“இப்பல்லாம் எங்க சார் சாதி பாக்குறாங்க” இந்தக் குரலை நீங்கள் கேட்காமல் இருந்திருக்க முடியாது. உயர்தொழில்நுட்பம் படித்து, கனவு நாடான அமெரிக்காவுக்குச் சென்று, அதுவும் முன்னேறிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இந்தியர்கள் சாதிப் பாகுபாடுகளை கடைப்பிடிக்கிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? “இப்பல்லாம் எங்க சார் சாதி பாக்குறாங்க” என இதனை எளிதாக கடந்துவிட முடியாது. அமெரிக்க நாட்டில் உள்ள மாகாணங்களில் ஒன்று கலிபோர்னியா, இந்த மாகாணத்தின் வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதித்துறை, சிஸ்கோ என்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்துக்கு ...
வரலாற்றைக் கொண்டு சந்தோஷப்பட்டுக் கொள்வதும், துக்கபட்டுக் கொள்வதும் அவரவர் மன நிலை சார்ந்த விஷயம்! அதனால், நடந்த வரலாறு ஒரு போதும் மாற்றமடைய போவதில்லை! எந்த ஒரு நிகழ்வையும் ஆக்கம் சார்ந்து புரிந்து மேலெழவும் வாய்ப்புண்டு! ஆக்ரோஷம் கொண்டு புரிந்து அமிழ்ந்தழிந்து போகவும் வாய்ப்புள்ளது! இதில் இரண்டாவது வாய்ப்பை வலிந்து தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் தான் பாஜகவினர்! அவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தும் ஆனந்தம் பெறமுடியாதவர்களாக உள்ளனர். காரணம், அவர்கள் மனதில் எந்த நேரமும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்மம் அவர்களை அமைதி கொள்ளவிடுவதில்லை! இதில் உத்திரபிரதேச பிரதேச முதல்வர் ஆதித்திய நாத் ...
’’உள்ளாட்சிகளை ஊனமாக்கிவிட்டு,அதிகாரம் பறிக்கப்பட்ட அமைப்பாக நடத்திக் கொண்டு எந்த ஒரு அரசாங்கத்தாலும் மக்களுக்கு நல்லாட்சி என்பதை ஒரு போதும் தரமுடியாது’’ என்கிறார் தன்னாட்சி இயக்கத்தின் பொதுச் செயலாளரான நந்தகுமார்.தமிழக கிராமங்களில் உள்ளாட்சிக்கான கடமைகள்,உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது தன்னாட்சி அமைப்பு! ‘’அரசர் காலத்து பிரஜை(subject) என்ற நிலமையிலிருந்து குடிமக்கள் (citizen) என்ற நிலைக்கு இப்போது வளர்ந்துள்ளளோம். இதனால் அனைவருக்கும் சம உரிமை கிடைக்கிறது” என்பார் வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பர். எனவே அரசைக் கேள்வி கேட்பது ஜனநாயகத்தில் அடிப்படையான ஒன்று. அங்கன்வாடி, ரேஷன்கடை, ...
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் மார்ச் வரை பறவைகளின் மாதம் என்று சொல்லலாம். அந்த ஆறு மாதம் தமிழகத்தில் இருக்கும் அனைத்து பறவைகள் சரணாலயங்களும் மிகச் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கிவிடும். செப்டம்பர் மாதம் முதல் வெளிநாடுகளிலிருந்து பறவைகள் இந்தியாவிற்கு வந்து கொண்டு இருக்கும். இமயமலையிலிருந்து தமிழகத்திற்கு வலசை வரும் சாம்பல் வாலாட்டி பறவை, வால்பாறைக்கு தற்பொழுது வந்து உள்ளது. அதன் வருகையை ஒட்டி அங்கு உள்ள இளம் பறவையாளர்கள் சாம்பல் வாலாட்டி பறவையை வரவேற்று சுவரொட்டி அடித்து ஒட்டி உள்ளனர். குளிர்காலத்தில், தமிழ்நாடு பறவைகளின் நாடு என்று சொல்லும் அளவு நம்மைச் சுற்றி ...
இந்த காலகட்டத்தில் இந்தியா யாரால் ஆட்சி செய்யப்பட்டது என்று வருங்கால சரித்திர பாடபுத்தகத்தில் ஒரு கேள்வி எழுப்பபட்டால்,அதற்கு பதிலாக ’’குற்றவாளிகளால்!’’ என்ற பதிலைத் தான் வருங்கால மாணவன் எழுத முடியும்! அந்த அளவுக்கு இந்தியாவில் தொடர்ந்து குற்றவழக்கு பின்னணி உள்ளவர்களே எம்.பி, எம்.எல்.ஏக்களாக ஜெயித்து ஆட்சிக்கு வரமுடிகிறது? இது எதனால்? ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற்று வரும் எம்.பி,எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கிறது! இந்தியா முழுமையும் முன்னாள், இந்நாள் எம்.பி,மற்றும் எம்.எல்.ஏக்கள் 4,442 பேர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளதென்றால் இதற்கு யார் யாரெல்லாம் பொறுப்பேற்க ...
இன்றைய நிலவரப்படி இந்தியாவில் சுமார் 75,000 பேருக்கு ஒரு நீதிபதி என்பது தான் நிலைமை! ஆகையால் மலை போல ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் வழக்குகள் தேங்கியுள்ளன! குறிப்பாக நமது கிராப்புற மக்களின் சுமார் மூன்று கோடி 14 லட்சம் வழக்குகள் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் தேங்கியுள்ளன….! நிலத் தகராறுகள் தொடங்கி கணவன்,மனைவி பிரச்சினை, உறவுகளுக்குள்ளான மோதல்,வாய்ச் சண்டைஉள்ளிட்ட சின்னச்சின்ன பிரச்சினைகளுக்கு கூட தலைமுறைகளைக் கடந்து கிராமத்து எளியமனிதர்கள் மாவட்ட தலைநகரங்களுக்கு அலையோ,அலையென்று அலைந்து கஷ்டப்படுகிறார்கள்! இதற்கு முடிவுகட்டவும்,கிராம மக்களுக்குஅவர்கள் வாழும் இடங்களிலேயே நீதி எளிய ...
ஜெயலலிதா மறைவையடுத்து தமிழக ஆட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைக்கும் பாஜக திட்டத்தின் ஒரு அம்சமாகத் தான் சசிகலா ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார். ஆட்சி காலம் முடியும் தருவாயில் வரவுள்ள தேர்தலில் திமுகவின் வெற்றியைத் தடுப்பதற்கும்,அதிமுகவின் வாக்கு வங்கி சிதறாமல் ஒன்றுபடுவதற்குமான சசிகலா தேவை என பாஜக கருதுவதாகத் தெரிவதால்….சட்டம், நீதி என எதையும்…பொருட்படுத்தாமல் எல்லாவற்றையும் அது எப்படி தொடர்ந்து மீறிவருகிறது என அலசுகிறது இந்தக் கட்டுரை! # ஜெயலலிதாவின் தோழியாக அறியப்பட்ட சசிகலா,ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை கைதாகவில்லை!கட்சி தலைவியாக முடிசூட்டிக் கொண்டு, ...
இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஊதியத்தில் கொரானா பொருளாதார நெருக்கடியில் நாடும், மக்களும் இருப்பதை உத்தேசித்து தங்கள் ஊதியத்தை 30% குறைத்துக் கொள்ளும் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது! இன்றைய சட்டமன்றத்தில் நடந்தது என்ன? பாராளுமன்றத்தில் நடந்தது என்ன? மற்ற மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளம் எவ்வளவு..? ஆகியவை குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை! தமிழக சட்டசபைக் கூட்டம் இன்றைய தினம் கலைவாணர் அரங்கத்தில் விஷேச ஏற்பாடுகளுடன் சிறப்பான வகையில் கூடியது! ஆனால், இன்று கூடிய தமிழகச் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்களின் ஊதியக்குறைப்பு தொடர்பான எந்த முன்னெடுப்போ,விவாதமோ கூட எழவில்லை! ...
உ.சகாயம் ஐ.ஏ.எஸை வழிகாட்டியாகக் கொண்டும், நாகல்சாமி. ஐ.ஏ.எஸ்சை (ஓய்வு) தலைவராகக் கொண்டும் செயல்படும் மக்கள் பாதை பேரியக்கம் செப்டம்பர் 14 தொடங்கி முதல் நீட்டுக்கு எதிராக தொடர் உண்ணாவிரப் போராட்டத்தை சென்னை சின்மயா நகரிலுள்ள அதன் தலைமை அலுவலகத்தில் முன்னெடுத்துள்ளது. சுமார் 40 பேருடன் தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பல்வேறு மாவாட்டங்களில் இருந்து நிர்வாகிகள் வந்து சமூக இடைவெளியுடன் அமர்ந்து கலந்து கொண்டனர்! முன்னதாக நீட் தேர்வுக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்த மாணவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சியில் நீட்டுக்கு எதிரான ...
இப்படியும் ஒரு மனிதன் இருக்கமுடியுமா? என்று வியக்க வைக்கிறார் உடுமலை செந்தில்! கோவை உடுமலையை பூர்வீகமாகக் கொண்ட செந்திலுக்கு சிறுவயது முதலே நாட்டியத்தை தவிர வேறொன்றும் தெரியாது! அதிலும் கோயில்களில் ஆடுவதென்றால் அலாதி ஆர்வம்! உடுமலை பாகவதர்,முத்துசாமி பிள்ளை,கணபதி ஸ்தபதி அகியோரிடம் நாட்டிய சாஸ்த்திர மரபுகளை நன்கு கற்று உள்வாங்கிய செந்தில் அந்த நாட்டியக் கலையை, மரபின் தொடர்ச்சியான மக்கள் கலையாக வளர்த்தெடுப்பதில், நடைமுறைப் படுத்துவதில் பேரார்வம் கொண்டவராக உள்ளார்! கடந்த முப்பதாண்டுகளாக நாட்டியமே மூச்சு என்று வாழும் செந்தில், நமது மரபில் கோவில்களில் ...