‘அப்பப்பா..என்ன மாதிரி புனிதமானவருய்யா கமல்…’ அப்படின்னு நாம் புளகாங்கிதமடைவோம்னு அவர் நினைக்கிறாரு போல!
”அரசியல் எனக்கு தொழில் இல்லை. என் தொழில் சினிமா. நான் வெற்றி பெற்றாலும் நடிக்கச் செல்வேன்.அந்த சம்பாத்தியத்தில் வாழ்வேன்’’ என்கிறார் கமல். இதன் மூலம் அரசியலை தொழிலாக எடுத்துக் கொண்டு இயங்க முடியாத அவரது மனநிலை நமக்கு நன்றாகவே தெரிய வருகிறது!
முதலாவதாக அரசியலைத் தொழிலாகக் கொள்வதை இழிவாக கருதும் மனநிலையில் இருந்து அவர் விடுபட வேண்டும்! முதலில் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட புனித பிம்பத்தில் இருந்து கமலஹாசன் விடுபட்டு, யதார்த்தங்களை உணர முன்வர வேண்டும்.
‘எனக்குத் தொழில் கவிதை’ என்றானே பாரதி!
எது ஒன்றை நாம் நம் வாழ்வியல் ஆதாரமாகக் கொள்கிறோமோ…, அதுவே தொழிலாகும். எந்த ஒன்றால், இந்த சமூகத்தை பயனுறச் செய்து, அதற்கு பிரதிபலனாக இந்த சமூகம் நம்மை வாழ்விக்கிறதோ.., அதுவே தொழில்.
காமராஜரும், அண்ணாவும் அரசியலைத் தொழிலாகக் கொண்டவர்கள் தான்!
நீங்கள் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி அதன் தலைவராகிவிட்ட பிறகு, அரசியலை உங்கள் தொழிலாக ஏற்க மறுப்பது மட்டுமின்றி, ”வெற்றி பெற்றாலும், நான் சினிமாவில் நடிக்கச் செல்வேன். ஏனென்றால், சினிமா தான் என் தொழில். அரசியல் எனக்கு கடமை, தொழிலல்ல,’’ என்று வார்த்தை ஜாலம் செய்கிறீர்கள்! எவர் ஒருவருக்கும் தொழிலே முதல் கடமையாகும்! அந்த வகையில் சினிமாவைத் தான் முதல் பிரியாரிட்டியாக நீங்கள் கருதுவதாகத் தெரிகிறது.
ஒருவர் எம்.எல்.ஏ வாக ஆகும் பட்சத்தில, சம்பந்தப்பட்ட தொகுதி மக்களுக்கு முழுமையாக தன் நேரத்தை அர்ப்பணிக்க கடமைப்பட்டவர். தினசரி காலை இரண்டு, மூன்று மணி நேரம், மாலை இரண்டு மூன்று மணி நேரம் மக்கள் தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கணும். மற்ற நேரத்தில் மக்கள் கவனப்படுத்திய விவகாரம் சம்பந்தமாக அரசு அலுவலர்களை, அதிகாரிகளை தொடர்பு எடுத்துப் பேசணும். தொகுதியில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளணும். அந்த தொகுதி மக்களின் நல்லது கெட்டதுகளில் தலை காட்டணும். ஆக, இது முழு நேரத் தொழில்.
சட்டமன்றம் கூடும் நாட்களில் சபைக்கு செல்ல வேண்டும். அதற்கு முன்பு தமிழக மக்களை பாதிக்கும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக தமிழகம் முழுமையிலும் உள்ள மக்கள் அமைப்புகளுடன் இடையறாது தொடர்பில் இருக்க வேண்டும். என்னைப் போன்ற பத்திரிகையாளர்கள் எழுதும் கட்டுரைகளை நிறைய வாசிக்க வேண்டும். , நீங்கள் ஒரு தொகுதிக்கு எம்.எல்.ஏ வானாலும் கூட, ஒரு கட்சித் தலைவர் என்ற வகையில் ஒட்டுமொத்த தமிழக மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும். இதற்காக நீங்கள் 24 மணி நேரத்தை முழுமையாக ஒதுக்கினாலும் போதாது. ஆனால், நீங்களோ..சர்வ சாதரணமாக, ’’நான் நடிக்க போய்விடுவேன். அது தான் என் தொழில்.அரசியல் என் தொழிலல்ல’’ என்கிறீர்கள்.
அதாவது, ‘நான் நேர்மையாளராக்கும். அதனால், நான் அரசியல் மூலமாக பணம் ஈட்டமாட்டேனாக்கும்’ என்பதை பெருமை பொங்க அடிக்கடி பீற்றிக் கொள்கிறீர்கள். எம்பியோ, எம்.எல்.ஏவோ மக்கள் பணி செய்வதற்காகத் தான் அவர்களுக்கு அரசாங்கம் சார்பில் வாழ்க்கை தேவைகளுக்காக சம்பளமாக பணம் தரப்படுகிறது. ஏனென்றால், சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் நேரத்தை முழுமையாக மக்களுக்கு செலவிட தரப்படும் கொடையே அது. அதுவே கிட்டதட்ட ஒரு லட்சமாகும்.
‘இதெல்லாம் எனக்கு எம்மாத்திரம்..? எனக்கு அரசியல் கட்சி நடத்த கூடுதல் பணம் தேவை’ என்று நீங்கள் கருதும் பட்சத்தில் மக்களிடமே இயக்க நிதி என்று பெறலாம். அப்படி மக்களிடம் கையேந்தி பெற்று, அதற்கு முறையாக செலவு செய்து கணக்கு காட்டலாம். இது தான் பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் செயல்பட வேண்டிய இலக்கணமாகும். பச்சைமுத்து போன்ற தவறான தொழில் அதிபர்களிடம் ரகசியமாக பணம் பெறுவதைவிட, மக்களிடம் பெற்று, மக்களுக்காக வாழ்வது தவறில்லை. இழிவில்லை. உன்னதமான வாழ்வியலே இது தான்!
‘ஐம்பது வருடங்களாக சினிமாவில் கொடிகட்டி பறந்து, பல சாதனைகள் செய்து சம்பாதித்தது போதும். இதற்கு மேல் எனக்கு தேவையில்லை’ என்ற மனநிலை உங்களுக்கு எப்போது அரசியல் கட்சி தொடங்கினீர்களோ…, அப்போதே ஏற்பட்டிருக்க வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில் தமிழகம் முழுக்க குறுக்கும், நெடுக்குமாக மக்களை தேடிச் சந்தித்து, பல அனுபவங்களை கிரஹித்து இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, பிக்பாஸ் என்றும், இந்தியன் இரண்டாம் பாகம் என்றும் நடிக்கச் சென்றது பொறுப்பற்ற செயலாகும். இன்னுமே அப்படித் தான் நான் இருப்பேன் என்றால், உங்களை நம்பி இயக்கத்தில் சேர்ந்தவர்கள், உங்களுக்கு ஓட்டுபோட்டவர்கள் ஆகியவர்களை விட நீங்கள் பணத்தையே பிரதானமாகக் கருதுவதாகத் தான் பொருள்!
Also read
மீண்டும் சொல்கிறேன். ”நான் அரசியலில் சம்பாதிக்கமாட்டேன். நேர்மையாளனாக்கும். அதனால் நடித்து தான் வாழ வேண்டியிருக்கிறது’’ என்று சொல்வது உங்கள் பொறுபின்மைக்கு நீங்கள் பூசிக் கொள்ளும் புனிதச் சாயமாகும்! ’’ ”முதலமைச்சருக்குரிய சம்பளப் பணம் வேண்டாம். எனக்கு ஒரு ரூபாய் சம்பளம் போதும். நான் அரசியலுக்கு தொண்டு செய்யவே வந்தேன்…’’ என்று சொன்ன ஜெயலலிதாவையெல்லாம் பார்த்தவர்கள் தான் மக்கள்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்.
அரசியலில் இருந்து கொண்டு யாரும் எந்த தொழிலும் செய்யாமலிருக்கிறார்களா அவர் சொல்வது (kamal)அவருடைய முடித்துக்கொடுக்கவேண்டிய வேலைகள் mla ஆனபிறகு கடமையை செய்யாமல் போவேனென்று சொன்னாரா ஒரு வக்கீல் எம்எல்ஏ ஆன பிறகும் வக்கீல் தொழிலைத் தொடர்கிறார் ஒரு இன்ஜினியர் எம்எல்ஏ ஆனபிறகும் அவர் கட்டுமான நிறுவனத்தை நடத்துகிறார் ஒரு மருத்துவர் எம்எல்ஏ ஆன பிறகும் அவர் மருத்துவத் தொழிலை தொடர்கிறார் கமல் எம்எல்ஏ ஆனால் ஏன் சினிமா தொழிலை தொடர கூடாது அவருக்கு நேரம் இருக்கும் பட்சத்தில் காமராஜரை குறிப்பிடுகிறீர்கள் அவரால் நூறு ரூபாயில் வாழ்க்கை நடத்தும் முடிந்தது அண்ணாவை உதாரணம் சொல்கிறீர்கள் முழு நேர அரசியல்வாதி என்று அவர் எழுதினார் சினிமாவுக்காக பத்திரிக்கை காகவும் அன்று மக்களிடம் நிதி கேட்டு கட்சி நடத்த முடிந்தது பொதுமக்கள் வாங்கும் மனநிலையில் இருக்கிறார்கள் கொடுக்கும் மனநிலையில் யாரும் இல்லை அவர் கட்சியை தொடர்ந்து நடத்துவதற்கு அவர் கையேந்தாமல் இருப்பதற்கு அவர் நடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது
//நான் அரசியலில் சம்பாதிக்கமாட்டேன். நேர்மையாளனாக்கும். அதனால் நடித்து தான் வாழ வேண்டியிருக்கிறது’’ என்று சொல்வது உங்கள் பொறுபின்மை// மேலே உள்ள உங்கள் வரிகள்தான்!
(’பொறுபின்மை’- ப் வரணும்…உங்க எழுத்தில் உள்ள ஒற்றுப்பிழை தான்…முடிந்தால் சரி செய்யுங்கள்) …நம்ம சாவித்திரி கண்ணன் சார்…அரசியல்ல்ல சம்பாதிக்கணும்கிறார்…படத்துல நடிச்சு வாழணும்னு சொன்னா அது பொறுப்பின்மையாம்..வேறென்ன…..
கமல் காசு வாங்கணும்….அதுவும் அரசியல்ல்ல-(சொத்துக்கணக்கு காட்டியபிறகும்)
அப்போதானே கமல் காசு வாங்கிட்டார்ன்னு எழுதலாம்…!
Support Aramன்னு சொல்லி காசு கேட்குறா மாதிரி….கமலுக்கும்….நீங்களே ஒரு நல்ல ப்ளான்…. சொல்லுங்க… கண்ணன் சார்!…புண்ணியமாபோகும்! கமலுக்கும் நீங்க சொல்ற ’பொறுப்பும்’ வந்தா மாதிரியும் இருக்கும்!
Ithai neengal palaya arsailvathikidam solli irunthu irukalama ungal media moolamaka,ungal anupavathin moolamaka.why to kamal?
நான் கமலின் அனுதாபியோ ஆதரவாளனோ அல்ல. ஆனால் இந்தக் கட்டுரை அபத்தம். தொழில் என்பது வாழ்வாதாரத்துக்கானது. அரசியலைத் தொழிலாகக் கொள்ளாமல் சேவையாகவும் கடமையாகவும் செய்ய வருவோரே காலத்தின் தேவை. இல்லை, அது வருவாய்க்கான வழி எனக்கொள்ளின், நீங்கள் வரிந்துகட்டி ஆதரிக்கும் திமுக குஞ்சுகளைப்போல நில அபகரிப்பு, கட்டைப்பஞ்சாயத்து, விஞ்ஞான ரீதியான ஊழல் என்பதில்தான் போய் முடியும். ஸ்டாலினின் தொழில் என்ன? எங்கிருந்து வந்தது இவர்களுக்கு இருநூறு தலைமுறைக்கான சொத்து? இதையெல்லாம் கேட்பதுதான் உண்மையான அறம். அது இந்த இதழில் இல்லை
It’s really amazing. I find few equally educational blogs. Interesting, and I’m telling you, you’re getting to the point. The problem with the head is that not enough men and women are speaking intelligently. I’m so glad I found this while I was looking for something about this. https://totoguy.com/
Good writing, I’m a normal person who visits a person’s website, maintains excellent operations, and will be a regular visitor for a long time. https://totovi.com/
You pointed out some good points there. I searched the web to find out more about this issue and found that most people would agree with you on this site. https://totoilmi.com/
Thank you for all your efforts on this web page. Gloria likes to investigate and can easily understand why. My partner and I have noticed everything about attractive modes in which you create informative tips and hints on websites and encourage others to contribute to areas of interest, and my child has always learned a lot. Enjoy the rest of the year. You’re doing a great job. 토토사이트
That’s really great and helpful information. I’m glad you shared some helpful information. Please keep us informed like this. Thank you for sharing. 메이저놀이터
I was looking for high quality articles or blog posts in this kind of space. While exploring on Yahoo, I finally came across the website. Reading this information so I am happy to show that I have a very strange feeling that I have found what I need. No doubt I will not forget to look at this website regularly. 메이저토토사이트
Nice blog! I love it! I’ll come back to read some more later. I’m also bookmarking your feed. You really make your presentation look so easy but I don’t think this problem is actually something I’ll ever understand. It seems too complicated and very wide for me. I’m looking forward to the next post, I’ll get the hang of it! I cannot thank you enough for the post.I’m looking forward to reading more books. Cool. 메이저사이트