் தொடர்ந்து தியாகி என்.வி.கலைக்குழு ரமேஷ் பாடல்கள், கோவை நிமிர்வு கலையகம், உலகப் பொது இசைப்பறை குழுவின் தப்பாட்டம் ஆகியவை நடைபெற்றன.
மாநாட்டில் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் விண்ணதிரச்செய்தன.
அதனைத்தொடர்ந்து புதுடெல்லி களத்திலே உயிர்நீத்த விவசாய தோழர்ளுக்கு மௌன அஞ்சலி செலுத்த பட்டது.
ஒவ்வொரு விவசாயக் குழுவினரும் தாங்களின் குழுவினருடன் தங்களின் கைகளில் தங்களுடைய சங்ககொடியினை ஏந்தி சாரை சாரையாக அணிவகுத்து வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது..
இந்த பொதுக்கூட்டத்தின் வரவேற்புக்குழு தலைவர் திரு.N.V.கண்ணன் அவர்கள் வரவேற்புரையாற்ற அதனை தொடர்ந்து தலமை தாங்கி நடத்திய திரு.K.பாலகிருஷ்ணன் தலைமையுரையாற்றினார்… அதனைத்தொடர்ந்து நாகை பாராளுமன்ற உறுப்பினர் திரு. செல்வராஜ் அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. துரை சந்திரசேகர் அவர்களும் திரு S.S பழனிமாணிக்கம் MP அவர்களும் இப்பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்..
இந்த உழவர் பொதுக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்த தோழர்கள்..
தோழர்.வே.துரைமாணிக்கம் -தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
தோழர்.சந்திரபோஸ்- அகில இந்திய விவசாயிகள் விவசாயத்தொழிலாளர் சங்கம்.
தோழர்.சு.பழனிராசன்-சமவெளி விவசாயிகள் சங்கம்.
தோழர்.C.முருகேசன் –தமிழர்தேசியமுன்னணி,
தோழர்.கார்மாங்குடி S. வெங்கடேசன்,தமிழ்நாடு&பாண்டிச்சேரி கரும்பு உற்பத்தியாளர் கூட்டமைப்பு
தோழர்.P.கோவிந்தராஜ்- அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்கம்
தோழர்.V.சுப்ரமணியன் -தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
திரு. P.செந்தில்குமார் -தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
திரு. கோ. திருநாவுக்கரசு- தாளாண்மை விவசாயிகள் சங்கம்.
தோழர் T.கண்ணையன்- அகில இந்திய விவசாயிகள் மகாசபை
திருமதி.நா.இராமலெட்சுமி-இராமநாதபுரம் மாவட்ட விவசாய பெண்கள் அமைப்பு .
அரியந்த் திரு. D.கண்ணன் NAPM
தோழர்.E.சரவணமுத்துவேல்- தமிழக விவசாயிகள் சங்கம்
தோழர்.மு.சேரன் – விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு
தோழர்.வீரமோகன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
தோழர். R. அருணாச்சலம் -ஜனநாயக விவசாயிகள் சங்கம்
தோழர். S.நிக்கோலஸ்- திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்கம்
தோழர்.C.நிக்கோலஸ் – தமிழக நிலவுடமை கூட்டமைப்பு.
தோழர். அரசலூர் செல்வம்
தோழர்.வெற்றிவேல் செழியன்- மக்கள் அதிகாரம்
ஆகியோர் முன்னிலையில்..
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் சண்முகம் பேசியதாவது: தஞ்சை இந்த பொதுக்கூட்டத்தை நடத்த விடாமல் ஆளுங்கட்சியினர் கடந்த 3 நாட்களாக சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டனர். ஆனால் அதையும் மீறி ஆயிரக்கணக்கான விவசாயிகள் இங்கு உணர்வு பூர்வமாக பங்கேற்றனர். ஆளுங்கட்சியினர் சென்னையில் தேர்தல் பிரசாரத்தை நடத்துகின்றனர். அங்கு கொரோனா தொற்று வராதா, விவசாயிகள் பொதுக்கூட்டம் நடத்தினால் மட்டும் வந்து விடுமா. ஆளுங்கட்சியினர் வேளாண் சட்டங்களை ஆதரித்து கூட்டங்களை நடத்துவதுபோல் அதை எதிர்த்து கூட்டங்கள் நடத்த எங்களுக்கும் உரிமை இருக்கிறது. இது அரசியல் சாசனம் கொடுத்துள்ள உரிமை.
Also read
டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி விவசாயிகள் சந்தித்து பேசாமல் டிவி, ரேடியோவில் பேசி வருகிறார். மோடி அதிமாக பொய் பேசி வருகிறார். லகிலேயே அதிகம் பொய் பேசியதற்கு மோடிக்கு கின்னஸ் சாதனையாக பாராட்டலாம். மத்திய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளதால் வருங்காலத்தில் உணவுக்கு நாம் கையேந்தும் நிலை ஏற்படும். எனவே தான் இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்கிறோம்.
இந்த சட்டங்களால் 22 லட்சம் விவசாயிகளின் இலவச மின்சாரம் பறிபோகும் நிலை ஏற்படும். டெல்லியில் போராட்டத்தை சுமூகமாக முடிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். நாட்டிலேயே இதுபோன்ற ஒரு போராட்டம் நடந்ததில்லை, இனியும் நடக்கப்போவதில்லை. எனவே மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்’’என்று பேசினார்.
மேலும் தோழர்.பி.எஸ்.மாசிலாமணி -தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
தோழர்.பி.எஸ்..காளிராஜ் -வாழ்க விவசாயி இயக்கம்
தோழர்.கி.வே.பொன்னையன் – தற்சார்பு விவசாயிகள் சங்கம்
தோழர்.சாமிநடராஜன் -தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
தோழர்.. சிம்சன் – அகில இந்திய விவசாய மகாசபை
தோழர்.K.V.இளங்கீரன் -காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு
தோழர்.ஷீலு- தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு
தோழர்.S.குணசேகரன்-, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
தோழர். Dr..ஆ.ரங்கசாமி- அகிலஇந்திய விவசாய தொழிலாளர் சங்கம்
தோழர்.அக்ரி கா.பசுமைவளவன் -விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்.
தோழர்.பொழிலன் – பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு
தோழர்.காளியப்பன்-மக்கள் அதிகாரம்
ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்…
AIKSCC தஞ்சைமாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.பா.பாலசுந்தரம் நன்றியுரைக்கூற அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க,
மூன்று விவசாய சட்டங்களை திரும்பப்பெறக்கோரியும்,
மின்சார சட்டதிருத்த மசோதா 2020ஐ திரும்பப்பெறக்கோரியும்,
மாநில அதிமுக அரசு தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை ஆதரிப்பதை கண்டித்தும், முழக்கங்கள் எழுப்பபட்டு திலகர்திடலே நிரம்பி வழிய அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவால் ஒரு ஆகச்சிறந்த முன்னெடுப்பு நிகழ்த்தப்பட்டது.
தமிழக மண்ணில் இத்துணை விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து பாஜக அரசிற்கு பாடம் புகட்ட தயாராகிவிட்டன..
சிறப்பு தோழர்.