ஒரு அரசு எப்படிப்பட்ட அரசு என்பதும், ஒரு ஆட்சியாளரின் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதும் அதன் முக்கிய பதவிகளில் எப்படிப்பட்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை பொறுத்துத் தான் உள்ளது. தலைமைச் செயலாலாளராக இறையன்பு, தனிச் செயலாளராக உதயச்சந்திரன் போன்றோர்களை துணைக்கு வைத்துக் கொண்டார் ஸ்டாலின்! அதே போல நேர்மையும், திறமையும் ஒருங்கே பெற்ற பி.டி.ஆர்.தியாகராஜன், மா.சுப்பிரமணியம், சேகர்பாபு, மகேஷ்பொய்யாமொழி..போன்ற செயல் ஆற்றல் மிக்கவர்களை அமைச்சர்களாக்கியதன் மூலம் மேலும் நம்பிக்கை ஏற்படுத்தினார் ஸ்டாலின்! இப்படியாக ஒரு நல்ல ஆட்சியைத் தர வேண்டும் என்று முதல்வர் நினைத்தாலும், நாம் கேள்விப்படும் சம்பவங்கள் அதற்கு சவாலாக உள்ளன!
சென்ற ஆட்சியில் ஊழல் செய்த பல அதிகாரிகள் இந்த ஆட்சியிலும் முக்கியத்துவம் பெற்று வருவதை நாம் தொடர்ந்து அறத்தில் கவனப்படுத்தி வருகிறோம்! அந்த வகையில் அதிகாரி என்ற போர்வையில் அரசியல்வாதியாக சென்ற ஆட்சியில் வலம் வந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை ஊழல்மயமாக்கிய கோ.விஜயராகவன் இந்த ஆட்சியாளர்களிடமும் அதி முக்கியத்துவம் பெற்றுள்ளதோடு, தன் தகுதிக்கு முற்றலும் பொருந்தாத பெரும் பொறுப்பை வாங்கியுள்ளார் என்பது உண்மையிலேயே தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது!
தமிழ்நாடு அரசின் அகரமுதலித் திட்டம் என்பது மாபெரும் மொழியியல் அறிஞர் தேவநேயப் பாவாணர் அவர்களால் உருவாக்கப்பட்டது. தேவநேய பாவாணர் பல மொழிகளில் புலமை பெற்றவர். திராவிட மொழிகள், இந்திய மொழிகள், உலகமொழிகள் ஆகியவற்றில் பெருமொழிகளாய் அமைந்த 23 மொழிகளைக் கற்று, அவற்றின் இலக்கண அறிவும் பெற்றவர்! அப்படிப்பட்ட தேவநேய பாவணரால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் அகரமுதலி. 1974-ஆம் ஆண்டு பாவாணர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகத் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியால் பணியமர்த்தம் செய்யப்பட்டார்.
அகரமுதலித் திட்ட பணியென்பது மிக ஆழமான பணி!. மொழியியல் துறையில் ஆழ்ந்த அறிவாற்றலும் மிகுந்த பட்டறிவும் கொண்டவர்களுக்கே சாத்தியப்படும் பணி! பல்வேறு அகராதிகளை அலசி ஆராயத் தெரிந்திருக்க வேண்டும்!. பன்மொழி அகராதிகள், கலைக் களஞ்சியங்கள், திணை நூல்கள் இன்னும் ஆயிரக்கணக்கான நூல்களைத் படித்திருக்க வேண்டும்! அப்படிப்பட்ட ஆராய்ச்சி அறிவு தேவைப்படும் பணிக்கு அடிவருடி அரசியல்,பொதுச்சொத்தை அபகரிக்கும் அரசியல் ஆகியவை மட்டுமே கற்றுத் தேர்ந்த ஒருவரை எப்படி இயக்குனராக நியமித்தனர்…என்று பல தமிழ் அமைப்புகள் கேள்வி எழுப்பி உள்ளன!
பல ஆண்டுகளாக முடங்கிப் போயிருந்த அகரமுதலி இயக்ககத்தை பதவிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் கடுமையாக உழைத்து தூக்கி நிறுத்தினார் அதன் முந்தைய இயக்குநர் தங்க.காமராசு என்பவர்! கல்லூரிகள் தோறும் சென்று மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்ற ஆட்சியில் மாணவர்களின் பங்களிப்புடன் 10,000க்கும் மேற்பட்ட கலைச் சொற்கள் கண்டெடுக்கப்பட்டு நூல்வடிவம் கண்டன! இந்த நிலையில் புதிதாக வந்த திமுக அரசால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த கோ.விஜயராகவன் அதிரடியாக அகரமுதலித் திட்ட இயக்குனராக பதவி கொடுக்கப்பட்டுள்ளார்!
இது குறித்து நாம் இத் துறை சம்பந்தப்பட்ட ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோரிடையே விசாரித்ததில், ”இங்கு ஏற்கனவே பொறுப்பில் இருந்த தங்க காமராசு மீது ஊழல் முறைகேடு போன்ற எந்தப் புகாரும் கிடையாது. எவ்வித சிக்கல்களிலும் மாட்டாமல் நேர்மையாக நிர்வாகம் செய்த தங்க.காமராசுவை கடந்தமாதம் திடீரென்று தமிழ்நாடு அரசு பதிவியிறக்கம் செய்து திருப்பூருக்கு மாற்றம் செய்ததால் அவர் விருப்ப ஓய்வு பெற்று விரக்தியுடன் வெளியேறிவிட்டார். அவருக்கு மாற்றாக அகரமுதலி இயக்குநராக விஜயராகவன் நியமிக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே அனைவருக்கும் அதிர்ச்சி தான்! ஏன் இயக்குனர் மாற்றம் என்பதற்கு எந்தவிதமானக் காரணமும் தெரியவில்லை” என்றனர்!
நாம் விசாரித்த வகையில் அமைச்சர் துரைமுருகன் விஜயராகவன் விவகாரத்தில் தீவிர ஆர்வம் காட்டியதாகவும், அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உதவியாளர் கோபால் தான் விஜயராகவனோடு டீல் பேசி முடித்ததாகவும் பரவலாக தமிழ்வளர்ச்சித் துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது! அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உதவியாளர் கோபால் ஏற்கனவே திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையில் கையூட்டு வாங்கி கைதாகி இன்றுவரை கோர்ட், வழக்கு என்று அலைந்து கொண்டிருப்பவர்!
கடந்த ஆட்சியில் தன் அதிமுக அரசியல் பின்புலத்துடன் தமிழ்வளா்ச்சித்துறை மற்றும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகிய இரண்டிலும் ஏழு ஆண்டுகளாக இயக்குநராகப் பணியாற்றியவர் விஜயராகவன். அப்போது அரசு செயலாளா்களின் ஆதரவோடு பல முறைகேடுகளிலும், ஊழலிலும் ஈடுபட்டு கோடிகோடியாக சொத்துக் குவித்தார் என்பது சகலருக்கும் தெரிந்த விஷயம் தான்! இவருக்கு பல பினாமிகள் உள்ளனர். அவர்களில் ரமேஷ், பாரதி போன்றவர்கள் குறிப்பிடதக்கவர்கள்!
விஜயராகவனை பொறுத்த அளவில் அரசியல் லாபிகளில் கைதேர்ந்தவரே அல்லாமல் இலக்கணமும் இலக்கியமும் அவருக்கு சுட்டுப்போட்டாலும் வாராது. அவர் எப்படி அகரமுதலி இயக்குநர் பதவிக்கு பொருத்தமானவராக இருக்க முடியும்..? ஆட்சியாளர்கள் விருப்பப்பட்டால் வெறும் அதிகாரியான அவரை வேறு ஏதாவது பணிக்கு நியமித்துவிட்டு போகட்டும்! ஆனால், ஆராய்ச்சி பணிகளை அலங்கோலப்படுத்தி, ஆதாய அரசியலை செய்வதற்கு அகரமுதலித் திட்ட இயக்குனர் பதவியை இழிவுபடுத்துவதா..? எவ்வளவோ தமிழ் அறிஞர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களில் யாருமே இந்த அரசின் கண்களுக்கு தெரியவில்லையா..?’’ என்பது தான் திருவாரூர் தமிழ் வளர்ச்சி கழகம் உள்ளிட்ட அமைப்புகள் வைக்கும் கேள்வியாகும்!
அக்மார்க் அ.தி.மு.க. காரரான விஜயராகவன் மீது 36 வகையான ஊழல் குற்றச்சாட்டுகள் விஜிலென்சில் புகாராகவும், வழக்காகவும் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறது! குறிப்பாக போலி பில் மூலம் சுமார் 30 இலட்சம் மதிப்புள்ள அகரமுதலி வெளியீடுகளை விற்று ஆதாயமடைந்தார் என்ற செய்தி அதிரவைத்தது!
மொத்தமே ஆறு பணியாளா்களைக் கொண்டு 1985 – ஆம் ஆண்டிலிருந்து 2011ஆம் ஆண்டு வரை 31 பேரகராதித் தொகுதிகளை அகரமுதலி இயக்ககம் வெளியிட்டது. அகரமுதலி இயக்ககம் சிறிய வாடகை இடத்தில் செயல்பட்டது., மிகக் குறைந்தப் பணியாளர்களைக் கொண்டிருந்தது. ஆகவே, அகராதிகளை அச்சிடுவதற்கும், விற்பனை செய்வதற்குமான பொறுப்பு உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் நிறுவன இயக்குநர்களாக இருந்தவர்களும் விற்று, அதற்கானத்தொகையை முறையாக அரசு கணக்கில் செலுத்தி வந்தார்கள். 2012 ஆம் ஆண்டு வரை சுமார் 50 இலட்சம் ரூபாய் அகராதிகள் விற்ற பணமாக செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக விஜயராகவன் பொறுப்பேற்ற 2013ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை விற்பனைத்தொகை எதுவும் அரசுக்கணக்கில் செலுத்தப்படவில்லை. 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு நடமாடும் நூல்விற்பனை ஊர்தி பயன்படுத்தப்பட்டும், தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியிலும், பொருட்காட்சியிலும் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டும் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அகராதிகள் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது! ஆனால், அத்தொகை இதுவரை அரசுக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் அகரமுதலி இயக்ககம் அண்ணாநகரிலிருந்து உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. 2016ஆம் ஆண்டு இயக்ககத்தின் இயக்குநராக பொறுப்பேற்றிருந்த கோ.செழியன் என்பவருக்கு அகராதிகளின் விற்பனைக் கணக்கு கேட்டு ஏ.ஜி.எஸ் அலுவலகத்திலிருந்து தொடர்ந்து கடிதங்கள் வரத்தொடங்கியது. எனவே, அவா் விஜயராகவனிடம் கணக்குக் கேட்டு அழுத்தம் கொடுத்திருக்கிறார். விஜயராகவனோ வாய்மொழியாக ஏதேதோ காரணம் கூறி கோ.செழியனை சமாளித்து வந்திருக்கிறார்.
அவருக்குப்பின் 2018 ஆம் ஆண்டு தங்க.காமராசு அகரமுதலியின் இயக்குநராகப் பொறுப்பேற்று விஜயராகவனைக் கணக்கு கேட்டிருக்கிறார். அதனால் அவருக்கு விஜயராகவன் தொடர்ந்து இன்னல்கள் கொடுத்து வந்தார். உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்திற்குள் அகரமுதலி ஊர்தியை நிறுத்த இடம் கொடுக்காமலும், இயக்கக பெயர்ப் பலகையை வைக்கக்கூட இடம் தராமலும், இயக்ககத்தின் கழிவறைக்குச் செல்லும்தண்ணீர் குழாயை துண்டித்தும், அவ்வியக்ககத்தை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தும் அராஜக வேலையில் விஜயராகவன் இறங்கி, அந்தப்படியே சாதித்தார்!’’ என்று பணியாளா்கள் பதட்டத்துடன் தெரிவித்தனா்.
பேராசிரியர் பணி நியமனத்திற்கு விண்ணப்பித்தவர்களில் 14 பேர் நேர்காணலுக்கு வந்தனர்! ஆனால், அதில் நல்ல திறமையாளர்களை தேர்வு செய்யாமல் விண்ணப்பமே தராத – நேர்காணலிலும் பங்கு பெறாத – தாமரைச் செல்வன்,சுலோச்சனா ஆகியோரிடம் பல லட்சம் பணம் பெற்று பணி நியமனம் கொடுத்துள்ளார் விஜயராகவன். இந்த முறைகேடுகள் தணிக்கை அறிக்கையில் அம்பலப்பட்டுவிட்டது!
மேலும் அவர்கள் கூறும்போது, “உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்திற்குள் இருக்கும் மரங்களை கூட விஜயராகவன் வெட்டி தன் சொந்த ஊருக்கு கொண்டு போனார்!. கணினிகள், மடிக்கணினிகள், மேஜை நாற்காலிகளைக்கூட அவர் ஊர்க்காரர்கள் வந்து திருடிச்சென்றனர்.
இங்கிருக்கும் அரங்கத்தை தொடர்ந்து தனியாருக்கு வாடகைவிட்டு அந்தப்பணத்தை அரசுக்கணக்கில் செலுத்தமல் வைத்துக் கொண்டார்!. சமஸ்கிருத வகுப்பு, அக்குபஞ்சர் வகுப்பு, சித்தா வகுப்பு என்று பல்வேறு வகுப்புகள் நடத்துவதாகக்கூறி, மகாலட்சுமி என்ற பேராசிரியை உதவியுடன் அரசு முத்திரையிட்ட சான்றிதழ்களை இலட்சக்கணக்கில் விற்று சம்பாதித்தார். நூல்கள் அச்சடிப்பதிலும் விற்பனை செய்வதிலும் இவரும், மகாலட்சுமியும் சேர்ந்து செய்த அடித்த கொள்ளைகள் கொஞ்ச, நஞ்சமல்ல! அனைத்திற்கும் போலி பில் புத்தகம் பயன் படுத்தப்பட்டுள்ளது.
ஒருமுறை விசாரணைக்கு வரப்போவதாகச்சொன்ன அன்று அதிகாலையிலேயே கணினிகள், கணக்கு கோப்புகள் அனைத்தையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு போலீசில் புகார் கொடுத்தார் விஜயராகவன். பணம் பதவிக்கான தடைகளை கடக்க வன்முறை, கொலை போன்றவற்றையும் செய்ய கூடியவர்! இங்கு நடக்கும் எல்லா ஊழல்களிலிருந்தும் அவர் பாதுகாக்கப்பட்டார். காரணம், இங்கு முக்கியமான பதவிகளில் உள்ளவா்கள் அனைவரும் விஜயராகவனால் முறைகேடாக பணியமர்த்தப்பட்டவர்கள்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் தயங்காதவர் விஜயராகவன் என்பதற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி, பிரஞ்சு மொழிகளை கற்றுக் கொடுக்கிறேன் என அறிவித்து அவர் கல்லா கட்ட ஆரம்பித்ததே சாட்சி! அப்போது இந்த இழி செயலை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என ஆவேசத்துடன் அறிக்கைவிட்டவர் தங்கம் தென்னரசு! இன்றைக்கு எப்படி அவர் விஜயராகவனோடு கைகோர்க்கிறார் என்பது தான் தெரியவில்லை!
தமிழ் வளா்ச்சித் துறையில் சீனியாரிட்டியில் 11-வது இடத்திலிருந்த விஜயராகவனை இயக்குநராக பணியமர்த்தியவர் அப்போதைய தமிழ் வளா்ச்சித் செயலாளா் இராஜாராம் ஐ.ஏ.எஸ் என்பது அனைவரும் அறிந்தது. விஜயராகவனைக்கொண்டு இராஜாராம் அதிகம் ஆதாயமடைந்தார். “உலத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற ஓலைச்சுவடி ஊழல், நூல்பதிப்பு ஊழல், கட்டட ஊழல் என பல முறைகேடுகளில் விஜயராகவனுடன் சம்மந்தப்பட்டிருப்பவர் அப்போதைய அரசு செயலாளா் இராஜாராம்!
மார்ட்டின் செல்லதுரை என்பவர் இவர்கள் மீது விஜிலென்சில் புகார் தந்துள்ளார்! இந்த ஊழல்களைப் பற்றி விஜிலென்சில் வழக்குப் பதிந்திருக்கும் மார்ட்டின் செல்லதுரையை போன் மூலம் மிரட்டி வருகிறார்கள்!. காரணம், இந்த ஊழல் விசாரணையில் இராஜாராம், வெங்கடேசன், மகேசன் காசிராஜன் போன்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதும் உறுதியாகியிருக்கிறது” என்று மாணவர்கள் மனக்குமறலை கொட்டித் தீர்த்துவிட்டார்கள்.
Also read
அகரமுதலி இயக்ககத்தின் உழைப்பில் விளைந்ததுதான் பேரகராதித் தொகுதிகள். அவைதாம் இந்த இயக்ககத்தின் சொத்து. அவற்றையே களவாடி, விற்று ஆதாயமடைந்து முறைகேடு செய்த அதே விஜயராகவன் இப்போது, அகரமுதலி இயக்ககத்தின் இயக்குநராக பொறுப்பேற்றிருக்கிறார் என்றால், இந்த ஆட்சியாளர்களை நாம் எப்படி மதிப்பிடுவது?
“தன்மீதுள்ள அகராதி விற்பனை ஊழலை கொஞ்சம் கூட தடயமில்லாமல் அழித்துவிடும் மெகா திட்டத்துடன், ஆதாயமடைந்த ஒரு பகுதிப் பணத்தை இன்றைய ஆட்சியாளர்களிடம் கொடுத்துவிட்டு அகரமுதலி இயக்கக இயக்குநர் பதவியினை விஜயராகவன் பெற்று இருக்கக்கூடும்” என்பதே தமிழ் அறிஞர்கள் பலரின் பொதுக் கருத்தாக உள்ளது.
விஜயராகவன் குறித்து ஒரு விசாரணை அமைத்தால் ஏராளமான அமைப்புகள் ஆதாரங்களுடன் புகார் தரத் தயாராக உள்ளனர்! விஜயராகவன் விவகாரத்தில் பல தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடி பேசி வருகிறார்கள்! பெரும் திரளான மாணவர்கள் விரைவில் போராட்ட களத்திற்கு வரவாய்ப்புள்ளது!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
அனைத்தும் உண்மை
இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட அனைத்தும் உண்மையே …
விரைவில் … ஊழ்வினை உருத்து வந்து ஊட்டிடல் வேண்டும்
தமிழைக் காக்கவும் வளர்க்கவும் எண்ணற்ற இளைஞர்கள் தன்னலம் கருதாமல் பல புதிய சொற்களை உருவாக்குதல், தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்தல், விக்கிபீடியாவில் தமிழில் கட்டுரைகள் எழுதுதல் என்று உழைத்துக் கொண்டிருக்க, இப்படி ஒரு ஊழல் பேர்வழியை அகரமுதலித் திட்டத்தின் தவைவராக்குவது, பெரும் தீங்கு. பாவாணர், அருளியார் போன்ற சொல்லாய்வு அறிஞர்களின் உழைப்பை இழிவுபடுத்துவது இது.
துரைமுருகன் நற்பெயரை நாடப் போவதில்லை. அவருக்கு சாதிக்கட்சியில் தனிக்கூட்டு உண்டு. சட்டதாக்குதல் வந்தால் சரணடைந்துவிடுவார். தென்னரசு தனக்கென நல்லவர்கள் நட்பை பெருக்கி வைத்திருப்பவர். கவனத்துடன் உதவியாளர் போக்கை கட்டுப்படுத்தாவிட்டால் அவர் அவப்பெயர் தாங்க நேரிடும்.
சரியாகச் சொன்னீர்
இந்த விசயத்தில் திமுக அரசை குறை கூற வேண்டாம்,விஜயராகவன் அதிமுக காரன் என தெரிந்தே அகர முதலிஇயக்குனராக நியமனம் செய்திருப்பதில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு ராஜதந்திரத்தை கையாண்டு இருக்கிறார் இதற்கு முன்பு அகர முதலி இயக்குனராக இருந்த தங்க காமராசு மிகவும் நேர்மையானவர் அவருக்கு நேர்மானவர் விஜயராகவன். இந்த மாற்றல் நடவடிக்கையின் மூலம் அதிமுக ஆட்சியில் விஜயராகவன் செய்த ஊழலும் குவித்த சொத்தும் விரைவில் வெளியில் வந்துவிடும் அதைக்கொண்டு விஜயராகவன் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துவிடலாம் என்று கூட அமைச்சர் காய் நகர்த்தி இருக்கலாம். பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்
நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம் இதில் பாதிக்கப்படுவது அப்பாவி தங்க காமராசு தானே! அவருக்கு என்ன நீதி கிடைக்கப்போகிறது? அவருக்கு அரசியல் பின்பலமோ, அதிகாரிகள் பின்பலமோ இல்லாத காரணத்தினால்தான் அவர் விருப்ப ஓய்வு பெறுகிறார்… இது நியாயமா?
அகரமுதலித்துறையில்
செய்துள்ள பணமோசடியால்
ஓய்வு தரமாட்டார்கள்
என்பதை
உணர்ந்ததால்தான்
விருப்ப ஓய்வு
கொடுத்துள்ளார்.
முடிந்தால் … அவர் செய்த மோசடியை நிரூபித்துக்காட்டுங்கள் …
வீண் பேச்சு வேண்டாம் ….
அரசால் பதவிநீக்கப்பட்டதின் காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறீர்கள் !
என்னைப் பணி நீக்கம்
செய்தமைக்காகப்
பதிவிடவில்லை.
என்னை அரசு பணிநீக்கம்
செய்யவில்லை
திரு.காமராசு அவர்களின்
முறைகேடுகளுக்கு நான்
துணை போகவில்லை
என்பதால் பொய்யான
காரணங்களைக் கூறி பணிநீக்கம் செய்தார்
என்பது தங்களுக்குத்
தெரியுமா?
அவருடைய பணமோசடிகளும்
அரசு விதிகளைக் கடைபிடிக்காத
முறைகேடுகளும்
அரசின் கவனத்திற்குத்
தெரிவித்துள்ளேன்.
அரசின் நடவடிக்கைக்காகக்
காத்திருக்கிறேன்
திரு்.கோகுல்.
மு.கண்ணன்
9444432202
விஜயராகவன் இரட்டை பதவி வகிக்க வைத்து அவர் மூலம் ஆதாயம் அடைந்த அரசியல்வாதிகளையும் அரசு அதிகாரிகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை உரிய சாரணை வேர் கொண்டு தக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்
தளபதியாரின் ஆட்சியில் தவறு செய்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்
விசயராகவனை வைத்துப் பிழைத்துவந்த அனைத்து அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தண்டிக்கப்பட வேண்டும்
நிரூபிக்கும் வகையில் தக்க சான்றுகளுடன் கூடிய குற்றச்சாட்டுகளை உடைய திரு. விஜயராகவன் அவர்களை இந்த அரசு … இயக்குநர் பதவி தந்திருப்பது ஒரு வரலாற்றுப் பிழையே
இவர் மீதான 36 குற்றச்சாட்டுகள் இருப்பது உண்மையே …
அதே நிறுவனத்தில் உயர் நிலையில் பணிபுரிந்த திரு.மார்டின் செல்லதுரை என்பவர் தகுந்த ஆதாரங்களோடு இலஞ்ச ஒழிப்புத் துறையில் 2019 ஆம் ஆண்டிலேயே புகாரளித்துள்ளார் என்பது நாடறிந்த உண்மையே …
அந்த விசாரணை இன்றளவும் தொடர்ந்து வருகிறது ….
75 சதவீதம் உண்மைத்தன்மையை உறுதிசெய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ….
காமராசுவை தூக்கிப் பிடிக்கும் உங்கள் முயற்சிக்கு ஒரே பதில்… காமராசு என்ன அத்தனை புலமை பெற்றவரா… அவருடைய தகுதி என்ன…
இங்கு நான் எந்த இடத்திலும் காமராசுவை தூக்கிப்பிடிக்கவில்லை… காழ்ப்புணர்ச்சி காரணமாக நீங்கள் பேசுகிறீல்கள் என்று நன்றாக தெரிகிறது
காமராசுவுக்கு
ஒருமை பன்மை
மயக்கமின்றியும்
ஒற்றுப்பிழையின்றியும்
ஒருபக்கம்கூட
எழுதத் தெரியாது.
யாராவது
எழுதிக்கொடுத்தால்
தன் பெயரில் போட்டுக்கொள்வார்.
சேக்கிழார் இயற்றிய
கம்பராமாயணத்தைக் கண்டுபிடித்த மேதாவி்தான் காமராசு
அந்த மேதாவி .. யாரென்று இந்த தமிழ்நாட்டுக்கே தெரியும் …
பிழை கூறுவதற்கு முன் உங்கள் பக்கம் வழிந்தோடிக்கொண்டிருக்கும் முறைகேடுகளை சரிசெய்துக்கொள்ளவும் …
என்மீது என்ன குற்றச்சாட்டு வழிந்தோடுகிறதென்று
சொல்லுங்கள்,ஐயா
கடந்த 10 ஆண்டுகளாக ஒரு அரசு அரசு அலுவலராக நடந்து கொள்ளாமல் அதிமுக மாவட்ட செயலாளரைப் போல நடந்த கொண்ட விஜயராகவனின் சட்டைப் பையில் எப்போதும் ஜெயலலிதாவின் படத்தையே நாங்கள் பார்த்து இருக்கிறோம். ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசியாக இருந்திருந்தால் இப்போதும் ஜெயலலிதாவின் படத்தையே வைத்திருக்கலாமே???
வாட்சப் DP யில் ஜெயலலிதாவின் படத்தையே வைத்திருந்த விஜயராகவன் இப்போது அண்ணாவின் படத்தை மாற்றியது ஏன்?? திமுக அரசை ஏமாற்றவே இந்த நாடகம்.
இவரிடம் திமுக அரசு ஏமாறாது. முதலமைச்சர் விரைவில் இந்த விஷயத்தில் தலையிட்டு விஜயராகவனை பதவியில் இருந்த நீக்குவார்… நம்புங்கள்..!
— தமிழ் வேந்தன் திமுக இளைஞரணி
இப்போதும் அகரமுதலி இயக்ககத்தை அதிமுக அலுவலகமாக மாற்றிவிட்டார். தினமும் அதிமுக காரர்களும் நிலபரோக்கர்களும் தான் இங்கு வந்து செல்கிறார்கள்
தங்க. காமராசு அல்ல. த. காமராசு. இந்த த.காமராசு எப்படி திடீரென அகரமுதலி திட்டத்தின் இயக்குநரானார் என்பதையும் விசாரித்து எழுதுங்கள். இந்த காமராசுக்கும் நீங்கள் குற்றம் சுமத்தியுள்ள முன்னாள் செயலாளர் அதாவது காமராசுவை இயக்குநராக நியமித்த இராசாராமுக்கும் என்ன தொடர்பு என்பதை ஆராயுங்கள். காமராசு இயக்குநராக வருவதற்கு முன்பு என்ன வேலை பார்த்தார்? எந்தனை மொழி ஆய்வு நூல்கள் வெளியிட்டார்? எத்தனை அகராதிகள் உருவாக்கியுள்ளார்? எத்தனை நிறுவனங்களில் நிருவாகப் பணி அனுபவம் பெற்றிருந்தார் என்பதையும் ஆராயுங்கள். அதேபோல நீங்கள் குறிப்பிட்டுள்ள மார்டின் செல்லதுரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தனி அலுவலராகப் பணியமர்த்தப்பட்டதும் அதே இராசாராமால்தான். நிறுவனத்திலேயே இல்லாத ஒரு பதவிக்கு மார்ட்டின் எப்படி நியமிக்கப்பட்டார்? அதற்கு எவ்வளவு இலட்சம் வழங்கினார்? அவர் தன் சொந்த காரணங்களுக்காக மூன்று நான்கு மாதங்கள் நிறுவனத்திற்குத் செல்லாமல் இருந்தபோதும் சம்பளத்தை மட்டும் எப்படித் தவறாமல் பெற்றார்? நிறுவன கோப்புகளை அனைத்திலும் எந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற அவர் கையெழுத்திட்டார்? அதைப் போல, காமராசு எவ்வளவு இலட்சம் கொடுத்து இயக்குநர் பதிவியைப் பெற்றார்? மார்ட்டினுக்கும் காமராசுக்கும் என்ன தொடர்பு? இரண்டு திருடர்களும் எப்படி ஒன்று சேர்ந்தார்கள்? இன்னும் இன்னும் பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. காமராசு வந்துதான் அகரமுதலியைத் தூக்கி நிறுத்தினார் என்று முழங்குவது அடேய்… அடேய்… நீங்களெல்லாம் சோறு தின்கிறீர்களா… இல்லை….
.காமராசு லஞ்சம் கொடுத்து உதவி இயக்குனராக வந்தாரா என்று இராசாராம் IAS இடமும் லஞ்சம் கொடுத்து தான் இயக்குனராக வந்தாரா என்று வெங்கடேசன் இஆப விடமும் கேளுங்கள். இவர்களில் லஞ்சம் வாங்குபவரும் யாரும் இல்லை, லஞ்சம் கொடுப்பவரும் யாரும் இல்லை. 35 ஆண்டுகளுக்கு மேல் இயக்ககத்தில் தூங்கி இயக்ககத்தையும் தூங்க வைத்த மு.கண்ணன் போன்றவர்களின் தூக்கத்தை தங்க. காமராசு களைத்ததால் தான் அவர் மீது ஊழல் வாதிகளுக்கும் சோம்பேறிகளுக்கும் கோபம் ஏற்பட்டது.
இந்த கட்டுரைக்கும் தங்க.காமராசுவுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
ஆரோக்கியமான பின்னூட்டத்தை வழங்குங்கள்
பெயர் தெரிவிக்காத அன்பருக்கு .. சில மறுமொழிகள் …
நாங்கள் சோறு திண்பதால்தான் எங்களுடைய அறிவினை சரியான முறையில் பயன்படுத்தமுடிகிறது …
திரு. மார்டின் அவர்களின் பின்புலத்தைப் பார்க்கும் நீங்கள் அவர் ஆற்றிய பணிக்கு கிடைத்த பலன்களை பற்றி சிந்தித்தீர்களா ….
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திரு.விஜயராகவன் அவர்களால் நிகழ்த்தப்பட்ட முறைகேடுகளை தக்க சான்றுகளோடு புகாரளித்தவர், திரு.மார்டின் அவர்கள் …
காமராசு என்ற பெயரை மாற்றிக்கொள்வதும் மாற்றிக்கொள்ளாததும் அவருடைய தனிப்பட்ட சிந்தனையும் விருப்பமும் ஆகும் …
அதில் தலையிட தங்களுக்கும் சரி … எனக்கும் சரி … யாருக்கும் உரிமை இல்லை …
காமராசு அவர்கள் இயக்குநர் ஆனதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் …
தமிழ் வளர்ச்சித் துறையில் துணை இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றி பதவி உயர்வு பெற்ற பிறகே இயக்குநராக மாறியுள்ளார் … அவர் யாருக்கும் சொம்பு அடித்தோ ஒத்து ஊதியோ இந்தப் பதவிகளை அவர் பெறவில்லை .. பணத்தினை சொறண்டித் திண்ண நினைக்கும் ஊழல் பெருச்சாலிகள் தான் அப்பணி செய்யும் ..
அதற்கான அரசாணைகள் தக்க சான்றுகளுடன் இருக்கின்றன..
ஆய்வு நூல்களும் அகராதிகளும் உருவாக்கினால் மட்டுமே ஒரு பொறுப்பு கிடைக்குமெனில் இதே முறையை பணியாற்றும் அனைவருக்கும் பொறுந்திப் பார்த்தால் யாரும் மிஞ்சமாட்டார்கள் ….
தகுதி என்பது ஆற்றும் ஆய்விலும் எழுதும் புத்தகங்களில் மட்டும் அல்ல … அவரவருடைய நடத்தையில் மட்டும் தான் ….
காமராசு அவர்கள் வந்தப் பிறகு தான் அகர முதலி இயக்ககம் வெளிவுலகிற்கு சற்றே தெரியத்தொடங்கியது … அதுவரை …. அகராதிகளை உருவாக்கும் இயக்ககமாக இருந்தது என்பது யாவரும் அறிந்த உண்மை…
அவர் இயக்குநராக வந்த பிகுதான் அகரமுதலி இயக்ககம் சார்பில் 50 க்கும் மேற்பட்ட கல்லூரியில் தூயதமிழ் – கலைச்சொல் குறித்தான கருத்தரங்குள் மேற்கொள்ளப்பட்டன. அரசு இயக்ககமாக இருந்த அகரமுதலி இயக்ககத்தை மாணவர்களிடையே சொல் உண்டியல் மூலம் அறிமுகப்படுத்தி ஒரு மாணவர் இயக்ககமாகவே
எடுத்துச்சென்றுள்ளார் என்பதே உண்மை ….
இதுவரை இல்லாத அளவிற்கு …
தூயதமிழினை தம் வாழ்நாளில் பயன்படுத்துவோருக்கு அரசு சார்பில் விருதுகளை வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி அனைவரிடத்திலும் அகரமுதலி இயக்ககத்தினை நினைவூட்டிய பெருமை காமராசு அவர்களின் நிருவாகத்தையே சேரும் …
காசு கொடுத்து பதவியினைப் பெறும் அளவிற்கு காமராசு அவர்கள் தரம் தாழ்ந்தவர் அல்ல…
அவருடைய செயல்பாடுகளை அவர் இயக்குநராகப் பொறுப்பேற்றதிலிருந்து நாங்கள் கவனித்துவருகிறோம்…
திரு.விஜயராகவன் அவர்கள் … தன்னுடைய பதவியினை தக்கவைப்பதற்கும் அகரமுதலி இயக்குநராக வருவதற்கும் முன்பணமாக மட்டுமே எவ்வளவு கொடுத்துள்ளார் என்பதை நான் குறிப்பிடவா அன்பரே ?!!!
அவர் செய்த 36 வகை குற்றச்சாட்டுகளுக்கும் தக்க சான்றுகள் உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள் …. அவை அனைத்தும் அறத்தின் மூலம் ஒவ்வொன்றாக ஓங்கி ஒலிக்கும்…
அவர் செய்த குற்றச்சாட்டுகளும் அதற்கான சரியான ஆதாரங்களும் அண்மையில்தான் இலஞ்ச ஒழிப்புத் துறையில் மீண்டும் 150க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து புகாராக கொடுத்துள்ளார்கள் என்பதை நினைவூட்டுகிறேன் …
அனைத்தும் வெளிவந்துவிட்டன.. இனி தப்பிக்க வாய்ப்பே இல்லை … ஆசையைத் துறந்து செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்பதைவிட்டால் வேறுவழியில்லை …
காமராசு
பள்ளி ஆசிரியர்.
தமிழ்வளர்ச்சித்துறையில்
உதவி இயக்குநர்
பணியிடத்திற்குக்
கண்காணிப்பாளர்
பணியிடத்திற்குக்
குறைவில்லாத பணியிடமாக
இருக்கவேண்டும்.
பள்ளி ஆசிரியர் பணியிடம்
கண்காணிப்பாளர்
பணியிடத்திற்கும்
கீழ்நிலையானது.
உதவி இயக்குநராக வந்ததே பிழை.
உதவி இயக்குநர் பணியிடத்திற்கு
அடிப்படைத்தகுதியான
அரசுத்தேர்வுகளில்
தேர்ச்சி பெறாமையால் பணிவரன்முறை
செய்யப்படாமலேயே
துணை இயக்குநர் பதவி உயர்வு வழங்கியது
பெரும்பிழை.
துணி இயக்குநர் சம்பளம் வாங்கிக் கொண்டு
இயக்குநர் பணியிடத்தில்
பணி செய்தார்.
அவருடைய பதவி
துணை இயக்குநர்தான்
உண்மையை மறைத்துப்
பொய்யைமட்டுமே
பரப்புகிறார்.
காமராசுக்குத்
தமிழ்ப்புலமையும் கிடையாது.அகரமுதலித்திறனும்
கிடையாது.
நூறு சொற்களைக் கொடுத்து
அகரவரிசைப்படுத்தச் சொல்லிப்பாருங்கள்
உண்மை புரியும்
தலைமைச் செயலகத்தில் தன் சொந்த விறுப்பு வெறுப்பிற்காக, தன் சார்ந்த சமயத்திற்காக பலரையும் பழிவாங்கியவர்தான் இந்த மார்ட்டின் செல்லதுரை. அவரோடு செயலகத்தில் பணியாற்றிய முறையில் இதனைக் கூறுகிறேன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முறைகேடாக நுழைந்தவர் மார்ட்டின். ஓய்வு பெற்றபின் , இல்லாத ஒரு பதவியில் தன் அரசியல், அதிகார பலத்தால் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தனி அலுவலராக நுழைந்தவர். இவர் தனி அலுவலராக இருந்த காலத்தில்தான் மேற்குறிப்பிட்ட அத்துனை முறைகேடுகளும் நடந்துள்ளன. அனைத்திலும் இவருடைய கெயெழுத்தே இடம்பெற்றுள்ளது. நிறுவனத்திற்கு ஆண்டுக்கணக்கில் வராமலேயே சம்பளம் பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. நிறுவனத்திலிருந்து கோப்புகளை திருடியுள்ளார் என்று குற்றச்சாட்டுகளும் உள்ளன. இவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் முறைகேடாக பதவி உயர்வு வழங்கியுள்ளார். பலரிடத்தும் இலஞ்சம் பெற்றுள்ளார். அதற்கா ஆதாரங்கள் உள்ளன. பணமாக, நகையாக, பொருளாக இவர் பெற்ற இலட்சத்திற்கு ஆதாரங்கள் உள்ளன. இவர் அடித்த கொள்ளையால்தான் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அதனால் நிறுவனத்திற்கு எதிராகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் சொல்லப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் இவரால் பழிவாங்கப்பட்டவர்கள் ஏராளம். அங்கு மத ரீதியாக இவரால் பாதிக்கப்பட்டோர் பட்டியல் பெரிது. அனைத்தும் விரைவில் வெளிவரும்.
காமராசு பல ஆண்டுகள் தமிழ் வளர்ச்சித்துறையில் பணியாற்றினாரா? உங்கள் பொய் முகத்திற்கு இதுவே அளவு. காமராசு பள்ளி ஆசிரியர். அமைச்சருக்கும், முன்னாள் செயலாளருக்கும் பணம் கொடுத்து நேரடியாக தமிழ்வளர்ச்சித் துறையில் பதிவி வாங்கியவர். முன்னாள் செயலாளர் இராசாராம் கூட்டத்தில் பேசுவதற்கும், நூல் வெளியிடுவதற்கும் எழுதிக்கொடுப்பதற்காக பின்னால் சுற்றியவர். எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படாமல் தமிழ் வளர்ச்சித் துறையில் பதவி பெற்றவர். அதற்கா துறைசார் தேர்வில் இதுவரை வெற்றி பெறாதவர்.. உதவி இயக்குநர் நிலையிலேயே அகரமுதலி திட்ட இயக்குநராக இலஞ்சம் கொடுத்துப் பதவியைப் பெற்றவர். கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று முதல்வருக்கு எழுதிக்கொடுத்த உலக மகா அறிவாளி. காமராசுவின் தரம் என்ன வென்று கோகுல் சொல்லித் தெரியவேண்டியதில்லை. உலகிற்கே தெரியும். அவர் எத்தனை நூல்கள் எழுதியுள்ளார்? எத்தனை வேர்ச்சொற்களை கண்டறிந்துள்ளார்? எத்தனை அகராதிகள் தொகுத்துள்ளார்? எத்தனை மொழிபெயர்ப்புகளை இயற்றியுள்ளார்? எதை மூலதனமாகக் கொண்டு இயக்குநர் பதவியை வாங்கினார்? எந்தத் தகுதி அவரை இயக்குநர் ஆக்கியது? அதுகுறித்து ஏதாவது தெரிந்தால் பதிவிடுங்கள். கம்பி கட்ட வேண்டாம்.
பெயர் தெரிவிக்காத அன்பரே ….
மார்ட்டின் அவர்கள் எப்படி அப்பதவிக்கு வந்தார் என்று மனசாட்சியுடன் ஆராயவும் ….
பொய்க் கூறுவதையும் பொருத்தமாகக் கூறவேண்டும் ….
உரிய அரசாணையோடுதான் காமராசு அவர்கள் பதவி உயர்வுகளைப் பெற்றார் ….
அதற்கான சான்றுகளை காண்பிற்க நான் தயார்….
அவர் பதிவி உயர்வுப் பெற்ற சில மாதங்களிலேயே அந்த வழிவகையும் சில காழ்ப்புணர்ச்சியால் நீக்கப்பட்டது என்பது தமிழ் வளர்ச்சித் துறை அறிந்த உண்மை ….
தகுதிகளை முறைகேடு என்று பொய்யாக கூறி விஜயராகவனின் உண்மைகளை மறைக்கிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது ..
அவருடைய குற்றச்சாட்டுகள் … தற்போது முதல்வரின் மேசையில் உள்ளன என்பதை அறிந்துக்கொண்டு எச்சரிக்கையாக இருங்கள்
மார்ட்டின் எப்படி வந்தார் என்று கூறுங்கள் கோகுல்.
உண்மைக் கருத்துகள் உரைப்பவரை கோகுல் ரமேஷி ஏன் மிரட்டுகிறார்? ஏன் எச்சரிக்கை விடுக்கிறார்? கோகுல் சொல்லவேண்டியது கீழ்க்கண்ட வினாக்களுக்கான விடைகளைத்தான். மார்ட்டின் செல்லதுறை உலகத் தமிழாராய்ச்சிக்கு எப்படி ஸ்பெசல் ஆபீசராக நியமிக்கப்பட்டார்? என்ன விதி? யார் ஏற்படுத்திய விதி? 2. காமராசு உரிய அசராணை மூலம் நியமிக்கப்பட்டார்.. – உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா? மற்றவர்களெல்லாம் வேறு எப்படி நியமிக்கப்படுவார்கள்? அவரன் கேட்பது என்ன தகுதியின் அடிப்படையில் என்று. இதைக் கேட்டால் என்னையும் நீங்கள் மிரட்டுவீர்கள்…
கடந்த ஏழு ஆண்டுகளாக ஜெயலலிதாவின் பிறந்த நாளை நிறுவனத்திற்குள் ஹோமம் நடத்தி அமைச்சர்களை அழைத்து தன்னை புகழ வைத்து தன் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மறைத்துக்கொண்டிருந்தவர் விஜயராகவன். ஊழலை ஒழிக்க சபதம் ஏற்று ஆட்சிக்கு வந்து இருக்கும் தளபதியாரின் வளையிலிருந்து விஜயராகவன் தப்பவே முடியாது. விஜயராகவனின் துதிப்பாடிகள் அவர் முறைகேடாக சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை பிரித்து எடுத்துக் கொள்ளட்டும்.
தலைமைச் செயலகத்தில் தன் சொந்த விறுப்பு வெறுப்பிற்காக, தன் சார்ந்த சமயத்திற்காக பலரையும் பழிவாங்கியவர்தான் இந்த மார்ட்டின் செல்லதுரை. அவரோடு செயலகத்தில் பணியாற்றிய முறையில் இதனைக் கூறுகிறேன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முறைகேடாக நுழைந்தவர் மார்ட்டின். ஓய்வு பெற்றபின் , இல்லாத ஒரு பதவியில் தன் அரசியல், அதிகார பலத்தால் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தனி அலுவலராக நுழைந்தவர். இவர் தனி அலுவலராக இருந்த காலத்தில்தான் மேற்குறிப்பிட்ட அத்துனை முறைகேடுகளும் நடந்துள்ளன. அனைத்திலும் இவருடைய கெயெழுத்தே இடம்பெற்றுள்ளது. நிறுவனத்திற்கு ஆண்டுக்கணக்கில் வராமலேயே சம்பளம் பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. நிறுவனத்திலிருந்து கோப்புகளை திருடியுள்ளார் என்று குற்றச்சாட்டுகளும் உள்ளன. இவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் முறைகேடாக பதவி உயர்வு வழங்கியுள்ளார். பலரிடத்தும் இலஞ்சம் பெற்றுள்ளார். அதற்கா ஆதாரங்கள் உள்ளன. பணமாக, நகையாக, பொருளாக இவர் பெற்ற இலட்சத்திற்கு ஆதாரங்கள் உள்ளன. இவர் அடித்த கொள்ளையால்தான் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அதனால் நிறுவனத்திற்கு எதிராகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் சொல்லப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் இவரால் பழிவாங்கப்பட்டவர்கள் ஏராளம். அங்கு மத ரீதியாக இவரால் பாதிக்கப்பட்டோர் பட்டியல் பெரிது. அனைத்தும் விரைவில் வெளிவரும்.
மதத்தினை சுட்டிக்காட்டி பொய்ப் பேசும் அளவிற்கு உங்களுடைய எண்ணமும் சிந்தனையும் மாறியுள்ளன என்பதைப் பார்த்தால் தாங்கள் எவ்வளவு அறிவிலியாகவும் முட்டாளுமாக இருக்கிறீர்கள் என்பதை பாருங்கள் ….
மதக்கலவரத்தை மூட்டுவதாக உங்கள் மீதும் புகாரளிக்க கொஞ்சநேரமும் போதாது ….
உங்களைப் போல … சான்றுகளில்லாமல் பொய்க் குற்றம் சாடுபவர்கள் நாங்கள் அல்ல
ஊழல்வாநிகளை ஏன் இந்த அரசு கண்டுக்கொள்ளாமல் இருக்கிறோ ?
நான் ஓய்வு பெற்ற அரசு உயர் அலுவலர். இந்த பிரச்சினைக்கு அரசு செயலாளர் செய்த குளறுபடிகளே காரணம். அவரை யாரோ தவறாக வழிநடத்தியதால், அவர் அமைச்சரை தவறாக வழிநடத்தி இருக்கிறார். கலந்து தீர ஆலோசிக்காமல் அவரசமாக முடிவெடிக்கப்பட்டது தெரிகிறது. விஜயராகவன் முறைகேடு செய்ததால் தானே பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரை தான் பதவி இறக்கம் அல்லது சஸ்பென்ஸ் செய்திருக்க வேண்டும். அவரை காப்பாற்ற செயலாளர் நினைத்திருந்தால் அவரையே தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனராக நியமனம் செய்து விட்டு தங்க.காமராஜ் ஓய்வு பெறும் வரை காத்திருக்கவைத்து அதன் பிறகு விஜயராகவனை அகர முதலி இயக்ககத்திற்கு மாற்றி இருக்கலாம்.
தேவையில்லாமல் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை இரண்டு இடங்களிலும் இன்சார்ச் ஆக போட்டு என்ன பயனும் தீர்வும் கண்டார்கள் .அரசுக்கு தான் கலங்கத்தை ஏற்படுத்தினார்கள். இதுவரை சிறப்பாக நடந்து கொண்டிருந்த அகர முதலி இயக்ககமும் முடங்கிவிட்டது. தமிழ் வளர்ச்சி துறை, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இரண்டையும் முழு கூடுதல் பொறுப்பில் ஐஏஎஸ் அதிகாரிகளால் கவனிக்க முடியவில்லை. உலகத்தமிழ்ச்சங்கம் செயல்படாமல் கிடக்கிறது. அமைச்சர் உடனடியாக தலையிட்டு தீவிர ஆலோசனை மேற்கொண்டு இந்த குழப்பமான சூழ்நிலைக்கு தீர்வு காண வேண்டும். இது போன்ற நிர்வாக திறமை இல்லாத அரசு செயலாளர்களால் பல துறையில் குழப்பம் நிலவுகிறது.
முதலமைச்சர் அவர்கள் இதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும்
சிறப்பு அய்யா! உங்கள் கருத்து அரசின் காதில் விழுமா?
நல்லவை இருக்க அல்லவை ஏற்கும் பன்….. டையைத்தான் உங்கள் செயல் நினைவூட்டுகிறது. எத்தனையோ தமிழ் வளர்ச்சி சார்ந்த நற்செயல்களை செய்தவர் ஐயா அவர்கள். உங்களுக்கு அவரிடத்தில் ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி. மனித நேயமும் மனசாட்சியுமே இன்றும் நம்மை மனிதன் என்ற நிலையில் வைத்துள்ளது. இவ்விதம் பொய்யான செய்திகளைஉண்மைபோல்பதிவிட்டு தரம் தாழ்த்திக்கொள்ளாதீர்கள். தமிழ்த்தாய் இன்றும் உயிர்ப்புடன் தான் உள்ளால் என்பதை மறக்கவேண்டாம். தம் மகவை அவள் காப்பதையும் நீர் உட்பட அனைவரும் பார்க்கத்தான் போகிறோம்.
ஓலைச்சுவடிகளை முறைகேடாக வெளிநாட்டிற்கு விற்றவர் விஜயராகவன் ….
அதற்கு ஆதாரமும் இருக்கின்றது …
இது தேசத் துரோகம் இல்லையா ?…
உலகத் தமிழராய்ச்சி நிறுவனமாக இருந்தாலும் சரி அகரமுதலித் திட்ட முறையாக இருந்தாலும் சரி அதில் முதலில் உங்களுக்கு உரிய தகுதிகள் என்னவென்றே முதலில் அறிந்து கொள்ளுங்கள் . உங்களுக்கு காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்பு பணியிலிருந்து சிறப்பாக பணியாற்றியவர்களை என்றும் குறை கூறாதீர்கள். அத்தகைய உங்களுக்கு தகுதியும் கிடையாது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் .திமுக ஆட்சி வரும் முன்னரே அதிமுக ஆட்சியில் சிறந்த ஒரு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற கோ.விஐயராகவன் ஐயா அவர்களை நீங்கள் இவ்வாறு பழி சுமத்துவது மிகவும் கண்டனத்திற்குரியது
இங்கு யாருக்கும் யார்மீதும் காழ்ப்புணர்ச்சி இல்லை …
திரு விஜயராகவன் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக இருந்து தமிழ் மொழியை வைத்து பல முறைகேடுகளால் பிழைப்பு நடத்தியதாக அவர்மீது சாற்றப்பட்ட குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு தற்போது முதல்வரின் பார்வைக்கு குறுகியத் தொலைவில் உள்ளன….
அவர் முறைகேடாக சம்பாதித்த பணத்தினை எத்தனை பினாமிகளின் வங்கிக் கணக்கில் உள்ளன என்பதை ஆதாரத்தோடு நான் சொல்லட்டுமா ?
சொல்லுங்களேன்
உரிய இடத்தில் அவர்களின் ஆதார் அட்டை உட்பட அனைத்து விவரங்களும் சென்று சேர்ந்துவிட்டன…
கண்டவருக்கெல்லாம் கொடுத்திட இயலாது!
அறம் என்ற போர்வையில் அறத்தை கொள்வதுதான் பத்திரிகை தர்மமோ.நீங்கள் 2014 நிறுவன திறப்புவிழாவிலிருந்தே ஐயாவை பார்க்க எத்தனை முறை வந்துள்ளீர்கள் என்று அனைவரும் அறிந்ததே .ஐயா ஊழல் செய்தாரென்றால் நிறுபித்துகாட்டுங்கள்.பார்க்கலாம்.ஆதாரத்தோடு .அதைவிடுத்து பொய்யும் புரளியும் பேசுவதுதான் பத்திரிகை உரிமையா.பணத்திற்காக எப்படி வேண்டுமென்றாலும் பேசுவது தான் தமிழனின் மறபா.நீங்களெல்லாம் தமிழர்கள்தானே.தமிழுக்காக வாழ்ந்தவர்களை இப்படி வெறும் கசங்கிய காகிதமான பணத்திற்காக தன்மானத்தை அடகுவைப்பது பெற்ற தாயையே அடகு வைப்பதற்கு சமம்.தமிழைபழித்தவன் தாயைபழித்தவனாகிறேன்.தமிழை வளர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் அனுபவத்தினாலும் பரிதாபத்தினாலும் பதவிகொடுத்ததன் பலன்தான் இந்த அவப்பெயரோ.சரி அவர் ஊழல்காரர் என்றால் அவர் சம்பாதித்ததை போய் பாருங்கள்.எத்தனை ஆடம்பரபங்களாக்கள் நகைகள் வைரம் வைடூரியம் வைத்திருக்கிறார் என்று கணக்குபாருங்களேன்.அதைவிடுத்து வேலையில்லாமல் அவதூறு பழிச்சொல் அதுசரி குடீம்பத்தைபற்றியும் நாட்டை பற்றியும் அக்கறை இருந்தால் வேலை இருக்கும்.அடுத்தவருக்கு ஜால்ரா அடித்துகொண்டு பணம் சேர்ப்பதிலே குறியாக இருந்தால் அடுத்தவரை குழியில் தள்ளதானே பார்ப்பீங்க.பேரறிஞர் பாரதியார் பாரதிதாசனார் போன்ற பெருந்தலைவர்கள் வளர்த்த இதழின் பெருமைகளை தயவுசெய்து கொல்லாதீர்கள்.முடிந்தால் தங்களின் அறம் இதழின் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள்.அறமற்ற பத்திரிக்கை என்று.உலகத்தமிழாராய்ச்சி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் வளர்ச்சியை 2014 க்கு பின் முன் என்று பட்டியல் எடுத்து பாரும் .உண்மைபுரியும்.படிக்இதெரியவில்லை என்றால் நன்கு கற்றறிந்தோர் தமிழ்படித்தோரைக்கொண்டு அளசி ஆராய்க
அதே உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த திரு.மார்ட்டின் செல்லதுரை அவர்களே … திரு விஜயராகவனின் முறைகேடுகளை கண்காணித்து அதற்கான சான்றுகளை சேகரித்து 2019 ஆம் ஆண்டிலேயே இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகாரளித்துள்ளார் என்பதை உணரவும்…
அதே சான்றுகளுடனான புகாரினை …. 150 க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் ஒரசேர அண்மையில் தான் மீண்டும் இலஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரினை வலிமையான முறையில் மேலும் சில உறுதி செய்யப்பட்ட ஆதாரங்களுடன் புகாரளிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க ….
ஊழல்வாதிகள் நீங்கள் செய்யும் தவறுகளுக்காக எதற்காக மற்றவர்கள் மீது பழி சுமத்துகிறார்கள். அதுவும் இதுவரை எந்த ஒரு கெட்ட பெயரும் இதுவரை எந்த ஒரு கரும் புள்ளியும் படியாத ஒரு மாமனிதன் மீது பழி சுமற்ற மனம் வருகிறது. உண்மையிலேயே திமுக ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சி என்பதை உங்கள் மூலமாக புறப்படுகிறது இதை கேட்க வெட்கமாக உள்ளது.
கரைபடாத மாமனிதரின் குற்றச்சாட்டுகள் 2019 ஆண்டிலேயே இலஞ்ச ஒழிப்புத்துறையால் 75 சதவீதம் உறுதிசெய்யப்பட்டுள்ளதை தெரிந்துக்கொள்ளவும் ..
நான் திருவாரூரை சேர்ந்தவன். இதுவரை எனக்கு தெரிந்து திருவாரூரில் அவ்வாறு எந்த ஒரு நிகழ்வும் நடந்தது கிடையாது. உங்களுக்கு மட்டும் எப்படி நடக்காத ஒரு நிகழ்வு நடந்தது போல் தெரிகிறது. இல்லை ஏதாவது பழி சுமத்தி அவர்களை பதவி நீக்க வேண்டும் என்பதற்காக ஏதும் உள்நோக்கம் கொண்டு செயல்படுகிறார்களா ?எதுதான் உண்மை கூறிவிடுங்கள் . உங்கள் உண்மை கருத்தை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன். இதற்காக வீண் பழிகள் சுமத்தி நீங்கள் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும். உண்மையிலேயே நீங்கள் வந்து ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக ஆட்சியில் அமர்வதற்கு பல வேலைகள் செய்தல் என்பது எங்களுக்கு தெரியும் . மாமனிதர் மீது பழி சுமத்தியதும் எங்களுக்கு தெரியும்அ. யோக்கியர்கள் நிறைந்து திமுகவில் இப்படிப்பட்டவர்கள் மேலும் நல்லவர்களை பழி சுமத்துவது மிகவும் கண்டனத்திற்குரியது.
திருவாரூர் தமிழனுக்கு வணக்கம்
இங்கு யாரும் பொய்க்கூறி அவர் மீது வீண் பழி சுமத்தவில்லை ….
குற்றங்களுக்கான ஆதாரங்களோடுதான் பேசுகிறோம் என்பதை நினைவில் கொள்க
படிப்பறிவே இல்லாத முண்டங்களை பெரிய இருக்கைகளில் அமர வைத்தால் என்ன செய்வீர்கள் என்பது இதிலிருந்து தெரிய வைத்து விட்டீர்கள். படிப்பறிவு இல்லாதவன் புத்தி எந்த அளவு செயல்படும் அந்த அளவு உங்களது புத்தி செயல்பட்டுள்ளது .மாமனிதர் மீது பழி சுமத்தும் போது உங்கள் மீது தெரிகிறது நீங்கள் எந்தளவு கீழ் தரமானவர்கள் என்பது
நீங்கள் சொல்லும் மாமனிதர் .. உங்களுக்கே தெரியாத பல லீரைகளை செய்துள்ளார் … அது தெரியுமா உங்களுக்கு ….
அகரமுதலி இயக்குநர் பதவிக்காக முன்பணமாய் மட்டுமே ரூபாய் 4கோடியை இலஞ்சமாகக் கொடுக்கும் அளவிற்கு உங்களுடைய மாமனிதர் எப்படி சம்பாதித்தார் என்பதை சிந்தித்துப் பார்க்கவும் ….
அவராற்றிய அனைத்து ஊழல்களுக்கும் தக்க ஆதாரங்கள் … இன்று இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகாராக உள்ளன….
கைதுசெய்யப்படும்போது … நீங்களும் உங்கள் மாமனிதரும் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை பார்ப்போம் …
ஏண்டா கூறு கெட்ட முட்டாள் பசங்களா உங்களுக்கெல்லாம் என்ன மயிரு தெரியும் தமிழ பத்தி .தமிழுக்கு முதல்ல அர்த்தம் என்னனு முதல் உங்களுக்கு தெரியுமா டா முட்டாப் கூடகளா
தன்மானமுள்ளத் தமிழன் தரங்கெட்டுப் போகமாட்டான்…
இதிலேயே தொிகிறது … உங்களுடைய தமிழ்ப் பற்று …
பின்னூட்டமிட்டு கருத்து சொல்வதற்கே … தாங்கள் தகுதியற்றவர் என்று இதன்மூலம் புலனாகுகிறது …
நீங்கள் சொல்லும் மாமனிதர் .. உங்களுக்கே தெரியாத பல லீரைகளை செய்துள்ளார் … அது தெரியுமா உங்களுக்கு ….
அகரமுதலி இயக்குநர் பதவிக்காக முன்பணமாய் மட்டுமே ரூபாய் 4கோடியை இலஞ்சமாகக் கொடுக்கும் அளவிற்கு உங்களுடைய மாமனிதர் எப்படி சம்பாதித்தார் என்பதை சிந்தித்துப் பார்க்கவும் ….
அவராற்றிய அனைத்து ஊழல்களுக்கும் தக்க ஆதாரங்கள் … இன்று இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகாராக உள்ளன….
கைதுசெய்யப்படும்போது … நீங்களும் உங்கள் மாமனிதரும் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை பார்ப்போம் …
திமுக எனும் கட்சியை ஆட்சி கட்டிலில் பார்க்கும் பொழுது எங்களுக்கு பரிதாபமான நிலை உண்டாகிறது.
அதுமட்டுமின்றி அங்கே சுற்றி அங்கே சுற்றி கடைசியில் தமிழ்மொழி துறையிலும் வந்து கையை வைத்தீர்கள் தமிழ் வளர்ச்சித் துறையில் இருந்து கை வைத்தீர்கள். இப்போது அகரமுதலித் திட்டத்தில் வந்து உங்களது முத்திரை காட்டுகிறீர்கள், நினைக்கிறீர்கள் முதலில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது தமிழ்நாட்டில் பிடித்த மிகப் பெரிய இழுக்கு அதிலிருந்தே தமிழகம் என மீண்டு வரவில்லை அதைவிட்டு தமிழ் மொழியையும் அழிக்க ஆரம்பித்து விட்டீர்கள் .கேட்டால் நீங்கள் உத்தமர்களாக தெரிவிக்கிறீர்கள் உங்களின் உத்தமபுத்திகள் என்ன என்பது நாம் யாவரும் அறிந்ததே புரிகிறதா முதலில் நீங்கள் உங்களது “சூ”த்தை மூடிக் கொள்ளுங்கள்
தமிழில் உள்ள அனைத்து அசிங்கமான வார்த்தைகள் உங்களுக்காக பொறிக்கப்பட்டுள்ளது என நான் நினைக்கிறேன் .ஏனெனில் தமிழில் பல நல்ல விஷயங்கள் பல உள்ளன .அதை தமிழ் மொழி மூலம் நான் கற்றவை நிறைய தமிழ் வளர்ச்சித் துறை மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ,ஏனெனில் எனக்கு தெரியும் தமிழ் வளர்ச்சி என தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது, யார் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் பணிகள் என்னென்ன அவரின் மூலம் உலகளவில் என்னென்ன பெற்றவை என என்பது எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் வந்ததோ குறுகிய காலம் ஆனால் நீங்கள் ஆடுவதோ உங்களது கால் 7 அடிதூரம் வரை . ஏன்டா லூசு பசங்களா உங்களுக்கு எல்லாம் நீங்க எல்லாம் என்னடா இப்போதான் நீங்க உங்களுக்கு என்ன மயிரா தெரியும் உனக்கு தெரியாம தான் எங்களுக்கு என்ன மயிரா தெரியும்…
தரங்கெட்டுப் பேசும் அன்பரே …
அண்மையில்… அவருடைய ஊழல் பட்டியல் இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு 150 தமிழ் அமைப்புகளின் சார்பில் சென்று சேர்ந்துள்ளது ….
அரைக்கூவியலிடுவதை நிறுத்திக்கொள்ளவும்…
இனி.. உங்கள் ஆட்டம் பலிக்காது
கோகுலு அந்த 150 அமைப்புகளின் பெயர்களைச் சொல்லவும். என்ன ஒரே அடியா காமராசுக்கு சொம்பு தூக்கறீங்களா? 4 கோடி இலஞ்சம் என்றால் காமராசு எத்தனை கோடி கொடுத்த அந்தப் பதிவியைப் பிடித்தார்? ‘கம்பராமாயணத்தை எழுதிய சேக்கிழார்’ என்று முதல்வருக்கு எழுதிக்கொடுத்தா? இல்லை முன்னாள் அரசு செயலாளர் ராசாராமின் கால்களை நக்கியா? இல்லை வேறு வழியிலா? பள்ளி ஆசிரியர் தமிழ் வளர்ச்சியில் உதவி இயக்குநராக ஆனது எப்படி? அதுவும் அறிவிப்பே செய்யப்படாமல்? எந்த சீனியாரிட்டி அடிப்படையில் அகரமுதலிக்கு வந்தார்? அவரின் தகுதிகளைப் பட்டியலிடவும். அனைவரும் அறியட்டும்
முட்டாள் முனைவரே …
மு.கண்ணரே …
அவர் எப்படி இயக்குநரானார் என்பதை முன்பே கூறிவிட்டேன் …
உங்களுடைய முட்டாள்தனமான கேள்விகளுக்கெல்லாம் முறையாக விடையளிக்கமுடியாது ….
நக்கிப்பிழைத்தவர் என்று சாடும் அளவிற்கு உங்களுடைய காழ்ப்புணர்ச்சி எதற்காக இருக்கின்றது என்பதை நாங்கள் அறிவோம் …
நீங்கள் அகரமுதலியிலிருந்து நீக்கப்பட்டதன் காரணத்தை ஆதாரத்துடன் நான் சொன்னால் … தகுதியற்றவர் யார் என்று இந்த ஊரறியும் …
மு. கண்ணன் அவர்களே …
விசயராகவனின் முறைகேடுகளை ஆதாரத்தோடு புகாரளித்திருக்கிறோம் …
அடுத்தது நீங்க தான்…
உங்க முறைகேடுகளுக்கான ஆதாரங்களையும் நாங்க சேகரிச்சிட்டோம்…
சொம்பு அடிக்கும் அளவிற்கு … உண்மை இங்கு தரங்கெட்டுப்போகவில்லை ….
150 தமிழ் அமைப்புகளை நீங்கள் அறியவேண்டிய காரணம் என்ன… ?
திரு.காமராசு எப்போது இயக்கநரானார்?
என்னை நீக்கியதற்கான
காரணத்தைத்
தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ்
கோரியுள்ளேன்.
அவை கிடைத்ததும்
நானே பதிவிடுகிறேன்,தோழரே
மு.கண்ணன்
9444432202
தமிழ் வளர்ச்சி துறை இலாகா கடந்த அதிமுக ஆட்சியில் இருந்து செயல்பாட்டில் இருந்து பல நல்ல விஷயங்களை செய்துள்ளது. அதை குறை கூற தகுதியே கிடையாது டா முட்டாப் பசங்களா அத முதல்ல நீங்க புரிஞ்சுக்கோங்க உங்களை நீங்களே அசிங்கப்படுத்தி நீங்களே தெருவில் இழுத்து நாய்ங்க . இந்த மாதிரி ஒரு நல்ல மாமனிதர் ஒரு இயக்குனரை உலகளவில் பெயர் பெற்ற நபர் ஒருவர் அவருடைய கரும்புள்ளி உருவாகினாலும் நீங்க பேசறது உங்களுக்கு ஒரு சதவீதம் கூட துளி கிடையாதுடா மானங்கெட்ட பயலுகளா. நீங்க பேசிக்கிட்டத இதோடு நிறுத்துனா உங்களுக்கு உங்களுடைய பதவிகள் மிஞ்சும் இல்ல அப்படினா நடவடிக்கைகள் வேற மாதிரி இருக்கும்
விஜயராகவன் அவர்களுக்கு ஆதரவாய் பேசிட பல பெயர்களைக் கொண்டு பின்னூட்டமிட்ட அந்த ஒரே நபர் யார் என்று எங்களுக்குத் தெரியும் ….
ஊழல் செய்யாத உத்தம மனிதர் என்று புகழ்ந்த வாய் …. இன்னும் சில நாட்களில் அவருடைய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவர் கைது செய்யப்படும்போது வாயடைத்துப்போவீர்கள் ….
போலி பெயரில் பதிவிடும் உன்னைப் போலவா
பெயரே தெரிவிக்காத உங்களைப் போலவா ?
கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை…. திடீரென நேற்று முளைத்தவர்களுக்கெல்லாம் பதவியை காட்டினால் இவ்வாறு தான் பேசுவீர்கள்
திரு.விஜயராகவன் அவர்கள் ஆற்றிய அரும்பணியான ஊழல்களுக்கு தக்க சான்றுகள் பொதுவெளியில் வந்துவிட்டன…
இனியும் பொய்க்கூறி ஏமாற்றி பலனில்லை
விஜயராகவன் அவர்களுக்கு ஆதரவாய் பேசிட பல பெயர்களைக் கொண்டு பின்னூட்டமிட்ட அந்த ஒரே நபர் யார் என்று எங்களுக்குத் தெரியும் ….
ஊழல் செய்யாத உத்தம மனிதர் என்று புகழ்ந்த வாய் …. இன்னும் சில நாட்களில் அவருடைய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவர் கைது செய்யப்படும்போது வாயடைத்துப்போவீர்கள் ….
விஜயராகவனின் கைக்கூளிகள் போட்டிருக்கும் பின்னூட்டங்களையும் மார்டினின் ஆட்கள் போட்டிருக்கும் பதிவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் யார் தரமற்றவர்கள் என்பது புரியும் . விஜயராகவனின் அடிவடிகள் திமுகவை விமர்சிக்க தகுதியற்றவர்கள். எங்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு போட்ட பிச்சை தான் அகர முதலி இயக்குனர் பதவி. ரோசம் இருந்தால் விஜயராகவன் அந்த பதவியை ராஜினாமா செய்யலாம்.
விஜயராகவனின் அண்ணனும் மனைவியும் அதிமுக சார்பில் திருவள்ளுரில் போட்டியிடட் போது விஜயராகவன் கவர்மண்ட் ஜீப்களையும் தமிழ் வளர்ச்சி துறை ஆட்களையும் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியதை நீங்கள் ஏன் எதிர்க்கவில்லை. திருவள்ளூர் பகுதியில் உள்ள தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் கொடுப்பதாக ஆசைக் காட்டி பிரசாரம் செய்ய அழைத்தபோது மானமுள்ள பல திமுக அறிஞர்கள் விஜயராகவனை கன்டமேனிக்கு திட்டி தீர்த்தார்கள். அந்த ரோசம் உங்களுக்கு இருந்ததா, நீங்களும் திமுக காரர்தானே.. இனிமேலாவது விஜயராகவனுக்கு லாடம் கட்டுங்கள்
இந்தக் கட்டுரையில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு விஜயராகவனின் ஆட்கள் யாருமே மறுப்பு சொல்லவில்லை. ஊழல்களை ஒப்புப்கொள்கிறார்கள்
.
மறுத்தால் எங்கள் கைவசம் ஆதாரம் பக்கம் பக்கமாக இருக்கிறது வரிசையாக வெளியிடுவோம். எதிர்கொள்ள நீங்கள் தயாரா???
ஊழலை ஒழிக்க எங்கள் திமுக அரசு கொஞ்சமும் தயங்காது .
எதிர்கொள்ள அதிமுக காரர்களே நீங்கள் தயாரா??
இன்று (4/10/2021) தினமலர் 16-ம் பக்கத்தில் விஜயராகவன் செய்த ஊழலை, “ஊழல் செய்தவருக்கு உயர் பொறுப்பா? தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் கொந்தளிப்பு ” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் படத்தை என் பாக்கெட்டில் வைத்திருப்பது என் விருப்பம் என்று விஜயராகவன் பேட்டி கொடுத்துள்ளார். அப்படி என்றால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் ஜெயலலிதாவின் படத்தை மாற்றிவிட்டு எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் படத்தைதானே வைத்திருக்க வேண்டும். அதை விஜயராகவன் விரும்பவில்லையா? தன் ஊழலை மறைப்பதற்கு படத்தை மாற்றினாலும் ஆச்சிரியப்பட ஒன்றும் இல்லை. அதைக் கண்டு நாங்கள் ஏமாறமாட்டோம். எங்களுக்கு ஒரு உண்மையை சொல்லுங்கள் விஜயராகவன் அரசியல்வாதியா?? அல்லது அரசு அலுவலரா??
அதே தினமலரில் 06-20-2021ல்
வந்துள்ள செய்தியைப் பாருங்கள்
#மு.கண்ணன்
9444432202
விரைவில் …
நீங்கள் அகரமுதலியில் தூங்கியதை … புகைப்படமோடு …
உங்களின் முறைகேடுகளையும் தினமலர் மற்றும் இதர நாளிதழ்கள் வெளியிடக் காத்திருக்கின்றன …
நீங்களும் … காத்திருக்கவும்
ஒவ்வொரு நாளும்
தினமலரில் தேடிக்கொண்டிருக்கிறேன்.
நான் செய்துள்ள ஊழல்களின்
பட்டியலைக்காண
ஆவலாயிருக்கிறது.
காலம் கடத்தாமல்
வெளியிடுங்கள்
நணபர் நந்தகுமார்
அவர்களே.
மார்ட்டின் செல்வதுரை தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகித்த போது விஜயராகவனின் ஊழலுக்கு உடந்தையாக இல்லாத காரணத்தால் அடிஆட்களை கொண்டு தாக்கப்பட்டுள்ளார். அந்த புகார் மீது அரசு செயலாளர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். விஜயராகவனின் ஊரைச்சார்ந்த பல குண்டர்களுக்கு இரவு தங்கி மது அருந்துவதற்கு தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பயன் படுத்தப்பட்டது உண்மை தான் என்றும், காலி மது பாட்டில்களை மூட்டை மூட்டையாக நாங்கள் விற்போம் என்றும் அங்கு பணிபுரியும் பெண்களே வாக்கு மூலம் அளிப்பார்கள்.
மார்ட்டின் செல்லதுரை தினமும் குடித்துவிட்டு நிறுவனத்தில் உள்ள விடுதில் தங்கியுள்ளார். உடைகளைக் களைந்துவிட்டு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். வாட்ச்மேன் முதலாகப் பலரையும் பல முறை தாக்கியுள்ளார். தனக்கு அரசு செயலாளரைத் தெரியும். அவர்தான் என்னை இங்கு அனுப்பி வைத்துள்ளார். என்னிடம் வைத்துக்கொண்டால் அனைவரையும் தொலைத்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். குடித்துவிட்டு மேடையில் வைத்தே அறிஞர்களைத் தரக்குறைவாகப் பேசுவதும் திட்டுவதுமாக நடந்துள்ளார் என்று பணியாளர்கள் குமுறுகின்றனர்.
விசயராகவன் குறித்து 36 வகை குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை எங்களால் எடுத்துவைக்க இயலும்..
மார்டின் – காமராசு மீது நீங்கள் பிதற்றும் பொய்களுக்கு ஒரே ஒரு ஆதாரத்தை காட்டுங்களேன் பார்ப்போம்…
விரைவில் வெளிவரும் பொய்முக கோகுல் ரமேஷ்… அனைத்து ஆதாரங்களும் தயார் நிலையில் உள்ளன. தலைமைச் செயலகம் வழியாகவே வெளிவரும். ஏன் உங்களுக்கு இவ்வளவு பதற்றம். எல்லோர் கருத்திலும் ஓடி ஓடி ஓடி பொய்ப் பெயரில் மூக்கை நுழைத்து….
மார்டின் செல்லதுரை ஒரு பன்மொழி அறிஞர், திறமையான நிர்வாகி அவர் தாக்கப்பட்டார் என்பது மனதை பதைபதைக்க வைக்கிறது. ஒரே மேடையில் மார்டினையும் விஜயரைகவனையும் ஏற்றிவிட்டு ஒரு தலைப்பைக் கொடுத்து பேச வைத்தால் விஜயராகவன் தோற்றுப்போவார். விஜயராகவனால் பிழையில்லாமல் ஒரு பத்தி எழுதவோ அறிவுப்பூர்வமாக ஒரு நிமிஷம் பேசவோ முடியாது. தன் ஊழலை மறைக்கவே கடந்த ஏழு ஆண்டுகளாக அம்மா அம்மா என்று ஓலம் இட்டே காலத்தை ஓட்டி இருக்கிறார். அவரை அருகில் இருந்து பார்த்தவர்கள் நாங்கள். பணத்தை தவிர அவர் யாருக்கும் விசுவாசமாக இருந்ததே கிடையாது .
ஹா ஹா ஹா….. மார்டின் ஒரு ப்ராடு என்பது தலைமைச் செயலகம் முழுவதும் அறிந்தது. தன் மதம் அல்லாத பிற மதத்தினரைப் பழி வாங்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட மத வெறியன். பழிவாங்கப்பட்டோரின் நானும் ஒருவன்…. ஹ… ஹ… ஹ… இவர் ஒரு குள்ளநரி…. இவரால் திக்காமல், திணறாமல், முக்காமல், முனகாமல் ஐந்து வார்த்தைகள் பேச வராது. அப்படியே இவர் எழுதிய கவிதை, கதை, நாவல், ஆராய்ச்சி நூல்கள் கட்டுரைகளையும் வரிசை படுத்துங்கள். கூடவே இவர் ஏறி இறங்கிய மேடைகளையும் தெரிவியுங்கள். (ஜெபக் கூட்டங்கள் தவிர….. ) அடையார் புரபஸ்சர்…
மார்ட்டின் செல்லதுறை ஒரு பன்மொழி அறிஞர் – எந்தெந்த மொழிகளில் எத்தனை நூல்கள் எழுதியுள்ளார்? மொழி ஆய்வுகளுக்காக எத்தனை முனைவர் பட்டம் பெற்றுள்ளார்? எத்தனை ஆய்வு அறிஞர்களை உருவாக்கியுள்ளார்? எந்தெந்த நாடுகளுக்குச் சென்று தமிழை வளர்த்துள்ளார்? மார்ட்டின் செல்லதுறை என்ற ஒரு பன்மொழி அறிஞரை பல்கலைக்கழத்தில் பணியாற்றும் நான்கூட அறிந்ததில்லையே? அவர் பெயரின் எந்த நூலையும் நான் கண்டதில்லையே. தெளிவுபடுத்துங்கள் பேராசிரியர். பயனுள்ளதாக இருக்கும்.
விஜயராகவன் அரசியல் செல்வாக்கால் பின் கதவு வழியாகதாதான் பதவிக்கு வந்தார். பணியில் சேர்ந்த முதல் நாளே அலுவலகப் பொருள்களை திருடி சென்றார் என்ற நல்ல பெயர் அவருக்கு இருக்கிறது. அன்று விளையாட்டாக திருட ஆரம்பித்தது தான் இன்று கோடி கோடியாக கொல்லையடித்து கொடீஸ்வரராக ஆக முடிந்தது. எல்லா சொத்துக்களையும் பினாமிகளின் பெயரில் வைத்திருக்கும் பலே கெட்டிக்காரர்.
இவர் மார்டினைக் குறை சொல்ல இவருக்கு எந்த யோகிதையும் கிடையாது. 26/05/2017- ஆம் ஆண்டலேயே *நெற்றிக்கண்* பத்திரிகையில் “தமிழ் வளர்ச்சித் துறையில் கோடிகளை ஏப்பம் விடும் விஜயராகவன் என்று செய்தி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
அடிமை அதிமுக அரசு அப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் இன்று தமிழ் வளர்ச்சித் துறைக்கு இவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டு இருக்கறது.
தமிழ் வளர்ச்சித் துறையை சீறழித்த அமைச்சர் ஜெயக்குமார்,ஜெயக்குமாரரின் மகன் ஜெயவர்த்தனன்,ம.ப. பாண்டியராஜன் , வெங்கடேசன் ias ஆகியோரை கைது செய்து விசாரித்தால் பல முறைகேடுகள் வெளிவரும். இதை திமுக அரசு செய்யுமா ??
இது நடந்தால்தான் இன்றைய இளைஞர்களுக்கு திமுக அரசு மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் .
பொறுத்திருங்கள் நண்பரே, எடப்பாடியைப் போல் எங்கள் தளபதி மக்கு அல்ல மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுப்பார்.
அமைச்சர்களில் தங்கம் தென்னரசுவை ஜென்டில் மேன் என்பார்கள். ஆனால் அவருக்கு வாய்த்த பிஏ கோபால் தான் சரியில்லை.
அரசியல்வாதி யெல்லாம் ஒரே மாதிராதான் தலைவரே, இவர்களுக்கு ஊழலில் பேதமே இல்லை .ஓட்டு போட்ட நாம் தான் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு நிற்கிறோம். நாம் உழைத்தால் தான் சாப்பாடு. அரசு அலுவலராக இருக்கும் விஜயராகவன் ஜெயலலிதாவின் படத்தை என் சட்டை பையில் வைத்திருப்பது என் சுய விருப்பம் என்று தினமலருக்கு பேட்டி கொடுத்ததையே காரணமாகக் கொண்டு அவரை உடனே பதவி நீக்கம் செய்திருந்தால் அது தான் மின்னல் வேகம், மு.க.ஸ்டாலின் ஆமை வேகத்தில் தான் நகருகிறார் ஒரு பியுன் ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கினாலும் ஒரு Vao 500 ரூபாய் லஞ்சம் வாங்கினாலும் அவர்களை உடனே கைது செய்து படம் எடுத்து பத்திரிக்கையில் போட்டு விடுவார். இப்படி கோடி கோடி அரசு பணத்தை கொல்லையடிக்கும் அரசு அதிகாரிகளை எல்லா அரசியல் வாதிகளும் சிவப்பு கம்பளம் போட்டு மரியாதை செலுத்துகிறார்கள். அதற்கு இந்த தமிழ் வளர்ச்சித் துறை ஊழல்களே சாட்சி
மார்ட்டின் செல்லதுரை எந்தக் கதவின் வழியாக நிறுவனத்திற்குள் சென்றார்? அப்போதைய செயலர் ராசாராமிற்கு சம்பாதித்துக் கொடுப்பதற்காக திருட்டுத் தனமாகப் பதவியில் அமர்த்தப்பட்டார். அதுவும் நிறுவனத்தில் இல்லாத ஒரு பதவியில். ராசாராமையும், மார்ட்டினையும் கைது செய்து விசாரித்தாலே பல உண்மைகள் வெளிவரும். இயக்குநரின் ரோலை தான் எடுத்துக்கொண்டு, அனைத்து முறைகேடுகளையும் செய்துள்ளார். அனைத்திலும் இவரே கையொப்பமிட்டுள்ளார்.
முட்டாள் முனைவரே …
ஏதாவது சொல்லவேண்டும் என்று சொல்லாதீர்கள் …
பொய் பரப்புரை இனிமேல் செல்லாது ….
அடேய் அடிமுட்டாளே. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லடா பதரே. மார்ட்டின் எந்த விதியின் அடிப்படையில் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஸ்பெசல் ஆபீசராக நியமிக்கப்பட்டான். அவனின் படிப்பு என்ன? அவனின் தகுதி என்ன? ஆராய்ச்சி நிறுவனம் என்றால் என்ன? இதற்கும் இவனுக்கும் என்ன தொடர்பு? சொல்லடா … இவனே….
எந்தத் தகுதியுமில்லாமல்
முறைகேடாக
பதவிக்கு
வந்த
த.காமராசுவின்
உண்மை வரலாற்றை
வெளியிட்டு
அறம்
தன் கற்பைக் காப்பாற்றிக்கொள்ளட்டும்
மு.கண்ணன்
முட்டாள் முனைவரே …
உங்கள் கற்பினை நீங்கள் காப்பாற்றிக்கொள்ள முயற்சியுங்கள்…
அடுத்து உங்களோட வரலாற்றினைதான் அறம் போடப்போகிறது…
உங்களைப் பற்றி அகரமுதலி அலுவலர்களே ஆதாரத்தோடு உங்க முறைகேடுகளை சொல்லிட்டாங்க…
அறம் வெளியிடப்போகிற உங்களைப் பற்றிய கட்டுரைக்கானத் தலைப்பு எப்படி இருந்தா நர்லா இருக்கும் என்று நீங்களே தேர்ந்தெடுத்தால் நல்லா இருக்கும் ….
உங்களுக்கு சில பரிந்துரைகள்
“அகரமுதலியில் மு. கண்ணன் செய்த லீலைகள்”
“அகரமுதலியில் தூங்கச்செய்த முட்டாள் முனைவர்”
“முறைகேடுகளின் மன்னன் மு.கண்ணன்”
எதை வைப்போம் ?
எப்படி வேண்டுமானாலும்
தலைப்பிட்டுக் கொள்ளுங்கள்
விரைவில் வெளியிடுங்கள்
எனக்கும் ஆவலாக இருக்கிறது
அரசுப்பணியைப்
பற்றிய
அடிப்படையறிவும்
அகரமுதலியைப்பற்றிய
புரிதலுமில்லாத
த.காமராசு
அவர்களின்
உண்மைகளை
ஆய்ந்தறிந்து
வெளியிடுவதே
“அறம்”
என்னும்
பெயருக்குப்
பொருத்தமாயமையும்
மு.கண்ணன்
உங்களைப் பற்றிய வரலாறு … விரைவில் வெளிவரும் …
காத்திருங்க …
நீங்கள் அகரமுதலியிலிருந்து பதவி நீக்கப்பட்ட அரசாணையோடு … வெளிவரும் !
ஐயோ பாவம்
தோழர் கோகுல்
குழம்பிப்போய்
ஏதேதோ
பிதற்றுகிறார்
9444432202
இந்த எண்ணில்
எப்போது வேணடமானாலும்
கலந்துரையாடலாம்.
காத்திருக்கிறேன்.
என்னுடைய
பதவி
அரசாணை வெளியிட்டு
நீக்குமளவிற்கு
உயர் பதவியல்ல,தோழர்.
உங்கள் நிலையை எண்ணி
கழிவிரக்கம் கொள்கிறேன்.
என்னுடைய ஊழல் பற்றியும்
நான் செய்துள்ள ஊழல் பற்றியும்
எந்த ஊடகத்தில்
வேண்டுமானாலும்
வெளியிடுங்கள்.
யாருக்கு வேண்டுமானாலும்
புகாரனுப்புங்கள்.
நேரில்
வாதிடவும்
நான்
தயார்.
இடத்தையும்
நேரத்தையும்
நீங்களே குறியுங்கள்.
இஃதோர்
அறைகூவல்
சொம்படிப்பது
முகம் மறைத்துப் பதிவிடுவது
இவையெல்லாம்
எனக்குப்
பழக்கமில்லாதது.
தேரங்குறியுங்கள்
சந்திப்போம்.
குற்றச்சாட்டுகளை
எதிர்கொள்ளக்
காத்திருக்கிறேன்
மு.கண்ணன்
9444432202
இங்கு குடுமிப் பிடி சண்டை நடப்பது விசயராகவன் விசுவாசிகளுக்கும் காமராசு விசுவாசிகளுக்கும் என்று தெளிவாகத் தெரிகிறது. இருவரின் தனிப்பட்ட குரோதங்கள் பொதுவெளியில் தமிழைச் சிறுமை படுத்துகின்றன. ஆனால் பேச வேண்டியதை நாம் விட்டுவிட்டோம். கடந்த சில மாதங்களாக தமிழ் வளர்ச்சி மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நிலை என்ன என்பதை யோசியுங்கள். துறைக்கு எந்த வகையிலும் பொருத்தமற்ற, தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கும் எந்த வகையிலும் தொடர்பற்ற ஒரு இ.ஆ.ப. அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொறுப்பேற்றது முதல் எத்தனை தமிழ் அறிஞர்கள் சென்று பார்த்துள்ளீர்கள்? எத்தனை தமிழ் அறிஞர்களை சந்திக்க அனுமதித்துள்ளார்? எத்தனை பேரை அழைத்துப் பேசியுள்ளார்? இவர் வந்தபிறகு தமிழ் வளர்ச்சித்துறையிலும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் நடைபெற்றுள்ள நிகழ்ச்சிகள் என்னென்ன? எதுவும் இல்லை. இரண்டு அமைப்புகளும் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளன என்பதை முதலில் உணருங்கள். தமிழ்க்குடிமகன் இருந்து காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். மேடையில் அவரின் தமிழ் முழக்கம் கண்முன் தோன்றுகிறது. நாமெல்லாம் முதலில் வலியுறுத்த வேண்டியது தமிழாய்ந்த, நிர்வாகத் திறனுள்ள, நேர்மையுள்ள, தமிழையே மூச்சாய் எண்ணக்கூடிய, அரசியல் சார்பற்ற ஒருவரை தமிழ் வளர்ச்சித் துறைக்கும், அதேபோல தகமைவாய்ந்த, அரசியல் சார்பற்ற ஒருவரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கும் இயக்குநராக நியமிக்க வேண்டும் என்றுதான். ஊழல், கையூட்டு, தில்லுமுள்ளு, முறைகேடு இத்தியாதி இத்தியாதியெல்லாம் அந்தந்த துறைகள் கவனித்துக்கொள்ளும். உப்பைத் தின்றவன் எவனாக இருந்தாலும் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். காமராசுவோ, விஜயராகவனோ யாரும் விதிவிலக்கல்ல.
சரியாகச் சொன்னீர்கள் ஐயா. தமிழ், தமிழ் ஆய்வுகள், தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள் இப்படி எதுவுமே தெரியாத ஒருத்தர் தமிழ் வளர்ச்சித் துறைக்கு இயக்குநராக அமர்த்தம் செய்யப்பட்டுள்ளார். என்ன கேளிக்கூத்து. தமிழ் அறிந்த அறிஞர்கள் எவருமே தமிழகத்தில் இல்லையா? எல்லா துறைகளையும் சரியாக வழிநடத்தும் முதல்வர் தமிழ் வளர்ச்சித் துறையை மட்டும் ஏன் கைவிட்டுவிட்டார். தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் ஆட்சியர் அலுவலகமாக மாற்றிவிட்டார் சரவணன். தமிழாராய்ச்சி நிறுவனம் போன்ற உயராய்வு நிறுவனங்களை தாலுகா அலுவலகமாக மாற்றிவிட்டார் போலும். தமிழ் வளர்ச்சித் துறையில் இவர் முன் நேருக்கு நேர் சென்று வணக்கம் செலுத்தினாலும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு செல்லும் இவருக்கெல்லாம் எதற்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் பணி? தமிழையும் தமிழறிஞர்களையும் சிறுமை படுத்தவே சரவணன் இஆப தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது தமிழார்வலர்களின் குமுறல். முதல்வர் கவனிப்பாரா?
கல்வித்துறையிலிருந்த திரு காமராசு அவர்கள் தமிழ் வளர்ச்சித்துறைக்கு வந்து இயக்குராகப் பதவி உயர்வு பெற்றதைப் போன்று தமிழ் வளர்ச்சித்துறையில் கண்கிணிப்பாளர் நிலையில் பணிபுரிகின்ற ஒருவரை கல்வித்துறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவராக நியமனம் செய்ய முடியுமா ஐயா?
திரு.காமராசு அவர்களுடைய
பதவி
துணை இயக்கநர்
பதவிதான்.
இயக்குநர் பதவியுமல்ல.
இயக்குநர் பதவிக்கான
சம்பளமுமல்ல.
சரியாகச் சொன்னீர்கள் ஐயா. தமிழ், தமிழ் ஆய்வுகள், தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள் இப்படி எதுவுமே தெரியாத ஒருத்தர் தமிழ் வளர்ச்சித் துறைக்கு இயக்குநராக அமர்த்தம் செய்யப்பட்டுள்ளார். என்ன கேளிக்கூத்து. தமிழ் அறிந்த அறிஞர்கள் எவருமே தமிழகத்தில் இல்லையா? எல்லா துறைகளையும் சரியாக வழிநடத்தும் முதல்வர் தமிழ் வளர்ச்சித் துறையை மட்டும் ஏன் கைவிட்டுவிட்டார். தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் ஆட்சியர் அலுவலகமாக மாற்றிவிட்டார் சரவணன். தமிழாராய்ச்சி நிறுவனம் போன்ற உயராய்வு நிறுவனங்களை தாலுகா அலுவலகமாக மாற்றிவிட்டார் போலும். தமிழ் வளர்ச்சித் துறையில் இவர் முன் நேருக்கு நேர் சென்று வணக்கம் செலுத்தினாலும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு செல்லும் இவருக்கெல்லாம் எதற்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் பணி? தமிழையும் தமிழறிஞர்களையும் சிறுமை படுத்தவே சரவணன் இஆப தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது தமிழார்வலர்களின் குமுறல். முதல்வர் கவனிப்பாரா?
தமிழ் வளர்ச்சித் துறையும் உலகத் தமிழாராய்ச்சி அமைப்பும் திட்டமிட்டு அழிகப்படுகிறது என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. ஏற்கனவே அறம் வெளியிட்ட செய்தியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பத்தாவது படிக்காதவர்கள் கண்காணிப்பாளர்களாகவும், தட்டச்சர் உதவி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. அந்த அதிர்ச்சியே எங்களை விட்டு இன்னும் நீங்கவில்லை. தற்போது ஊழல் பற்றிய செய்தி, கூடவே தமிழுக்கும் ஆய்வுகளுக்கும் தொடர்பில்லாத ஒருவர் தமிழ் வளர்ச்சிக்கும் உலகத் தமிழாராய்ச்சிக்கும் இயக்குநர் என்ற செய்தி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. இது தமிழறிஞர்களை மிகவும் வேதனைப் படுத்தக்கூடியது. தமிழக அரசும் முதல்வரும் விரைந்து நடவடிக்கை எடுத்து, திறமையானவர்கள் இயக்குநர்களா நியமிக்க வேண்டும். தவறுகளை நடைபெறாமல் கண்காணிக்கவேண்டும்.
பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு தற்போது தமிழாய்ந்த அறிஞர் இயக்குநராக இல்லை. தமிழ் வளர்ச்சித்துறைக்கு தமிழ் தெரிந்த ஒருவர், தமிழறிஞர்களை மதிக்கும் ஒருவர் இயக்குநராக இல்லை…. தமிழக முதல்வருக்கே வெளிச்சம். மாண்புமிகு முதல்வர் அவர்களே தமிழ் வளர்ச்சியில் கலைஞர் பாணியைப் பின்பற்றுங்கள். இ.ஆ.ப. எங்க பயன்படுத்த வேண்டுமே அங்குப் பயன்படுத்துங்கள். தமிழ் வளர்ச்சித்துறையில் இவர்கள் தொடர்ந்தார் அரசின் நற்பெயரைக் கெடுத்துவிடுவார்கள்.