வெற்றிச் செல்வி, மனநல ஆலோசகர், சென்னை.
தமிழகத்தில் ,தமிழ் தேசியம் ஆட்சி செய்யும் காலம் வருமா ஐயா.?
தமிழகத்தில் முதன்முதலாக தமிழர் கழகம் உருவாக்கியவர் தமிழ்தாத்தா கி.ஆ.பெ.விசுவநாதம்! காங்கிரஸிலிருந்த பெரியாரை நீதிக்கட்சிக்கு அழைத்து வந்த கி.ஆ.பெ, இருபதாண்டுகள் பெரியாரோடு இணைந்து களம் கண்டவர்! பெரியாரும், அண்ணாவும் திராவிடர் கழகம் தொடங்கியதால் கருத்து மாறுபட்டு தமிழர் கழகம் உருவாக்கினார்!
மாபெரும் தமிழ்ப் போராளியும்,முத்தமிழ் அறிஞருமான கி.ஆ.பெ.விசுவநாதத்தின் தமிழர் கழகம், இந்திய தேசியத்திற்கு அனுசரணையான தமிழ் தேசியத்தை பேசிய சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் தமிழரசு கழகம்..ஆகியவற்றால் தமிழ்நாடும், தமிழர்களும் பெற்ற பலன்கள் சொல்லில் அடங்கா! ஆயினும், இவை இங்கு நின்று நிலைபெறவில்லை! இவர்களைப் போன்ற ஒப்பற்ற தலைவர்கள் பேசிய தமிழ்த் தேசியத்தையே ஒப்புக் கொள்ளாத தமிழர்களா இன்றைய தமிழ் தேசியம் பேசுவோரை ஏற்பார்கள்?
அதுவும் இன்று தமிழ் தேசியம் பேசுபவர்களின் அதீத திராவிட வெறுப்பானது ஒன்றுபட வேண்டிய தமிழர்களை பிரிக்கும் முயற்சியாகவும் உள்ளது. இன்று இந்து தேசியத்தை பின்னணியாகக் கொண்டு செயல்படும் தமிழ்த் தேசியம் தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை!
…………………………………………………………..
ராகவ ராஜ், ஆறுமுகநேரி, தூத்துக்குடி.
இப்போதைய தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகியவற்றுக்கு ‘உலக வர்த்தகக் கழக‘ ஒப்பந்தத்தில் ( W T O ) இந்திய அரசு இணைக்கப்பட்டது தான் காரணமா? ‘உலக வர்த்தகக் கழக‘ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அதில் இந்திய அரசை இணைத்தது யார், எந்தக் கட்சி, எந்த ஆண்டு ?
இப்போதைய தனியார்மயமாக்கல்,உலகமயமாக்கல்,தாரளமயமாக்கல் ஆகியவற்றுக்கு அடித்தளமிட்டது காங்கிரஸ் கட்சியின் நரசிம்மராவ்-மன்மோகன்சிங் கூட்டணியே! ஆண்டு 1991. இதனால் டாலருக்கு ஒரளவு இணையாக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு சரியத் தொடங்கியது.சிறு,குறு தொழில்கள் பாதுகாக்க முடியாமல் அழியத் தொடங்கின! இறக்குமதி, ஏற்றுமதி கொள்கை தாறுமாறாக ஆனது! விவசாயிகள் தற்கொலை லட்சக்கணக்கில் அதிகரித்தது, இந்த காலகட்டத்தில் தான்! அதே சமயம் காட் ஒப்பந்தத்தில் கல்வி,மருத்துவம் ஆகியவற்றை இணைத்து அவற்றை சேவை நோக்கத்தில் இருந்து வணிக நோக்கத்திற்கு மாற்றியது வாஜ்பாய் ஆட்சி தான்!
…………………………………………………………..
மருதமுத்து, கரூர்
தன்னலமற்ற தலைவர் வைகோ அவர்களின் செயல்பாடுகளை பற்றி கருத்து?
‘தன்னலமற்ற தலைவர்’ என்ற அடைமொழியோடு கேள்வி கேட்பதில் இருந்தே உங்களுக்கு அவரது செயல்பாடுகளில் அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பது தெரிகிறது. உங்கள் நம்பிக்கையை அடுத்தவர் மதிப்பீடுகளைக் கொண்டு அளவீடு செய்யாதீர்கள். உங்கள் சொந்த அறிவு, அனுபவம் சார்ந்து முடிவெடுங்கள்! ஒருவர் நம்பிக்கை குறித்து விமர்சிப்பது நாகரீகமல்ல!
…………………………………………………………..
கே.எஸ்.கவின், மணலூர்ப்பேட்டை.
உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஆளும் கட்சிக்கு வாக்களித்தால்தான் நல்லது நடக்கும் என பொன்முடி பேசுகிறார்…. பதவி கிடைக்காத கட்சியினருக்கு கூட்டுறவு சங்க தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும் என துரைமுருகன் பேசுகிறார்… முதல்வரின் தற்போதைய இயல்புக்கு மாறாக செயல்படும் சீனியர்களை முதல்வர் ஓரம்கட்டினால்தான் என்ன…?
உங்கள் கேள்விக்கு உள்ளேயே சரியான பதிலும் வைத்துள்ளீர்கள்!
…………………………………………………………..
சரவணன், சாலிகிராம், சென்னை
வைகைப் புயல் வடிவேலுவை அவருக்கு முந்தைய நகைச்சுவை நடிகர்களோடு ஒரு ஒப்பீடு செய்ய முடியுமா..?
நகைச்சுவை நடிப்பு என்பது ஆகப் பெரிய திறமைசாலிகளுக்கே கைகூடும்!
கலைவாணர் என்.எஸ்.கேவின் நகைச்சுவையில் மக்கள் அறியாமையை விலக்கவும், சமூக அவலங்களைச் சாடி முற்போக்கான பார்வையை முன்னெடுக்கவுமான ஒரு நோக்கம் இருந்தது! அவை அந்த காலகட்டத்தில் தேவையாக ஏற்கப்பட்டது. இந்தியாவிலேயே ஒரு நகைச்சுவை நடிகருக்கு சிலை வைக்கப்பட்டதென்றால் அது என்.எஸ்.கேவுக்குத் தான்!
கலைவாணர் காலத்தில் இருந்த காளி என்.ரத்தினமும் அபாரமான திறமைசாலி தான்! சபாபதி படம் ஒன்று போதும் காளி என்.ரத்தினத்தை காலமெல்லாம் நினைவு கூற! இவர்கள் இருவரும் அந்தக் கால எம்.ஜி.ஆர் போன்ற இளம் நடிகர்களுக்கு ஆசான்களாகத் திகழ்ந்தவர்கள்!
சந்திரபாபுவும் ஒரு பிறவி மேதை! நவரசபாவமும் வெளிப்படுத்த தெரிந்த அபார நடிகன்! நடனம், பாடல்களிலும் கொடிகட்டிப் பறந்தார்! அடுத்து நாகேஷ் ஒரு சகாப்தமாக எழுந்து நின்றார்! சோவுக்கு அழகான அப்பாவி முகம், முட்டைக் கண்கள் ப்ளஸ் பாயிண்ட்! அத்துடன் அரசியல் நையாண்டி அவருக்கு கைகொடுத்தது. அரசியல்வாதிகளின் போலித்தனங்கள், பேராசை, சுயநலம், அடாவடித்தனங்கள் ஆகியவற்றை அம்பலப்படுத்தியதில் வெற்றி பெற்றார். எனினும், காலப் போக்கில் அது திராவிட இயக்க வெறுப்பு என்பதாக சுருங்கி போனதால் நீர்த்துப் போனது!
சுருளிராஜன் அப்பாவித்தனமான பாத்திரங்களில் மனதை அள்ளிச் சென்றார்!
கவுண்டமணி-செந்தில் காமெடி ஒரு குறிப்பிட்ட காலம் மக்கள் மனதை கொள்ளையிட்டது!
Also read
இந்த இருவர் அணியும், ஜனகராஜனும், சார்லியும், விவேக்குமாக மிகப் பெரிய ஜாம்பவான்கள் கோலோச்சிய ஒரு காலகட்டத்தில் வத்தலும், தொத்தலுமாக, கருப்பாக வறுமையில் அடிபட்ட அடையாளங்களுடன் வந்தவர் தான் வடிவேலு!
நகைச்சுவை மேதமைக்கு மனித மனங்களின் உளவியல் தெரிந்திருக்க வேண்டும். மனித மனங்களில் தோன்றும் பேராசை, அகம்பாவம், அறியாமை, இயலாமை, அவசரக் குடுக்கைத்தனம்.. ஆகியவற்றை துல்லியமாக உள்வாங்கி, வெளிப்படுத்த முடிந்தவர்களாலேயே நகைச்சுவையை உருவாக்கமுடியும். இதில் முன்னவர்கள் ஓவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் மேதைகள்! இதில் அனைவரும் வியக்கதக்க வகையில் ஆகச் சிறந்த நகைச்சுவை நிபுணத்துவம் பெற்றவர் வடிவேலு! அவர் பிஸியாக நடிப்பதை நிறுத்தி பத்தாண்டுகளாகியும் கூட இன்னும் மக்களுக்கு அரசியல்,சமூக பிரச்சினைகளின் வெளிப்பாட்டுக்கு அவர் முகபாவங்களே அடையாளமாகிறது என்றால், இதைவிட வேறென்ன வேண்டும்!
PM CARES என்பது தனி நபர் நிதி அல்ல
PM CARES FUND (Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situation Fund) அதாவது பிரதம மந்திரியின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரண நிதி என்ற ஒன்றை 28 மார்ச் 2020 அன்று கொரோனா வைரசுத் தொற்று நோய் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் இது போன்ற தொற்றுநோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் நிவாரண உதவிகளுக்கு தனியாக ஒரு நிதியை உருவாக்கி அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
இந்த நிதியை பெறுவதற்கும் கையாள்வதற்கும் ஓர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அந்த அறக்கட்டளையின் தலைவராக பிரதமரும் உறுப்பினர்களாக பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர்களை கொண்டு அமைக்கப்பட்டது.
அறக்கட்டளையின் தலைவராக உள்ள பிரதமருக்கு, 3 அறங்காவலர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. அவர்கள் ஆராய்ச்சி, சுகாதாரம், அறிவியல், சமூக சேவை, சட்டம், பொது நிர்வாகத் துறைகளில் பிரபல நபர்களாகவும், ஈகை கொண்டவராகவும் இருக்கவேண்டும். அறங்காவலராக நியமிக்கப்படும் நபர்கள் பொது நல நோக்கில் செயல்பட வேண்டும்.
இந்த அறக்கட்டளை நிதி முழுவதும், தனிநபர்கள்/அமைப்புகளின் தன்னார்வ நிதி. இதற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுவது இல்லை. மேலே குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
பிரதமரின் கேர்ஸ் நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு, வருமானவரிச் சட்டம் 1961, 80ஜி பிரிவுப்படி 100 சதவீத வருமானவரி விலக்கு உண்டு. பிரதமர் கேர்ஸ் நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகளும், கம்பெனிகள் சட்டம், 2013-ன் கீழ் பெருநிறுவன சமூக பொறுப்பு(சிஎஸ்ஆர்) செலவினமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
பிரதமரின் கேர்ஸ் நிதிக்கு, வெளிநாட்டு நிதிபங்களிப்பு ஒழுங்கு முறைச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற தனிக் கணக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதமரின் கேர்ஸ் நிதி வெளிநாடுகளில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற முடியும். இதுவும் பிரதமரின் தேசிய நிவாரண நிதி (PMNRF) போன்றதுதான். பிரதமரின் தேசிய நிவாரண நிதியும், கடந்த 2011ம் ஆண்டு முதல் பொது அறக்கட்டளையாக வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற்று வருகிறது.
இந்த அறக்கட்டளைக்கு தேவையான நிர்வாக உதவிகளை PMO (Prime Minister Office) பிரதம மந்திரியின் அலுவலகம் செய்யும் என்றும் இதன் வரவு செலவை வருடத்திற்கு ஒரு முறை இந்த அறக்கட்டளையால் நியமிக்கப்பட்ட தனி நபர் மூலம் தணிக்கை செய்யப்படும் என்றும் இதன் அலுவலகமாக பிரதம மந்திரியின் சவுத் ப்ளாக் அலுவலக முகவரியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
முழுக்க முழுக்க ஓர் அரசு ஊழியர் அவரது அரசு கொடுத்த அலுவலகத்திலே இயங்கும் ஓர் அமைப்பு ஆனால் இதைப்பற்றிய எந்த தகவலும் தெரிவிக்க தேவை இல்லை என்றும் இது தனியார் நிதி என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.
RTI (தகவல் அறியும் உரிமைச்சட்டம்) மூலம் கேள்வி கேட்டால் அதற்கு பதில் அளிக்க தேவை இல்லை என்றும் பதில் வந்த பின்னர் தில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர் அங்கே இது தனியார் நிதி என்று பதில் அளித்திருக்கிறார்கள்.
இதற்கு முன்னர் இது போன்று PMNRF (PRIME MINISTER NATIONAL RELIEF FUND) தேசிய பேரிடர் மேம்பாட்டு நிதி என்ற ஒரு அரசின் அமைப்புக்கு கடந்த 13-07-2020 முதல் 19-07-2021 வரை வந்த நன்கொடை வெறும் ரூ. 81,115/- மட்டுமே வந்திருக்கிறது. அதன் முந்தைய வருடம் எந்த ஒரு பெரிய முயற்சியும் எடுக்காமலேயே இந்த நிதிக்கு வந்த நன்கொடைகள் ரூ. 814.63 கோடிகள் வந்திருக்கிறது. இந்த நிதியில் இருப்பு ரூ. 4,393.19 கோடி இருப்பு இருக்கிறது. வருடாந்திர வரவு செலவு அறிக்கைகள் இணையத்திலே இருக்கிறது. இப்படி ஏற்கனவே இருக்கும் ஒரு அறக்கட்டளையின் வருவாயை தனியார் நிதி என்று சொல்லிக்கொண்டு அங்கே கொண்டு சேர்ப்பது எந்த வகையில் நியாயம்?
சரி சட்ட ரீதியாக இந்த PM-CARES FUND தனியார் நிதியை போன்று அறிவிக்க இயலாது என்பதற்கான நமது விடயங்கள்:-
1. இதன் அலுவலகம் பிரதமருக்கு அரசாங்கம் கொடுத்திருக்கும் அரசு அலுவலக முகவரியில் இயங்குகிறது.
2. இதன் தலைவர் & உறுப்பினர்கள் அனைவருமே இந்திய அரசாங்கத்தின் ஊதியம் பெரும் ஊழியர்கள் (அமைச்சர்கள்)
3. இதன் நிர்வாக உதவிக்கு பிரதமர் அலுவலக அதிகாரிகள் பயன்படுத்துகிறார்கள்.
4. இந்த நிதியின் இலட்சினை இந்திய அரசாங்கத்தின் இலட்சினை
5. இந்த நிதிக்கு நன்கொடை பெற இந்திய அரசாங்கத்தின் வெளிநாடுகளில் இருக்கும் தூதரகங்களில் உள்ள இந்திய ஊதியம் பெரும் அரசு ஊழியர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு நன்கொடை பெறப்படுகிறது.
6. இந்த அமைப்பின் இணையதள முகவரி அரசாங்கத்திற்கு மட்டுமே உரித்தான .GOV.IN என்பதை பயன்படுத்துகிறார்கள்.
7. இந்த அமைப்பின் இணையதளம் NIC (NATIONAL INFORMATIVE CENTRE) மூலமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.
8. குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் அரசு அதிகாரிகள் இந்த நிதியை தேசிய நிதியை போன்று கருதி உடனடியாக நிதியை தாருங்கள் என்றும் நிதி அளிப்போருக்கு வருமான வரி சலுகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்கள்.
அரசியலமைப்பு சட்டம் கொடுத்த வரையறையில் பதவியில் இருந்துகொண்டு அந்த சட்ட வரையறையை மீறி தனியாக எதுவும் இப்படி செய்துவிட சட்டத்தில் இடமில்லை. ஆகவே இந்த நிதியானது முழுக்க முழுக்க அரசின் நிதியாகவே கருதவேண்டும். அப்படி கருதும் பட்சத்தில் RTI மூலம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியே தீரவேண்டும்.
பிரதம மந்திரி உள்துறை அமைச்சர் பாதுகாப்பு அமைச்சர் நிதி அமைச்சர் இவர்கள் அனைவருமே இந்திய அரசியல் அமைப்பு படி அரசு ஊழியர்கள். அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியவர்கள். இந்த பதவி எந்த சட்டத்திலும் தனி நபர் பதவிகள் அல்ல. அரசாங்க ஊழியர்கள். அரசாங்க ஊழியர்கள் சட்டத்தின் அடிப்படையிலேயே தான் பணியாற்ற முடியும்.
மக்களை நன்கொடை கொடுக்க வைக்க அனைத்து அரசுத்துறை எந்திரங்களை பயன்படுத்திக்கொண்டு இப்போது தனியார் நிதி என்று சொல்லிக்கொண்டு இருப்பது கேவலமான இழிவான ஏமாற்று செயல்.
வழக்கு நீதிமன்றத்திலே இருக்கிறது. உறுதியாக இதன் கணக்கு வழக்கு விபரங்கள் மக்கள் முன் வைத்தாக வேண்டும். பாரபட்சமற்ற முறையில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து கொடுக்கப்படவும் வேண்டும்.
ஆர் எம் பாபு
விமர்சனத்திற்க்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை என்ற உட்கருத்தை புரிந்து கொண்டேன்,என்றாலும் உங்கள் நாகரிகமான பதிலில் எனக்கு மிகவும் திருப்தி. கேள்வி பதில் பகுதி மிகவும் சிறப்பாக ஆரம்பித்துள்ளது. நன்றி வணக்கம்
விமர்சனத்திற்க்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை என்ற உட்கருத்தை புரிந்து கொண்டேன்,என்றாலும் உங்கள் நாகரிகமான பதிலில் எனக்கு மிகவும் திருப்தி. கேள்வி பதில் பகுதி மிகவும் சிறப்பாக ஆரம்பித்துள்ளது. நன்றி வணக்கம்
கேள்வி பதில் பகுதி சிறப்பாக தொடங்கியுள்ளது.. இப்படியே தொடருங்கள்
கேள்வி பதில் பகுதி சிறப்பு… தொடரவும்… வாழ்த்துக்கள்
Wow, awesome blog layout! How long have you been blogging for?
you made blogging look easy. The overall look of
your site is great, as well as the content!
I was recommended this blog by my cousin. I’m not sure whether this post
is written by him as no one else know such detailed about my trouble.
You are amazing! Thanks!
Thanks a lot, Wonderful stuff.
project manager resume writing service medical school essay writing service top assignment writing service uk