பெருந்தொற்று காலகட்டத்தை பயன்படுத்தி மக்களின் சுதந்திரத்தை பறிக்கின்ற போக்குகளுக்கு உலகம் எங்கும் எதிர்ப்புகள் வெடித்துள்ளன! ”அறிவியலின் பெயரால் அறிவுக்கு பொருந்தாத மூர்க்கத்தனத்தை திணிக்காதீர்கள்’’ என்று இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் மக்களின் எதிர்ப்பு இயக்கம் வலுத்து வருகிறது. இந்தியாவிலும் தற்போது மருத்துவ துறையிலேயே தடுப்பூசிக்கு எதிரான முணுமுணுப்புகள் ஆரம்பித்துவிட்டன!
மேலை நாடுகளில் முதல் எதிர்ப்பு மாஸ்க்கிற்கு தான்! கூட்டமான இடங்களில் செல்லும் போதும், அடுத்தவர்களிடம் பேசும் போதும் மாஸ்க் அணியுங்கள் என்றால் ஏற்கலாம்! ஆனால், ஒருவர் தனிப்பட்ட முறையில் வெளியில் நடைபயிற்சியில் இருக்கும் போதோ, பயணிக்கும் போதோ..மாஸ்க்கை கட்டாயப்படுத்துவது முறையற்றது! பொதுவாக யார் தொடர்புமற்று தனிமையில் இருப்பவர்களையோ, கடுமையான உடல் உழைப்பு கொண்டவர்களையோ..சதா சர்வ காலமும் வலியுறுத்துவது ஆபத்தானதாகும். தொடர்ந்து மாஸ்க அணிபவர்களுக்கு தான் நுரையீரல் பிரச்சினை, சுவாச பிரச்சினை வருகிறது! கொரோனா தாக்குகிறது! அவர்களால் இயல்பாக சுவாசிக்கமுடியாமல் ஆக்சிஜனை நாட வேண்டியவர்களாகிவிடுகிறார்கள்!
ஆகவே, மாஸ்க்கிற்கு எதிரான மக்கள் இயக்கம் வெளிநாடுகளில் அதிகமாக நடக்கிறது.
அதே போல நீடித்த நெடிய ஊரடங்கிற்கும் கடுமையான எதிர்ப்பு போராட்டங்கள் நடக்கின்றன! நியாயமாக பார்க்கப் போனால் வறிய மக்கள் நிறைந்துள்ள நம் நாட்டில் தான் அதிக போராட்டங்கள் ஊரடங்கிற்கு எதிராக நடந்திருக்க வேண்டும்!
நமக்கு அக்கம்பக்கத்தில் வாழ்கிற ஏழை,எளிய மக்கள் படும் துயரம் சொல்லிமாளாது! இவர்களின் வீட்டில் உள்ள பொருட்கள், நகைகள் எல்லாம் அடகுகடைக்கு சென்று கொண்டுள்ளன! இன்னும் சிலர் அடகு வைக்க ஏதுமின்றி, பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆனால், நோய் பரவல்,சாவுகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி முடக்கப்பட்டுள்ளனர் எளிய மக்கள்!
இதற்கு அடுத்தபடியாக தடுப்பூசி நிர்பந்தங்கள்! எப்போது தடுப்பூசிகள் அறிமுகமானதோ .அப்போது தொடங்கி தான் கொரானா இரண்டாவது அலை உருவானது..! அதிகமானவர்களை கொரானாவிற்குள் தள்ளியதில் தடுப்பூசிகளுக்கு பெரும்பங்கு உண்டு என்பதாக தற்போது மெல்ல,மெல்ல, தைரியம் பெற்று விஞ்ஞானிகளே பேசத் தொடங்கியுள்ளனர்.
”கொரானா தடுப்பூசி போட்டவர்கள் தான் உருமாறிய கொரானாவை உருவாக்குகிறார்கள். பெருந்தொற்று காலத்தில் இது மாபெரும் மருத்துவ தவறு, அறிவியல் அராஜகம்” என்றார் நோபல் பரிசு பெற்ற பிரெஞ்ச் வைரலாஜிஸ்ட் லூக் மாண்டோக்னியர்!
அவர் சொன்னதைத் தான் தற்போது இந்திய பொது சுகாதார சங்கம், நோய் பரவல் தடுப்பு சங்கம், எய்ம்ஸ் மருத்துவர்கள், கோவிட் தடுப்பு குழு உறுப்பினர்கள் உறுதிபடுத்தி உள்ளனர்! இவர்கள் பிரதமர் மோடிக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில், ஒழுங்குமுறையற்ற, முழுமையில்லாத தடுப்பூசி செயல்பாடுகள் உருமாறிய கொரோனா எனும் நெருக்கடியை உருவாக்குகிறது! எல்லா வயதினருக்கும் தடுப்பூசி போடுவது என முடிவெடுத்தது சரியாகாது! தொற்று காலத்தில் நாம் முறையான டேட்டா இல்லாமல் பல விஷயங்களை முன்னெடுத்துச் செல்வதும் சரியாகாது’’ என கடிதம் எழுதியுள்ளனர்.
இப்படி ஏன் எழுதியுள்ளனர் என்றால், இடண்டாம் அலையில் மட்டுமே நமது மருத்துவர்கள் 624 பேரையும், ஆயிரத்திற்கு மேற்பட்ட செவிலியர்களையும் கொரோனாவிற்கு நாம் பலிகொடுத்துள்ளோம்.
தடுப்பூசி என்பது அது போட்டுக் கொண்டவனையும் பாதுகாக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவன் மூலமாக வீரியமாக பரவக் காரணமாகிவிடுகிறது என்பதே பிரச்சினை. மிகச் சமீபத்தில் கர்நாடகாவின் சாம்ராஜ் மாவட்டத்தில் கொரொனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஐந்து மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இது மட்டுமின்றி, உத்திரகாண்ட்டில் முன்களப் பணியாளர்கள் என்ற ஹோதாவில் காவல்துறையினருக்கு நிர்பந்தித்து தடுப்பூசி போட்டார்கள். தற்போது அவர்களில் மிகப் பெரும்பாலோருக்கு கொரானா வந்துவிட்டது! அவர்களின் குடும்பத்தாருக்கும் அதிக தொற்று ஏற்பட்டுள்ளது! அதாவது தடுப்பூசி போடாத பொது மக்களை விடவும் பத்து மடங்கு அதிகமாக காவல்துறையினர் பாதிக்கப்பட்டுள்ள தகவல்கள் உத்திரகாண்ட் அரசையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதே போல உலகிலேயே அதிகமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் இஸ்ரேல் மக்கள் தான்! அங்கு தடுப்பூசி எடுத்துக் கொண்ட 16 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் 25% பேர்களுக்கு தடுப்பூசியால் இதயபாதிப்பு ஏற்படுவதை அந்த நாட்டு அரசே உறுதிபடுத்தியுள்ளது.
ரஷ்யாவின் முன்னாள் தொற்று நோய்பிரிவு தலைவர் அலெக்சாண்டர் செபுர்யோவ், ”ஆண்டிபாடீஸ் உள்ளவர்களுக்கு தடுப்பூசியை போட்டால் விளைவு ஆபத்தானதாக இருக்கிறது’’ என துணிந்து கூறியுள்ளார்!
இதனால் தான் மேலை நாடுகளில் தடுப்பூசிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் மக்கள் ஆவேசமாக பங்கு பெறுகின்றனர்.
”என் உடம்பு என் விருப்பம்’’
”தடுப்பூசியை கட்டாயமாக்காதே’’
”உன் தடுப்பூசியை உன் ஆசனவாயில் சொருகிக் கொள்’’
” 5 ஜியை கொண்டு வராதே..! எங்கள் குழந்தைகளை வாழவிடு’’
என்றெல்லாம் கோஷம் போடுகிறார்கள்!
இங்கே நம் நாட்டிலோ அரசு அமைப்புகளும், என்.ஜி.ஓக்களும், மீடியாக்களும் தடுப்பூசி ஒன்றே தீர்வு என மக்களை முளைச் சலவை செய்கின்றனர்! போடாவிட்டால் உனக்கு ஆபத்து என பயமுறுத்த வைக்கப் படுகின்றனர்! பயத்தையே ஆயுதமாக்கி கிராமங்களிலும், மலை வாழ் பகுதியிலுமுள்ள, ஏழை,எளிய மக்களை விரட்டிப் பிடித்து ஊசி போடுகிறார்கள்! எண்ணிக்கையை அதிகப்படுத்தி காட்ட நினைக்கிறார்கள்! ஒரு காலத்தில் ‘பசுமை புரட்சி’ என்ற பெயரில் ரசாயன உரங்களையும், பூச்சி மருந்துகளையும் இப்படி விவசாயிகளை விரட்டி, விரட்டி தான் ஏற்க வைத்தனர்! அதன் பலனாகத் தான் நாம் இன்று நஞ்சையே உணவாக உண்டு வருகிறோம். நம் தாய் நிலத்தையும் மலடாக்கிவிட்டோம்!
‘இது கட்டாயமில்லை’ என சொல்லிவிட்டு மறைமுகமாக கட்டாயப்படுத்துகிறார்கள்! தடுப்பூசி போட்டவர்கள் தான் ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவீர்கள்.’’
”தடுப்பூசி போட்டவர்கள் தான் போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க அனுமதிக்கபடுவார்கள்!’’
Also read
”தடுப்பூசி போட்டவர்கள் தான் அரசு அலுவலகங்களில் பணியாற்றமுடியும்..’’ என்ற நிர்பந்தங்கள் தரப்படுகின்றன!
அதே சமயம் மற்றொருபுறம், மருத்துவ வல்லுநர் குழு பிரதமரிடம் அளித்துள்ள அறிக்கையின்படி, நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி சரியான பலனை தருகிறதா என்பதை நாம் இது வரை உறுதி செய்யவில்லை.அது செய்ய வேண்டும். அது வரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதானது ஆரோக்கியமான ஆரம்பமாகவே பார்க்க வேண்டியுள்ளது!
விருப்பமுள்ளவர்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ளட்டும்! அதே சமயம் ‘தடுப்பூசியால் நாம் பாதுகாக்கப்பட்டுவிடுவோம்’ என மெத்தனமாக இருந்துவிடாமல் நல்ல மூச்சு பயிற்சி, யோகா, இயற்கை உணவுகள், சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோ உள்ளிட்ட எது ஒன்றில் அனுபவ ரீதியாக பலன் தெரிகிறதோ.., அதை உறுதியாக பற்றிக் கொண்டு நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழர்