தலைவலிகள் பலவிதம்…! இதில் ஒற்றைத் தலைவலி ஒரு விதம். ஆம்…! ஒற்றைத் தலைவலி வந்தவர்களைக் கேட்டாலே அதன் தீவிரம் புரியும். சாதாரணமாக கிடைக்கும் மூலிகைகளால் ஒற்றைத் தலை வலிக்கு நிவாரணம் தேடலாம். நம்பிக்கையுடன் இதைச் செய்தால் பலன் கிடைக்கும். ஒற்றைத் தலைவலியானது  மண்டை பிளந்தது போன்ற வலியை ஏற்படுத்தி வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும் இல்லாமல் நொந்து போகச் செய்யும். அத்தனை கொடிய ஒற்றைத் தலைவலியைக் கூட நமது மண்ணின் மருத்துவமான பாரம்பரிய மருத்துவத்தில் சரி செய்யலாம். வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் பாதிக்கும் ஒற்றைத் ...

புண்கள் பலவிதம்… அதிலும் ஆறாத புண்கள் வேறு ரகம். புண்… கொடியது என்றாலும், அவற்றை மிகச்சரியாக கையாண்டால் எளிதாகக் குணப்படுத்தி விடலாம். குறிப்பாக மிகச்சாதாரணமாக கிடைக்கும் கீரைகளையும் பழங்களையும் அஞ்சறைப் பெட்டி கடைச் சரக்குகளையும் கொண்டு புண்களை ஆற்றிவிடலாம். நாள்பட்ட புண்களில் சீழ் பிடித்து நாற்றத்தை ஏற்படுத்துவதுடன் உடல் உறுப்புகளை தின்று விடவும் வாய்ப்புகள் உள்ளன. புண்களால் சிலர் உறவுகளைக் கூட இழந்திருக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் புண்களால் வாய் நாற்றத்தில் தொடங்கி பிடித்த உணவை உண்ண முடியாமல் சிலர் படும் ...

மன அழுத்தம் எனப்படும் டிப்ரஷன்! சாதாரணமாக இன்று எல்லோருக்கும் ஏற்படுவதே! அது போன்ற நேரங்களில் அதிலிருந்து, சிக்காமல், சிதறிவிடாமல் வெளியேற வேண்டும்! மருந்து, மாத்திரைகளை நாடாமல், மந்திர, தந்திரவாதிகளிடம் செல்லாமல், பெரிய செலவில்லாமல் இது சாத்தியம்! பல்வேறு சூழலில் பலரையும் பாடாய்ப்படுத்திவரும் பிரச்சினைகளுள் இதுவும் ஒன்று. இதை சரிசெய்வதற்கு நம்மைச் சுற்றி மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் காய், கனிகள், மூலிகைகள் போதும்! ஆனாலும், பலர் நமது மண்ணின் மருத்துவத்தை நம்பாமல் வேறு பல சிகிச்சைகளை மேற்கொண்டு பலனின்றி சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மனநலக் கோளாறு என்றதும் ...

மீண்டும் கொரோனாவா? மிரள வேண்டாம்! எல்லோரும் பயப்படுமளவு ஊரெங்கும் சளித்தொல்லை, ஜலதோஷம், காய்ச்சல் என வாட்டியெடுத்து பாடாய்ப் படுத்துகிறது. இயற்கை மருத்துவம் என்றென்றைக்கும் நம்மை காக்கும் என்ற உறுதியுடன் சில மருத்துவ ஆலோசனைகளை பகிர்கிறேன். தற்போது இந்த கட்டுரையில் நான் தரும் ஆலோசனைகளே கொரானா காலத்தில் பலரை மீட்டுக் கொண்டு வந்தது! ஆகையால், இது யாவருக்கும் பலனளிக்கும்! இயற்கைச் சூழலை நாம் ரொம்பவே கெடுத்து வைத்துள்ளோம்.தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, ஊர் உலகமெங்கும் பருவமழை அது அதற்குரிய காலங்களில் பெய்வதில்லை. ஆனபோதிலும் வரலாறு காணாத ...

கருக் கலைப்பை மறுப்பதாலும், சிக்கலுக்கு உள்ளாக்குவதாலும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் மரணிக்கிறார்கள்! அமெரிக்காவில் கருக்கலைப்பு மறுக்கப்பட்டதற்கு அங்கு பெண்கள் பொங்கி எழுந்துள்ளனர்! கருக்கலைப்பு என்பதை ஏன் பெண்ணின் உரிமையாக கருத வேண்டும்? அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை அமெரிக்க உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. கருக்கலைப்பு செய்வது தொடர்பான சட்டத்தை,  அந்தந்த மாநிலங்கள் இயற்றிக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பு அளித்துள்ளது. இதற்கு அங்குள்ள பெண்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். வளர்ந்த நாடான அமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால், நம் நாட்டில் கருக்கலைப்பு வசதிகள் ...

ரத்தம் உறைதல் பிரச்சினை இன்றைக்கு பேசுபொருளாகி இருக்கிறது. கொரானாவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்ட மிகப் பலருக்கு இந்த ரத்தம் உறைதல் பிரச்சினை வருகிறது! இதை தவிர்க்கவும், இதில் இருந்து மீளவும் என்ன செய்ய வேண்டும்! இது காலம்காலமாக இருந்துவரும் பிரச்சினைதான் என்றாலும் கொரோனாவுக்குப் பிறகு ரத்தம் உறைதலால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இளம்வயதினருக்கும்கூட ரத்தம் உறைந்து அவர்கள் மரணமடைவது நம்மில் பலர் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே, இந்தக்கட்டுரை நிச்சயம் பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன். ரத்தம் உறைதல் ஏன் நடைபெறுகிறது? அதிலும் சமீபகாலமாக ...

ஆண்மைக் குறை பிரச்சினையால நிறையபேர் அவதிப்படுறாங்க. பொதுவா பெண்மை, தாய்மை பற்றி பேசுற நாம ஆண்மை பற்றி பெருசா பேசுறதில்லை. ஆண்மைனா என்ன?  ஆண்மைக்கு அளவுகோல் உண்டா? இதற்காக மருந்து, மாத்திரை, லேகியம், சூரணம் என்று அலைபாய்வது தேவையற்றது. ஆண்மை இல்லாத ஒரு மனுசனை இந்தச் சமூகம் எப்படி பார்க்குது? ஒரு ஆண்மகனால குழந்தை பெத்துத்தர முடியலன்னா அவனை எப்படி பார்ப்பாங்க? பெண்கள்கிட்ட தாய்மையை எதிர்பார்க்கிற மாதிரி ஆணிடம் ஆண்மை இருக்கான்னு எதிர்பார்க்கிறதுல என்ன தவறு? ஆண்மைல ஏற்படக்கூடிய குறைபாட்டுக்கு என்ன காரணம்னு நிறையவே ...

சிறுநீரகம், உடலுக்குள் உள்ள கழிவுகள், நச்சுகளை வெளியேற்றி மனிதன் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயண உரங்கள், மருந்துகள், ஹோட்டல் உணவுகள், கேன்வாட்டர் போன்ற பல காரணிகள் நமது கிட்னிக்கு எமனாக உள்ளன! கிட்னியை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? நீர் இறைக்கும் இயந்திரத்தைப் போன்று சிறுநீரகம் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் தான் நாம் நல்ல உடல் நலத்துடன் இருக்க முடிகிறது. யார் ஒருவருக்கும் சிறுநீரக செயலிழப்பு ஒரே நாளில் அதிரடியாக பாதிப்பு ஏற்பட்டுவிடாது. படிப்படியாகவே ஏர்பட முடியும்! சம்பந்தப்பட்ட நோயாளியிடம் முழு ...

குழந்தை பேறு காலகட்டத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் அதிகம். அந்த காலகட்டத்தில் பக்குவமாக சாப்பிட வேண்டியவற்றையும், தவிர்க்க வேண்டியவற்றையும் தெரிந்து கொண்டால் சிக்கல்கள் தீரும்! சுகமான குழந்தைப் பேறு கைகூடும்! பருவமடைதலில் தொடங்கி திருமணத்துக்குப் பிறகு குழந்தைப் பேறு, பிரசவம், மெனோபாஸ் என பெண்களின் வாழ்க்கையில் சுமார் 40 ஆண்டுகள் வலிகள் நிறைந்தவையாகவே இருக்கின்றன. ஆக, பெண்கள் ஒவ்வொரு பருவத்திலும் படும்பாடுகளை சொல்லிமாளாது. இதில் ஒரு சிலர் விதிவிலக்கு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் பெரும்பாலான பெண்கள் இடுப்பு வலியில் தொடங்கி முதுகுவலி ...

தூக்கமின்மை…! இன்றைய சூழலில் நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினை. தூக்கமின்மைக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை தவிர்ப்பது, தூக்கத்தை வரவழைக்கும் உணவுகளை உண்பது, இவற்றுடன் சில வாழ்வியல் முறைகளைக் கடைபிடித்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்! வயது வித்தியாசமில்லாமல் பலரையும் பீடித்திருக்கும் இந்த தூக்கமின்மையைப் போக்க பலரும் பல்வேறுவிதமான வழிகளை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். தூக்கமின்மை குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டால் கொட்ட கொட்ட கண் விழித்து பல இரவுகள் தூங்காமல் கண் விழித்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்தால் உள்ளபடியே ...