சவால்களை சந்திக்கும் தமிழக பள்ளிக் கல்வி – 1 அரசுப் பள்ளிகள் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் தள்ளாடுகின்றன! இந்தச் சூழலில் லட்சக்கணக்கான தன்னார்வலர்களைக் கொண்டு இல்லம் தேடிக் கல்வி திட்டமாம்! அதற்கு 200 கோடி செலவாம்! ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சமே இத்திட்டம்! காலப் போக்கில் அரசுபள்ளிகளை காலாவதியாக்கும் ஆபத்துகள் இதில் புதைந்துள்ளன..! நவம்பர் 1 ஆம் தேதி, ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை கல்வி பயிலும் குழந்தைகளுக்கு பள்ளிகள் திறப்பு! ஏறக்குறைய 19 மாதங்களாக பள்ளிக்கு ...
தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வு பல தடைகளைக் கடந்து நடக்கவுள்ளது. ஆனால், அதை நீட் தேர்வு பாணியில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அணுகுகிறதா..? என்ற கேள்வியும், வேதனையும் தேர்வு எழுதும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது! தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டது. பல்வேறு தடைகளைக் கடந்து தற்போது போட்டித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான அறிவிக்கை கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, ஆசிரியர் தேர்வு ...
தேசிய கல்வி கொள்கை 2020 க்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி தேசம் தழுவிய பல போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் நோக்கம், தனியார்மயம், வியாபாரமயம் ,காவி மயம் -என்பது தான்! இதை அனுமதித்தால் வரும் நாளில் எல்லாவற்றையும் இழந்து நிற்போம்.! ஆகவே, இதில் உள்ள தீமைகளை அம்பலப்படுத்தும் விதமாக வருகிற 30, 31 ஆகிய தேதிகளில் மாபெரும் மாநாடு நடைபெறுகிறது. இந்தக் கல்விக் கொள்கை மதச்சார்பின்மை மற்றும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ...
ஒரு அரசு எப்படிப்பட்ட அரசு என்பதும், ஒரு ஆட்சியாளரின் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதும் அதன் முக்கிய பதவிகளில் எப்படிப்பட்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை பொறுத்துத் தான் உள்ளது. தலைமைச் செயலாலாளராக இறையன்பு, தனிச் செயலாளராக உதயச்சந்திரன் போன்றோர்களை துணைக்கு வைத்துக் கொண்டார் ஸ்டாலின்! அதே போல நேர்மையும், திறமையும் ஒருங்கே பெற்ற பி.டி.ஆர்.தியாகராஜன், மா.சுப்பிரமணியம், சேகர்பாபு, மகேஷ்பொய்யாமொழி..போன்ற செயல் ஆற்றல் மிக்கவர்களை அமைச்சர்களாக்கியதன் மூலம் மேலும் நம்பிக்கை ஏற்படுத்தினார் ஸ்டாலின்! இப்படியாக ஒரு நல்ல ஆட்சியைத் தர வேண்டும் என்று முதல்வர் நினைத்தாலும், நாம் கேள்விப்படும் ...
நீட் விவகாரத்தில் அதிமுகவின் நிலைபாடு என்னவென்பது இன்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. ”நீட் தேர்வை நிரந்தரமாக விலக்க கோரும் மசோதாவை அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தவுடன் படபடவென்று திமுக மீது குற்றம் சுமத்திவிட்டு அதிமுக வெளி நடப்பு செய்துள்ளது! அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பேசியிருப்பதை கவனியுங்கள்; நீட் தேர்வு என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. அதை எதிர்த்து யாரும் செயல்பட முடியாது. மாநில அரசுகள் இதை எதிர்க்க முடியாது. ஆனாலும், நாங்கள் சட்ட போராட்டம் தொடர்ந்து ...
கொரோனா கால இடைவெளிக்கு பிறகு கல்லூரிகள் திறக்கும் நிலையில், நெஞ்சை உலுக்கும் சில உண்மைகளை கவனப்படுத்த வேண்டியுள்ளது! கல்வி நிறுவன முதலாளிகளில் சிலர் எவ்வளவு களவாணிகளாக உள்ளனர்..! தனியார் கல்லூரி ஆசிரியர்கள் பலர் வாழ்க்கை எவ்வளவு அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பன அதிர்ச்சியளிக்கிறது..! திருநெல்வேலியை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியின் உதவி பேராசிரியர் சம்பளம் மாதம் ரூ 18,000. த்தில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு இந்த கொரோனா தொற்று காலத்தில் ரூபாய் 3000-ஐ தொட்ட நிகழ்வு பெருஞ் செய்தியாக சமூக ஊடகங்களில் வெளியானது. இதுபோன்ற வருவாய் ...
தொல்லியல் துறை என்றாலே பாஜகவினர் ஏனோ அலறுகின்றனர்! அவர்களை பொறுத்த அளவில் வரலாறு என்பது கற்பனையும், மாயைகளும் கொண்டு கட்டி எழுப்பப்படுவது! அதற்கு பெரும் இடையூறாக தொல்லியல்துறை இருப்பதாக கருதுகிறார்கள்! அதனால் தான், இந்தியாவில் இருக்கும் தொல்லியல் துறையின் கல்வெட்டு கிளையை காலாவதி ஆக்கிவிட கங்கணம் கட்டிச் செயல்படுகின்றனர். இதை எதிர்த்து தேச அளவிலும், சர்வதேச அளவிலும் வரலாற்று அறிஞர்கள் பொங்கி எழுந்துள்ளனர். ஆனால், தொல்லியல் துறை மூலமாக கல்வெட்டுகள், புராதனப் பொருட்கள் இல்லாமல் வரலாறு என்பதே உருவாகி இருக்க வாய்ப்பில்லை. ஆதாயங்களை கருதி ...
யாருமே யோசிக்காத வகையில், கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிக் கூடம் இல்லாததால் சிறுவர் சிறுமியர் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்! சத்துணவு சாப்பிட வழியற்ற நிலை, ஆன்லைன் வகுப்பிற்கான செல்போன் இல்லாமை, படிப்பிலிருந்து விலகி சென்று கொண்டிருக்கும் மனநிலை, வேலை இழந்த பெற்றோர்களால் குழந்தை தொழிலார்களானவர்களின் நிலை..என பலவாறாக கள ஆய்வுகள் செய்து அதிர்ச்சிகரமான தகவல்களை தருகிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்! அரசு பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறன் எந்த நிலையில் உள்ளது? சத்துணவை மட்டுமே உண்டு வந்த பல பிள்ளைகளின் நிலை ...
இதற்கே இப்படி அரண்டு போனால் எப்படி? என்ன நடந்துவிட்டது என்று பாஜகவினர் பதைபதைத்து நீதிமன்றம் சென்றனர்..? நீட் தேர்வால் பாதிப்பே கிடையாதாம்! பாதிப்பே இல்லை என்றால், ஏன் நீங்கள் பாய்ந்து தடை கேட்க வருகிறீர்கள்..? ஏழை எளிய மாணவர்களுக்கு இதில் என்ன பாதிப்பு? என்று ஆராய்ந்து உண்மை சொல்வதற்கு தானே நீதிபதி தலைமையில் குழு அமைத்துள்ளனர். பாதிப்பே இல்லை என்று நீங்கள் நீதிபதி குழுவை சந்தித்து விளக்கம் சொல்லுங்கள் அல்லது விரிவாக மனு கொடுங்கள். அதைத் தானே செய்ய வேண்டும்! கடந்த சில நாட்களாக ...
தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து ஊடகங்களும், பிரபல கல்வியாளர்களும் பொய்யான பிம்பங்களைக் கட்டமைத்து மக்களை குழப்புகிறார்கள்! அவர்கள் கட்டமைக்கும் பொய்கள் என்ன..? மறைக்கப்படும் உண்மைகள் என்ன..? ‘தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் தமிழ்நாடு கல்வித் தரங்களை மேம்படுத்து வதற்கான தனது வாய்ப்பை இழந்து விடக்கூடும்’ என தி ஹிந்து ஆங்கில நாளிதழ் எச்சரிக்கிறது. பேராசிரியர் பாலகுருசாமியை மேற்கோள் காட்டி ‘தேசிய கல்விக் கொள்கை-2020 தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு இருக்க விரும்பவில்லை எனில், கல்வித் தரங்களையும், சாதனைகளையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பை தமிழகம் இழந்து ...


















