அரசின் வசம் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்கள், சொத்துக்களை கண்டறிந்து தனியாருக்கு தாரை வார்க்க பாஜக அரசு என்.எல்.எம்.சி என்ற புதிய அமைப்பை தோற்றுவித்து உள்ளது! இனி இந்தியா என்பது மக்களுக்கானதில்லை! சில தனி முதலாளிகளின் சொத்து என்பதே பாஜவின் செயல் திட்டமான என்.எல்.எம்.சி! ஆட்சியில் அமர்ந்தது முதல் பாஜக அரசு நம் முன்னோர்கள் பாடுபட்டு உருவாக்கிய அரசின் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை செய்து வருவது நம் எல்லோருக்கும் தெரியும். அது போல தற்போது அரசிடம் பயன்படுத்தப்படாமல் உள்ள உபரி ...

இலக்கிய வெளியில் சில எழுத்தாளர்கள், இப் பிரச்சினையை எளிதாகக் கடந்து போய் விடுகிறார்கள். சிலர் எதிர்ப்பது போன்று பாசாங்கு காட்டுகிறார்கள். இதனால் பாலியல் வன் கொடுமையில் ஈடுபட, ‘பிரபலமான எழுத்தாளர்’ என்ற பிம்பத்தை துணிவுடன்  பயன்படுத்தி வருகிறார்…! மூத்த எழுத்தாளர் கோணங்கி இளைஞர்கள் சிலரிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட விவகாரம் சமீபத்தில் வெளியாகியது. அந்த அப்பாவி இளைஞர்களின் அனுபவ வெளிப்பாடுகள், அவர்கள் சந்திக்க நேர்ந்த மன உளைச்சல்கள் படிப்போரை உலுக்கி எடுத்தன! எனினும், நிராதரவான அந்த இளைஞர்களுக்கு ஆதரவாக வெகு சிலரே குரல் ...

எத்தனை மேதமை! என்னே ஒரு புலமை! வியக்கதக்க பன்முகத் தன்மை…! என  பற்பல விதங்களில் நமக்கு பாரதியை அறியத் தருகிறது இந்த நூல்! பாரதி எழுத்துக்களை  படிப்பதிலும், ரசிப்பதிலும் நமக்கு ஒரு தேர்ந்த பயிற்சியை தருகின்றன இந்தக் கட்டுரைத் தொகுப்பு! படிக்கப் படிக்கத் திகட்டாத தேனாக ஆனந்தம் தருகின்றன யாவும்! பாரதி பக்தனாகவும், பாரதியை பேசுவதிலும், எழுதுவதிலும் பித்தனாகவும் உள்ள கடற்கரய் மத்த விலாச அங்கதம் ‘யாமறிந்த புலவன்’ என்ற பெயரில் பாரதியை பற்றிய நூற்றாண்டு கால விமர்சனக் கட்டுரைகளை தொகுத்துள்ளார். பாரதியைக் குறித்து ...

நெல்லா? நிலக்கரியா? எது வேண்டும் தமிழகத்திற்கு? நிலக்கரி இல்லாமல் வேறு பல வழிகளில் மின்சாரம் தயாரிக்க முடியும்! ஆனால், சோறு இல்லாமல் வாழ முடியுமா? கடலூர் மாவட்டத்தை கண்ணீர் பிரதேசமாக மாற்றியுள்ள என்.எல்.சி நிறுவனம், மூன்றாவது சுரங்க திட்டத்தின் மூலம் மக்கள் வாழ்க்கையை முடிக்கத் துடிக்கிறதா..? என்.எல்.சி. நிறுவனத்தின் 51 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்து, தனியார் மயமாக்க 2002 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்து அறிவிப்பையும் வெளியிட்டது. ஆனால், கடும் மக்கள் எதிர்ப்பும், அனைத்து ...

‘பர்னிங் த மிட் நைட் ஆயில்’ என்பது விடிய விடிய கண்விழித்து பணியாற்றுவதை குறிக்கும் ஒரு பிரபலமான குறியீடாகும்! பாஜக அரசு விடிய, விடிய கண் விழித்து செய்த சாதனைகள் என்னென்ன..? எனப் பட்டியலிட்டால் விதிர்விதித்துப் போகிறது! இருக்கின்ற இந்தியாவை இல்லாதொழிக்க, வகுக்கின்ற திட்டங்களின் வரிசையை பார்ப்போமா..? என்ன காரியத்திற்காக இத்தனை மெனக்கிடுதல் என்பது அவரவர் இலக்கை பொறுத்து ஒருவர் அறிய முடியும் . கள்வன் முதல்  தலைவன் வரை தங்களது திட்டங்களை இப்படியாக கண் துஞ்சாது கருமத்தை முடிப்பதற்கு திட்டமிடுவார்கள். பாஜகவினர் கூட ...

தமிழகத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் வெட்டப்பட்ட வண்ணம் உள்ளன.  பனைமரத்தை மக்கள் பயன்படுத்தவே தடை செய்கிறது காவல்துறை! பனைமரம் ஏறுவதற்கு கூட லைசென்ஸாம்! அதை காவல்துறை ஏற்காதாம்! டாஸ்மாக்கிற்கு விசுவாசம் காட்ட பனைமரத்தை பலிகடாவாக்குகிறார்கள்! சமூக செயற்பாட்டாளர்கவிதா காந்தி ஆவேசம்..! சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திருமதி. கவிதா காந்தி. பனை மரங்களின் நன்மைகள் குறித்தும், அவை தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதை தடுக்கவும் பனை விதைகளை விதைத்து  அவை வளர்க்கப்படவும்  செயல்பட்டு வருகிறார். சமூக செயற்பாடாளரான கவிதா காந்தி நம்முடைய” அறம்” இணையதள ...

ஆருத்ரா கோல்டு, ஐ.எப்.எஸ்..போன்ற மோசடி நிறுவன வரிசையில் ஹிஜாவு  அசோசியேட்டும் இணைந்துள்ளது. இந்த மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள்  சுமார் 40 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆட்சியாளர்களுக்கும், காவல்துறைக்கும் தெரியாமலா இவ்வளவு மோசடிகள் அரங்கேறுகின்றன..? காலம்தோறும் இது போன்ற மோசடி நிறுவனங்கள் முளைத்து வந்து வந்து நம்ப முடியாத அளவு வட்டிப் பணம் தருவதாக விளம்பரபப்டுத்தி வசூல் வேட்டை நடத்துவதும்,பின்னர் வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது. ஒவ்வொரு முறையும் ஏமாற்றும் நிறுவனத்தின் பெயர் மாறுகிறது. ஏமாற்றும் முறை மாறுகிறது! ...

அடுத்தடுத்து என 44 மனித உயிர்கள் பலியாகியுள்ளன! பல லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன! தமிழக சட்டசபை ஒருமித்து நிறைவேற்றிய ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி. ”இது அரசமைப்புச் சட்டப்படி சரியான செயல் தானா..?” என அலசுகிறார் ஹரிபரந்தாமன். பத்திரிகைகளில் காணும் தகவல்களின்படி, ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு கூறும் மையமான காரணம், ‘இந்த மசோதா சட்டமானால், இது ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை நடத்தும் முதலாளிகளின் தொழில் செய்யும் அடிப்படை உரிமையை ...

அரைவேக்காட்டு அண்ணாமலையால் பாஜகவின் உள் கட்டமைப்பே தமிழகத்தில் ஆட்டம்  கண்டுள்ளது. அதன் அடையாளமாகவே அந்தக் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பலர் விலகிக் கொண்டுள்ளனர். தன் வரம்பு மீறிய பேச்சுக்களால், அரசியலை வன்முறைக் களமாக்கும் அண்ணாமலையால் அதிமுக விலகும் வாய்ப்பு கனிந்துள்ளதா..? ஒருவரையடுத்து ஒருவராக அடுத்தடுத்து பாஜகவில் இருந்து பலரும் விலகுவது உணர்ந்து தன்னை சற்றேனும் சுய பரிசீலனைக்கு உள்ளாக்கிக் கொள்ள விரும்பாத அண்ணாமலை, தோழமைக் கட்சியான அதிமுகவின் மீது பாய்ந்து குதறி வருவதோடு, தன்னுடைய அடிப் பொடிகளை வைத்தும் அதிமுகவிற்கு எதிராக வசைமாறிப் பொழிந்து ...

தனியார் பேருந்துகளை 1972-ல் அரசுடமையாக்கினார் கருணாநிதி! இன்று அவர் மகன் ஸ்டாலினோ அரசு போக்குவரத்தை படிப்படியாக தனியார் மயமாக்கி வருகிறார்! பொதுத் துறையானதால் மக்கள் அடைந்த நன்மைகள் என்ன?  நஷ்டங்கள் என்ன..? தனியார் மயத்தால் நஷ்டங்கள் குறையுமா? தீர்வு கிடைக்குமா? கருணாநிதி போக்குவரத்து துறையை பொதுத் துறையாக்கிய ஆண்டு 1972. பொன் விழா ஆண்டான 2022 ஆம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபையில் அரசு போக்குவரத்தை தனியார்மயப்படுத்தும் கொள்கை முடிவை ஸ்டாலின் அரசு அறிவித்தது. இது மத்திய பாஜக அரசின் பொதுத் துறை ...