எந்த ஒரு படைப்பின் நம்பகத் தன்மையும் சொல்ல வந்த கருத்தில் அதற்கிருக்கும் தெளிவும்,உறுதிப்பாடும் சம்பந்தபட்டதாகும்! மூக்குத்தி அம்மன் ஒரு பக்தி படமுமல்ல,விழிப்புணர்வு படமுமல்ல! இது பச்சையான பாஜக ஆதரவுப் படம்! பக்தியின் உன்னதம் குறித்த புரிதலும் இல்லை! மறைபொருளாகத் திகழும் கடவுள் குறித்த புரிதலும் இல்லை! நாத்திகம் என்ற உயரிய கொள்கை குறித்த அடிப்படை அறிவும் இல்லை! முற்றிலும் அரைவேக்காட்டுத் தனமாக எடுக்கப்பட்டிருக்கிறது,மூக்குத்தி அம்மன்! இவை பற்றியெல்லாம் குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கும் மக்களை மேலும் குழப்பி, ஏதோ விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல ஆங்காங்கே வசனங்கள் வருகின்றன! ...
விக்ரம் சேத் எழுதிய ‘A Suitable Boy’ என்ற ஆங்கில நாவல் 1993 ஆம் ஆண்டில் வெளியானது! இதன் அடிப்படையில் பிபிசிக்காக இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. நாடு விடுதலை பெற்றபிறகு, ஐம்பதுகளின் தொடக்கத்தில் நடைபெறும் கதை. நெட்பிளிக்சில் இந்த ஆறு மணிநேர தொடரைக் காணலாம். கடந்த மாதம் வெளிவந்துள்ளது. ‘சலாம் பாம்பே’ என்ற புகழ்பெற்ற திரைப்படத்தை இயக்கிய மீரா நாயர் ‘ A Suitable Boy’ என்ற பெயரிலேயே இந்தத் தொடரை பிபிசி 1 க்காக இயக்கியுள்ளார். ஆண்ட்ரூ டேவிஸ் கதையை எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் ...
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் தூள் பரப்பிக் கொண்டிருந்த நேரத்தில் The trail of Chicago 7 (சிகாகோ விசாரணை) என்ற ஆங்கிலப் படம் வெளிவந்ததானது, ஒரு வகையில் வெள்ளை நிறவெறி ஆதரவாளர்களின் முகத்திரையை கிழிக்க உதவியதன் மூலம் ஜோபிடன் வெற்றிக்கு ஒரளவு உதவியது என்றும் சொல்லாம்! 1968 ஆம் ஆண்டு சிகாகோ நகரில் நடத்த கலவரத்தைத் தொடர்ந்து நடந்த நீதிமன்ற விசாரணைதான், இந்தப் படம். ஆரோன் சொர்கின்(Aron Sorkin) என்பவர் திரைக்கதை எழுதி, இயக்கி இருக்கிறார். இந்தியாவில் அக்டோபர் மாதம் வெளிவந்துள்ளது.நெட் பிளிக்சில் ...
யார் ஒருவரையும் புகழ்ந்து பேசவோ,எழுதுவதிலோ நான் எப்போதும் ஆர்வம் காட்டியதில்லை! ’பெரியாரை வியத்தலும் வேண்டாம், சிறியாரை இகழ்தலும் வேண்டாம்’ என்பது நம் முன்னோர்கள் உணர்த்தியது.அதுவே என் நிலைப்பாடுமாகும்! எனினும் ஒருவரிடம் காணப்படும் அரிய பண்புகளை, சிறந்த குணநலன்களை சொல்வதன் மூலம் இந்த சமூகம் அதை முன்மாதிரியாகக் கொண்டு பலன் பெறும் எனில்,அதற்கான முழு தகுதியும் கொண்ட ஒருவரை உரிய முறையில் போற்றி, பாராட்டுவதும் ஒரு சமூக கடமையே! அந்த வகையில் நான் ஒரு பதினைந்து ஆண்டுகளாக சிவகுமார் அவர்களிடம் பழகிவருவதைப் இந்த 79வது பிறந்தநாளன்று பகிர்ந்து கொள்ள ...
800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுவதா? தொடர்வதா? என்பதை ஒரு விவாதமாக்கிவிட்டார்கள்..! 800 படத்திலிருந்து விஜய் சேதுபதியை விலகச் சொல்வதும்,முத்தையா முரளிதரனை எதிரியாகச் சித்தரிப்பதும், இலங்கையில் வாழும் நமது இந்திய வம்சா வழித் தமிழர்களான மலையகத் தமிழர்களுக்கு நாம் செய்யும் அநீதியாகும். மலையகத் தமிழர்களுக்கு கேட்க யாரும் நாதியில்லை என்ற மனோபாவம் தானே! ஈழத் தமிழர்களுக்காக உருகுபவர்கள் ஒடுக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் மத்தியில் இருந்து எழுந்து, இன்று ஒரு உலக கிரிக்கெட் சாதனையாளனாக பார்க்கப்படும் முத்தையா முரளிதரனை எதிர்ப்பது என்ன நியாயம்? இனவெறுப்பு அரசியல் இலங்கையிலேயே விடை பெற்றுக் ...
பாஸிசத்திற்கும்,மனித நேயத்திற்கும் இடையே நடக்கும் உளவியல் போராட்டம் அழகான திரைமொழியில் ஹிட்லரின் ஜெர்மானிய காலகட்ட சமூகத்தின் வழியே சொல்லப்பட்டிருக்கிறது! இன்றைய சமகால இந்தியாவின் நிகழ்வுபோக்குகளோடு நாம் இதை ஒப்பீடு செய்து தெளிவு கொள்ளத்தக்க வகையில் இருப்பதால்,இதன் காலப் பொருத்தப்பாடு சிலிர்க்கவைக்கிறது! இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருக்கிறது. ஹிட்லர் உலகையே வெற்றி கொள்ளப் போவதாக எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; அவனது புகழ்பாடுகிறார்கள். ஜெர்மனியில் வசிக்கும் பத்து வயது நாயகனான சிறுவன் ஜோஜோவும் அப்படித் தான் நம்புகிறான். அப்போது நடந்த சம்பவங்களை ஜெர்மானிய சிறுவன் பார்வையில் இப்படம் சித்தரிக்கிறது. ...
சென்னை, சூளைமேட்டில் வசித்து வருபவர் ஐஸ்குச்சிக் கலைஞர் சந்திரன். மாற்றுத்திறனாளியான இவர் ஐஸ்குச்சிகளை மட்டுமே பயன்படுத்தி 300க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்களைச் செய்து தன் வீட்டில் காட்சிப்படுத்தி வைத்துள்ளார். விமானம், ஊஞ்சல் ஆடும் மீன்கள், மோட்டார் சைக்கிள், படுக்கை அறை விளக்கு அலங்காரம் போன்றவற்றை தனக்கே உரித்தான பாணியில் தத்துரூபமாக அழகுற வடிவமைத்து உள்ளார். தான் நினைப்பதை அப்படியே ஐஸ் குச்சிகளால் காட்சிப் படுத்தும் ஆற்றல் கொண்டவர் இவர். போலியோ நோயால் இரு கால்களை இழந்து சக்கர நாற்காலியில் வலம் வந்த போதிலும் மனம் ...
எஸ்பி.பியின் மறைவைச் சுலபத்தில் ஒரு சம்பவமாகக் கடந்து செல்லமுடியவில்லை! நினைவு தெரிந்தது முதல் 50 ஆண்டுகளாக கேட்டு பழகிய குரல்! அந்தக் குரல் காதுகளில் நுழைந்ததா? இதயத்தில் படர்ந்ததா…,ரகசியங்களைப் பரிமாறியதா…?மனதில் உற்சாகம் கரைபுரள வைத்ததா? கண்களில் கண்ணீர் வழிய வைத்ததா…?பயணங்களில் துணையாக வந்ததைச் சொல்வதா? இரவெல்லாம் தூக்கம் வரும் வரை துணை நின்ற கருணையை சொல்வதா? ’’நமச்சிவாய, நமச்சிவாய ஓம் நமச்சிவாய’’ எனப்பாடிய போது பக்தி மனநிலையில் மனம் கசிந்துருக வைத்ததை சொல்வதா…! அவரது மறைவு கோடிக்கணக்கான இசை ரசிகர்களை அதிர்ச்சியிலும், மீளதுயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. ...
இப்படியும் ஒரு மனிதன் இருக்கமுடியுமா? என்று வியக்க வைக்கிறார் உடுமலை செந்தில்! கோவை உடுமலையை பூர்வீகமாகக் கொண்ட செந்திலுக்கு சிறுவயது முதலே நாட்டியத்தை தவிர வேறொன்றும் தெரியாது! அதிலும் கோயில்களில் ஆடுவதென்றால் அலாதி ஆர்வம்! உடுமலை பாகவதர்,முத்துசாமி பிள்ளை,கணபதி ஸ்தபதி அகியோரிடம் நாட்டிய சாஸ்த்திர மரபுகளை நன்கு கற்று உள்வாங்கிய செந்தில் அந்த நாட்டியக் கலையை, மரபின் தொடர்ச்சியான மக்கள் கலையாக வளர்த்தெடுப்பதில், நடைமுறைப் படுத்துவதில் பேரார்வம் கொண்டவராக உள்ளார்! கடந்த முப்பதாண்டுகளாக நாட்டியமே மூச்சு என்று வாழும் செந்தில், நமது மரபில் கோவில்களில் ...