சுதந்திர இந்தியாவில் எங்குமே நடந்திராத ஒரு புதிராக புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி இரண்டு மாதங்களாக இன்னும் செயல்படமுடியாமல் – அமைச்சர்களுக்கு இலாகாக்கள் வழங்கப்படாமல் – திரிசங்கு சொர்க்கத்தில் உழல்கிறது. என்.ஆர்.காங்கிரஸுக்கும், பாஜகவிற்கும் இடையே நடக்கும் மெளன யுத்ததின் விளைவே அங்கு இந்த நிலைமை தோன்ற காரணமாகியுள்ளது. புதுச்சேரியை பொறுத்த அளவில் அங்கு தங்கள் ஆட்சியை ஸ்தாபிப்பதன் மூலம் தமிழ்நாட்டு அரசியலுக்கு அடித்தளம் போடலாம் என்பது பாஜகவின் நீண்ட நாள் ஆசை! ஆனால் தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்கமுடியாத அளவிலான வாக்கு வங்கி ...
சினிமாவையும் விட்டு வைக்கவில்லை பாஜக அரசு! இனிமேல் அரசியல் பேசும் சினிமாக்களையோ.., விழிப்புணர்வு தரும் சினிமாக்களையோ கற்பனை கூட செய்யமுடியாது! அப்படி ஒரு Cinematograph Act ஐ பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. எத்தனை திரைப் படைப்பாளிகளுக்கு இதை எதிர்க்கும் திரானி உள்ளது என்பதை பார்ப்போம். ஏற்கனவே இருந்த Cinematograph Act 1952 வில் இருந்த சில அம்சங்களை மாற்றி தற்போது Cinematograph Act 2021ஐ மத்திய அரசு கொண்டுவரவுள்ளது! இதன்படி சென்ஸார் போர்டு சர்டிபிகேட் தந்துவிட்டாலும் கூட ஒரு படத்தை அரசு நினைத்தால் ...
பத்திரிகை பணியை மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டமாக வைத்துக் கொள்பவர்கள் மிகச் சிலரே! அவர்களில் முக்கியமானவர் பி.சாய்நாத்! எளிய மனிதர்களின் பாடுகளை சொல்வதற்கும், கிராமப்புற ஏழை எளிய விவசாயிகள் வாழ்க்கையை பதிவு செய்யவும், மூலை முடுக்கெல்லாம் பயணித்து எழுதியுள்ளார்! பரபரப்பு, மலினமான ரசனைகள்,அரசியல் சார்பு நிலை,லாப நோக்கம் ஆகிய அம்சங்களாக பத்திரிகைதுறை வீழ்ந்துபட்டுள்ள நிலையில் சாய்நாத் போன்ற முன்னோடிகளே இன்று நமக்கு நம்பிக்கை ஊட்டுகின்றனர். தற்போது ஜப்பான் நாட்டின் சர்வதேச விருதான ஃபுகுவோகா கிராண்ட் விருதுக்கு தேர்வாகி உள்ளார் பி.சாய்நாத்! தற்போது 64 ...
இதற்கே இப்படி அரண்டு போனால் எப்படி? என்ன நடந்துவிட்டது என்று பாஜகவினர் பதைபதைத்து நீதிமன்றம் சென்றனர்..? நீட் தேர்வால் பாதிப்பே கிடையாதாம்! பாதிப்பே இல்லை என்றால், ஏன் நீங்கள் பாய்ந்து தடை கேட்க வருகிறீர்கள்..? ஏழை எளிய மாணவர்களுக்கு இதில் என்ன பாதிப்பு? என்று ஆராய்ந்து உண்மை சொல்வதற்கு தானே நீதிபதி தலைமையில் குழு அமைத்துள்ளனர். பாதிப்பே இல்லை என்று நீங்கள் நீதிபதி குழுவை சந்தித்து விளக்கம் சொல்லுங்கள் அல்லது விரிவாக மனு கொடுங்கள். அதைத் தானே செய்ய வேண்டும்! கடந்த சில நாட்களாக ...
எங்கெங்கும் தடுப்பூசி பற்றாகுறை! பெருந்தொற்று காலத்திலும் தனியார் நிறுவனங்கள் வளம் பெற வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கை கொண்ட ஒன்றிய அரசு! சீரம், பாரத் பயோடெக் ஆகிய இரு தனியார் நிறுவனங்களைக் கொண்டு தடுப்பூசி தேவைகளை சமாளிக்க முடியவில்லை. அதே சமயம் பொதுத் துறை நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயாரிக்க அனுமதி மறுப்பு! அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் நிறுவன தடுப்பூசிகளுக்கு தாரள அனுமதி..! இந்திய தடுப்பூசி சந்தையில் என்ன நடக்கிறது..? கொரானா தடுப்பை கையாளும் விதத்தில் குளறுபடிகளின் உச்சத்தை தொட்டுவிட்டது இந்திய அரசு! தடுப்பூசி நிர்வாகத்திலோ ...
கடும் உழைப்பால் ஆயிரக்கணக்கில் அந்நியச் செலவாணியை ஈட்டித் தரும் இந்த எளிய மனிதர்கள் அரபு நாடுகளில் படும் அல்லல்கள் அசாதாரணமானது! வயிற்றுப்பாட்டுக்காக வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் பலதப்பட்ட சுவாரஷ்யமான அனுபவங்கள், அரபு நாட்டவர்களின் விசித்திரமான குணாம்சங்கள், பல நாடுகளில் இருந்து சென்று சம்பாதிப்பவர்கள் சந்திக்க நேரும் சவால்கள்..எனப் பல விஷயங்கள் இந்த நாவலில் மிக தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ‘கொட்டிக்கிடக்குது சௌதியிலே’ என்ற ஆடியோ கேசட் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. துபாய், சௌதி போன்ற நாடுகளில் பணிபுரிபவர்களின் வாழ்க்கையை அதில் படம் போல காட்டியிருப்பார்கள். ...
நிர்பந்திக்காதே! தடுப்பூசிக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்புகளும், போராட்டங்களும்! தடுப்பூசியின் விளைவாய் ஏற்பட்ட மரணங்கள், தடுப்பூசி நிர்பந்தத்திற்கு பின்னுள்ள மனித உரிமை மீறல்கள், தடுப்பூசிக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்புகள், தடுப்பூசிக்கு எதிரான உலகளாவிய போராட்டங்கள்..ஆகியவற்றை கவனப்படுத்தும் கட்டுரை! அனைவருக்கும் தடுப்பூசி என்பது பொது நோக்கில் நல்லதாக தெரிந்தாலும் அதற்குள் ஒரு ஆழமான வன்மம் இருக்கிறது ! தனி ஒரு மனிதனுக்கு நோய் வருகிறது அதை எந்த மருத்துவத்தைக் கொண்டும் சரிப்படுத்திக் கொள்ள நமக்கு உரிமை இருக்கிறது தானே! ஏன் நவீன மருத்துவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் சித்தா மற்றும் ...
தமிழகத்தில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நெல்கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பின்றி அழிவது வாடிக்கையாகவுள்ளது! காவிரிப் பாசன மாவட்டங்களிலும், வட மாவட்டங்களின் சில இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் எந்தவித காரணமும் இல்லாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகளோடு தயாராக காத்துக் கொண்டிருக்கும் நிலையில், நெல்கொள்முதல் நிறுத்தப்பட்டதை அடுத்து நெல் மூட்டைகள் மழையில் வீணாவதைக் கண்டு மனம் பதறுகிறது! இடப்பற்றாகுறை காரணமாகவே நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் தினசரி ...
சிஏஜி அறிக்கை என்பது ஒரு பானை சோறுக்கு ஒரு பருக்கை போல, உள்ளதைச் சொல்லும் உள்ளங்கை நெல்லிக் கனி போன்றது! அதாவது, தமிழ்நாடு அரசே கொடுத்துள்ள தகவல்கள், ஆவணங்கள் வழியாகத் தான் அவர்கள் ஆடிட் செய்து ஒரு அறிக்கை தருகிறார்கள்! அந்த வகையில் நடந்த முறைகேடுகளின் முழுப் பரிமாணத்தையும் தரமுடியாது! ஆயினும், அப்படி தரப்பட்ட சில துளிகளே இவ்வளவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்றால், நடந்துள்ள முறைகேடுகளின் அளவு மிகப் பிரம்மாண்டமாகும்! உதாரணத்திற்கு ஒரு பணி செய்ய இவ்வளவு தான் செலவாகும் தரலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்ட ...
இது லாகப் டெத் கூட இல்லை! நடு ரோட்டுச் சாவு அல்லது கொலை. சாத்தான்குளத்தில் ஒலித்த சாவு மணி ஏத்தாபூரில் ஏகத்திற்கும் தொடர்கிறது என்பது மட்டுமல்ல, இன்னும் அது தொடர்ந்து கொண்டே செல்வதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம்! இப்படி நிதானமின்றி நடந்தால் அதிகபட்சம் தற்காலிக பணி நீக்கம் தானே..பார்த்துக் கொள்ளலாம்! நான் போலீஸ், ஆகவே, நான் யாரையும் அடிக்க,உதைக்க உரிமையுள்ளவன். கொன்றாலும் நான் கொலைகாரனாக கருதப்பட்டு தண்டிக்கபடமாட்டேன் என்ற எண்ணம் காவலர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது போலும்! ஒவ்வொரு நாளும் ஏதேனும் சில இடங்களில் ...