இந்தோனேசியக் கலாச்சார, சமூக, அரசியல் பின்னணியோடு கூடிய ஒரு காதல் கதையே ‘சிகரெட் கேர்ள்’. வித்தியாசமான கதை. புதிரான மனிதர்கள்! நமக்குத் தெரியாத உலகத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள்! அதுவும், அசாத்திய ஆளுமை நிறைந்த, கூர்மையான அறிவுள்ள பெண் கதாபாத்திரம் அசத்துகிறது! Gadis Kretek என்ற பெயரில் வெளி வந்த  புகழ்பெற்ற நாவலை வைத்து எடுக்கப்பட்ட, இந்த ஐந்து மணி நேரத் தொடரை ரசித்துப் பார்க்கலாம். கதை இந்தோனேசியாவின் தலைநகரான ஜாகர்தாவில் தொடங்குகிறது. மரணப்படுக்கையில் இருக்கும் தொழிலதிபர், ‘ஜாங் யா’ என்ற பெயரை முணுமுணுக்குகிறார். அதைக் ...

இஸ்ரேலின் கொடூர துப்பாக்கி குண்டுகள் பாலஸ்தீனத்தின் குழந்தைகளை, பெண்களை பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்த வண்ணம் உள்ளது! மருத்துவமனைகள் கல்லறைகளாகி வருகின்றன! உலகின் மனசாட்சி உறங்கிவிட்டதா..? என உருக்கமாகவும், உரக்கவும் அருந்ததிராய் கேட்கும் கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தன! ஜெர்மனியிலுள்ள முனிச் நகரில் நடைபெற்றுவரும் இலக்கிய விழாவில் நவம்பர் 16 அன்று புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழ் வடிவம். காசாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று யூதர்களும், இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும், இந்துக்களும், கம்யூனிஸ்டுகளும், கடவுள் மறுப்பாளர்களும், கடவுளை உணரமுடியாது என்கிறவர்களும் பல்லாயிரக்கணக்கில் குரல்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் போன்றவர்களுடைய குரலை அவர்களின் குரல்களோடு சேர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜெர்மனி உள்ளிட்ட எந்த ...

தனிமனித உரிமைகளை பாதுகாத்து, சுதந்திரமாக வாழும் உரிமையை உத்திரவாதப்படுத்துவது தான் ஒரு அரசின் தார்மீக கடமையாகும்! ஆனால், பாஜக அரசோ, தனி நபர் சார்ந்த தகவல்கள் மீது  அத்துமீறி சட்ட விரோதமாக கைவைக்கும் பாசிசத்தை எப்படி நடைமுறையில் கொண்டுள்ளது என்பதை விவாதிக்கிறது இந்தக் கட்டுரை; இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்திருக்கும் தனிமனித உரிமைகளை அவர்களது ரகசியங்களை ஆட்சியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பறித்துக் கொண்டு வரும் நிலை மிகவும் ஆபத்தான ஒன்றாக முடியக்கூடும்!  இப்போது நடைமுறையில் ஒருவரை பொருளாதார ரீதியாக முடக்கிவிட அந்த நபரின் ...

அதிசயக் கலையான அவதானம் தமிழர்களின் தொன்மைக் கலையாகும்! இது மிகக் கடும் பயிற்சிகளால் மட்டுமே சாத்தியமாகும்! ஒரே நேரத்தில் எட்டு முதல் 16 வகையான செயல்களை பிசிறின்றி மிகுந்த நினைவாற்றலுடன், மனப் பயிற்சியுடன் செய்து பெருவியப்பை தோற்றுவிக்கும் இந்தக் கலையின் இன்றைய நிலை என்ன? எல்லா மனிதர்களுக்கும் ஒரு தலை, ஒரு கைகளே உள்ளன! நம்மைப் போலவே உள்ள அவதானிகள் ஒரே நேரத்தில் பத்து தலைகளோ, இருபது கைகளோ இருக்கின்ற அதிசயப் பிறவி போல பல அவதாரங்கள் எடுத்து செயல்படும் கலையே அவதானக் கலையாகும்! ...

உண்ணாவிரதம், தர்ணா, ஒரு மணி நேர ஆர்ப்பாட்டம், பேரணி, கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்கும் அமைதியான எதிர்ப்பு, கண்டனக் கூட்டம்.. என எல்லாவற்றுக்கும் தடை என்றால்..எப்படி? ஜனநாயகத்தில் போராடுவதற்கான உரிமை தொடர்ந்து மறுக்கப்படுமானால், அது உச்சகட்ட கொந்தளிப்பை உருவாக்காதா..? “நீ சொல்வதோடு நான் உடன்படாமல் போகலாம். ஆனால் அதைச் சொல்லும் உரிமை உனக்கு உண்டு” என்பது பிரெஞ்சு சிந்தனையாளரான வால்டேரின் புகழ்பெற்ற வசனமாகும். நமது அரசியல் சாசனம்,  பேச்சுரிமையையும், போராட்ட உரிமையையும் நமக்கு அளித்துள்ளது. அதனை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசின் ...

சுதந்திரப் போராளி! எட்டாண்டு சிறை வாழ்க்கை, மூன்றாண்டு தலைமறைவு வாழ்க்கை, எண்ணற்ற போராட்ட வடுக்கள்.. என வாழ்ந்த சங்கரய்யா, காந்தியத்தின் அரிய பண்புகளை இயல்பாக கொண்டிருந்தார்! பணம், பதவி, அதிகாரம் போன்றவற்றில் இருந்து விலகி, எளிமையாக வாழ்ந்த அவரது வியக்க வைக்கும் குணங்களை பற்றிய ஒரு பார்வை! ‘தி மேன் ஆப் பிரின்சிபள்’ என்பார்களே, அதற்கு வாழும் இலக்கணமாகத் திகழ்ந்தவர் சங்கரய்யா! தலைமைக்கான ஆளுமைப் பண்பு அவரிடம் சுடர்விட்டு பிரகாசித்தது! பதவிகளை பொருட்படுத்தாது ஏற்றுக் கொண்ட கடமைகளில் முழுமூச்சாக இயங்கியதால் அவரைத் தேடி வந்த ...

ஒரு சிகப்பு சிங்கத்தின் கர்ஜனை  ஓய்ந்தது! சிறை, தலை மறைவு வாழ்க்கை, துப்பாக்கிச் சூடுகள், தடியடிகள், போராட்டக் களங்கள், சட்டமன்ற பணிகள் என எண்ணற்ற அனுபவங்கள்! தோழர் சங்கரய்யாவின் வரலாறு, தமிழக  வரலாற்றிலிருந்தும், பொதுவுடமை இயக்க வரலாற்றில் இருந்தும் பிரிக்க முடியாதது. ஆளுகிறவர்கள் யார் என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார். மக்களை யார் வஞ்சிக்கிறார்களோ, அவர்களுக்கு எதிராக சமரசமற்ற முறையில் போராடக் கூடியவர். தனது ஒன்பதாவது வயதில் பகத்சிங் தூக்குத் தண்டனை விதித்ததை எதிர்த்து தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஆரம்பித்த அரசியல் ...

எங்கெங்கும் ஜேசிபியின் சீற்றம்! வேறெந்த ஆட்சியிலும் காணாத வகையில் குடியிருப்புகள் அகற்றம் என்பது  தமிழகத்தில் நாளும், பொழுதுமாக இந்த ஆட்சியில் அரங்கேறி வருகின்றன! அதே சமயம் செல்வாக்கானவர்களின் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு தந்தால் கூட, அரசு அசைந்து கொடுப்பதில்லை; விபரமாவது; செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூரின் டோபிகானா தெரு , எம்.ஜி.ஆர் நகர், காயிதே மில்லத் தெரு, சாந்திநகர், தாய்மூகாம்பிகை நகர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது திமுக ...

தேர்தல் களத்தில் மிதமிஞ்சிய பணப் புழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டதே  தேர்தல் பத்திரங்கள் பெறும் திட்டம்! கார்ப்பரேட்களை களவாட அனுமதித்து, அதற்கு பிரதிபலனாக  பெரும் நிதி பெற்றுக் கொள்வதை, சட்டபூர்வமாக்க செய்யப்பட்ட சதியே ‘தேர்தல் பத்திரங்கள்’ என்பதை விவரிக்கிறது இந்தக் கட்டுரை; ‘தேர்தல் நடைமுறையில் பணத்தின் பங்கை கணிசமாக குறைப்பதன் மூலமாகவே ஜனநாயகம் உண்மையில் மலர முடியும்.  அப்படி தேர்தலின் போது புழங்கும் பணம் எங்கிருந்து வந்தது? யார் மூலம் வந்தது? எவ்வளவு வந்தது? என்பதை கமுக்கமாக மறைக்கக் கூடாது’ என்று சமூக ...

ரயில்கள் உற்பத்தியில் உலகப் புகழ்பெற்ற சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்பை முடக்கி, வெளிநாட்டு நிறுவனத்தை உள்ளே நுழைக்கத் திட்டமிடுகிறது பாஜக அரசு! இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மிகச் சிறப்பாக இயங்கும் அரசு நிறுவனத்தை அயலார்க்கு தாரை வார்க்க முன்னோட்டமா? பெரம்பூர் ரயில்வே தொழிற்சாலையின் இரயில் பெட்டிகள் சென்னையில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. நவீன வந்தே பாரத் பெட்டிகளை உருவாகிய இந்த பாரம்பரிய அரசு நிறுவனத்திற்குள் வெளிநாட்டு நிறுவனத்தை நுழைப்பதால் உருவாகும் பொருளாதார இழப்புகளை அலசுகிறது இந்தக் ...