அதிமுக அரசு உள்ளாட்சி விவகாரங்களை அணுகியதைப் போலவே, திமுக அரசும் தற்போது அணுகுகிறது. கிராம சபை கூட்டங்கள் ரத்து, உள்ளாட்சி தேர்தலை ஆனவரை தள்ளிப் போடுவது, உள்ளாட்சி அதிகாரங்களை ஊனப்படுத்துவது…என்பது தொடர்கதையா..?
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளான சென்ற ஞாயிற்றுகிழமையில் வடபழனி உள்ளிட்ட தமிழகத்தின் பல கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றன. அதில் அமைச்சர்கள், விஐபிக்கள் பங்கேற்றனர். அதே போல முதல்வர் ஸ்டாலினே அறிவாலயத்தில் திமுக நிர்வாகி பூச்சி முருகன் திருமணத்தை திமுக உயர்மட்டத் தலைவர்கள் உடை சூழ நடத்தை வைத்தார். அப்படி இருக்க குடியரசு நாளில் நடக்க இருந்த கிராம சபை கூட்டங்கள் நடக்கக் கூடாது என அதிரடியாக தடுத்துள்ளது திமுக அரசு!
சட்டமன்ற கூட்டத் தொடர்கள், நாடாளுமன்ற கூட்டம் ஆகியவை கூட கொரானா காலத்தில் தடையில்லாமல் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், சுமார் 50 தில் இருந்து 100 பேர் வரை வெட்டவெளியில் கூடி ஒரு சில மணி நேரங்கள் கிராம வளர்ச்சி மற்றும் தேவைகள் குறித்து பேசுவது மட்டும் தடுக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் ரேஷனில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு குறித்த விமர்சனங்கள் உள்ளாட்சி கிராம சபை கூட்டங்களில் விவாதிக்கப்படும். ஆகவே தடுக்க வேண்டும் என கருதி திமுக அரசு கிராம சபை கூட்டங்களை ரத்து செய்திருக்கலாம் என பரவலான பேச்சும் உள்ளது!
அதிமுக ஆட்சியாளர்கள் உள்ளாட்சி தேர்தலை மீண்டும்,மீண்டும் தள்ளிப் போட்டு வந்தனர். இதனால் உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசு தரும் நிதி உதவிகள் சென்று சேரமுடியாத நிலைமைகள் இருந்தன! மேலும் கிராம மற்றும் நகர்புறங்களின் அடிப்படை சுகாதார கட்டமைப்பு மற்றும் உள்ளூரின் அடிப்படை தேவைகள் கவனிப்பாரற்று அலட்சியப்படுத்தப்பட்டு வந்தன!
அப்போது அதிமுக அரசின் இந்த அணுகுமுறையை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். அதிமுக அரசுக்கு உள்ளாட்சிகள் மீது அக்கறையே இல்லை. உள்ளாட்சி அதிகார பகிர்வில் விருப்பமில்லை. தேர்தலை சந்திக்க பயப்படுகின்றனர்..என அவ்வப்போது அனல் கக்கும் அறிக்கைகள் வெளியிட்டு வந்தார்.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக ஆட்சியின் அதே போக்கைத் தான் தாங்களும் கடைபிடிக்கின்றனர் என்பது உள்ளாட்சி ஆர்வலர்களை வருத்தமடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் நான்கு மாதம் அவகாசம் வழங்கக் கோரி திமுக ஆதரவாளர் சங்கர் என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப் பட்டுள்ளது. இந்த சங்கர் தான் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் தாமதம்படுத்தப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக அரசின் நோக்கத்தை விளக்கும்வண்ணம் மாநில தேர்தல் ஆணை யம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, நகர்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடத்த மேலும் நான்குமாத அவகாசம் கேட்டார்.
ஏற்கனவே தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நான்கு மாத அவகாசம் வழங்கி கடந்த செப்.27-ல் உத்தரவிட்டோம். அந்த காலக்கெடு வரும் ஜன.27-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், தற்போது மீண்டும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 4 மாத அவகாசம் கேட்கிறீர்கள். ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்களை நடத்தாலாம் என்றால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த எப்படி தடை கொடுப்பது’’ என மறுத்து விட்டனர்.
இதே போல திமுக அரசின் தூண்டுதலால் நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி உயர் நீதிமன்றத்திலும் வழக்கு போடப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், ‘‘ஏற்கெனவே 5 மாநில தேர்தல்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது. இதுதொடர்பான வழக்கும் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தேர்தலை தள்ளிவைக்கக் கோரி நீங்கள் உச்ச நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும்’’ எனக் கூறிவிட்டனர்.
இந்த அணுகுமுறைகளை பார்க்கும் போது உள்ளாட்சி அதிகார பகிர்வில் திமுக அரசுக்கும் ஆர்வம் இல்லை என்பது நன்கு தெரிய வருகிறது. மேலும் உள்ளாட்சி நலன்களைவிட கட்சியின் ஆதிக்கத்தை அங்கு நிலை நாட்டுவது தான் இவர்கள் குறிக்கோளாக உள்ளது.
இதேபோல கிராம சபை கூட்டங்களை நடத்துவதற்கு அதிமுக அரசு மீண்டும், மீண்டும் கொரானா உள்ளிட்ட பற்பல காரணங்களை சொல்லி தடுத்தது!
தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய 4 நாட்கள் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் பகுதியின் அடிப்படை தேவைகள் குறித்து பேசுவர். மேலும், அந்தந்த கிராமத்தில் நடக்கும் வளர்ச்சி திட்டப் பணிகள், அடிப்படை தேவைகள் குறித்து தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டு, அதன் பின் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற் கொள்ளப்படும்.கிராம சபை கூட்டங்களுக்கு முற்றிலும் தடை போடும் போது இவை யாவுமே பாதிக்கும்.
அதிமுக அரசு கிராம சபை கூட்டங்களை நடத்த தடைவித்தித்த போது ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு, எழுதி கடிதம் தற்போது நினைவுகூறத்தக்கது; தி.மு.க., 16 ஆயிரத்து, 500 ஊராட்சிகளில், கிராம சபை கூட்டம் நடத்துகிறது. மக்கள் ஆர்வமுடன் வருகின்றனர். இரண்டு நாட்களில், 1,600க்கும் அதிகமான, கிராம சபை கூட்டம் நடந்துள்ளன.இந்த கூட்டங்கள் நீடித்தால், மக்கள் ஒட்டுமொத்தமாக, தி.மு.க., கூட்டணியை நோக்கி சென்று விடலாம் என்ற அச்சம், ஆட்சியாளர்களை ஆட்டி படைக்கிறது. கிராமசபை கூட்டம் நடத்த, மாவட்ட கலெக்டர்கள் அனுமதிக்கக் கூடாது என, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இத்தகைய அடக்கு முறைகளை, எத்தனையோ காலமாக, தி.மு.க., சந்தித்துள்ளது. அதிகாரத்தையும், சட்டத்தையும் காட்டி, தி.மு.க.,வை ஒருபோதும் அடக்கி ஒடுக்கிவிட முடியாது. அதிகார மிரட்டல்களுக்கு அணு அளவும் அஞ்சாமல், தி.மு.க.,வின் மக்கள் கிராம சபை கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜன.,10 வரை தொடரும்; இது உறுதி’’
என்று ஸ்டாலின் அப்போது கூறினார். அவரே பல கிராம சபை கூட்டங்களை வழக்கத்திற்கு மாறாக பிரம்மாண்டமாக கூட்டியதோடு, நேரடியாக சென்று கலந்து கொண்டு பேசினார்.
ஆனால் குடியரசு தினத்திற்கு நடக்க வேண்டிய கிராம சபை கூட்டத்தை அதிமுக ஆட்சியைப் போலவே அதிகாரிகளைக் கொண்டு அறிக்கை வெளியிட்டு தடை செய்துள்ளார். கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு மாநில அரசு அனுமதி என்பதே தேவையற்றது. அதிகாரத் திணிப்பு. அது அந்தந்த கிராம பஞ்சாயத்து தலைவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ள நிலையில் தற்போது கிராம சபை கூட்டத்தை திமுக அரசு வலிந்து தலையிட்டு ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது! ஒரு பக்கம் மத்திய அரசிடம் மாநில உரிமைகளுக்கு குரல் எழுப்பும் திமுக அரசு மறுபக்கம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகள்,கடமைகள் ஆகிவற்றை செய்யக் கூட தடை போடுவது ஆச்சரியமாக உள்ளது.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
அதிமுக போட்டி கிராமசபைக் கூட்டம் நடத்துமா !
Almighty India Movement
சர்வசக்தி இந்தியா இயக்கம்
பரவலாக்கப்பட்ட, சர்வ சமூக நீதி, பாலின சமத்துவ அரசியல், நிர்வாகம், இரட்டைக்கட்சி, ஒற்றை பிரதிநிதித்துவ நேரிடை தேர்தல், சீர்திருத்த அரசியல் அமைப்பு முன்மொழிவு:
பிரிவினை இல்லா சமத்துவ மக்கள் மன்ற அமைப்பு:
ஒருங்கிணைந்த ஐயுயர்நிலை மக்கள் மன்றங்கள் அமைப்பு.
“ஆகச்சிறந்ததோர் பகுதி மக்கள்பிரதிநிதி அகிலஇந்திய பூகோளபெருந்தலைவராகும் அரசியலமைப்பு”
ஐயுயர்நிலை மன்றங்கள்:
முதன்மை மக்கள் மன்றம்(பகுதிகளின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்டது)
வட்ட மக்கள் மன்றம் (முதன்மை மக்கள் மன்றங்கள் ஒன்றியம்)
மாவட்ட மக்கள் மன்றம் (வட்ட மக்கள் மன்றங்கள் ஒன்றியம்)
மாநில மக்கள் மன்றம் (மாவட்ட மக்கள் மன்றங்கள் ஒன்றியம்)
இந்திய உச்ச மக்கள் மன்றம். (மாநிமக்மன்றங்கள் ஒன்றியம்.)
அரசியல் கட்சி அமைப்பு:
சாதிமத வலது இடது என்ற கொள்கை ரீதியான பல கட்சி அரசியல் அமைப்புக்கு மாறாக பாலின சமத்துவத்தை நிலைநிறுத்து 1. பெண்கள் கட்சி 2. ஆண்கள் கட்சி மட்டும் கொண்ட பல இரட்டை கட்சி அரசியல் அமைப்பு. பெரும்பான்மை மக்களின் ஆதரவின் பேரில் பெண்கள் கட்சி ஜஸ்ட், ஆண்கள் கட்சி மாறி மாறி ஆட்சி செய்யும் ஆரோக்கிய அரசியலமைப்பு.
சமத்துவ பூகோள பகுதி, தொகுதி சீரமைப்பு:
இந்திய பூகோள பரப்பை எந்தவித பிரிவு இனங்களுக்கும் உட்படுத்தாமல் சம பரப்பளவு கொண்ட பகுதிகளாக சீரமைத்தல். அதனடிப்படையில் தொகுதிகளை சம எண்ணிக்கை பகுதிகளை உள்ளடிக்கி அமைத்தல்.
பிரதிநிதித்துவ தேர்தல் முறை:
முதன்மை மக்கள் மன்ற உறுப்பினர் – பகுதி பிரதிநிதியை மட்டும் நேரடித் தேர்தல் மூலமாக வும், அந்த மன்றத் தலைவரை மறைமுக ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் மூலமாக தேர்ந்தெடுத்தல்,
கீழ்நிலை மன்றங்களின் தலைவர்கள் மேல்நிலை மன்றங்களின் உறுப்பினராக இருத்தல். அந்தந்த மன்றங்களின் தலைவர்களை அந்தந்த மன்ற உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்தல்.
நிர்வாக செயலக அமைப்பு:
மக்கள் மன்ற நிலைக்கு ஏற்றவாறு நிர்வாக செயலாகம் அந்தந்த மன்றங்களின் கட்டுப்பாட்டில் இயங்குதல். அதாவது மன்றங்கள் இயற்றும் தீர்மானங்களின் அடிப்படையில் மக்களுக்கு சேவை செய்யும் செயலகங்கள் ஆங்காங்கே நடைபெறுதல்.
மேற்குறிப்பிட்ட அரசியல் நிர்வாக இரட்டைக் கட்சி சீர்திருத் செயலதிட்டத்திற்கு ஆதரவளிக்க உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். உங்களுடைய மக்கள் சேவை வெற்றி பெற வாழ்த்துகள்!
❤️
ஊரகப் பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்பான ஊராட்சி மன்றங் களுக்கு ‘கிராம சபை’ கூட்டங்கள் வருடத்தில் குறிப்பிட்ட நான்கு நாட்களில் நடத்த சட்டம் இருக்கும் போது, நகரப்பகுதிகளில பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி இவைகள் சம்பந்தமாக அந்தந்த பகுதிகளில் குறிப்பிட்ட நாட்களில் ‘ ‘நகரசபை’ கூட்டங்கள் நடத்துவதற்கு சட்டம் இல்லையே ஏன்? ஊரக பகுதிக்கும் நகர பகுதிக்கும் ஏன் இந்த வேறுபாடு?
கிராமசபை, ஊராட்சி மன்றம், இங்கிலீஷில் வில்லேஜ் பஞ்சாயத்து, பெயரளவில் இந்த மூன்றுக்கும் பொருள் மாறுபடுமா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூடும் மக்கள் மன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் கேட்காத கேள்விகள், விவாதங்கள்
பொதுமக்கள் கூடும் கூட்டத்தில் எவ்வாறு ஆக்கபூர்வமாக நடைபெறும்?
கிராம சபையை கூட்டக் கூடியவர் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக ஆட்சியில் பத்து வருடமாக ஊராட்சி மன்ற தலைவர் இல்லாமல்தான் இருந்தது. அப்போது நடைபெற்ற கிராமசபை கூட்டங்கள் அரசு அலுவலர்களால் நடத்தப்பட்டிருக்கும். அவர்களை கிராம சபையில் கூடிய மக்கள் எந்த அளவில் கேள்வி கேட்டு இருப்பார்கள் அல்லது சமுதாயத் தணிக்கை என்ற ஒன்றை செய்திருப்பார்கள்? கற்பனை செய்து பார்த்தால் கூடிய கிராம சபைகள் கேலிக்கூத்தாக முடிந்ததாக இருந்திருக்கும்.
ஒரு பகுதிக்கு தொகுதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அதிகார அமைப்புகள் இருக்கும் பட்சத்தில் மக்களுக்கு தான் கஷ்டம் நஷ்டம்.
மக்கள் ஆட்சி நடைபெறுவதாக கொள்ள இயலாது.
மாநிலத்தை அடிமைப்படுத்தும் அதிகாரம் செலுத்தும் மத்திய ஆட்சி, உள்ளாட்சி அமைப்புகளை அடிமைப்படுத்தி அதிகாரம் செலுத்தும் மாநில ஆட்சி போன்ற ஒரு குதிரையின் (.குடியுரிமை யாளர்) மீது மூவர் சவாரி செய்யும் அரசியல் அமைப்பு மாற வேண்டும்.
ஒருங்கிணைந்த ஐயுயர்நிலை மக்கள் மன்றம் மற்றும் செயலக அரசியல் அமைப்பு முறை காலத்தின் கட்டாயம்.
முதன்மை மக்கள் மன்றம்(பகுதிகளின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்டது)
வட்ட மக்கள் மன்றம் (முதன்மை மக்கள் மன்றங்கள் ஒன்றியம்)
மாவட்ட மக்கள் மன்றம் (வட்ட மக்கள் மன்றங்கள் ஒன்றியம்)
மாநில மக்கள் மன்றம் (மாவட்ட மக்கள் மன்றங்கள் ஒன்றியம்)
இந்திய உச்ச மக்கள் மன்றம்.
(மாநில மக்கள் மன்றங்கள் ஒன்றியம்.)