சுதந்திரப் போராளி! எட்டாண்டு சிறை வாழ்க்கை, மூன்றாண்டு தலைமறைவு வாழ்க்கை, எண்ணற்ற போராட்ட வடுக்கள்.. என வாழ்ந்த சங்கரய்யா, காந்தியத்தின் அரிய பண்புகளை இயல்பாக கொண்டிருந்தார்! பணம், பதவி, அதிகாரம் போன்றவற்றில் இருந்து விலகி, எளிமையாக வாழ்ந்த அவரது வியக்க வைக்கும் குணங்களை பற்றிய ஒரு பார்வை! ‘தி மேன் ஆப் பிரின்சிபள்’ என்பார்களே, அதற்கு வாழும் இலக்கணமாகத் திகழ்ந்தவர் சங்கரய்யா! தலைமைக்கான ஆளுமைப் பண்பு அவரிடம் சுடர்விட்டு பிரகாசித்தது! பதவிகளை பொருட்படுத்தாது ஏற்றுக் கொண்ட கடமைகளில் முழுமூச்சாக இயங்கியதால் அவரைத் தேடி வந்த ...
ஒரு சிகப்பு சிங்கத்தின் கர்ஜனை ஓய்ந்தது! சிறை, தலை மறைவு வாழ்க்கை, துப்பாக்கிச் சூடுகள், தடியடிகள், போராட்டக் களங்கள், சட்டமன்ற பணிகள் என எண்ணற்ற அனுபவங்கள்! தோழர் சங்கரய்யாவின் வரலாறு, தமிழக வரலாற்றிலிருந்தும், பொதுவுடமை இயக்க வரலாற்றில் இருந்தும் பிரிக்க முடியாதது. ஆளுகிறவர்கள் யார் என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார். மக்களை யார் வஞ்சிக்கிறார்களோ, அவர்களுக்கு எதிராக சமரசமற்ற முறையில் போராடக் கூடியவர். தனது ஒன்பதாவது வயதில் பகத்சிங் தூக்குத் தண்டனை விதித்ததை எதிர்த்து தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஆரம்பித்த அரசியல் ...
60 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வெட்டு, செப்பேடு, ஓலைப் பட்டயம், ஓலைச்சுவடி, இலக்கியம் வழியாக தமிழ் தொல்குடிகளின் வரலாற்றை நூற்றுக்கு மேற்ப்பட்ட நூல்களின் வழியாக அகில உலகிற்கு அள்ளித் தந்த கல்வெட்டறிஞர் புலவர் செ.ராசு மறைந்தாலும், நாம் உத்வேகத்தோடு பயணிக்கதக்க பாதைகளை காட்டிச் சென்றுள்ளார். மன்னர்கள் வரலாற்றை ஆய்வு செய்து வந்தோர் மத்தியிலே, மக்கள் வரலாற்றை ஆய்வு செய்து ஆவணப்படுத்தியவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. இலக்கியங்கள் வழியாக மட்டுமே வரலாற்றை அறிவதைக் கடந்து, வாழ்விட ஆராய்ச்சி வழியாக கண்டறிய முற்பட்டவர். தளாராத மொழிப் பற்றும், ...
இப்படியொரு மக்கள் தலைவர் நம் காலத்தில் வாழ்ந்துள்ளாரா..? என வியக்க வைக்கின்றன கேரள தலைவர் உம்மண்சாண்டி குறித்த செய்திகள்! எளிமைக்கு இலக்கணமாக வாழ்ந்த இவரைப் பற்றி கேரளாவின் முக்கியஸ்தர்கள், பினராய் விஜயன், ஏ.கே.அந்தோணி, நடிகர்கள் மும்முட்டி, மோகன்லால்..உள்ளிட்டோரின் நினைவுப் பகிர்வு என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் எனச் சொல்லியதோடு அல்லாமல் எப்போதும் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் உம்மண்சாண்டி! இடதுசாரிகள் கோலோச்சிய புதுப்பள்ளித் தொகுதியில் பிரபல இடதுசாரி தலைவரான ஈ.எம்.ஜார்ஜை எதிர்த்து 27 வயது இளைஞரான உம்மண் சாண்டி வெற்றிபெற்றது ஒரு அதிசயமென்றால், அதற்குப் ...
லிங்கன் பாசாங்குத்தனமற்றவர். சதாகாலமும் பொதுத் தளத்தில் இயங்கியவர். மீனவ சமுதாய முன்னேற்றம், சிங்கார வேலர் சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவர். மீனவ சமுதாயத்தின் கடந்த கால மற்றும் நிகழ்கால வரலாற்றை ஆவணப்படுத்தியவர். அவர் எழுதிய மீனவர்களும், அரசியல் பிரதி நிதித்துவமும் நூல் முக்கியத்துவம் வாய்ந்தது.. வழக்கறிஞரான லிங்கன் பாஸ்டின், கடந்த மாதம் ( ஜீன் -9) அன்று மாரடைப்பால் இறந்தார். குமரி மாவட்டத்தைச் சார்ந்த இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் பிரிவில் இருந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு, மாவட்ட ...
சரத்பாபு மிக அழகானவர். நன்றாக நடித்தார். எனினும், பெரிய ஹீரோவாகவில்லை. அவருமே அதற்கு விரும்பவில்லை. கடைசி வரை ஒரு கேரக்டர் ஆர்டிஸ்டாகவே, கதாபாத்திரத்திற்கு தன்னை பொருத்திக் கொண்டார்! ஜெயலலிதாவுக்கு ஹீரோவாக சரத்பாபு நடித்த அனுபவங்களை படத்தை இயக்கிய லெனின் கூறுகிறார். இதனால் தான் தமிழின் மிகச் சிறந்த இயக்குனர்கள் சரத்பாபுவை தங்கள் படங்களில் தொடர்ந்து பயன்படுத்தினர். பாலச்சந்தரின் பட்டிணப் பிரவேசம், நிழல் நிஜமாகிறது ஆகியவற்றில் அவரது கதாபாத்திரம் குறிப்பிடத்தக்கது. நிழல் நிஜமாகிறது படத்தில் கிட்டத்தட்ட வில்லன் பாத்திரம் என்று கூட சொல்லலாம்! மகேந்திரனின் பல ...
குடும்பத்தை முக்கியமாகக் கருதாமல் நாட்டையும், மக்களையுமே பெரிதெனக் கருதி இயங்கிய ஒரு தலைவனுக்கு முழு ஒத்துழைப்பும் தந்து, ஒன்றாக களத்திலும், சிறையிலும் தொடர்ந்தவர் அன்னை கஸ்தூரிபாய்! காந்திக்கும், கஸ்தூரிபாய்க்குமாக ஆத்மார்த்தமான பிணைப்பை இந்த நேர்காணலில் விளக்குகிறார் முனைவர் ம.பிரேமா! ஒரு மனைவி என்ற முறையில் கஸ்தூரிக்கும், காந்திக்கும் எப்படிப்பட்ட உறவு இருந்தது ? திருமணம் முதல் கஸ்தூரிபாய் இறக்கும் வகையில் அவர்கள் இருவரும் இணக்கமாகவே வாழ்ந்தனர். இருவருக்கும் ஒரே வயது;13 வயதில் திருமணம் நடந்தது. மணவறையில் இருவரும் ஒருவரையொருவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கை ...
50 வருடங்களாக கேட்டு உருகியும், மயங்கியும், நெகிழ்ந்தும், அழுதும், தவித்தும் நம்மை பலவித மனநிலைகளுக்கு கொண்டு சென்ற கான தேவதையின் குரல் தொடர்ந்து அனைவர் மனதிலும் மேலெழுந்து வருகிறது. வாணி ஜெயராமின் நவரசம் சொட்டும் தேனிசை கீதங்களை மீளவும் நினைவு கூர்ந்தால்.. சில ரகசியங்கள் சொல்கிறது! வாணி ஜெயராம் இந்திய இசை உலகில் பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர், யார் மனதையும் காயப்படுத்தாமல் பேசும் பண்பாளர் எனப் பெயரெடுத்தவர். 50 ஆண்டுகளைக் கடந்த போதிலும் அவரது குரலில் மாற்றமோ, நடுக்கமோ, பிசிரோ சிறிதும் இல்லை! இறை ...
இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களின் அரசியல் எழுச்சிக்கு வித்திட்டவரும், கிங் மேக்கர் என்றும், இரும்பு மனிதர் என்றும் போற்றப்பட்டவர் சரத்யாதவ்! மண்டல் கமிஷன் அறிக்கை அமலாவதற்கு மட்டுமின்றி, பல முதல்வர்கள் உருவாக்கத்திற்கும் காரணமான சரத்யாதவின் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது! 1947ம் ஆண்டு ஜுலை 1ம் தேதி மத்தியப் பிரதேசம் பாபாய் கிராமத்தில், விவசாய குடும்பத்தில் பிறந்தவர் சரத் யாதவ். பொறியியல் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர். 1974ல் நெருக்கடி நிலை காலத்தில் மாணவர் அணித் தலைவராக போராட்டத்தை வழிநடத்திய வகையில் மிசாவில் கைது செய்யப்பட்டார். ...
மலையாளத் திரையில் மகத்தான மக்கள் படைப்பாளியாக, கேலிச் சித்திர ஓவியராக , சமூக செயற்பாட்டாளராக சுமார் 40 ஆண்டுகள் இயங்கியவர் கே பி சசி, அண்மையில் மறைந்தார். வணிகமயமான திரையுகில் அவர் வாழ்வியல் அறங்களை துணிந்து பேசியதோடு, சமகால சமூக, அரசியலை நேர்மையாக பதிவு செய்தார்! உண்மையான கலைஞனான அவரது கேலிச் சித்திரங்கள், திரைப்படங்கள் போன்றவை மக்களுக்கான அரசியலையே பேசின! அவரது ‘இலையும்,முள்ளும்’ படம் பெண்களுக்கு இழைக்கப்படும் உளவியல் ரீதியான வன்முறைகளைப் பேசின! ஹிந்து ராஷ்ட்டிரம் என்கிற மதவெறித் தேசியம், இந்திய சமூகத்தின் ஒட்டுமொத்தக் ...