ஒருவரின் யோக்கியதையை அவருடைய கூட்டாளிகளை வைத்து முடிவுக்கு வரலாம்! கமலிடமிருந்து அரவிந்த் கேஜ்ரிவாலும்,யோகேந்திர யாதவும், ’’வேண்டாம் ஐயா உம்ம சங்காத்தம்’’ என்று ஒதுங்கி போனதற்கான பின்ணணிகளை அலசுகிறது இந்தக் கட்டுரை!
தன்னை நேர்மையாளராக தானே பிரகடனப்படுத்திக் கொண்டவர் கமலஹாசன்!
வருமானத்திற்கு நேர்மையாக வரி கட்டுபவராகவும் சொல்கிறார்!
நேர்மையான ஆட்சியை தன்னால் தான் தரமுடியும் என்கிறார்!
ஒருவர் நேர்மையாளரா…? என்பதை பொதுவாக அவருடைய கூட்டாளிகளைக் கொண்டே ஒரு தெளிவுக்கு நாம் வரமுடியும். கட்சி தொடங்கும் போது அரவிந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, பினராய் விஜயன்..போன்றோரை சந்தித்து பேசி, ஊடகங்களுக்கு புகைப்படங்கள் தந்து தன் இமேஜை கட்டமைக்க முன்றார் கமல்!
ஆனால், தற்போது அவர் சாதியக் கட்சிகளான ஐ.ஜே.கே மற்றும் ச.ம.க.வுடன் மட்டுமே கூட்டணி கண்டுள்ளார்!
கமலஹாசன் முதலில் கட்சி தொடங்கிய போது டெல்லி சென்று கேஜ்ரிவாலை சந்தித்து மதுரைக்கு அழைத்து வந்து மீட்டிங் போட்டார்! அவர் தான் தனக்கு ரோல்மாடல் என்றும் சொன்னார்! அப்படிப்பட்ட ஆம் ஆத்மி கட்சியுடன் அவரால் ஏன் தொடர்ந்து செயல்படமுடியாமல் போனது? என்று நாம் ஆம் ஆத்மியின் தமிழக வட்டாரத்தில் விசாரித்த போது, ’’கமலஹாசன் கட்சியுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்பதாக இருந்தது. அதற்கான பேச்சுவார்த்தையும் எங்களுக்குள் நடந்தது. ஆனால், என்ன காரணத்தாலோ அரவிந்த் கேஜ்ரிவால், கமலஹாசன் கட்சியுன் இனி எந்த தொடர்பும் வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டார் என்றனர்!
இது தொடர்பாக நாம் தில்லி வட்டாரத்தில் கேட்ட போது, கமலஹாசனின் நடவடிக்கைகள், அவரது கட்சி பல விவகாரங்களில் காட்டும் அணுகுமுறை காரணமாக ம.நீ.மவுடன் கூட்டணி உறவு ஊஜிதமாகப் படவில்லை எனவே தவிர்த்துவிட்டோம்’’ என சொன்னார்கள்!
சென்ற நாடாளுமன்ற தேர்தலில் கமல் கட்சியுடன் யோகேந்திர யாதவின் சுயராஜ்யா கட்சி கூட்டணி வைத்திருந்தது. தற்போது அவர்களும் கமலஹாசனிடமிருந்து விலகிவிட்டனர்.
இது தொடர்பாக நாம் சுயராஜ்யா கட்சியின் தமிழக தலைவரான தோழர்.பாலகிருஷ்ணனிடம் பேசிய போது, ’’தமிழகத்திற்கான ஒரு மாற்று அரசியல் சக்தியாக கமலஹாசனை நாங்கள் அன்று கருதியது உண்மை தான். ஆனால், பாஜக அரசின் பல மக்கள் விரோத சட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் அவர் காட்டும் மெளனம் எங்களை யோசிக்க வைத்தது. இந்திய தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராட்டத்தை தலைமையேற்று AIKCC நடத்துகிறது. மக்கள் நீதி மய்யம் இதில் எங்களோடு கைகோர்க்கவில்லை. அவர் ரொம்பவே பல விவகாரங்களில் விலகி செல்வதாகத் தெரிந்தது. இது தொடர்பாக அவருக்கு எடுத்துச் சொன்னாலும் பொருட்படுத்துவதாக இல்லை. இன்றைக்கு இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றியாக வேண்டும் என்றால், பாஜகவிற்கு எதிரான நிலைபாடு என்பது ஒருமித்த அடிப்படையிலும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். இதற்கு கமலஹாசன் சரிப்பட்டு வரவில்லை என்பது எங்கள் அனுபவம். ஆகவே, அவரிடமிருந்து முற்றாக விலகிக் கொண்டோம்’’ என்றார்.
கமலஹாசனோடு ஆரம்ப காலத்தில் மிக நெருக்கமாக கைகோர்த்து பயணித்தவரான திராவிட இயக்க பற்றாளரான செளரிராஜனாலும் கமலோடு தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. இடதுசாரி சிந்தனையாளரான பாரதிகிருஷ்ணகுமாராலும் முடியவில்லை! இது குறித்து அவர்கள் இருவருடனும் நான் விரிவாக பேசியதன் சாராம்சத்தை சொல்வதென்றால், ’’நாம் நினைக்கும் ஆரோக்கியமான மாற்று அரசியலுக்கானவரல்ல கமல்! எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாமல், ஹிட்டன் அஜந்தாவுடன் காய் நகர்த்துபவரோடு எங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து பயணிப்பது எப்படி சாத்தியப்படும்?’’ என்பதே!
மேற்படி விஷயங்களோடு தற்போது மக்கள் நீதிமையத்தின் மாநில பொருளாளர் திருப்பூர் சந்திரசேகரின் அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்தில் நடந்த ரெய்டில் வெளியான செய்தியையும் இணைத்து பார்ப்போம்.
அரசியல்வாதியாக இருக்கும் ஒருவர் தொழில் அதிபராக இருப்பது தவறல்ல. ஆனால், அவர் இல்லாத தொழிற்சாலைக்கு தமிழக அரசிடம் 450 கோடி ஆர்டர் பெற்று, அவுட்சோர்சிங் செய்து தந்துள்ளார்! அதுவும் தமிழகத்தில் ஆகப் பெரிய ஊழல்வாதியாக அறியப்பட்ட விஜயபாஸ்கரின் சுகாதாரத்துறையிடம் ஆர்டர் பெற்றுள்ளார். கமிஷன்,கரப்ஷன் இல்லாமல் விஜயபாஸ்கரோடு எந்த டீலிங்கும் நடத்தமுடியாது! சந்திரசேகர் நிறுவனத்தில் கணக்கு காட்டாத பணம் ரொக்கமாக 11.5 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. நேர்மையாளர் கட்சியின் பொருளாளர் யோக்கியதை எப்படி என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்!
கமலஹாசன் தான் நேர்மையாளர் என்றால், முதலில் வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும். அதாவது தான் எந்தெந்த படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார்? அதற்கு எவ்வளவு வருமான வரி கட்டினார் என்பதை இது வரை அவர் சொல்லவே இல்லை! ஆனால், தான் சரியாக வருமான வரி கட்டிவிட்டதாக பொத்தாம் பொதுவாக சொல்கிறார். திறமையான ஆடிட்டர் வாய்த்தால், உலக மகா திருடன் கூட வருமான வரித்துறையிடம் உத்தமர் பட்டம் பெறலாம் என்பது அனைவருக்குமே தெரிந்த ரகசியம் தான்!
Also read
கமலஹாசன் தான் கட்சியை நடத்துவதற்கும், தேர்தலை எதிர் கொள்வதற்குமான பணத்தை யாரிடமிருந்து பெறுகிறார்? எவ்வளவு பெறுகிறார்? என்பதெல்லாம் அந்த இயக்கத்தில் இருப்பவர்களுக்கே மர்மமான விஷயமாக உள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ் போன்றவர்கள் இந்த நன்கொடை பெறும் விவகாரங்களில் மிக வெளிப்படைத் தன்மையுடன் தங்கள் இயக்கங்களை நடத்தி வருபவர்கள். ஆகவே, தன்னைத் தானே பல விதங்களிலும் ஒளித்து வைத்துக் கொண்டுள்ள கமலஹாசனுடன் உண்மையான பொதுநலவாதிகள் நீண்ட காலம் பயணிக்க முடியாது என்பது தொடர்ந்து நிருபணமாகி வருகிறது!
-சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
ஆரம்பத்தில் ..& சமீப காலம் வரை..கமல்..பி.ஜே.பியின் ‘பி’ டீம்னு எழுதி வந்தீர்கள்…நானும்…உங்கள் கணிப்பு ஒரு போதும் பொய்க்காது…உங்கள் அரசியல் தொலை நோக்கி..லென்ஸ் வேறு யார்ட்டயும் இல்லையென்ற இறுமாப்புடன் .உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வந்தேன்…வானதியை எதிர்த்து கோவையில் களம் காணும்…கமல்..உங்களின் B team கணிப்பையும் அதைச் சார்ந்து நீங்கள் எழுதிய எழுத்துகள் கட்டுரைகள் வேஸ்ட் என்னும் நிலைக்குத் தள்ளிவிட்டார்…அது மாதிரி….தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழக கிராமத்து மக்களுக்கே இன்னும் கமல் பெயர் போய்ச்சேரவில்லை..இதுல கெஜ்ரிவால் நட்பும் ஆதரவும்..என்ன தாக்கத்தை ஏற்படுத்திவிடமுடியும்…
உங்கள் கட்டுரைகளில் ஒரு நல்ல அறப்பார்வை இருந்தது….இப்போது
அது ‘அரைப்பார்வை’ ஆகிவிட்டது போல் தெரிகிறது…கமலுக்கு எங்கிருந்தோ பணம் வருகிறது…அதானே…ஐ.டி துறைக்கோ…ஊழல் தடுப்புத்துறைக்கோ..இந்தக் கட்டுரையை புகார் மனுவாக அனுப்பிவிட்டு…உங்கள் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டுகின்றேன்..
பாதிக்கு மேல் படிக்கும் போது தெளிவாகி விட்டது . . . உங்கள் நோக்கம் இரண்டு தேசிய கட்சி ஐ எதிர்த்து நிற்கிறார் . பின்பு விவசாயிகள் பிரச்னை நடந்த போது அவர் கட்சி சார்பாக டெல்லி இல் போராட்டம் நடை பெற்றது . . அதன் ஃபோட்டோ மற்றும் செய்திகள் கூட கண்டேன் . . . .
சாதியக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில் நேர்மை எங்கே பலம் இழக்கிறது என்பதை கட்டுரையாளர் சொல்ல வேண்டும்.
நீங்கள் சுட்டிக்காட்டும் ‘இருபெரும்’ தேசிய தலைவர்கள் தங்கள் மாநிலங்களைத் தாண்டி மற்ற மாநிலங்களில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் நாம் அனைவரும் அறிந்ததே. அடுத்ததாக தங்களது மாநிலத்தை தவிர மற்ற மாநில விவகாரங்களில் தங்களுக்கு என தனி நிலைப்பாடு அற்றவர்களுடன் என்ன கூட்டணி வைத்துக் கிழித்து விட முடியும் ?இதை சாவித்திரி கண்ணன் விளக்க வேண்டும்.
உட்கட்சி விவகாரங்களால் கட்சியை விட்டு வெளியேறியவர்கள் சொல்லும் சால்ஜாப்பு களை எப்படி ஒரு பொத்தாம் பொதுவான கருத்தாக கட்டுரையாளர் ஏற்றுக் கொள்கிறார் என்பதை நினைக்கும் போது அவரைப் பார்த்து பரிதாபப் படுவது தவிர வேறு எதையும் செய்ய முடியாது.
அனிதா டெக்ஸ்டைல் விவகாரத்தைப் பொறுத்தவரை இன்னும் முழுமையான விசாரணைகள் முடிந்து நீதிமன்றத்தால் தீர்ப்பு சொல்லப்பட்ட பிறகு பார்ப்போம் .எந்த ஒரு நிறுவனத்திலும் வருமானவரித்துறை ரெய்டு என்பது மத்திய அரசால் மாநில கட்சிகளை மிரட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஒரு யுக்தி என்பது இந்தியர்கள் அனைவரும் அறிந்ததே. எனவே அதன் முழுமையான தீர்ப்பு வரும் வரை அதைப் பற்றி நான் விவாதிக்க வேண்டிய அவசியமும், இடமும், நேரமும் இதுவல்ல.
கட்சியை நடத்துவதற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை சமீபத்தில் அவர் வெளியிட்ட, வங்கி கணக்குடன் கூடிய ஒரு அறிக்கை தெளிவாக பதில் சொல்லியிருக்கிறது. சாவித்திரி கண்ணன் அவர்களுக்கு அதை எல்லாம் படிப்பதற்கு நேரம் இல்லையா? அல்லது மனமில்லையா ?அல்லது பணம் கொடுத்து எழுதச் சொன்னவர்கள் அதைத் தெரிவிக்க கூடாது -என்று கட்டளை போட்டிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. அடுத்ததாக அவர் எந்த வரி ஏய்ப்பும் செய்யாதவர் என்பதற்கான அத்தனை ஆதாரங்களும் வருமான வரித்துறை வசம் இருக்கிறது. வேண்டுமென்றால் அவர் அங்கே கேட்டுப் பெற்றுக் கொள்ளட்டும். அவர் மட்டுமல்ல இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் அதை ரைட் டு இன்பர்மேஷன் ஆக்ட் மூலமாக தெளிவான, உறுதியான பதிலைப் பெற்றுக்கொண்டு விட முடியும். எனவே பணம் வாங்குவதற்கு முன்னால் தான் எப்படி கட்டுரை எழுதப் போகிறோம் என்பதை ஆழமாக யோசித்து விட்டு, அதன் பிறகு தேவையான உதவிகளை வாங்கிக்கொண்டு கட்டுரையாளர் இக்கட்டுரைகளை எழுதட்டும்.
நீங்கள் ஏன் கமலஹாசனை விட பலமடங்கு மோசமான முக ஸ்டாலின்களை பற்றி ஏன் கவலை படுவதில்லை.
From some point on, I am preparing to build my site while browsing various sites. It is now somewhat completed. If you are interested, please come to play with totosite !!
Hey, hello. I found your weblog using msn. It’s a really neat article. I will definitely come to your favorite and learn more helpful information. Thank you for sending me the post. I’ll be back for sure. 안전놀이터
Wow, amazing blog layout! How long have you been blogging? You make blogs look easy. The overall look of your website is great, not to mention the content! 토토사이트