தமிழக அரசியலில் இவருக்கு நிகராக வன்முறை வார்த்தைகளை பிரயோகித்த இன்னொருவரை சொல்ல முடியாது! வாயைத் திறந்தால் வந்து விழுவது ஆஸிடோ..என அஞ்சத்தக்க பேச்சுக்கள்! இந்துத்துவ இயக்கங்களின் செல்லப்பிள்ளை!  பால் வளத்துறையில் பகல் கொள்ளை நடத்தியவர்! கொலை வழக்கு,சொத்துக் குவிப்பு வழக்கு, வன்முறை தூண்டிய வழக்குகள் என அடுக்கடுக்காய் இருந்தாலும், ”மோடி என் டாடி’’ என்ற ஒற்றை வார்த்தையால், பாதுகாப்பாக வலம் வருபவர். இவரது விசித்திர அரசியல் வில்லங்கங்கள் வெகு சுவாரசியமானது…! வன்மத்தை விதக்கும் ராஜேந்திர பாலாஜி வெல்வாரா..? அனல் கக்கும் பேச்சுக்கள், ஆங்கார முகபாவம், ...

தாதாசாகேப் பால்கே விருது என்பது கலையுலகில் மிகப் பெரிய முன்னோடி சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் உயரிய விருதாகும்! இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கும்,மேம்பாட்டிற்கும் தன்நிகரில்லா பங்களிப்பு தந்ததாக கருதப்படுவோருக்கு தரப்படுவதாகும்! இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்பட்டு வரும் தாதா சாகேப் பால்கே, இந்தியா மண்ணில் சினிமா என்ற கலையை ஜெர்மன் சென்று கற்று வந்து தானே சுயமாக முயன்று அறிமுகப்படுத்தியவர்!  அவரது முதல் படம் ராஜா ஹரிச்சந்திரா தான் இந்திய சினிமாவின் முதல்படமாகும்.ஒலியும் இல்லாத ஊமைப்படம் தொடங்கி பேசும் படம் காலகட்டம் வரை அதாவது ...

பணிவின் சிகரமாக வெளிப்படுவார் பசுவைப் போல சாந்த சொரூபியாக காட்சி தருவார்! ஆனால், படு காரியவாதி! அவர் தான் ஒபிஎஸ்! பதவி ஒன்றே அவரது இலக்கு! பாஜக விசுவாசம் மட்டுமே அவரது குறிக்கோள்! இருபதாண்டுகளாக அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் மிகப் பெரிய பதவிகளை அனுபவித்த ஒபிஎஸ், இன்று சொந்த கட்சியிலும்,தொகுதியிலும் அந்நியப்பட்டு நிற்கிறார். இன்றைக்கு தமிழகம் சந்திக்கும் இழிவுகளுக்கும், ஆபத்துகளுக்கும் பிள்ளையார் சுழி போட்ட பெருமகனும் இவர் தான்! தேனீர் கடையோடு, பைனான்ஸ் பிசினஸையும் பார்த்துக் கொண்டு, எம்ஜிஆர் இளைஞர் அணியில் செயல்பட்டு வந்த ...

திட்டங்களை செயல்படுத்தும் போது கொள்ளை அடிப்பார்கள் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், கொள்ளை அடிப்பதற்காகவே திட்டங்களை தீட்டியவர் பழனிச்சாமி. எந்த ஒரு திட்டத்திலும் எளிய மக்களுக்கான வேலை வாய்ப்புகள் என்ற ஒரு நன்மையாவது இருக்கும். ஆனால்,அதையும் கூட இல்லாமலாக்கியவர் பழனிச்சாமி! கடந்த நான்காண்டுகள் பழனிச்சாமி அமைச்சரவையின் பகல் கொள்ளைகள் எப்படி நடந்தன என்பதை பார்ப்போம்! ஐந்து ஆண்டுகள் பொதுப்பணித்துறைக்கும், பத்தாண்டுகள் நெடுஞ்சாலைத்துறைக்கும் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, என்ன செய்திருக்கிறார்? இந்தத் துறைகளில் ஒரே ஒரு பெரிய திட்டத்தையாவது தமிழக மக்களுக்காக ஏற்படுத்தி இருக்கிறாரா? முடித்திருக்கக்கூட ...

ஒன்னுமே புரியல..அரவக்குறிச்சியில…! என்னமோ நடக்குது..மர்மமாய் இருக்குது..! பாஜகவின் எதிர்கால முதலமைச்சராக கருதப்படும் அண்ணாமலையை எப்படியாவது சட்டசபைக்குள் இடம் பெற வைக்க மத்திய பாஜக அரசு சாம,பேத,தான,தண்டங்களை பிரயோகித்து வருகிறது…! பிரதமரே அரவக்குறிச்சி மீது தனிப்பட்ட அக்கரை காட்டுகிறாராம்…! திமுகவை மிரட்டி, முடக்கி அரவக்குறிச்சியை அடித்து, தூக்கி எடுத்துவிட பாஜக அரசு முயற்சிப்பது உண்மையா…? என்பது பற்றி ஒரு விசாரணையில் இறங்கினோம். ‘’முதல்ல அவரு அதான் அண்ணாமலை ஓட்டுக் கேட்டு வந்தப்ப உண்மையிலேயே ஒரு காமெடிப் பீஸாத் தான் தெரிஞ்சார்..! அவரோட பேட்டிங்க, காணொலிங்க..எல்லாம் பாத்தபோது ...

‘புத்தர் ஒரு மதத் தலைவர் அல்ல; ஒரு அரசியல் சிந்தனையாளர்’ உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடி!. ஜனநாயகத்தின் வழிகாட்டி!  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் குறித்து தீவிரமாக பேசியது மட்டுமின்றி, பிராமணீயத்திற்கு எதிராக களமாடினார்! அதனால் இருட்டடிப்பு செய்யப்பட்டார்! பெண்கள் பற்றிய அவரது பார்வை நுட்பமானது….! புத்தரது கருத்துகளை அக்கால சமூக, பொருளாதார பின்னணியோடு ஆய்வு செய்ய வேண்டும் என்கிறது காஞ்ச அய்லய்யாவின் இந்த நூல். காஞ்ச அய்லய்யா  ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையில் பேராசிரியராக இருந்தவர்; செயற்பாட்டாளர். அம்பேத்கரை தனது  வழிகாட்டியாக கொண்டவர். அவருடைய ‘God ...

‘’சார், தினமலர்ல இருந்து பேசறோம்..இந்த..ஆ.ராசா..இப்படி ஆபாசமா பேசியிருக்காறே..அதப் பத்தி என்ன நினைக்கிறீங்க…?’’ ‘’என்ன பேசியிருக்கார்..தெரியலையே.. அதாங்க…,முதல்வர் இ.பி.எஸ்சோட அம்மாவைப் பற்றி ஆபாசமா பேசியிருக்கார்..அது பற்றி உங்க கருத்து வேணும்’’ ‘’நான் பார்க்கலையே எனக்கு ஒன்னும் தெரியாது…’’ ‘’அதான்ங்க..இன்னைக்கு எங்க தினமலரில் கூட போட்டு இருந்தோமே..உங்களுக்கு வேணா வாட்ஸ் அப்பிலே அனுப்புகிறோம்..படிச்சுட்டு சொல்றீங்களா…’’ ‘’நீங்க தினமலரா? இதுக்கு முன்னாடி எந்தெந்த விவகாரத்திற்கெல்லாம் எங்கிட்ட கருத்து கேட்டீங்க..எதுவுமே கேட்டதில்லை. இது என்ன புதுசா கேட்கிறீங்க..’’ ‘’அப்படி இல்லீங்க..அரசியல்ல கண்ணியமா பேசணுமில்லையா..ஆனா, அவரு கண்டபடி இ.பி.எஸ்சோட அம்மாவைப் பற்றித் ...

என்னாச்சு இந்த யோகா குருவிற்கு…? அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டக்களமாக ( மார்ச்-26) தமிழகத்தின் பிரபல கோவில்களை மாற்றிவிட்டார் ஜக்கி! ‘’அரசாங்கமே கோவிலில் இருந்து வெளியேறு’’ என்று ஜக்கியின் ஆட்கள் கோஷம் எழுப்பியும், பேசியும் பக்தர்களிடம் பிரச்சாரம் செய்தனர். இவர்களுக்கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது! ஆன்மீக, யோகா அமைப்பாக இருந்த ஈஷாவில் ஏற்பட்ட இந்த திடீர்மாற்றத்தின் பின்னணி என்ன? தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுமையும் லட்சக்கணக்கனக்கான மக்களுக்கு யோகா, மூச்சுப் பயிற்சி என்ற பிரணாயாமம் ஆகியவற்றை கொண்டு சேர்த்ததில் கடந்த கால் நூற்றாண்டாக பிரமிக்கதக்க ...

ஏற்கனவே மிகக் குறைந்த அதிகாரங்களோடு இயங்கியதே டெல்லி அரசு! அந்த குறைந்தபட்ச அதிகாரத்தையும் இல்லாமலாக்க ஒரு மசோதா! தொடர்ந்து, மத்திய அரசுக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டும், மாநில அரசு அதிகாரங்களை குறைத்தும் வருகிற பாஜக அரசின் மூர்க்கத்தனத்திற்கு இது சிறந்த உதாரணம். உண்மையில் இது ஆம் ஆத்மி மீது மட்டும் தொடுக்கப்பட்ட தாக்குதலல்ல! ஜனநாயகத்தின் மீதும், கூட்டாட்சி தத்துவத்தின் மீதும் நடக்கும் தொடர் தாக்குதல்! இதை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்…? பாஜகவின் அனைத்து தந்திரோபாயங்களையும் மீறி கவிழ்க்கவோ, மிரட்டவோ வாய்ப்பில்லாமல் ஒரு நேர்மையான ...

லஞ்சத்தை நம்பும்  அரசியல்வாதிகள், ஊழலுக்கு உதவும்  அதிகாரிகள் என்பதாக தமிழக அரசு நிர்வாகம் அதகளப்பட்டுள்ளது..அதிகாரமென்பதே பொதுப் பணத்தை சூறையாடக் கிடைத்த லைசென்ஸாக கருதும் மனநிலை சில அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் உள்ளது! அரசியல்வாதிகளுக்கு தோதாக சட்ட, திட்டங்களை வளைத்து சதி செய்து சம்பாதிக்கும் வழிமுறைகளை செய்வதற்கென்றே அதிகாரிகள் கூட்டம் காத்துக் கிடக்கிறது. நெடுஞ்சாலைத் துறையில் நூதனமாக நிகழ்த்தப்பட்டு வரும் ஊழல் சதிகளை விளக்கினால் நெஞ்சே வெடித்துவிடும்..! 2011 முதல் இன்று வரை எடப்பாடி பழனிச்சாமி தான் நெடுஞ்சாலைத்துறையை நிர்வகிக்கிறார்! ‘’மனுக்களைக்  காகிதங்களில் எழுதி வாங்கி, பெட்டிகளில் ...