ஒரு நண்பர் எங்களிடம் இப்படிக் கேட்டார். “உள்ளாட்சித் தேர்தலின் போதுதானே உள்ளாட்சிகளுக்கான கோரிக்கைகளை வைக்கவேண்டும்? இப்போது சட்டமன்றத் தேர்தலுக்கு ஏன் வரிந்து கட்டிக்கொண்டு வரிசையாக உள்ளாட்சிக்கான கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்?” என்று. தன்னாட்சி, அறப்போர், Institute of Grassroots Governance (IGG), மக்களின்குரல் (Voice of People) மற்றும் தோழன் போன்ற  இயக்கங்கள் வெளியிட்ட உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கையை,  அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு நேரில் சந்தித்தும், சமூகஊடகங்கள் மூலமாகவும் நாங்கள் தொடர்ந்து கொண்டு சேர்த்து வருவதனால் நண்பர் ...

அதிமுக அமைச்சரவையில் ஒருவருக்கொருவர் ஊழலில் சளைத்தவர்கள் இல்லை தான்! என்றாலும் அதில் வேலுமணிக்கு ஒரு தனித்துவமான இடம் உண்டு! அதிகாரம் என்பதை கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அடக்குமுறையாகவும் கையாளத் தெரிந்த ஒரு அராஜவாதி வேலுமணி. பணம்,அதிகாரம்,அடக்குமுறை ஆகிய முப்பெரும் ஆயுதங்களுடன் தன்னை எதிர்ப்பவர்களை எந்த எல்லைக்கும் சென்று தாக்கக் கூடியவர். இதற்கு பத்திரிகை துறையிலேயே பல உதாரணங்கள் உள்ளன. கமலஹாசனைக் கூட கப்சிப் ஆக்கிய அனுபவமும் அவருக்குண்டு…! தமிழ்நாட்டிற்கு யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் என்று சொல்லிக் கொள்ளட்டும். ஆனால், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்திற்கு வேலுமணி ...

இந்தியாவின் மாபெரும் நிகழ்வான ஹரித்துவார் கும்பமேளா ஏப்ரல் ஒன்று தொடங்கி முப்பது நாட்கள் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக தற்போதே உத்திரகாந்த் மாநிலத்தின் ஹரித்துவாரில் 32 லட்சம் பேர் வந்து குழுமியுள்ளனர். இந்த 30 நாட்கள் நிகழ்வில் 12 முதல் 15 கோடி வரைக்குமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 வருடங்களுக்கு மட்டுமே நடக்கும் கும்பமேளா என்பதால் மக்களின் எதிர்பார்ப்பும், ஆர்வமும் எல்லை மீறியதாகவே இருக்கும் என நம்பப்படுகிறது! இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது என ...

டாஸ்மாக் மதுவை எதிர்த்துப் போராடி மக்கள் சோர்வடைந்துவிட்டனர். அந்த எதிர்ப்பின் தீவிரம் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் சென்ற சட்டமன்ற தேர்தலின் போது ஏதேனும் வாக்குறுதி கொடுக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டன. டாஸ்மாக் மதுவில் ஆல்ஹாகால் 42% உள்ளது. அதில் பத்தில் ஒரு பங்கு தான் கள்ளில் உள்ளது. ஆகவே, டாஸ்மாக்கிற்கு மாற்றாக பனங் கள்ளை பயன்படுத்த அரசியல் கட்சிகள் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்ற இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கை எந்த அளவுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் பிரதிபலித்தது என்பதை ...

ஒரு பக்கம் மதுவாலும், மற்றொரு பக்கம் மின் துறையில் 1,73,000 கோடி நஷ்டத்தாலும் தமிழகமே தள்ளாட காரணமானவர் அமைச்சர் தங்கமணியே! இந்த வகையில் தங்கத் தமிழகத்தை தகரத் தமிழகமாக மாற்றியதில் தன்னகரில்லா சிறப்பிடம் தங்கமணிக்கு உண்டு! சாதாரண அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்த தங்கமணி இன்று ஒட்டு மொத்த நாமக்கல் மாவட்டத்தையும் விலைபேசி வாங்கும் அளவுக்கு செல்வச் செழிப்பில் மலைபோல விஸ்வரூபமெடுத்து கரன்சிகளைக் கொண்டு வெற்றியை கைப்பற்ற துடிக்கிறார்…! குமாரபாளையம் தொகுதி ஏழை,எளிய உழைப்பாளி மக்கள் நிறைந்த தொகுதி! ஒரிரு கைத்தறிகளையோ, விசைத்தறிகளையோ வைத்துக் ...

இந்திய- பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தின் அரசியல் நகர்வுகள், சுதந்திரம் கிடைத்த சூழல், அகதி முகாம், அதிகார மாற்றம், மௌண்ட் பேட்டன், காந்தி மரணம், இலட்சக்கணக்கான   மக்களின் இடப்பெயர்வு குறித்து மட்டுமின்றி மவுண்ட் பேட்டன் மனைவி எட்வினாவிற்கும், நேருக்குமான – வெளியில் சொல்லப்படாத – அந்தரங்க உறவுகள் எப்படி ஆச்சரியம் தரத்தக்க வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும்…! ‘The last Vicereine’ என்ற நூல், இந்தியா – பாகிஸ்தானின் எழுபதாவது  சுதந்திர ஆண்டு விழாவின்போது வெளிவந்த  ஆங்கில நூல். “கடைசி வைஸ்ராயின் மனைவி” என்ற ...

”சார், உண்மையா? திமுக தேர்தல் அறிக்கையில இப்படி சொல்லி இருக்காங்களா..? நீங்க திமுக தேர்தல் அறிக்கை பற்றி அவ்வளவு விலாவாரியாக எழுதினீங்களே..இதை எப்படி கவனிக்காமல் விட்டீங்க..’’ என்று பதறியவாறு  இரண்டு நாட்களாக எனக்கு வாட்ஸ் அப்பிலும், போனிலுமாக பலர் கேட்ட வண்ணம் உள்ளனர்! பகீரென்றது..இந்த விஷமத்திற்கான வித்து எங்கிருந்து… எப்படி விழுந்தது.. .? என்று பார்ப்போம்; ”இது ரொம்ப ஓவரா இருக்கே இப்படி சொல்ற கட்சி ஆட்சிக்கு வந்துட்டால் நாமெல்லாம் எப்படி கவரவத்துடன் வாழறது’’ என்று டீ கடையில் சூடு பறக்க விவாதம் செய்தவர் ...

விஜயபாஸ்கர் நிர்வகிப்பது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை! ஆனால், இவர் செய்ததெல்லாம் ஆரோக்கியத்திற்கு கேடான – வாய், நுரையீரல் புற்று நோய்க்கு காரணமாகும் -குட்கா சட்டவிரோத விற்பனை! சுற்றுச் சூழலுக்கே கேடு விளைவிக்கும், இயற்கையை அழிக்கும் குவாரிக் கொள்ளைகள்! மற்றபடி அவர் நிர்வகிக்கும் சுகாதாரத்துறையோ அவருக்கு காண்டிராக்ட் அண்ட் கரப்ஷன் தொடர்பானது என்பதற்கு மேல் வேறு இல்லை! அதீத பணபலத்துடனும், சாணக்கியத் தனத்துடனும் வலம்வரும் விஜயபாஸ்கர் வெற்றி பெறுவாரா..என்பதை அலசுகிறது இந்த கட்டுரை! தமிழக சுகாதாரத்துறை வரலாற்றில் இதற்கு முன் இவ்வளவு ஆபத்தான அமைச்சராக ...

ஒருவரின் யோக்கியதையை அவருடைய கூட்டாளிகளை வைத்து முடிவுக்கு வரலாம்! கமலிடமிருந்து அரவிந்த் கேஜ்ரிவாலும்,யோகேந்திர யாதவும், ’’வேண்டாம் ஐயா உம்ம சங்காத்தம்’’ என்று ஒதுங்கி போனதற்கான பின்ணணிகளை அலசுகிறது இந்தக் கட்டுரை! தன்னை நேர்மையாளராக தானே பிரகடனப்படுத்திக் கொண்டவர் கமலஹாசன்! வருமானத்திற்கு நேர்மையாக வரி கட்டுபவராகவும் சொல்கிறார்! நேர்மையான ஆட்சியை தன்னால் தான் தரமுடியும் என்கிறார்! ஒருவர் நேர்மையாளரா…? என்பதை பொதுவாக அவருடைய கூட்டாளிகளைக் கொண்டே ஒரு தெளிவுக்கு நாம் வரமுடியும். கட்சி தொடங்கும் போது அரவிந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, பினராய் ...

மக்கள் உயிரை காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் மீண்டும் கொரோனா பரவல், பொது முடக்கம், அதீத கட்டுபாடுகள் என்ற சமூக நெருக்கடியை உருவாக்கி, தேர்தலை நிறுத்தி, ஜனநாயகத்தையும் முடக்கி, அதன் வழியே ஒரு ஆதாய அரசியலை முன்னெடுக்கும் முயற்சிகளை ஆதிக்கவர்க்கம் திட்டமிடுகிறதோ என்ற அச்சம் வருகிறது..! நெருக்கடியான காலகட்டங்களில் மனித நேயம் மேலெழுந்து, மக்களை அரவணைக்க வேண்டும். ஆனால், மனித நேயத்தை மறக்கடித்தனர். நெருங்கிய உறவுகளையே அன்னியமாக எண்ண வைத்தனர். இஷ்டத்திற்கும் கட்டுப்பாடுகளை நிர்பந்தித்து, இயல்பு நிலையை குலைத்து கொரோனா அச்சங்களை பல மடங்கு பூதாகரப்படுத்தினர். ...