எளிய கிராமச் சிறு தொழில்கள் செய்வோரை வளர்த்தெடுக்கும் திட்டமா? அழிந்து கொண்டிருக்கும் பாரம்பரியத் திறமைகளுக்கு வாய்ப்பு தரும் நோக்கமா? எளிய தொழில் கலைஞர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்த்தை உருவாக்கும் முயற்சியா? அல்லது சாதியக் கட்டமைப்பை சிந்தாமல், சிதறாமல் காப்பாற்றும் முயற்சியா..? விஸ்வகர்மா திட்டத்திற்கு பாஜக அரசு கொடுக்கும் விளக்கம் என்ன? பாரம்பரிய கைவினைத் திறனில் திறமையான தனி நபர்களை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு முன்னோடி திட்டமே இது. கைவினைஞர் விஸ்வகர்மாவின் பெயராலான இந்தத் திட்டம் , பல்வேறு கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்குள் திறன்களைக் ...

சாமியார் கொலை வெறியோடு கொந்தளிக்கிறார்! வட இந்திய அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள், தலைவர்கள்  எதிர்க்கிறார்கள்! வரலாற்றின் பக்கங்களில் சனாதனம் செய்த சதிகளின் பட்டியல் சொல்வது என்ன? திராவிட வெறுப்பையும், ஒழிப்பையும் தூண்டி வேடிக்கை பார்த்தவர்களின்  சூழ்ச்சி பலிக்குமா..? என்ன புதிதாகப் பேசிவிட்டார் உதயநிதி! சனாதனம் என்பது ஒழிக்கப்பட வேண்டியது என்பதை நாம் தமிழ்நாட்டில் கடந்த நூற்றாண்டுகளாக பேசி வருகிறோம். ஆன்மீகப் பெரியோர்களான வள்ளலார், நாராயணகுரு தொடங்கி சமூக புரட்சியாளர்களான அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கார் வரை சனாதனம் குறித்து தெரிவித்த கருத்தை தான் உதயநிதி ஸ்டாலின் ...

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்கிற நோக்கத்தை நோக்கி, பாஜக அரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் பின்னணி என்ன? நோக்கங்கள் என்ன? விளைவுகள் என்ன? எதை சாதிக்க துடிக்கின்றனர்..? முன்னாள் ரப்பர் ஸ்டாம்பான ராம்நாத் கோவிந்த் தலைமையிலான இந்தக் குழுவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரசில் இருந்து வெளியேறிய குலாம்நபி ஆசாத், பாஜக கட்சியின் என்.கே.சிங், பாஜகவின் செல்லப் பிள்ளையும், ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக இருந்த போது ...

உலகப் புகழ் பெற்ற “தி கார்டியன்” பத்திரிக்கையும், ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ ம் பிரதமர் மோடியின் நண்பர் அதானி குழுமத்தின் மோசடிகளை  சர்வதேசத்திற்கும் அம்பலப்படுத்தி உள்ளன! மோடி பிரதமரான பிறகு 28,14,200 கோடிகள் அதானி சம்பாதித்து உள்ளாராம். அமெரிக்காவின் OCCRP அதிரடி அறிக்கை! பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலிருந்து திரும்பிய கையோடு “சந்திராயன்-3” வெற்றியை ஏதோ தனது வெற்றியாக காட்டிக் கொள்ள தலைகீழாக நின்றார் நமது “விஷ்வ குரு” மோடி. பக்தர்களின் பஜனையில் மயங்கி இருந்த மோடிக்கு ” கோடையிடியாக” நேற்று ஒரு செய்தி வந்தது. சர்வதேச ...

ஒட்டுமொத்த தமிழக மக்கள் காறித் துப்பி, கழுவி ஊற்றி விட்ட பிறகு, ஆறு பதிப்புகளை கைவசம் வைத்துள்ள ராமசுப்பு ஐயர் கோஷ்டி ஈரோடு-சேலம் பதிப்பில் வெளியானது வெட்கி தலைகுனியக் கூடிய செய்தி எனக் கதறி, பகையாளியான பங்காளியை காட்டிக் கொடுத்துள்ளது. ஆனால், இந்த தினமலர் கக்கிய விஷங்கள் இதைவிட அதிகம். இதோ பட்டியல்; ராமசுப்பு ஐயர் என்ன சுத்த சுயம்பிரகாச வள்ளலாரா? இவர்கள் வசம் உள்ள சென்னை, மதுரை, கோவை, புதிவை, நெல்லை, நாகர்கோவில் பதிப்புகள் நாளும், பொழுதும் கொட்டித் தீர்க்கும் விஷம் என்ன ...

பெருமை தான் – சந்திராயன் 3 விண்வெளிக்கு அனுப்பியது. ஆனால், அதன் நோக்கம் நிலவின் இயற்கை வளங்களை சுரண்டுவதாம். அதற்காக இஸ்ரோவின் உற்பத்தி பிரிவையே தனியார் மயப்படுத்தும் ஏற்பாடுகள் ஜரூராக நடக்கிறது! பூமியின் வளங்களை சுரண்டுவது போல, நிலவின் வளத்தை அபகரிப்பது பேரழிவைத் தராதா..? நிலவில் முதன் முதலாக தடம் பதித்த நாடு ரஷ்யா தான்! அதன் பிறகு அமெரிக்கா, சீனா போன்றவை அடுத்தடுத்து சென்றன! ஆனால், 1970 களுக்கு பிறகு 2000 ஆண்டு வரையிலும் நிலவு தொடர்பான ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்த ...

பல்லாயிரம் இளைஞர்களை அரசு பணிக்கு எடுக்கும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சீர்குலைந்து செயலிழந்து போய்க் கொண்டுள்ளது. தலைவர் இல்லை. 13ல் 11 உறுப்பினர்கள் இல்லை. இந்தச் சூழலில், கடந்த இரண்டாண்டுகளாக காவல்துறையில் ஆர்.எஸ்.எஸுன் ஆணைகளை செயல்படுத்திய சைலேந்திரபாபுவை தேர்ந்தெடுத்த பின்னணி என்ன? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission– TNPSC) என்பது தமிழ் நாட்டரசின் உயர்மட்டம் தொடங்கி அடித்தளம் வரையிலான பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் அமைப்பாகும். ஏறத்தாழ 34 துறைகளுக்கு ஊழியர்களை தேர்வு நடத்தி அரசுக்கு தரும் அமைப்பாகும். அந்த வகையில் ...

ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறுவதை யொட்டி பொய்யான பிம்பங்களை கட்டமைக்கிறார்கள் பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸும்! இந்தியா குறித்த உண்மையான தோற்றத்தை உலகிற்கு தரவும், ஜி20 மாநாட்டில் ஆரோக்கியமான தீர்வுகள் முன்னெடுக்கப்படவும் நடந்த  we-20  மாநாட்டுக்கு ஏகக் கெடுபிடி! ”இயற்கையை அழித்து கொள்ளை லாபம் ஈட்டுவோரிடம் இருந்து மக்களையும், நாட்டையும் காப்போம்” என்ற முழக்கத்தோடு டெல்லியில் திரண்ட இந்தியாவின் முற்போக்கு சிந்தனையாளர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் உள் அரங்கில் வைத்து கைது செய்து அராஜகம் நிகழ்த்தி உள்ளது பாஜக அரசு! 1999-ம் வருடத்தில் கிழக்கு ...

மதுரை சித்திரை திருவிழாவிற்கு கூடாத கூட்டமா? மீனாட்சி திருக் கல்யாணத்திற்கு நடக்காத விருந்தா..? லட்சம் பேருக்கு விருந்து படைபார்களே! அதிமுக மாநாட்டில்  இவ்வளவு உணவுக் குவியல் வீணானது ஏன்? விலை மதிப்பில்லா மனித உயிர்கள் மரணித்தது ஏன்..? நடந்தது என்ன..? மாநாடு மிகப் பிரம்மாண்டம் தான்! மக்கள் திரள் பெரு வெள்ளம் தான்! விமானத்தில் இருந்து 600 கிலோ மலர் தூவல்! 65,000 வாகனங்கள்! 10,000 சமையல்காரர்கள்! செல்வத்தை குவித்து வைத்துள்ளவர்களின் கட்சி என்பது செய்யப்பட்ட செலவுகளிலேயே தெரிகிறது! எல்லாவற்றிலும் பிரம்மாண்டத்தைக் காட்டினார்கள்! மதுரை ...

வியக்கத்தக்க அளவில் வெகு பிரம்மாண்டமாக மதுரையில் அதிமுக மாநாடு நடந்துள்ளது. மிகப் பெரும் மக்கள் செல்வாக்கு அதிமுகவிற்கு உள்ளது என்பது நிருபணமாகியுள்ளது! ஆனால்.. மதுரை அதிமுக மாநாடு தற்போது தமிழக அரசியலில் தனக்கான வரலாற்று வாய்ப்புகளை கோட்டை விட்டதை என்னென்பது..? சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் மாபெரும் பந்தல் போட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமரத்தக்க அளவில் ஒரு மாநாட்டை நடத்தி உள்ளனர். வந்தோருக்கான உணவு தயாரிப்பு மற்றும் விருந்தோம்பல், வருகின்ற வாகனங்கள் நிறுத்தம்.. ஆகிய ஏரியாக்களையும் சேர்த்து மதிப்பிட்டால் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் ...