இது கொரானா தடுப்பூசிக்கு எதிரான பதிவல்ல. அவரவர்கள் தங்கள் சொந்த பட்டறிவையும், பகுத்தறிவையும் சார்ந்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்! ஆனால்,சில நிதர்சனங்களை புறம் தள்ளாதீர்கள் என சொல்வதற்காகவே இதை எழுதுகிறேன். கே.வி.ஆனந்த் மிக சமீபத்தில் தான் கொரானா தடுப்பூசி முதல் டோஸ் போட்டார்! அது போடும் வரை உற்சாகமாக இருந்தவர் போட்ட பிறகு உடல் நலன் குன்றியுள்ளார். இதற்கு முன்பில்லாத வகையில் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமமும், நெஞ்சுவலியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனை சென்று சோதித்ததில் அவருக்கு கொரானா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ரத்த உறைதல் ஏற்பட்டதா..? எனத் தெரியவில்லை.
AEFI எனப்படும் சர்வதேச தடுப்பூசி கண்காணிப்பு கமிட்டியின் விதிகளின்படி தடுப்பூசி போட்டதிலிருந்து 28 நாட்களுக்குள் ஒருவருக்கு ஏற்படும் இன்னல்கள், உடல்மாற்றங்களை கணக்கில் கொள்ள வேண்டும்.பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்! அந்த வகையில் விவேக், கானாத்தூர் எஸ்.ஐ மகேந்திரன்,கே.வி.ஆனந்த் ஆகியோர் மரணங்களை பரிசீலியுங்கள்.
தடுப்பூசி போடும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, உங்களுக்கு தடுப்பூசி ஏற்றுக் கொள்ளுமா, அல்லது உங்கள் உடல் அதை ஏற்காத நிலையில் உள்ளதா..? என விசாரித்து அறிந்து முடிவு எடுங்கள்!
இன்றைக்கு ஏதோ சுண்டல் வாங்க கியூவில் நிற்பது போல நின்று மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள்! பெரும்பாலான மருத்துவர்கள், தடுப்பூசி போடுபவர்களிடம் உங்களுக்கு ரத்த கொதிப்பு உள்ளதா? பிரஷர் எந்த நிலையில் உள்ளது. சர்க்கரை வியாதி உள்ளிட்ட மற்ற பிரச்சினைகள் உள்ளனவா..? மது அருந்தும் பழக்கம் உள்ளதா..? என ஒரளவேணும் விசாரிக்கலாமே!
நமது இந்திய மருத்துவ கழகம் இதை ஒரு பொது விதியாக்கலாமே! தடுப்பூசி ஒவ்வாமை யார்யாருக்கு ஏற்படுகிறது என்பது பற்றி திறந்த மனதோடு விவாதம் செய்ய முன்வாருங்கள்! அதற்கு ஒவ்வாமை ஏற்ப்பட்டவர்கள் புகார் கொடுப்பதற்கு வசதியாக ஒரு கம்பிளையண்ட் மையத்தை உருவாக்குங்கள்.அதற்கு நேரில் தான் வர வேண்டும் என்பதில்லை. ஆன்லைனிலேயே புகார் தர வசதி ஏற்படுத்துங்கள்..!
நம்ம நாட்டில் வருகிற கொரானாவானது 90 சதவிகிதம் பாதிப்பு ஏற்படுத்தாமல் மைல்டாக தான் உள்ளது என்று உலக சுகாதார நிறுவனமே கூறியுள்ளது! குறிப்பாக 15% மானவர்களுக்கே சிகிச்சை தேவைப்படுகிறது. அதிலும் மிகக் குறைவானவர்களையே கடுமையாக தாக்குகிறது! அதாவது பெரும்பாலானவர்களுக்கு மைல்டாக வந்து போகிற ஒரு நோயை அனைவருக்கும் கட்டாயப்படுத்தக் கூடாது! ஆனால், இன்றைக்கு என்ன நடக்கிறது. மே-2 ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு வருபவர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்கிறது தேர்தல் ஆணையம்.
நமது மத்திய அரசாங்கத்தின் சுகாதாரத்துறை கோவிட் சிகிச்சைகள் குறித்து சமீபத்தில் first covid-19 management guidelines ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வெளிப்பட்டுள்ள அலட்சியங்களை பட்டியலிட்டு அனுப் அகர்வால் என்ற மூத்த மருத்துவர் ஆங்கில இந்து நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
காட்சி மொழியின் கவிஞன் கே.வி.ஆனந்த்
அதன் சாரம்சம் என்னவென்றால், நமது சுகாதாரத்துறை கோவிட் நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை தர வேண்டும் என வழிகாட்டிய அம்சங்களும்,பரிந்துரைத்த மாத்திரைகளும், கொரானாவிற்கு வேலைக்காவாது என புறம் தள்ளப்பட்டவையாக உள்ளது என்கிறார். உதராணமாக ஹைடாராகிசிக்ளோரோக்வின் போன்ற மாத்திரையை பரிந்துரைத்துள்ளது.இதை எந்த நாட்டிலும்,எந்த மருத்துவரும் கொரோனா நோயாளிக்கு தருவதில்லை. காரணம் கொரானாவிற்கு எந்த மருந்து தருவது என தெளிவற்று இருந்த ஒரு காலகட்டத்தில் அது பரிந்துரைக்கப்பட்டு, அதில் பலனில்லை என புறம் தள்ளப்பட்டுவிட்டது. இது ஒரு சாம்பிள் தான். இந்த மாதிரி ivarmectin என்ற உலக சுகாதார நிறுவனத்தால் வேண்டாம் என கூறப்பட்ட ஏகப்பட்ட காலாவதி விவகாரங்களை கைட்லைனாக பரிந்துரைக்கிறது நமது சுகாதாரத்துறை என்றால்.., நம்ம நாட்டு மக்களின் நிலை என்னாவது..? எவ்வளவு சீரியசான ஒரு பெருந்தொற்று சமயத்தில் நமது சுகாதாரதுறை மேலிடம் எவ்வளவு தூரத்திற்கு தங்களை அப்டேட் செய்து வருகிறார்கள் என்பதற்கு இதுவே சிறிய உதாரணம்.
Budesonide என்ற ஆஸ்த்துமாவிற்கான மருந்தையும் கொரானாவிற்கு பரிந்துரைத்துள்ளது சுகாதாரத்துறை.ஆனால், இது ரொம்ப சீரியஸ் கண்டிஷனில் மூச்சுவிட சிரம்மப்படுவர்களுக்கு முயற்சி செய்து பார்க்கப்படுகிறது. சாதாரணமானவர்களுக்கு தேவையில்லை. இப்படி பரிந்துரைப்பதால் இதை வாங்கி பலர் ஸ்டாக் செய்தால் உண்மையிலேயே தேவைப்படுவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுமல்லவா? என்கிறார் அனுஅகர்வால். இதில் சகிக்கமுடியாத ஒரு விவகாரம் உலக சுகாதர நிறுவனம் பயனற்றது எனக் கூறியுள்ள ரெம்டெசிவர் மாத்திரை இங்கே டிமாண்ட் லெவலுக்கு ஆகிவிட்டது.
பிளாஸ்மா சிகிச்சையும் நோ யூஸ் என நிருபணமாகிவிட்டது. அதையும் நம்ம அரசு பரிந்துரைக்கிறது! இந்த லட்சணத்தில் சச்சின் டெண்டுல்கரை வைத்து பிளாஷ்மா தானம் செய்யச் சொல்லி பிரச்சாரம் வேறு!
Also read
இதில் கொடுமை என்னவென்றால்,இந்த கைட்லைனைத் தான் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டுமாம். ஆனால், நமது அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சொந்த அனுபவம் சார்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள்! அதனால் தான் 98.5 சதமானவர்கள் பிழைத்துவிடுகிறார்கள்.
மற்றொரு எம்.பி.பி.எஸ் மருத்துவர் ஒருவர் கொரானா தடுப்பூசியால் ரத்த உறைவு வருவதால் மாரடைப்பு வர வாய்ப்புள்ளது என பேசியுள்ளார்.
ICMR எனப்படும் நமது இந்திய மருத்துவ கழகம் இது பற்றி வாய் திறந்தால் நல்லது.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
சிறப்பான பதிவு. ஏன் நாமே ஒரு போர்ட்டளை உருவாக்கி அதில் aefi புகார்களை மக்களிடம் சேகரித்து அரசிடம் கொண்டுசேர்க்கலாமே
ஹோமியோபதி சித்தா ஆயுர்வேத மருத்துவர்கள் இந்தக் கோரான நோய்க்கு தடுப்பு மருந்தும் நோய் வந்தபிறகு குணப்படுத்தும் மருத்துவ முறைகளும் இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள் ஆனால் அவர்கள் சார்ந்திருக்கிற அந்தச் சங்கங்கள் இதை தெளிவாக அரசுக்கு எடுத்துச் சொல்லி ஏன் இந்த மருத்துவ முறையை பயன்படுத்தி இந்த நோயிலிருந்து மக்களை பாதுகாக்க கூடாது என்ற வேண்டுகோளை அரசிடம் ஏன் வைக்காமல் இருக்கிறார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக் குறியாகும் நமக்குத் தோன்றுகிற இன்னொரு ‘கேள்விஅவர்கள் அரசிடம் எங்கள் மருந்துகளை நீங்கள் ஆய்வுக்கு உட்படுத்தலாம் அதில் இந்த மாதிரியான நோய்களுக்கெல்லாம் தடுத்து நிறுத்துவதற்கான மூலக்கூறுகள் இதில் இருக்கிறது என்பதை நிரூபிக்கின்ற வகைகளிலும் அதைச் செய்யலாம் அல்லது அரசாவது இவர்களையெல்லாம் அழைத்துப் பேசி இதில் இருக்கிற உண்மை தன்மையை உணர்ந்து அதை மக்களுக்கு பயன்படுத்தி மக்களை அச்சத்தில் இருந்து நோயிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சியை அரசாவது செய்ய வேண்டும். அரசம் இதை செய்ய தவறி வருகிறது இன்னொரு பக்கம் மத்தியதர வர்க்கம்தான் இதில் அதிகமாக பாதிப்பிற்கு .உள்ளாகியிருக்கிறார் என்பது தெரிய வருகிறது சாதாரணமான உழைக்கின்ற மக்கள் இந்த நோயினால் அதிகம் பாதிக்கப் பட்டதாக தெரியவில்லை உடலுழைப்பை செய்து கொண்டிருப்பவர்களுக்கு பெரும் பாதிப்பு இருந்தது போல தெரியவில்லை.
எப்படி இருப்பினும் இதற்கு ஒரு மாற்று நம்முடைய நாட்டில் பாரம்பரிய மருத்துவமுறைகளை கையாண்டு வருகிறார் ..இந்த மருத்துவத்தை அரசு ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்பது தெரியவில்லை அந்த மருத்துவர் சங்கங்களும் இதை முன் கையெடுத்து தெளிவாக இந்த காலகட்டத்தில் வெளிப்படையாக அறிவிப்பது சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை நாம் பதிவு செய்ய வேண்டும் இதை அரசுக்கு ஒரு வேண்டுகோள் ஆக வைப்பது சரியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
அலோபதி மருத்துவர் சங்கங்கள் நமது பாரம்பரிய மருந்துகள் எல்லாம் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது அல்லது. அதில் நிறைய கலப்படம் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
ஆனால் அரசே பாரம்பரிய மருத்துவ படிப்பிற்கான கல்லூரிகள் திறக்கப்பட்டு படித்து பட்டம் பெற்ற மருத்துவர்கள் ஏராளமானவர்கள் வந்துவிட்டார்கள்..அவர்களும் எதுவும் பேசுவதில்லை.
இதற்கு ஒரு தீர்வுகாணும் கேள்விக்கணைகளஒவ்வொருவரும் எழுப்பவேண்டும் ,எழுப்புோம்..
அருமையான பதிவு
நன்றி
எல்லா ஊடகங்களும் தடுப்பூசி குறித்து பேசத்தயங்கி, மெளனமாக இருக்கும் நிலையில் இந்தக் கட்டுரை அவசியமானது. ”தடுப்பூசியில் பின் விளைவுகள் எதுவும் இல்லை” என்று யார் சொன்னாலும் அது அறிவியல். ”அதை ஆராய்ச்சி செய்து சொல்லுங்கள்” என்று சொன்னால் அது அறிவியலைப் புறக்கணிப்பது என்று சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
அகில இந்திய அளவில் தடுப்பூசி பாதிப்புகளை அவேக்கிங் இந்தியா மூவ்மெண்ட் ஒருங்கிணைத்து வருகிறது. பொது ஊடகத்திலிருந்து இப்படியான குரல் தமிழிலும் எதிரொலிப்பது சிறப்பான விஷயம். வாழ்த்துகள்.
Thought provoking
இது மிகவும் அறிவீனமான பதிவு. இதை படித்துவிட்டு தடுப்பூசி போடாமல் இருக்கப்போகும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். வேப்பிலைகளை கட்டி வைத்ததால் அம்மை நோய் மறையவில்லை. தடுப்பூசிகள் எளிய மக்களின் வாழ்வைக் காப்பவை. அவை இலவசமாகவும், கார்ப்பரேட்டுக்களின் பேராசைக்கு தீனி போடாத வகையிலும் கொடுக்கப்படவேண்டும்.
முட்டாள்தனமான கட்டுரை. இதுபோலவே ஒவ்வொரு நாளும் இறக்கும் மனிதர்கள் அனைவரும் தொலைக்காட்சித் தொடர்களால் இறக்கிறார்கள் என போகிற போக்கில் ஒரு கட்டுரை எழுத முடியும். இதுவரை கோடிக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் யதேட்சயாய் இறந்தவர்கள் தடுப்பூசியால் இறந்தார்கள் எனக் கட்டுரை எழுதுவது மக்களிடையே பதற்றத்தினை உண்டுபண்ணி சாகடிப்பதற்குச் சமம். ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு வருபவன் கட்டாயம் தடுப்பூசி போடுவதால் பிறருக்கு கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தலாம் அல்லவா? வாழ்வில் படித்த முட்டாள்த்தனமாக கட்டுரைகளில் இதுவும் ஒன்று.
தடுப்பூசி அல்லது கொரோனா விஷயத்தில் மாற்றுக்கருத்தை முன்வைக்கும் அனைவருமே உண்மையைப்போட்டு உடைக்காமல் என்னசொல்லிவிடுவார்களோ என்று பயந்து ஏதோ பட்டும்படாமல் பேசிவருகிறார்கள்.
ஐரோப்பியநாடுகள் அனைத்திலும் 1500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்/மருத்துவ ஆராய்ச்சியாளர்களைக்கொண்ட குழுவொன்று உலகசுகாதார நிறுவனத்தின்மீது மக்களிடையே தேவையற்ற பீதியை உலகமுழுவதும் பரப்பியதற்காக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத்தொடுக்கவிருக்கிறார்கள்.
உலகெங்கும் பலமருத்துவர்கள் ஆய்வாளர்கள் சிவா அய்யாத்துரை, ரையன் கோல், கோல்மன், ஜூடி மிக்கோவிட்ச், ரஷீத் புட்டார், கீரட் வாண்டன் பாஷ் உட்பட இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் கொரோனா ஒரு பெருந்தொற்று அல்லவென்றும் அதற்கான தடுப்பூசியை போட்டுக்கொள்வது ஆபத்தானது என்றும் பேசிவருகிறார்கள்.
பெரிய அளவுக்கெல்லாம் போகவேண்டாம். என்கேள்வி மிக எளிமையானது.
1. இந்தியாவில் அல்லது உலகளவில் Morbidity Rate என்ன Mortality Rate என்ன?
2. ஒருதடுப்பூசியைக் கண்டறிய எவ்வளவுநாட்கள் ஆகும்?
3. mRNA தடுப்பூசி என்றால் என்ன? எதற்கு இந்த Genetic Modification Nanoparticles?
4. இந்த தடுப்பூசிக்குள் எதற்கு MRC-5 இருக்கிறது?
5. 1930-களில் கண்டறியப்பட்ட ஹெச்ஐவி க்கு ஏன் இன்னும் மருந்து/தடுப்பூசி இல்லை?
6. ஒருபயங்கரமான வைரசுக்கு எப்படி லட்சக்கணக்கில் மக்கள் தாமாகவே குணமானார்கள்?
7. வெறும் 1% மட்டுமே இறப்புவிகிதமும் 99% (நோயெதிர்ப்பு சக்தியால்) குணமாகும் விகிதமும் இருந்தால் பிறகு எதற்கு தடுப்பூசி?
8. 2 மாதங்கள் முதல் 5 வயதுவரை தடுப்பூசிபோடும் வயது என்றால் பின் எதற்கு 40-50 வயதுக்காரர்களுக்கும் தடுப்பூசி?
9. தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள்/சிகிச்சைகள்/மரணங்களுக்கு அரசோ/மருந்துக்கம்பெனியோ பொறுப்பேற்காது, ஏன்?
10. தடுப்பூசி போடுபவர்களுக்கு இன்ஸூரன்ஸ் கிடையாது, ஏன்?
11. ஒருதடுப்பூசி தயாரிக்க 5-முதல் 10-வருடங்கள் வரை ஆகும்; அப்படியிருக்க, வெறும் 6 மாதங்களில் தடுப்பூசி கண்டுபிடித்து மில்லியன்கணக்கில் ஏற்றுமதி செய்தது எப்படி?
12. அமெரிக்காவில் தடுப்புசி பற்றிய Covid Severe Adverse Report பற்றிய அறிக்கையை கேட்டபோது, Pfizer-Biontech நிறுவனம் கொடுக்க மறுத்தது ஏன்?
13. அமெரிக்காவில் FDA வின் செயலதிகாரி ஊடகங்களில் “எந்தத்தடுப்பூசிக்கும் நாங்கள் அங்கீகாரம் அளிக்கவில்லை” என்று சொன்னது ஏன்?
14. உலகெங்கும் அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், மருத்துவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டதுபோல ட்ராமா ஆடியது ஏன்?
15. மருத்துவ விஞ்ஞானியும் ஃபைசர்-பயாண்டெக் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர். மைக்கேல் யீடன், “உலகத்தின் மக்கள்தொகையை குறைப்பதற்கு உலகப்போரில் ஆயுதங்களை உபயோகப்படுத்த வேண்டியதில்லை, மாறாக தடுப்பூசியை செலுத்தினாலே போதுமானது” என்று ஏன்பேசினார்?
கோரோனா உண்மையென்றும் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் வக்காலத்து வாங்குபவர்கள் எனது 15 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்
1. இந்தியாவில் அல்லது உலகளவில் Morbidity Rate என்ன Mortality Rate என்ன? – 3%
2. ஒருதடுப்பூசியைக் கண்டறிய எவ்வளவுநாட்கள் ஆகும்? – with effective collaboration 10 years
3. mRNA தடுப்பூசி என்றால் என்ன? எதற்கு இந்த Genetic Modification Nanoparticles? – as we dont know the stability of this virus, using mRNA enables us to swap the protein structures sooner when mutants emerge. Plus, growing large amounts of a virus for attenuated vaccines takes much longer – this is one reason why we cant ramp up supply quickly for covishield
4. இந்த தடுப்பூசிக்குள் எதற்கு MRC-5 இருக்கிறது? MRC-5 is only in whatsapp/facebook and in your mind. There is no MRC-5 in covishield
5. 1930-களில் கண்டறியப்பட்ட ஹெச்ஐவி க்கு ஏன் இன்னும் மருந்து/தடுப்பூசி இல்லை? HIV hides in latent form. Coronavirus doesnt/ We are lucky coronavirus is not like HIV.
6. ஒருபயங்கரமான வைரசுக்கு எப்படி லட்சக்கணக்கில் மக்கள் தாமாகவே குணமானார்கள்? see below
7. வெறும் 1% மட்டுமே இறப்புவிகிதமும் 99% (நோயெதிர்ப்பு சக்தியால்) குணமாகும் விகிதமும் இருந்தால் பிறகு எதற்கு தடுப்பூசி? The issue is how fast it spreads. It is not a dangerous virus on the basis of mortality rate compared to HIV; but if so many people become ill so quickly, the health system (hospitals, supplies, doctors) everyone get overwhelmed. You will die without basic treatment that could have kept you alive.
8. 2 மாதங்கள் முதல் 5 வயதுவரை தடுப்பூசிபோடும் வயது என்றால் பின் எதற்கு 40-50 வயதுக்காரர்களுக்கும் தடுப்பூசி? Because polio affects and kills kids, kids are vaccinated; covid kills older people more than kids.
9. தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள்/சிகிச்சைகள்/மரணங்களுக்கு அரசோ/மருந்துக்கம்பெனியோ பொறுப்பேற்காது, ஏன்? – the only reasonable question you have raised.
10. தடுப்பூசி போடுபவர்களுக்கு இன்ஸூரன்ஸ் கிடையாது, ஏன்? 9 and 10 are the same
11. ஒருதடுப்பூசி தயாரிக்க 5-முதல் 10-வருடங்கள் வரை ஆகும்; அப்படியிருக்க, வெறும் 6 மாதங்களில் தடுப்பூசி கண்டுபிடித்து மில்லியன்கணக்கில் ஏற்றுமதி செய்தது எப்படி? there were some people working hard to tackle this virus, instead o spreading whatsapp rumours
12. அமெரிக்காவில் தடுப்புசி பற்றிய Covid Severe Adverse Report பற்றிய அறிக்கையை கேட்டபோது, Pfizer-Biontech நிறுவனம் கொடுக்க மறுத்தது ஏன்? no idea what you are talking about, check cdc website, it is there
13. அமெரிக்காவில் FDA வின் செயலதிகாரி ஊடகங்களில் “எந்தத்தடுப்பூசிக்கும் நாங்கள் அங்கீகாரம் அளிக்கவில்லை” என்று சொன்னது ஏன்? Which FDA? This is a blatant lie
14. உலகெங்கும் அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், மருத்துவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டதுபோல ட்ராமா ஆடியது ஏன்? This is a blatant lie
15. மருத்துவ விஞ்ஞானியும் ஃபைசர்-பயாண்டெக் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர். மைக்கேல் யீடன், “உலகத்தின் மக்கள்தொகையை குறைப்பதற்கு உலகப்போரில் ஆயுதங்களை உபயோகப்படுத்த வேண்டியதில்லை, மாறாக தடுப்பூசியை செலுத்தினாலே போதுமானது” என்று ஏன்பேசினார்? This is a blatant lie
LENA TAMILAN,
You don’t have anything to do with justifying others questions whether or not reasonable questions but the ironicle and pathetic point is you are completely helpless to answer 9th and 10th questions. Certainly you need help for not being aware of many things but it doesn’t mean that it as a lie or doesn’t exist. I have the proof but people like you being law-abiding citizens blindfoldedly believe mainstream media and corporate medical mafia and corrupt federals and politicians longing for the 30 Silver Coins thrown by global elites.
All your answers are paradoxical and desperate attempt to conceal the global plot. ஏன்னா mRNA ஊசிமருந்துபற்றி எங்களுக்கு ஒன்னுமே தெரியாது பாருங்க? உலகளவில் லட்சக்கணக்கானபேருக்கும் விக்கல் வருகிறது அதுக்காக உடனே Pandemic னு ஊசியத்தூக்கிட்டு வந்தரவேண்டியதா?
உலகின் பயங்கரமான வைரஸாம், ஆனா மருந்தேயில்லாம லட்சக்கணக்கில் குணமானாங்களாம், பதில்சொல்ல முடியவில்லை. என்னமருந்துகொடுத்து குணமாக்கினார்கள்? அப்படி 99% பேர் குணமானால் அதற்கு எதற்கு தடுப்பூசி? பதிலில்லை, கேட்டால், அடுத்தகேள்விக்கு தாவவேண்டியது. வேகமாக எங்கே யாருக்கு பரவுகிறது? RT-PCR லட்சணம் என்னனு எங்களுக்கும் தெரியும்.
முன்னாடி நடந்த பழைய செய்திகளை பிடிச்சு கொரோனா சம்பவமா காட்டவேண்டியது, சைக்கிள் ஆன்ஸ்டெண்ட்ல செத்தவன கொரோனாக்கணக்குல சேர்க்கவேண்டியது. யாரோ சிலருக்கு சர்க்கரை வியாதியால் காலைவெட்டியெடுக்க, நன்றாக இருக்கும் அத்தனைபேரையும் முன்னேற்பாடாக காலைவெட்டிக்கொள்ளுங்கள் என்று சொன்னால் அதற்கும் க்யூவில் நிற்பது உங்கள் சொந்தவிருப்பம். அடுத்தவனுக்கு கட்டளையிட யாருக்கும் உரிமையில்லை.
உலகத்துல எல்லா ஆராய்ச்சியாளர்களும் Hard Work செய்து கோரோனாக்கு தடுப்பூசி கண்டுபுடுச்சாங்களாம். எங்கே அப்படியே அந்த HIV க்கும் ஹார்ட் வொர்க் செஞ்சு ஒருதடுப்பூசி கண்டுபுடிக்கசொல்லுங்க பாக்கலாம். கொரோனா உருமாறுதாமா ஏன்னா அது Retrovirus அப்ப உங்க தடுப்பூசியும் உருமாறிக்குமா?
உங்க கொரோனா வந்ததுக்கப்புறமா ஏன் ஹார்ட் அட்டாக், கிட்னி ஃபெய்லியர், வைரஸ்காய்ச்சல், டைஃபாய்ட், மஞ்சள்காமாலைன்னு ஒன்னையுமே காணோம்? இந்தவருசம் எல்லா நோயும் லீவுபோட்டு ஊருக்கு போயிருச்சா?
இவ்வளவு விளக்கி சொன்னநீங்க, MRC-5 பற்றியும் விளக்கியிருக்கலாமே எதுக்கு இப்படியொரு ஜம்ப்பு? அமெரிக்காவின் புகழ்பெற்ற Vaccinologist D. Stanley Plotkins ஐ விடவும் Certified Pathologist, Immunologist and Virologist மான Dr. Ryan Cole- ஐ விடவும் நீங்கள் பெரியவிஞ்ஞானியில்லை. உடனே இதுவும் blatant lie னு எஸ்கேப் ஆகக்கூடாது.
பின்குறிப்பு:- கேள்வி 9 மற்றும் 10 க்கு ஆவலுடன் பதிலை எதிர்பார்க்கிறேன்.
உலகளவில் லட்சக்கணக்கானபேருக்கும் விக்கல் வருகிறது அதுக்காக உடனே Pandemic னு ஊசியத்தூக்கிட்டு வந்தரவேண்டியதா? – There are no vaccines available for hiccups. COVID is more than hiccup. I wish it does not affect anyone close to you. I have seen enough people dying with it.
உலகின் பயங்கரமான வைரஸாம், ஆனா மருந்தேயில்லாம லட்சக்கணக்கில் குணமானாங்களாம், பதில்சொல்ல முடியவில்லை. என்னமருந்துகொடுத்து குணமாக்கினார்கள்?
– Some people even get cured of cancer. That doesn’t mean cancer is not dangerous.
அப்படி 99% பேர் குணமானால் அதற்கு எதற்கு தடுப்பூசி? பதிலில்லை, கேட்டால், அடுத்தகேள்விக்கு தாவவேண்டியது.
– We don’t know who will be the 1% that will die. If you have a way to know it, we can only give vaccine to those 1%. Same with polio, same with small pox etc. Everyone needs to be vaccinated to reduce circulation of the virus.
வேகமாக எங்கே யாருக்கு பரவுகிறது? RT-PCR லட்சணம் என்னனு எங்களுக்கும் தெரியும்.
முன்னாடி நடந்த பழைய செய்திகளை பிடிச்சு கொரோனா சம்பவமா காட்டவேண்டியது, சைக்கிள் ஆன்ஸ்டெண்ட்ல செத்தவன கொரோனாக்கணக்குல சேர்க்கவேண்டியது. யாரோ சிலருக்கு சர்க்கரை வியாதியால் காலைவெட்டியெடுக்க, நன்றாக இருக்கும் அத்தனைபேரையும் முன்னேற்பாடாக காலைவெட்டிக்கொள்ளுங்கள் என்று சொன்னால் அதற்கும் க்யூவில் நிற்பது உங்கள் சொந்தவிருப்பம். அடுத்தவனுக்கு கட்டளையிட யாருக்கும் உரிமையில்லை.
No body is ordering – to my knowledge no country has made the vaccination compulsory. Your family is your expendable property. It is your wish to take it or not.
உலகத்துல எல்லா ஆராய்ச்சியாளர்களும் Hard Work செய்து கோரோனாக்கு தடுப்பூசி கண்டுபுடுச்சாங்களாம். எங்கே அப்படியே அந்த HIV க்கும் ஹார்ட் வொர்க் செஞ்சு ஒருதடுப்பூசி கண்டுபுடிக்கசொல்லுங்க பாக்கலாம். கொரோனா உருமாறுதாமா ஏன்னா அது Retrovirus அப்ப உங்க தடுப்பூசியும் உருமாறிக்குமா?
coronavirus is not a retrovirus. HIV is retrovirus. mRNA cannot change to DNA without RNA-dependent DNA polymerase. This enzyme is present in the virus not in the vaccine. So there is no scientific possibility that mRNA will mutate.
உங்க கொரோனா வந்ததுக்கப்புறமா ஏன் ஹார்ட் அட்டாக், கிட்னி ஃபெய்லியர், வைரஸ்காய்ச்சல், டைஃபாய்ட், மஞ்சள்காமாலைன்னு ஒன்னையுமே காணோம்? இந்தவருசம் எல்லா நோயும் லீவுபோட்டு ஊருக்கு போயிருச்சா?
Who told you these diseases have gone? A lot of people are dying of these because hospitals are filled by people who are affected by covid.
இவ்வளவு விளக்கி சொன்னநீங்க, MRC-5 பற்றியும் விளக்கியிருக்கலாமே எதுக்கு இப்படியொரு ஜம்ப்பு?
What is your issue with MRC-5. It is a cell line used to make many vaccines but not used for covishield. the covishield uses HEK-293 cell line. How can you make vaccines without growing a virus on a cell line? Please explain as I dont understand what your issue with MRC-5 is. I can see that you want to raise doubts in people’s minds but why should anyone be worried about MRC-5 at all, although it is not in covishield
அமெரிக்காவின் புகழ்பெற்ற Vaccinologist D. Stanley Plotkins ஐ விடவும் Certified Pathologist, Immunologist and Virologist மான Dr. Ryan Cole- ஐ விடவும் நீங்கள் பெரியவிஞ்ஞானியில்லை.
When did Plotkins say vaccines don’t work? He said the vaccination strategy needs to improve.
Ryan Cole is an idiot with baseless claims. You will see attention-seeking idiots among all professions, including medicine.
9 and 10 are good questions, but you are not asking the right people. It must be posed to the government/insurers. Given the rarity of the adverse effects, there wont be a big loss for them if they provide coverage for the side effects, and they will find a way to make profit by raising everyone’s premiums instead, as they always do. With the way this pandemic is going, it is inevitable that the IP rights of the vaccine will be dissolved sooner or later.
If you don’t want to take the vaccine, no problem. But when you spread conspiracy theories, some who read it may refuse vaccination, and may end up losing a member of their family.
The human mind has a tendency to believe in conspiracies and non-existent objects more readily and more strongly than to believe in facts.
Dr Santhoshkumar
அப்படி ஏதாவது போர்ட்டல்/வெப்சைட்/வளைதளக்குழு உருவாக்கப்பட்டால் லிங்க் அனுப்புங்கள் நன்றி!
Dr Santhoshkumar
அப்படி ஏதாவது போர்ட்டல்/வெப்சைட்/வளைதளக்குழு உருவாக்கப்பட்டால் லிங்க் அனுப்புங்கள் நன்றி!
பிரச்சனை ஏதோ தடுப்பூசியோடு முடிந்துவிடுவதாக பலர் நினைக்கின்றனர். ஆனால் இதுதான் ஆரம்பமே. விஷயமே சர்வதேச அளவில் நிகழவிருக்கும் உலகளாவிய மாற்றம் சம்பந்தப்பட்டது. Things to see a lot.