சீதாப்பழம் சுவைமிக்கது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கு தலை சிறந்த பழமாகும். பெரு நகரங்களில் இதன் பயன்பாடு குறைந்து வருவது கவலையளிக்கிறது. இத்தனை நலன்கள் இதில் இருப்பது பலருக்கு தெரியாது. மிகக் குறைந்த செலவில் மிகச் சிறந்த பலன்களை நாம் இந்த பழத்தில் பெறலாம்; பெயர் தான் சீதாப்பழம் , ஆனால், பார்க்க கரடு முரடாக இருக்கும் ஒருமிக இனிய பழமே சீதாப்பழம் ! எப்படி இந்த பெயர் வந்தது என்பது ஒரு புரியாதபுதிராகவே உள்ளது. ஒரு வேளை சீதளப்பழம் என்பது மருவி சீதாப் பழம் ஆகி ...
“மருதோன்றி” எனும் மருதாணி ! திபாவளிக்கு வண்ணமய வாழ்த்து ! மருதாணி சங்க காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. மருதாணி இலை நம்மை அழகுபடுத்திக் கொள்ள மட்டுமல்ல, இது ஆரோக்கியம் சார்ந்த இயற்கையான நிறமூட்டியாகும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, மனிதனுக்குப் பலனளிக்கும் மருதாணிக்கும், தீபாவளிக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது; மருதாணி இலையின் சாறினால் சிவந்த நிறத்தில் மரு எனும் மச்சம் போன்ற சிறு புள்ளி, தோன்றுவதால் அந்த இலைக்கு “மருதோன்றி” என்று பெயர் வைத்தனர். அதுவே பிற்காலங்களில் மருவி மருதாணி என்றாயிற்று. சித்த மருத்துவத்தில், ...
துளசி பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. துளசி நீரை நாளும் பருகுவோருக்கு கிடைக்கும் பலன்கள் அளப்பரியது. தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியலில் துளசிக்கு முக்கியமான இடமுண்டு. ஒரு ஆரோக்கியத்தை ஆன்மீகத்தோடு சம்பந்தப்படுத்தி நாளும் புழக்கத்திற்கு கொண்டு வந்தனர்; புரட்டாசி மாதம் வந்தாலே பலருக்கும் துளசியின் நினைவு வரும். புரட்டாசி சனிகிழமைகள் வந்தாலே, துளசி பெரும்பாலான தமிழர்கள் வீடுகளில் தவறாமல் இடம் பெறும். இவ்வாறு முக்கிய மூலிகைகளை ஆன்மீகத்துடன் அவரவர் வாழ்க்கையின் ஆரோக்கியத்தோடு தொடர்பு படுத்திவிடுவது தமிழர்கள் வாடிக்கை. அதுவே வாழ்கை. துளசி : Ocimum tenuiflorum ...
முருங்கை பலரது வீட்டிலும் இருக்கும் மரம். தெரிந்த இந்த மரத்தை குறித்த தெரியாத சேதி பலவும் இருக்கின்றன. ”கீரையின் அரசனான இந்த முருங்கைக் கீரையை வாரத்தில் மூன்று முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால் நோய்களே அண்டாது, முதுமையை தடுக்கும்” என்று மருத்துவர்கள் கூறுவதை சற்று விரிவாக பார்ப்போம்; முருங்கைக்கும், முருகனுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் , முருகன் என்றாலே இளமை, வீரம், அழகு தான்! இவை அத்தனையுமே முழுக்க முருங்கை தரும் . கியூபாவின் காஸ்ட்ரோவின் கெரில்லா படைத் தளபதி சே குவேரா, ...
வேப்ப மரத்தின் வரலாறு இந்திய நாகரிகத்தின் வரலாற்றுடன் பிரிக்க முடியாதது. மனிதனின் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரமாகும். தமிழர்களின் பண்பாடு, பழக்க வழக்கங்களோடு பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். வேப்ப மரம் மிக நீண்ட காலமாக இந்திய கிராம மக்களின் நண்பனாகவும், பாதுகாவலனாகவும் இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக இந்தியர்கள் இந்த மரத்தை தங்கள் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும், பல நோய்களுக்கு தீர்வு காணவும் நம்புகிறார்கள். கூடுதலாக, இது உணவு மற்றும் சேமிக்கப்பட்ட தானியங்களைப் ...
கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கு மட்டுமின்றி, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள்,புண்கள், புரைகள், வீக்கம், குருதி வடிதல் போன்ற நோய்களுக்காக மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றது. தமிழ் நாட்டில் அநேகருக்கு தெரிந்த மூலிகை கீழா நெல்லியாகத் தான் இருக்கும். மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி என்று பலருக்கும் தெரியும். ஆனால், உட்கொள்ளும் முறை அநேகருக்கு சரிவரத் தெரியாது. சித்த மருத்துவம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மூலிகைகள் தான். மூலிகைகள் இன்றி சித்த மருத்துவம் ...
அங்கிங்கெனாதபடி தெரு ஓரங்களிலும், வேலியிலும் பூக்கின்ற பூ தான் சங்குப் பூ. விலை மதிப்பில்லா இதன் மருத்துவ குணங்கள் பலருக்கும் தெரியாது. சர்க்கரை நோய் தொடங்கி புற்று நோய் வரை சகல நோய்களில் இருந்தும் காக்கவல்லதே இந்த சங்குப் பூ. இயற்கை தந்த வரமான இந்தப் பூவின் மருத்துவ குணங்களை பார்ப்போம்; சங்கு போன்ற அமைப்பில் பூ இருப்பதால் நீல நிற பூக்கள் பூக்கும் இந்த தாவரம் சங்கு கொடி என்று அழைக்கப்படுகிறது. காக்கரட்டான் என்றும் அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் அலங்காரக் கொடியாகவே வீடுகளில் ...
இந்தக் காலத்திலும் மருத்துவமனையைத் தவிர்த்த குழந்தை பேறு சாத்தியமா? இதோ, இதற்கு சாட்சியமாக இந்த நிகழ்வு நடந்துள்ளது. எந்த மருந்து, மாத்திரை, டாக்டர், மருத்துவக் கருவிகள் உதவியுமின்றி சுகமான பிரசவத்தை வீட்டில் நிகழ்த்திய 40க்கு மேற்பட்ட தம்பதியினரின் அனுபவங்கள் வியப்பூட்டுகின்றன; சீர்காழியில் உள்ள பசுமை அரங்கத்தில் (LAWN PARK) 25.08.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வீட்டில் குழந்தை பெற்றவர்களின் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு மட்டுமின்றி ஹைதராபாத், மும்பை போன்ற ...
நடிகர் விஜய் தனது புதிய கட்சியின் கொடியில் வாகை மலரை வைத்துள்ளார். வாகைப் பூ வெறும் மலர் அல்ல; அது தமிழர் பண்பாட்டின் அடையாளம். அது வெற்றியின் சின்னமாக மட்டுமல்லாமல், மருத்துவப் பயன்கள் நிறைந்ததாக, தமிழ்ப்பரப்பின் அடையாளமாக இலக்கியச் சிறப்பு பெற்று திகழ்வதை பார்ப்போம்; இன்றும் தமிழர் வாழ்வில் வாகைப் பூவின் பெருமை நிலைத்து நிற்கிறது. வரலாற்றின் ஆழத்திலிருந்து எழுந்து வந்த இம் மரம், நம் பாரம்பரியத்தின் தொடர்ச்சியை உணர்த்தும் உயிரோட்டமான அடையாளமாக விளங்குகிறது! வெற்றியின் சின்னமாய் விளங்கும் வாகைப் பூ, தமிழர் வாழ்வில் ...
ஆப்பிளும் ஆரஞ்சும் பெறும் மதிப்பை, அதிக சத்து வாய்ந்த பப்பாளி ஏனோ பெறவில்லை. ஆரோக்கிய வாழ்வுக்கு பப்பாளி தரும் பலன்களுக்கு ஈடு இணையே கிடையாது. பப்பாளி பழத்தின் விலையோ குறைவு. பலன்களோ கணக்கில் அடங்காதது. இதைக் குறித்து சில தவறான கருத்துக்கள் உள்ளன. உண்மை அறிவோம்; நமக்குத் தெரியாமலேயே நம்முடைய வீட்டுக் கொல்லையில் முளைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒரு அற்புத மரம் இது. பப்பாளி இந்தியா முழுவதும் பரவலாகத் தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. பப்பாளி பழம் மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து 16 ஆம் ...

























