பாஜகவிடம் மிக முக்கியமான சில குணாம்ச மாற்றங்களை இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பார்க்க முடிகிறது. அது தன் இயல்பேயான மேல் சாதி ஆதிக்கத்தில் இருந்து சற்றே அசைந்து கொடுத்துள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், பெயரளவுக்கேனும் அனைத்து தரப்பினருடனும் இசைந்து வாழ்வது இன்றியமையாதது என்ற புரிதலுக்கு வந்துள்ளது. பாஜகவின் அமைச்சரவை விரிவாக்கத்தின் நோக்கம் ஆட்சி மீது சமீபகாலமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை மட்டுப்படுத்தும் முயற்சி தான்! கொரானா கையாளுவதில் ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவுகள் அந்த துறையின் அமைச்சரான ஹர்ஷவர்த்தனை தூக்கினால் சரியாகிவிடப் போவதில்லை. ...
சென்னைக்குக் கூடுதல் குடிநீர் வழங்கிட, காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டுவர ரூ.5000 – ரூ6000 கோடியில் சிறப்புத் திட்டம் ஒன்று விரைவில் செயற்படுத்தப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். ஆனால், நீர்வள வல்லுநர் டாக்டர் எஸ்.ஜனகராஜன் ‘இது ஒரு தேவையற்ற வீண் செலவுத் திட்டம்” என்றும் ‘சென்னை மாநகரப் பகுதியில் ஆண்டுதோறும் பெய்யும் மழையினை (1350 மிமீ) முறையாகச் சேமித்து வைத்தாலே கூடுதலாகச் சுமார் 50 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும்; சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையினை இதைக் கொண்டே நிறைவு செய்யலாம்” ...
தமிழ்நாட்டை விட்டுவிடக் கூடாது இந்தியாவின் மிக முக்கிய மாநிலமான தமிழ் நாட்டிற்கும் அமைச்சரவைரையில் ஒரு பிரதிநிதித்துவம் வேண்டும் என்று பாஜக மேலிடம் முடிவெடுத்த போது, அவர்கள் தோழமை கட்சியான அதிமுகவிற்கு தான் அதை முதலில் கொடுக்கத் திட்டமிட்டனர். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று எந்த காரணத்தைக் கொண்டும் பாஜகவை மீறி அதிமுக செயல்படாது என்பது மட்டுமல்ல. பாஜகவின் மீதான அதிமுக விசுவாசத்தை நிலைபெறச் செய்யவும் இது உதவும். இரண்டாவது அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் – குறிப்பாக பன்னீர் மற்றும் எடப்பாடி பொறுப்பில் ...
எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்கள் கொடி கட்டிப் பறந்தன!அந்த வகையில், பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் நடந்த ஊழல்கள் ‘அடேங்கப்பா’ ரகம் ! கமிஷன் , கலெக்ஷன், கரப்ஷன் ஆகிய முழக்கங்களை எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக மக்கள் முன்பு முன்னிறுத்தி ஆட்சியைப் பிடித்தது திமுக !. இந்த சூழலில்தான், அதிமுக அரசில் முடக்கி வைக்கப்பட்டிருந்த சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கையை பேரவையின் தாக்கல் செய்தது திமுக அரசு.. அதில் பொதுத் துறை ...
உண்மைகளை நீண்ட காலம் உறங்க வைக்க முடியாது! அதிகார பலத்தால் பொய்களை நிலைத்திருக்கச் செய்யவும் முடியாது என்பது மீண்டும் ரபேல் விமான ஊழல்கள் பிரான்சில் தோண்டி எடுக்கபடுவதில் இருந்து உணரமுடிகிறது. ஜீலை 2 ல் பிரான்ஸ் அரசு ஒரு நீதி விசாரணையை தொடங்கியுள்ளது. மோடி அரசின் முகத் திரையை கிழிக்கும் இந்த ஊழல் விவகாரத்தை மீடியாக்கள் ஏன் பேச தயங்குகின்றன,,? சர்சைக்குள்ளான 5,85,000 கோடி ரூபாய் ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், பணப் பரிவர்த்தனை, சாதகமாக நடந்து கொள்ளுதல் போன்ற ...
நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையத்திற்கு இது வரை சம்பளமாக மட்டும் சுமார் 30 கோடி ரூபாய் செலவாகியுள்ளது! இது தவிர ஆணையத்திற்கான நிர்வாக செலவுகளுக்காக மேலும் சில கோடிகள் செலவாகியுள்ளது! ஏறத்தாழ ஒன்பது முறை ஆறுமுகச்சாமி ஆணையத்திற்கு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 25, 2017 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட இந்த கமிஷன் மூன்று மாதத்திற்குள் விசாரித்து உண்மைகளை வெளிக்கொணரும் என அன்றைய அதிமுக ஆட்சி கூறியது. ஆனால், எப்போது உண்மைகள் வெளியாகும் என்பது மட்டுமல்ல, உண்மை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா..? என்பதற்கான உத்திரவாதமும் கிடைத்தபாடில்லை! இந்தச் ...
ஜூலை 26ஆம் தேதியுடன் ஏழு மாதங்களை நிறைவு செய்கிறது, மூன்று வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராகவும், குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம் கோரியும்,டெல்லி நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம்! யாருக்கும் தெரியாமல் ஊரடங்கிய நேரத்தில் 2020 ஜூன் 6ஆம் தேதி, மூன்று அவசரச் சட்டங்களாகப் கொண்டுவரப்பட்டு,செப்டம்பர் 3வது வாரத்தில்,அனைத்து சனநாயக விதிகளையும், மரபுகளையும் காற்றில் பறக்கவிட்டு, நாடாளுமன்றத்தில் சட்டங்களாக இவை நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அவசர அவசரமாக கொண்டுவருவதால் பெரியளவிற்கு எதிர்ப்பு இருக்காது,அப்படியே இருந்தாலும் சமாளித்து விடலாம்’ என்ற மூடநம்பிக்கையில் ஒன்றிய அரசு,முன் யோசனையில்லாமல் ...
வாகனம் எங்களுடையது. அதன் மெயிண்டன்ஸும் எங்களுடையது, உழைப்பும் எங்களுடையது. ஆனால், பலன்களோ ( ஓலா, உபர்) அவர்களுடையது! பாதிப்போ எங்களுடையது. இதை எத்தனை நாளைக்கு வேடிக்கை பார்க்க போகின்றன மத்திய மாநில அரசுகள்? என்று கேட்கும் – விரக்தியின் விளிம்பில் இருக்கும் – வாகன ஓட்டிகள் பக்கம் அரசின் கவனம் திரும்புமா…? ஓலா உபர் நிறுவனங்களின் பகாசூரக் கொள்ளையை தெரிந்தும் தெரியாதது மாதிரி வேடிக்கை பார்க்கும் அரசின் அலட்சியத்தால் ஆயிரக்கணக்காக வாகன ஓட்டிகள் வீதி இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது தான் அண்ணா ...
அதி மோசமான கடந்த அதிமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தனர். பத்தாண்டுகளுக்கு பிறகு வந்துள்ள திமுக ஆட்சியாளர்கள் ஒரு பக்குவத்தை பெற்றிருப்பார்கள் என மக்கள் நம்பினார்கள்! ஒரு பக்கம் மக்கள் விரோத – மாநில உரிமைகளை பறிக்கும் பாஜக ஆட்சியை எதிர்க்க வேண்டிய சரித்திர கடமையையும் திமுக சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் எப்படி இந்த ஊழல்களுக்கு துணை போகிறது? முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு இது போனதா எனத் தெரியவில்லை. இந்த ஆட்சியில் சில நல்ல முன்னேற்றங்கள், பாசிட்வ்வான அணுகுமுறைகள் நிதித் துறை, ...
சுதந்திர இந்தியாவில் எங்குமே நடந்திராத ஒரு புதிராக புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி இரண்டு மாதங்களாக இன்னும் செயல்படமுடியாமல் – அமைச்சர்களுக்கு இலாகாக்கள் வழங்கப்படாமல் – திரிசங்கு சொர்க்கத்தில் உழல்கிறது. என்.ஆர்.காங்கிரஸுக்கும், பாஜகவிற்கும் இடையே நடக்கும் மெளன யுத்ததின் விளைவே அங்கு இந்த நிலைமை தோன்ற காரணமாகியுள்ளது. புதுச்சேரியை பொறுத்த அளவில் அங்கு தங்கள் ஆட்சியை ஸ்தாபிப்பதன் மூலம் தமிழ்நாட்டு அரசியலுக்கு அடித்தளம் போடலாம் என்பது பாஜகவின் நீண்ட நாள் ஆசை! ஆனால் தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்கமுடியாத அளவிலான வாக்கு வங்கி ...