தமிழகமும்,இந்தியாவும் இதற்கு முன்பில்லாத நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் நிலையில் திமுக என்ற எதிர்கட்சி ஆக்கபூர்வமாக செயல்பட்டு களம் காண வேண்டும் என்று தமிழக மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால்,அந்த கட்சி இதை உணர்ந்ததா என்று தெரியவில்லை! இன்றைக்கு நடக்கும் பொதுக் குழு கூட்டத்தில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக 82 வயது துரைமுருகனும்,பொருளாராக 80 வயதை தொடவுள்ள டி.ஆர் பாலுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. அந்தக் கட்சி முதியோர்களின் கூடாரமாகவே தொடர வேண்டுமா? என்பது தான் கட்சியில் இருப்பவர்கள் மற்றும் கட்சி அபிமானிகள் ...

ஒரு கட்சிக்குள் இரு தலைவர்கள்! இருவருமே ஒருவரை ஒருவர் காலி பண்ணத் துடிக்கிறார்கள்! இருவருக்குமே கட்சி மீதும் அக்கரையில்லை! ஆட்சி நிர்வாகத்திலும் அக்கரையில்லை! இருவருமே பாஜகவின் பதந்தாங்கிகள்! இருவருமே தலைவனுக்குள்ள எந்தப் பண்பு நலனும்,தலைமை குணமும் அறவே இல்லாதவர்கள் இருவருக்குமே சுய அடையாளம் கிடையாது! இருவருமே பொதுச் சொத்தை சூறையாடுவதில் மன்னர்கள்! இருவருமே சுயநலத்தின் உச்சம்! இருவருமே சசிகலா வந்தால் சரணாகதி அடையக் காத்திருப்பவர்கள்! ஆட்சி அதிகாரம் மட்டுமே இருவரையும் இணைத்துள்ளது! அத்துடன் பாஜகவின் நிர்பந்தத்தால் மட்டுமே இவர்கள் இணைப்பு இறுக்கி பிடித்து காப்பாற்றப்பட்டு ...

’’இவர் குற்றமற்றவர், புகாருக்கே முகாந்திரமில்லை.’’ என  விசாரணை செய்யாமலே உடனே தூய்மை சான்றிதழ் அளித்து விடுவிக்கப்பட்டுள்ளார் மத்தியப் பிரதேச நீதிபதி ஒருவர்! மாவட்ட நீதிபதி ஒருவரால் தான் பாலியல் பாதிப்புக்கு ஆளானதாக நீதித்துறை சார்ந்த பெண்ணின் வழக்கை விசாரித்த மத்தியப் பிரதேச நீதிமன்றம்  அந்த நீதிபதி மீது ஒழுங்கு விசாராணை நடத்த உத்தரவிட்டது. அந்த நீதிபதியோ, ’’என்னை விசாராணை செய்யக் கூடாது இது என் பதவி உயர்வை பாதிக்கிறது’’ என உச்ச நீதிமன்றத்தில் முறையிடுகிறார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ...

இப்படிப்பட்ட கோணத்தில் ஒரு கட்டுரை எழுதுவதற்கு உள்ளபடியே எனக்கு விருப்பம் இல்லை! ஆனால்,இப்படியான விமர்சனங்கள் பரவலாக எழுந்து வந்த பிறகு அமைதியாக இருப்பது சரியாகாது தெளிவுபடுத்த வேண்டும் என்றே எழுதுகிறேன். ஒரு பொதுத்தளத்தில் சமூகநீதி, சமத்துவத்திற்கான கட்சி என்று அடையாளப்பட்டிருக்கும் ஒரு கட்சியின் பதவி,பொறுப்புகளில் உள்ளவர்களை சாதியக் கண்ணோட்டத்தில் அணுகுவதும்,மதிப்பிடுவதும் கேடான விளைவுகளைத் தரும் என்று நான் அஞ்சுகிறேன். சமீபத்திய திமுக உள்கட்சி தலைமை பதவிகளான பொதுச் செயலாளார்,பொருளாளர் பதவிகளில் ஒன்றை அக்கட்சியின் ஆகச் சிறந்த ஆளுமையாக கருத்தப்படும் ஆ.ராசாவிற்கு வழங்கப்படாதற்கு அவர் தலித் ...

அறம் என்றால் என்ன? என்ற வினாவிற்கு மிகச் சிறப்பாக அர்த்தம் சொன்ன பண்டை நூல் திருக்குறள்தான். வள்ளுவத்தை அடிப்படையாகக்கொண்டு எழுந்து நிற்கும் தமிழ்ச்சமூகத்தில் மனிதநேய சக்திகளுக்கு பஞ்சம் இருக்குமா? இயற்கை சீற்றங்களால் தமிழகம் பாதிக்கப்படும் போதெல்லாம் பல்லாயிரக்கணக்கான உதவும் கரங்கள் இம்மண்ணில் தோன்றி  சமூகப்பணி ஆற்றியதை அனைவரும் அறிவோம். குறிப்பாக 2015 ஆம் ஆண்டு சென்னை மாநகரம் பெரு வெள்ளத்தில் தத்தளித்த போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் களமிறங்கி ,ஆற்றிய பணிகளை உலகமே பார்த்து வியந்தது . ஓர் ஊருக்கு, மாநிலத்திற்கு அல்லது நாட்டுக்கு பிரச்சினை ...

சென்னைக்கருகில் உள்ள புகழ்பெற்ற திருப்போரூர் கந்தசுவாமி கோயில் சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகள் நடக்கின்றன! அதை தடுத்து காப்பாற்றும் முயற்சிகளும் வேகம் கொண்டுள்ளன! கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் உள்ள மெத்தனங்கள்,தனிப்பட்ட சிலரின் பேராசைகள் இவற்றுக்கிடையே அதை காப்பாற்றுவதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டதும்,அதையும் மீறி சில தவறுகள் நடப்பதையும் பாரபட்சமின்றி பேசுகிறது இந்தக் கட்டுரை! மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பிறகு இந்துக்கோவில்களும், அவற்றின் சொத்துக்களும் ஒரு குறிப்பிட்ட வம்சத்தாராலும், பிரிவினராலும் பராமரிக்கப்பட்டு வந்தது. இச்சமயத்தில் கோவில் நகைகள் திருட்டுத்தனமாக வெளியில் விற்கப்பட்டன. அதேபோன்று நிலங்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து ...

கண்டே பிடிக்கமுடியாத கைலாசா என்ற தனி நாடு, அதற்கான கரன்சி, தங்க நாணயம், ரிசர்வ் வங்கி, அந்த நாட்டுக்கான சட்டதிட்டங்கள், கொள்கைகள் ,இது உலகில் உள்ள அனைத்து இந்துக்களுக்குமான தேசம்….இங்கே முக்கிய பதவிகளுக்கான வேலை வாய்ப்புகள்…போன்ற அறிவிப்புகள்… என்று அதிரடியாக கலக்கிக் கொண்டிருக்கும் நித்தியானந்தாவின் உண்மை நிலை என்ன என்பதை இந்தக் கட்டுரை அம்பலப்படுத்துகிறது. உலகமே கொரோனா பிரச்சினையில் துவண்டு கொண்டிருக்க, குழந்தைகள் கடத்தல்,பாலியல் புகார்,கொலைவழக்கு ஆகியவற்றில் தேடப்படும் குற்றவாளியாக அறியப்பட்டவரான நித்தியானந்தாவால் எப்படி இவ்வாறு பிரம்மாண்டமான அறிவிப்புகளை வெளியிட முடிகிறது என்பது இருக்கட்டும் ...

’’அப்பாடா ஒழிந்தது…’’ என்று பெற்றோர்களை பெரு மூச்சுவிட செய்ததும் ’’ஐயோ பறிபோகிறதே…’’ என இளைய சமுதாயத்தை கதறவைத்திருப்பதும்…வேறு,வேறு அல்ல! ஒன்றே! அது தான் பப்ஜி போன்ற ’டென்சண்ட் கேம்ஸ்’! தடை செய்த செய்தி!ஆனால் அப்படி பெற்றோர்கள் நிம்மதி பெருமூச்சு விடமுடியாது என்ற வகையில் இந்திய நிறுவனமான பெங்களூரைச் சேர்ந்த என்கோர் கேம்ஸ் FAU-G என்ற பெயரில் ஒரு மொபைல் விளையாட்டைக் கொண்டு வர உள்ளதாம்! அழிவிற்கான விளையாட்டு விளையாட்டு என்றால் உடலும்,உள்ளமும் ஒருங்கே இசைந்து மகிழ்வது, நண்பர்களோடு தோழமை கொண்டு வளர்வது என்று நாம் ...

ஒரு பக்கம் பசித்த வயிறுகள்! மற்றொரு பக்கம் பாழாகும் நெல்மூட்டைகள்….! இது தான் தமிழக விவசாயிகள் வருடாவருடம் சந்திக்கும் அவலங்களாகும்! கொரோனா காலக் கொடுமையில் அனைத்து தொழில்களும் முடங்கி கிடக்கின்றன! வியாபார நிறுவனங்கள் விரக்தியில் உழல்கின்றன! ஆயினும், இந்த நேரத்தில் அனைவரையும் மகிழ்விக்கும் செய்தியாக விவசாய விளைச்சல் மட்டும் வீழ்ந்திடாமல் தாக்குபிடித்துவிட்டது. இயற்கையின் துணையை நம்பி விவசாயிகள் போட்ட உழைப்பு வீண் போகவில்லை! ஆனால், தயாரான நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்யாததாலும், தகுந்த முறையில் பாதுகாக்காததாலும், பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள், பல நூறு ...

உலகிலேயே ஒரு விஷயத்திற்கு நாம் உண்மையிலேயே அத்தாரிட்டி என்று சொல்லமுடியும் என்றால் அது நம் உணவுப் பண்பாட்டிற்குத் தான்! ஏனெனில், உணவு என்பது படிப்பறிவு சம்பந்தப்பட்டதல்ல,அது,பட்டறிவு மற்றும் பாரம்பரியம் சம்பந்தப்பட்டது. இன்னும் சொல்ல வேண்டுமானால் அது நுண்ணுணர்வு எனும் மெய்ஞானம் சம்பந்தப்பட்டது! உணவே மருந்தாக அனுசரிக்கக் கூடிய அளவுக்கு பல ஆயிரம் வகை அரிசி ரகங்கள்,சிறுதானியங்கள்,பயிறு வகைகள்,காய்கறிகள்,பழங்கள்,மூலிகைச் செடிகள்…ஆகியவற்றில் என்னென்ன பலன்கள், நோய் தீர்க்கும் அமசங்கள் உள்ளன என்பதை எந்தவித சோதனைக் கருவிகளும் இல்லாமல் அவர்கள் அறிந்து’அனுபவத்திலும் கைகொண்டிருந்தனர்! இன்று ஒரே ஒரு உணவுப் ...