போதைப் பொருள், ரத்தம் தெறிக்கும் கொலைகள், இடையறா வன்முறை..இதுதான் விக்ரம்! முழுக்க முழுக்க இருள் சூழ்ந்த வன்முறைக் காவியமாக உருவாகியுள்ளது புதிய விக்ரம்! விட்டில் பூச்சிகளான இளம் இரசிகர்களுக்கு இது ‘வேற லெவல்’-ஆக இருக்கலாம். ஒரு தேர்ந்த கலைஞனான கமல் தயாரித்த படமா இது? படு குப்பை!
உலகில் உள்ள அத்துணை ஆயுதங்களையும் காட்டிக் கொண்டு, படம் முழுக்க இரத்தக் கவிச்சை அடிக்கும் பயங்கரவாதத்தை முன்னிறுத்தி, போதைப் பொருளைப் பயன்படுத்துவது ஆண்மைக்கு அழகு என்பதைப் போல சித்தரித்துக் கொண்டு இப்பொழுது தமிழர் வாழும் நிலமெல்லாம் படமெடுத்து ஆடும் இந்த விக்ரம் படத்தில், சிந்தனைக்கான அம்சம் சிறிதளவும் இல்லை;
தமிழ் நாட்டின் தொலைக்காட்சி ஊடகம், கோடம்பாக்கம், தின மலர், குமுதம், ஆனந்த விகடன், தமிழ் இந்து உள்ளிட்ட வெகுஜன ஊடகங்கள் கொண்டாடுவதாலேயே இது நல்ல படமாகிவிடாது. சேர்ந்து தமிழ் இளைஞர்களும் தொடர்ந்து உச்சரிக்கும் சொல்லாடல்களான வேற லெவல், சைக்கிள் கேப், டிப்சோ டிப்ஸ், ஃப்லெக்சியோ ஃப்லெக்சி என்பதெல்லாம் என்ன தமிழ் என்று புரியவில்லை.
இந்த நூற்றாண்டுக்குள் அடியற்றுப் போகும் மொழிகளில் தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது என்று ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ மன்றம் எச்சரித்தது உண்மைதான் போலும் என்று எண்ணத் தோன்றுகிறது.
திரைப்பட வாய்ப்பு மங்கிய நேரத்தில் கமலஹாசன் ஆரம்பித்தது மக்கள் நீதி மய்யம்!
அவரின் கட்சியின் பெயரில் உள்ள மையம் என்னும் சொல்லில் முதல் எழுத்தான மகர ஐகாரமான ‘மை’ என்பதற்குப் பதிலாக ‘ம’கர உயிர்மெய் எழுத்தையும் ‘ய்’ என்னும் மெய்யெழுத்தையும் பயன்படுத்தும்படி கமலஹாசனுக்கு சொல்லிக் கொடுத்த தமிழ் மேதை யாரென்று தெரியவில்லை.
வகைதொகையின்றி கொலைச் சம்பவங்கள், அதுவும் கழுத்தை அறுத்து கொலை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ள கழிசடைத் திரைப்படமான விக்ரம் என்ற சொல்லும் தமிழ் அல்ல!
பொதுவாக, கோடம்பாக்கத்துக் கூட்டம் தமிழ்க் கொலை புரிய ஆரம்பித்து நெடுங்காலம் ஆகிறது.
ஏபிசிடி, ஆம்பள, மாஸ்டர், மஞ்சப்பை. ஆர்.ஆர்.ஆர்., கூர்கா, கே.ஜி.எஃப்., ஜாக்பாட், ராட்சசி, சாகோ, ரம்மி, சிக்சர், பிகில் என்றெல்லாம் நூற்றுக் கணக்கான தமிழ்த் திரைப் படங்கள் வேற்று மொழி பெயர்களில் தயாரிக்கப்படுகின்றன.
இவற்றில் பிகில் என்பது பெருங்கேவலமான சொல். அது, எந்த மொழியிலும் இல்லாத சொல்.
இத்தகைய கேவலமான பிகில் என்னும் சொல், கமலஹாசன் போன்ற நடிகர்களின் பாடல் காட்சிகளிலும் இடம்பெற்ற நிலையில், அதையே ஒரு திரைப்படத்திற்கு பெயர் வைத்த கோடம்பாக்கத்து போக்கிரிக் கூட்டம், தமிழ் மொழிக்கு அப்பட்டமான கேடு விளைவித்து வருகிறது.
இவ்வாறாக, திரைப்படத்தின் பெயர், வசனம், பாடல் என அனைத்துக் கூறுகளிலும் தமிழைக் கொலைச் செய்ய துணிந்துவிட்ட கோடம்பாக்கத்துக் கூட்டத்தில், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத வேற்றுமொழிக் காரர்களுக்கு தமிழர்களும் துணை போவது இன்னும் வேதனையானது!
ஃபிளிம் காட்டியே பிளிம் காட்டியே ஃபீலிங் ஏத்தாதே என்று பாடல் எழுதிய பிண்ணாக்குக் கவிஞன், அதை மனமுருகிப் பாடிய தெருவோரப் பாடகன், இசை அமைத்த புறம்போக்கு இசை அமைப்பாளன், இப்பாடலுக்கு ஆட்டம் போட்ட மேனா மினிக்கிகள், இதற்கான காட்சிகளை எடுத்த இயக்குனன், படத் தயாரிப்பாளன் உட்பட அத்துணை பேரும் நாசமாய் போகட்டும்.
கோடம்பாக்கத்தில் மட்டும் நில நடுக்கம் ஏற்பட்டு, அந்த இடமே அடையாளம் தெரியாமல் அழிந்து போகட்டும்; இந்தத் தமிழ்க் கொலைக் கூட்டமும் ஒழியட்டும்.
இல்லாவிட்டால், இளைஞர்களை மயக்குவதற்காக போதைப் பொருளையும், துப்பாக்கியையும் வெடிகுண்டுகளையும் காட்டியபடி கழுத்தையும் கால் நரம்பையும் அறுத்து வரிசையாக கொலை செய்யும் ரத்தம் சொட்டும் காட்சிகளைக் கொண்டு ஆயிரம் விக்ரம்-களைத் தயாரிப்பது கோடம்பாக்கத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். தமிழக இளைஞர்களின் மனதில் நஞ்சை விதைக்கிறார்.
படத்தைப் பார்த்துவிட்டு வெளியேவரும் விட்டில் பூச்சி இளைஞர்க் கூட்டம், “செம்ம”, “படம் சூப்பர்”, “நல்லா செஞ்சிருக்காங்க”, “ரொம்போ இண்ட்ரஸ்டிங்கா இருக்கு” என்றெல்லாம் சொல்லும் வெகுளித்தனத்தைக் கண்டு உள்ளம் பதைக்கிறது! உண்மையில் இந்தப் படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியாது.
ஒரு நல்ல படத்திற்கான இலக்கணம் அது எத்தகைய நல்ல தாக்கங்களையும்,விளைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்தே உள்ளது.போதைப் பொருளை விஜய் சேதுபதி பயன்படுத்தும் ஸ்டைலைக் கண்டு இளைஞர் கூட்டம் திரையில் விசில் அடிக்கிறது! இந்த ஒரு காட்சி போதுமானது லட்சக்கணக்கான இளைஞர்களை போதைப் பொருள் உயோகிக்கத் தூண்டுவதற்கு! போதைப் பொருள் பயன்படுத்தலுக்கு எதிராக படம் எடுத்தோம் என்ற பொருளில் போதைப் பொருள் மீதும்,கட்டற்ற வன்முறை மீதும் ஒருவித சக்தி வாய்ந்த ஈர்ப்பை இந்தப் படம் விதைக்கிறது என்பதே உண்மை! கமலின் இந்த 2-ஆவது விக்ரம் படம் வெளிவந்த பின், எத்தனை பேர் குதிகால் நரம்பு அறுக்கப்பட்டு சாகப்போகிறார்களோ தெரியவில்லை.
Also read
பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் காட்சி ரீதியாக சுவாரசியமாக சொல்லப்படும் அதீத வன்முறைகள் பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை அல்லவா விதைக்கும்? போதைப் பொருள் பயன்பாட்டுச் சீரழிவு மற்றும் அதன் கெடு விளைவுகள் தொடர்பாக எவ்வளவோ சொல்வதற்கு உள்ளது! ஆனால், எந்த ஒரு சமூக பொறுப்புணர்வும் இல்லாமல் படம் எடுத்துள்ளனர். எல்லாவற்றுக்கும் நாளைய சமுதாயம் திர்ப்பு சொல்லும்.
விமர்சனம்; கோலாலம்பூர் நக்கீரன்
மிகச் சரியான விமர்சனம் இது மட்டுமே!!
மக்கள் பணிசெய்யப் புறப்பட்டுள்ள ஒரு கலைஞன் – 50 ஆண்டுகால சினிமா கலைஞன் இத்தகைய கேவலமான திரைப்படத்தை தன்னுடைய வியாபார சந்தைப் சினிமாவை மக்களுக்கு தருவது அழகல்ல.
மிக ஆக்கபூர்வமான எதார்த்தமான உண்மையான விமர்சனம்
இந்த விமர்சனம் அறம் இதழில் மட்டும் அல்ல அனைத்து ஊடகமும் வெளிபடுத்த வேண்டிய ஒன்று.
திரைபடம் என்பது லாப வெறிக்கா எதையும் செய்ய துனியும் கூட்டம் தான் இன்ரைய தமிழ் திரையுலகம்.
இதை இனம் கண்டு ஒதுக்க வேண்டிய அரும் பெரும் பொருப்பு வெகுஜன ஊடகத்திற்க்கும் பத்திரிக்கைகளுக்கும் மக்களுக்கும் உண்டு
meghavum arumi
நான் படம் பார்க்கவில்லை… விமர்சனத்தை படித்த பிறகு பார்க்க கூடாது என்ற முடிவிற்கு வந்துள்ளேன்…
கமல்ஹாசன், மணிரத்னம் போன்ற மேட்டுக்குடி மேதாவிகள் தான் மிகப்பெரிய மக்கள் ஊடகமான திரைப்படத்தில் கெட்ட வார்த்தைகளை அறிமுகப்படுத்தி இளைஞர்கள் மனதில் நஞ்சை விதைத்தவர்கள் என்ற கோபம் எனக்கு இருக்கிறது…
முதல் விகரம் மகா குப்பை…தற்போது வந்துள்ளது நாற்றம் எடுத்த குப்பை…
எச்சரித்தமைக்கு நன்றி…
உண்மையை சொன்னீர்கள்