கொரோனா கால இடைவெளிக்கு பிறகு கல்லூரிகள் திறக்கும் நிலையில், நெஞ்சை உலுக்கும் சில உண்மைகளை கவனப்படுத்த வேண்டியுள்ளது! கல்வி நிறுவன முதலாளிகளில் சிலர் எவ்வளவு களவாணிகளாக உள்ளனர்..! தனியார் கல்லூரி ஆசிரியர்கள் பலர் வாழ்க்கை எவ்வளவு அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பன அதிர்ச்சியளிக்கிறது..! திருநெல்வேலியை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியின் உதவி பேராசிரியர் சம்பளம் மாதம் ரூ 18,000. த்தில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு இந்த கொரோனா தொற்று காலத்தில் ரூபாய் 3000-ஐ தொட்ட நிகழ்வு பெருஞ் செய்தியாக சமூக ஊடகங்களில் வெளியானது. இதுபோன்ற வருவாய் ...
தொல்லியல் துறை என்றாலே பாஜகவினர் ஏனோ அலறுகின்றனர்! அவர்களை பொறுத்த அளவில் வரலாறு என்பது கற்பனையும், மாயைகளும் கொண்டு கட்டி எழுப்பப்படுவது! அதற்கு பெரும் இடையூறாக தொல்லியல்துறை இருப்பதாக கருதுகிறார்கள்! அதனால் தான், இந்தியாவில் இருக்கும் தொல்லியல் துறையின் கல்வெட்டு கிளையை காலாவதி ஆக்கிவிட கங்கணம் கட்டிச் செயல்படுகின்றனர். இதை எதிர்த்து தேச அளவிலும், சர்வதேச அளவிலும் வரலாற்று அறிஞர்கள் பொங்கி எழுந்துள்ளனர். ஆனால், தொல்லியல் துறை மூலமாக கல்வெட்டுகள், புராதனப் பொருட்கள் இல்லாமல் வரலாறு என்பதே உருவாகி இருக்க வாய்ப்பில்லை. ஆதாயங்களை கருதி ...
யாருமே யோசிக்காத வகையில், கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிக் கூடம் இல்லாததால் சிறுவர் சிறுமியர் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்! சத்துணவு சாப்பிட வழியற்ற நிலை, ஆன்லைன் வகுப்பிற்கான செல்போன் இல்லாமை, படிப்பிலிருந்து விலகி சென்று கொண்டிருக்கும் மனநிலை, வேலை இழந்த பெற்றோர்களால் குழந்தை தொழிலார்களானவர்களின் நிலை..என பலவாறாக கள ஆய்வுகள் செய்து அதிர்ச்சிகரமான தகவல்களை தருகிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்! அரசு பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறன் எந்த நிலையில் உள்ளது? சத்துணவை மட்டுமே உண்டு வந்த பல பிள்ளைகளின் நிலை ...
இதற்கே இப்படி அரண்டு போனால் எப்படி? என்ன நடந்துவிட்டது என்று பாஜகவினர் பதைபதைத்து நீதிமன்றம் சென்றனர்..? நீட் தேர்வால் பாதிப்பே கிடையாதாம்! பாதிப்பே இல்லை என்றால், ஏன் நீங்கள் பாய்ந்து தடை கேட்க வருகிறீர்கள்..? ஏழை எளிய மாணவர்களுக்கு இதில் என்ன பாதிப்பு? என்று ஆராய்ந்து உண்மை சொல்வதற்கு தானே நீதிபதி தலைமையில் குழு அமைத்துள்ளனர். பாதிப்பே இல்லை என்று நீங்கள் நீதிபதி குழுவை சந்தித்து விளக்கம் சொல்லுங்கள் அல்லது விரிவாக மனு கொடுங்கள். அதைத் தானே செய்ய வேண்டும்! கடந்த சில நாட்களாக ...
தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து ஊடகங்களும், பிரபல கல்வியாளர்களும் பொய்யான பிம்பங்களைக் கட்டமைத்து மக்களை குழப்புகிறார்கள்! அவர்கள் கட்டமைக்கும் பொய்கள் என்ன..? மறைக்கப்படும் உண்மைகள் என்ன..? ‘தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் தமிழ்நாடு கல்வித் தரங்களை மேம்படுத்து வதற்கான தனது வாய்ப்பை இழந்து விடக்கூடும்’ என தி ஹிந்து ஆங்கில நாளிதழ் எச்சரிக்கிறது. பேராசிரியர் பாலகுருசாமியை மேற்கோள் காட்டி ‘தேசிய கல்விக் கொள்கை-2020 தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு இருக்க விரும்பவில்லை எனில், கல்வித் தரங்களையும், சாதனைகளையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பை தமிழகம் இழந்து ...
‘’ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு கமிஷன் போட்டால் சரியாயிடுமா..?’’ ‘’இந்த நாட்டுல எவ்வளவு கமிஷன்கள் போட்டு இருக்காங்க..! அந்த கமிஷன் அறிக்கைகளைக் கூட வெளியிடாமால் அரசாங்கம் வாங்கி வைத்துக் கொள்வதெல்லாம் நடந்திருக்குதே..!’’ ‘’கமிஷன் அறிக்கையை வாங்கி மத்திய அரசுக்கு அனுப்பத் தான் முடியும். அதை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாதே!’’ ‘’அப்ப என்ன சார் இது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாக இருக்குமா..?’’ இப்படியான சந்தேகங்கள் பல தரப்பில் இருந்தும் எழுப்பப்பட்டு வருகின்றன! மேற்படி சந்தேகங்களை எழுப்புவதற்கான கடந்த கால கசப்பான அனுபவங்கள் பல ...
நாளும்,பொழுதும் பாலியல் புகார்கள் இல்லாமல் வாழ்க்கையை கடக்க முடிவதில்லை! எல்லா பிரச்சினைகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டியவர்கள் ஒதுங்கி செல்வதும், குற்றமிழைப்பவர் தடையின்றி தொடர்ந்து முன்னேறுவதும், பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்களுக்குள் புழுங்கி நொந்து பலியாவதும் எழுதப்படாத பொது விதியாக இருப்பதை காண முடிகிறது! குழந்தைகள் மலரைப் போன்றவர்கள், அவர்களுக்கு ஒரு பாதிப்பு எனில், அதற்கு உடனே முக்கியத்துவம் கொடுத்து, அந்த அநீதியை தடுக்க கூடிய மனமில்லை எனில், அல்லது துணிவில்லை எனில் இந்த உலகம் உயிரோடு இருப்பதைவிடவும் மண்ணுக்குள் புதைந்து அழிந்துவிடுவது எவ்வளவோ மேலானதாகும். நம் ...
தனியார் பள்ளிகள் என்பவை மிகப் பெரிய கேள்விக்கு அப்பாற்ப்பட்ட அதிகாரமையங்களானதில் தொடங்குகிறது இந்த மாதிரியான பிரச்சினைகளின் மூலம்! பத்மா சேஷாத்திரி பள்ளியில் ராஜகோபாலன் (59) இப்போது தான் வெளியில் தெரிய வந்து மாட்டியுள்ளார். பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை தந்த இது போன்ற சம்பவங்களின் பின்னணி என்ன..? ஆக, இந்த முதிய வயசிலேயே – தன் மகளாகவோ, பேத்தியாகவோ கருத வேண்டிய பெண் குழந்தைகளிடம் இந்த ஆட்டம் போட்டிருக்கிறார் என்றால், இத்தனை ஆண்டுகளில் என்னென்னவெள்ளாம் செய்திருப்பார் ராஜகோபாலன்? எத்தனை குழந்தைகள் அதற்கு பலியாகி சொல்ல ...
நுழைவு தேர்வுகள் என்பதே ஒரு நுட்பமான தாக்குதல் தான்! அனைத்து கல்வி நிறுவனங்களையும் புறக்கணிக்கும் மனநிலைக்கு பெருந்திரள் இளந்தலைமுறையை நிர்பந்திக்கிறதோ…மத்திய அரசு! கற்றுக் கொடுக்கப்படுவதே ஒரு மனப்பாடக் கல்வி முறை தான்! நடைமுறை வாழ்க்கையை ஆழமாக புரிந்து கொள்ள உதவும் கல்வி முறைகள் பற்றிய அடிப்படை விழிப்புணர்வே அரசுக்கு கிடையாது. இந்த நெருக்கடியிலும் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தற்போதுள்ள இயல்பான கல்விச் சூழலை கடும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறார்கள்! 2019ஆம் ஆண்டிற்கான தேசிய கல்விக் கொள்கையிலேயே பொது நுழைவு தேர்வு குறித்து உள்ளது. ...
ஒருவர் நேர்மையானவர் சமரசமற்றவர் பொது நலனை பாதுகாப்பவர் என்றால்…, அவரை தலையில் வைத்துக் கொண்டாடுவதில் நமக்கு எந்த தயக்கமும் இல்லை! ’’நேர்மையானவர், கறாரானவர், ஊழலுக்கு அப்பாற்பட்டவர் ஆகவே, தான் துணைவேந்தர் சூரப்பாவை அண்ணா பல்கலையில் இருந்து தூக்கியடிக்க துடிக்கிறார்கள்…’’ கமலஹாசன் உள்ளிட்ட மேட்டுக்குடி மேதாவிகள் அனைவரும் இப்படித்தான் சொல்கிறார்கள்! அவர் நேர்மையானவர் என்பது உண்மையா? என்று பார்த்துவிடுவோம்! கொரனா வந்தது! பல்கலைக் கழகம் மூடப்பட்டது.படிப்பு தடைபட்டுள்ளது, என்ஞினியரிங் கல்வியை ஆன்லைன் மூலம் முழுமையாகவோ,முறையாகவோ கற்றுத் தரமுடியாது. ஆனால், ’’நீ வராவிட்டால் என்ன? படிக்காவிட்டால் என்ன? ...
























