வேப்ப மரத்தின் வரலாறு இந்திய நாகரிகத்தின் வரலாற்றுடன் பிரிக்க முடியாதது. மனிதனின் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரமாகும். தமிழர்களின் பண்பாடு, பழக்க வழக்கங்களோடு பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். வேப்ப மரம் மிக நீண்ட காலமாக இந்திய கிராம மக்களின் நண்பனாகவும், பாதுகாவலனாகவும் இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக இந்தியர்கள் இந்த மரத்தை தங்கள் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும், பல நோய்களுக்கு தீர்வு காணவும் நம்புகிறார்கள். கூடுதலாக, இது உணவு மற்றும் சேமிக்கப்பட்ட தானியங்களைப் ...
கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கு மட்டுமின்றி, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள்,புண்கள், புரைகள், வீக்கம், குருதி வடிதல் போன்ற நோய்களுக்காக மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றது. தமிழ் நாட்டில் அநேகருக்கு தெரிந்த மூலிகை கீழா நெல்லியாகத் தான் இருக்கும். மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி என்று பலருக்கும் தெரியும். ஆனால், உட்கொள்ளும் முறை அநேகருக்கு சரிவரத் தெரியாது. சித்த மருத்துவம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மூலிகைகள் தான். மூலிகைகள் இன்றி சித்த மருத்துவம் ...
அங்கிங்கெனாதபடி தெரு ஓரங்களிலும், வேலியிலும் பூக்கின்ற பூ தான் சங்குப் பூ. விலை மதிப்பில்லா இதன் மருத்துவ குணங்கள் பலருக்கும் தெரியாது. சர்க்கரை நோய் தொடங்கி புற்று நோய் வரை சகல நோய்களில் இருந்தும் காக்கவல்லதே இந்த சங்குப் பூ. இயற்கை தந்த வரமான இந்தப் பூவின் மருத்துவ குணங்களை பார்ப்போம்; சங்கு போன்ற அமைப்பில் பூ இருப்பதால் நீல நிற பூக்கள் பூக்கும் இந்த தாவரம் சங்கு கொடி என்று அழைக்கப்படுகிறது. காக்கரட்டான் என்றும் அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் அலங்காரக் கொடியாகவே வீடுகளில் ...
இந்தக் காலத்திலும் மருத்துவமனையைத் தவிர்த்த குழந்தை பேறு சாத்தியமா? இதோ, இதற்கு சாட்சியமாக இந்த நிகழ்வு நடந்துள்ளது. எந்த மருந்து, மாத்திரை, டாக்டர், மருத்துவக் கருவிகள் உதவியுமின்றி சுகமான பிரசவத்தை வீட்டில் நிகழ்த்திய 40க்கு மேற்பட்ட தம்பதியினரின் அனுபவங்கள் வியப்பூட்டுகின்றன; சீர்காழியில் உள்ள பசுமை அரங்கத்தில் (LAWN PARK) 25.08.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வீட்டில் குழந்தை பெற்றவர்களின் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு மட்டுமின்றி ஹைதராபாத், மும்பை போன்ற ...
நடிகர் விஜய் தனது புதிய கட்சியின் கொடியில் வாகை மலரை வைத்துள்ளார். வாகைப் பூ வெறும் மலர் அல்ல; அது தமிழர் பண்பாட்டின் அடையாளம். அது வெற்றியின் சின்னமாக மட்டுமல்லாமல், மருத்துவப் பயன்கள் நிறைந்ததாக, தமிழ்ப்பரப்பின் அடையாளமாக இலக்கியச் சிறப்பு பெற்று திகழ்வதை பார்ப்போம்; இன்றும் தமிழர் வாழ்வில் வாகைப் பூவின் பெருமை நிலைத்து நிற்கிறது. வரலாற்றின் ஆழத்திலிருந்து எழுந்து வந்த இம் மரம், நம் பாரம்பரியத்தின் தொடர்ச்சியை உணர்த்தும் உயிரோட்டமான அடையாளமாக விளங்குகிறது! வெற்றியின் சின்னமாய் விளங்கும் வாகைப் பூ, தமிழர் வாழ்வில் ...
ஆப்பிளும் ஆரஞ்சும் பெறும் மதிப்பை, அதிக சத்து வாய்ந்த பப்பாளி ஏனோ பெறவில்லை. ஆரோக்கிய வாழ்வுக்கு பப்பாளி தரும் பலன்களுக்கு ஈடு இணையே கிடையாது. பப்பாளி பழத்தின் விலையோ குறைவு. பலன்களோ கணக்கில் அடங்காதது. இதைக் குறித்து சில தவறான கருத்துக்கள் உள்ளன. உண்மை அறிவோம்; நமக்குத் தெரியாமலேயே நம்முடைய வீட்டுக் கொல்லையில் முளைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒரு அற்புத மரம் இது. பப்பாளி இந்தியா முழுவதும் பரவலாகத் தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. பப்பாளி பழம் மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து 16 ஆம் ...
சீரகம் சமையலுக்கு மட்டுமல்ல, இது மருத்துவ குணாம்சங்கள் கொண்ட உணவும் கூட! இது நமது அகத்தை சீராக்கி பல்வேறு உடல் உபாதைகளையும், வயிறு சம்பந்தப்பட்ட சகல பிரச்சினைகளையும் கச்சிதமாக சரி செய்கிறது. சீரகத்தை எப்படி நம் உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்துவது எனப் பார்ப்போம்; இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது. குமின் என்ற வார்த்தையே அராபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப் பட்ட வரலாறு சான்று ...
குறைந்த விலையில் நிறைந்த பயனைத் தரக்கூடியது எலுமிச்சை. இது பித்தத்தைப் போக்கும், புத்துணர்ச்சி தரும், தலைவலி தீர்க்கும், வாந்தியை நிறுத்தும், உடல் சூட்டைக் குறைக்கும், வாய் நாற்றம் போகும், சர்ம நோய்கள் விலகும்…! இந்தக் கட்டுரையில் எலுமிச்சையின் இன்னும் பல சிறப்புகளை பார்ப்போம். சித்த மருத்துவத்தில் பழம் என்றால் அது எலுமிச்சையைத் தான் குறிக்கும். சித்த மருத்துவ நிபுணத்துவம் என்பது சித்த வைத்தியத்துடன் நின்று விடுவதில்லை. சித்த மருத்துவத்தின் தத்துவங்களில் சிறந்து விளங்கும் மெஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் தத்துவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், ...
சிசேரியன் அதிகரிக்கிறது. சுகப் பிரசவம் குறைகிறது.. இதற்கான காரணங்களை வெளிப்படையாக விவாதிக்கலாம். அப்படி விவாதிக்கும் போது சிலர் குற்றவுணர்வால் குறுகிப் போக வேண்டியிருக்கும். பொதுவாக பெண்கள் சிசேரியனை விரும்புவதில்லை. அது அவள் மீது எவ்வாறு திணிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்; “20 ஆண்டுளுக்கு முன்பு பெண்கள் அதிக அளவில் வேலைகளை செய்ததால் அதிகளவில் சுக பிரசவம் நிகழ்ந்தது. ஆனால்< கால மாற்றத்தால் தற்போது உள்ள பெண்களுக்கு பணிச்சுமை பெருமளவில் குறைந்து உள்ளது. முன்பெல்லாம் பெண்கள் பிரசவக் காலங்களின் போது அதிக வேலை செய்வார்கள். குடம் தூக்குவது ...
ஜீரண மண்டலத்தை சீராக்கி, நல்ல பசியை ஏற்படுத்தும் இஞ்சி! ஸ்லிம்மாக இருக்க விரும்புவோருக்கு இது ஒரு வரம்! இது இதயத்தை பாதுகாக்கும் கவசமாகும். நீரிழிவு நோய் தொடங்கி மலச்சிக்கல் வரை தீர்வுக்கு வழி சொல்லும் இஞ்சியை ஆரோக்கிய வாழ்வுக்கு பயன்படுத்துவது எப்படி..? ‘சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை’ என்பது ஒரு பழைய பழமொழி ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். ...




















