இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஜனநாயகத்தின் பெயராலும், சமூக நீதியின் பெயராலும் நடக்கும் தமிழகத்தில் நடக்கும் படு அயோக்கியத்தனமான ஒன்று தான் 7.5% உள் ஒதுக்கீடாகும்! இதை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் கள யார்த்தம் தெரியாமல் கண்மூடித்தனமாக அரசு பள்ளி ஏழை,எளிய மாணவர்கள் பலன்பெற வேண்டும் என்ற கோணத்தில் ஆதரிக்கின்றார்களேயன்றி, ’’ உண்மையிலேயே பெற வாய்ப்புள்ளதா?’’ என யோசிக்கவேயில்லை! பொதுவாகப் பார்த்தால் கவர்னரின் காலதாமதம் நமக்கு ஒரு பெரும் கோபத்தைத் தான் ஏற்படுத்தும்! ஆனால், நாம் கோபப்பட வேண்டியது கவர்னரின் மீதல்ல! கல்வித்தரத்தை அரசு பள்ளிகளில் கழிசடையாக்கி வைத்துள்ள நம் ஆட்சியாளர்களின் மீது தான்! அரசு பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் ...

அரசுப் பள்ளி ஏழை,எளிய மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு விரும்பவில்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது! தமிழகத்தின் மொத்த ப்ளஸ் டூ மாணவர்களில் 41% அரசுப்பள்ளி மாணவர்கள்! ஆனால், மருத்துவ படிப்புக்கு இதில் ஒரு சதவிகித மாணவர்களுக்கு கூட வாய்ப்புகள் கிடைப்பதில்லை.இதைக் கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு தமிழக அரசு கொண்டு வந்தது.ஆனால், இன்று வரை அதற்கு தமிழக ஆளுனர் ஒப்புதல் தரவில்லை. இதன் பொருள் இதில் ...

அய்யோ…அரசு பள்ளியா…! வேண்டாம் என சென்ற வருடம் வரை அலறியவர்கள் அப்பா,,அரசு பள்ளி இருக்குதே அது போதும்….என்று அடைக்கலம் தேடுகிறார்கள்..! காலச் சுழற்சி கீழிருப்பதை மேலும்,மேலிருப்பதை கீழும் தள்ளும்..! ஆனால்,இந்த செய்தி உண்மையா…? ஆங்காங்கேயுள்ள சில அரசுப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்ந்திருப்பது உண்மை தான்! ஆனால்,எல்லா அரசுப் பள்ளிகளிலும் அதிக மாணவர்கள் சேரவில்லை! அப்படிக் கூடுதல் மாணவர்கள் சேர்வதற்கு அரசும் அக்கரை காட்டியதாகத் தெரியவில்லை! ஏனெனில், தனியார் பள்ளிகள் கொரோனாவைப் பொருட்படுத்தாமல் ஜூன்,ஜூலையில் அட்மிஷனை தொடங்கிய போது அரசு பள்ளிகளூக்கே அனுமதியில்லாத போது ...