எங்கெங்கும் ஜேசிபியின் சீற்றம்! வேறெந்த ஆட்சியிலும் காணாத வகையில் குடியிருப்புகள் அகற்றம் என்பது  தமிழகத்தில் நாளும், பொழுதுமாக இந்த ஆட்சியில் அரங்கேறி வருகின்றன! அதே சமயம் செல்வாக்கானவர்களின் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு தந்தால் கூட, அரசு அசைந்து கொடுப்பதில்லை; விபரமாவது; செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூரின் டோபிகானா தெரு , எம்.ஜி.ஆர் நகர், காயிதே மில்லத் தெரு, சாந்திநகர், தாய்மூகாம்பிகை நகர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது திமுக ...

தேர்தல் களத்தில் மிதமிஞ்சிய பணப் புழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டதே  தேர்தல் பத்திரங்கள் பெறும் திட்டம்! கார்ப்பரேட்களை களவாட அனுமதித்து, அதற்கு பிரதிபலனாக  பெரும் நிதி பெற்றுக் கொள்வதை, சட்டபூர்வமாக்க செய்யப்பட்ட சதியே ‘தேர்தல் பத்திரங்கள்’ என்பதை விவரிக்கிறது இந்தக் கட்டுரை; ‘தேர்தல் நடைமுறையில் பணத்தின் பங்கை கணிசமாக குறைப்பதன் மூலமாகவே ஜனநாயகம் உண்மையில் மலர முடியும்.  அப்படி தேர்தலின் போது புழங்கும் பணம் எங்கிருந்து வந்தது? யார் மூலம் வந்தது? எவ்வளவு வந்தது? என்பதை கமுக்கமாக மறைக்கக் கூடாது’ என்று சமூக ...

ஒரு சாதாரண மோட்டார் மெக்கானிக்காக தொடங்கி, பிறகு பஸ் கண்டக்டராகி, பின்னர் அதிமுக எம்.எல்.ஏவாகி, திமுகவுக்கு வந்து அமைச்சரானவர் இன்று மலைக்க வைக்கும் சொத்துக்களின் அதிபதி. பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர்! ஒரு பைசா கூட ரெய்டில் எடுக்க முடியவில்லையாம்! உண்மை என்ன? ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு வருமான வரி சோதனைகளுக்கு உள்ளானவர் தான் எ.வ.வேலு. தற்போது திமுக ஆட்சியில் அவரது பொருளதார வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்து வருவதால், பாஜக அரசு இவர் மீது தொடர் கண்காணிப்பு செய்து வந்தது! அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ...

 ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்  பொறுப்பிலேயே அனைத்தையும் ஒப்படைத்து விடுகிறார் முதல்வர் ஸ்டாலின்! இதனால், ‘அதிகாரிகள் வைத்தது தான் சட்டம்’ என்றாகிவிட்டது, தமிழக நிலைமை! அதிகாரிகள் ராஜ்ஜியத்தின் உக்கிரம் தாங்க முடியாமல், சக அமைச்சர்களே புழுங்கி தவிக்கிறார்கள்! முழு விபரமாவது; ஒரு ஆட்சியின் தலைவராக இருந்து, அதிகாரிகளை வழி நடத்துபவரைத் தான் நாம் ‘முதலமைச்சர்’ என்கிறோம்! ஆனால், தமிழகத்திலோ நிலைமை தலைகீழ்! அதிகாரிகள் வழிகாட்டலில் தான் முதல்வரே நடக்கிறார். இதனால் அரசு ஊழியர்கள் பிரச்சினைகள், சக அமைச்சர்கள் எதிர் நோக்கும் சவால்கள், மக்கள் தரப்பின் கோரிக்கைகள் ...

15 மாத தொடர் விசாரணைகள்! ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரெய்டுகள், எட்டு மாதத்திற்கும் மேலான சிறை.. ஆயினும் இது வரை குற்றத்திற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் காட்ட முடியவில்லை. நேர்மையான மக்களாட்சியை நடத்தும் ஆம் ஆத்மியின் இமேஜை சிதைக்க, பாஜக அரசு செய்யும் சதித் திட்டங்கள் மலைக்க வைக்கின்றன..! டெல்லியில் தொடர்ந்து மூன்று முறை அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து நல்லாட்சி தந்து கொண்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி! பாஜக எவ்வளவோ அதிகார துஷ்பிரயோகங்கள் செய்தும், பலமாக முட்டி மோதியும் கூட மக்களிடையே ஆம் ஆத்மிக்கு ...

சூடு பறக்கிறது தேர்தல் களம்! பத்தாண்டு ஆட்சியை மீண்டும் தொடரத் துடிக்கிறார் கே.சி.ஆர். கெத்தாக களம் இறங்கி சுத்தாத இடமில்லை என சுற்றிச் சுழல்கிறது காங்கிரஸ்! சோனியா, ராகுல், பிரியங்கா மூவருமே களத்தில்! பாஜக நிலையோ பரிதாபம்…! சகல பலத்தையும் பிரயோகித்துக் கொண்டிருக்கிறார் கே.சி.ஆர்..! 2018 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், BRS 119 இல் 88 இடங்களை வென்றது மற்றும் 47.4 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. காங்கிரஸ் 28 சதவித வாக்குகளை பெற்று 19 இடங்களைப் பெற்று, இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பாஜக 118 தொகுதிகளிலும் ...

தேர்தல் நெருக்கத்திலான அசம்பாவிதங்கள் தேர்தலின் முடிவை மாற்றும்! முன்பு பண மதிப்பிழப்பு, ஜி எஸ் டி அமலாக்கம், ரபேல் ஊழல்… என அம்பலப்பட்டு தோல்வியை எதிர்நோக்கிய நிலையில், ‘புல்வாமா விபத்து’ மீண்டும் ஆட்சி க்கு வர உதவியதைப் போல, 2024-க்கும் பாஜகவிடம் ஒரு திட்டம் இருக்க வாய்ப்புள்ளதா?  நாட்டையே உலுக்கிய புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்து நான்கு வருடங்களும், எட்டு மாதங்களும் உருண்டோடிவிட்டன. நாற்பதுக்கும் மேற்பட்ட CRPF  வீர்ர்களை காவு கொண்ட இந்த துயர நிகழ்வு 40 குடும்பங்களை நிர்க்கதியில் தள்ளியுள்ளது. அதில் அரசியல் ஆதாயம் ...

தமிழ்நாட்டில் தற்போது காவல்துறையின் மீதான நம்பகத் தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது! ‘ரசியல் செல்வாக்கானவர்களால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு தமிழக போலீஸில் ஒரு போதும் நியாயம் கிட்டாது’ என்ற நிலை நாளுக்கு நாள் உறுதியாகிக் கொண்டுள்ளது. ஒரு விரிவான பார்வை; பாதிக்கப்பட்டவர்கள் புகார் தரும் போது, பாதிப்புக்குள்ளாகியவர் செல்வாக்கானவர் என்றால், காவல்துறை இதில் ஆரம்ப கட்ட விசாரணை நடத்துவதற்கு கூட தயக்கம் காட்டுவது என்பது காவல் துறை எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதற்கான சிறந்த அடையாளமாகும். இப்படி நடந்து கொண்டதால் தான் கள்ளக் ...

சட்டீஸ்கரில் தற்போது ஆட்சியிலுள்ள காங்கிரஸ் அரசை மதிப்பீடு செய்யும் போது பெயில் மார்க்கிற்கு வாய்ப்பில்லை! மத்திய பிரதேசத்தில் சென்ற முறையே காங்கிரஸ் வென்ற போதிலும், ஆள்தூக்கி அரசியலில் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்த பாஜகவை மக்கள் மன்னிக்க தயாரில்லை..இதோ ஒரு அலசல்; நவம்பரில் நடைபெற இருக்கும்  ஐந்து மாநில தேர்தல்கள் பல்வேறு அரசியல் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 2024ல் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன்னால் இந்திய மக்களின் குறிப்பாக இந்தி மொழி பேசும் வட மாநில மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தலாம். ...