மாணவி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆதாய அரசியல் செய்கிறார்கள் தான்! ஆனால், இந்த சம்பவத்தில் அரசும், காவல்துறையும் நடந்து கொள்ளும் விதம்  பல சந்தேகங்களுக்கு வலு சேர்க்கிறது. பல்கலை கழகத்தின் படுமோசமான நிதி நிலைமைகள் ஒருபுறமும், விடை தெரியாத கேள்விகள் பல மறுபுறமும் பிரச்சினையின் மூலத்தை மறக்கடிக்கிறது; கல்வி வளாகத்திற்குள்ளேயே அதில் படிக்கும் மாணவி வெளியாள் ஒருவனால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளது பெரும் அதிர்வுகளை உருவாக்கி உள்ளது. இதில் 80 சதவிகித சி.சி.டிவி கேமரா வேலை செய்யவில்லை. தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்துள்ளது என்பதும் குற்றவாளி தொடர்ந்து ...

நூலகங்கள் அறிவு வளர்ச்சிக்கும்,  தன் நம்பிக்கைக்கும் உதவுகின்றன. அந்த நூலகங்களை நவீன தொழில் நுட்பத்துடனும், சர்வதேச தொடர்புகளை மேம்படுத்தவும் ஆகச் சிறந்த ஆளுமைகளைக் கொண்டு டெல்லியில் சர்வதேச  நூலக உச்சி மாநாடும், சென்னையில் அதற்கான முன்னோட்ட நிகழ்வும் நடக்க உள்ளன. முழு விவரங்கள்; இந்தியாவில் முதல் முறையாக  நடக்கும் சர்வதேச நூலக உச்சி மாநாடு இது தான். இந்த முதல் மாநாடு நூலக நல்லுறவு  என்ற தலைப்பில் சர்வதேச நாடுகளுக்கு இடையே நூலக கூட்டுறவு, தகவல் பரிமாற்றம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை மேம்படுத்துதல்  ஆகியவற்றை ...

நிறைய நிகழ்வுகள் நடக்கின்றன. இளம் மாணவர்கள் செல்போன் சாட்டிங், கம்யூட்டர் கேம்ஸ், ஷாப்பிங் மால்களில் சுற்றித் திரிதல், சினிமா..போன்றவற்றில் ஈடுபாடு காட்டும் இந்தக் காலச் சூழலில் திருக்குறளில் ஈடுபாடு காட்டுவதற்கும் இத்தனை இளம் பிள்ளைகளா..? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியது இந்த நிகழ்வு; மனப்பாடப் பகுதியில் வரும் திருக்குறள் பகுதியை எப்படியாவது கடந்து விட்டால் போதும் என்று மாணவர்கள் அச்சப்படுவதை பார்த்திருப்போம். ஆனால், சென்னையின் ஒரு பகுதியில் திருக்குறளின் இரண்டு அதிகாரங்களை ஒப்புவித்தலில் தொடங்கி, திருக்குறளை முற்றோதுதல் ( 1,330 திருக்குறளையும் முழுமையாக சொல்லுதல்) வரை ...

அங்கீகாரமின்றி பள்ளி தொடங்கி, பெற்றோர்களிடமே வட்டியில்லா கடனாக முதலீடு பெற்று பள்ளியை விரிவுபடுத்தி, அடிமாட்டுக் கூலிக்கு ஆசிரியர்கள், பணத்தை திரும்ப  கேட்டால் அடியாட்கள் என கல்வித்துறை, காவல்துறை இரண்டையும் கையாலாகாதவர்களாக்க முடிந்தால், இதோ இது போல் நீங்களும் கோடீஸ்வர கல்வி வள்ளலே: தமிழ்நாட்டில் அங்கீகாரமில்லாத பள்ளிகள் பெற்றோர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்து நாமம் போடுகிறார்கள் என்பதற்கும், இது தொடர்பான புகார்களுக்கு கல்வித் துறையும், காவல்துறையும், நீதிமன்றங்களும் எப்படி மதிப்பளிக்கிறார்கள் என்பதற்கும் இது ஒரு  சான்று; செங்கல்பட்டு , காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தின் மண்ணிவாக்கத்தில் இயங்கி ...

இந்துத்துவர்கள் இமாலய குற்றம் செய்தாலும் மரியாதை. உண்மையான கல்வியாளர்களுக்கோ அவமரியாதை! ஆளுநர் அதிகாரமே உயர்கல்வி துறையில் கொடி கட்டி பறக்கிறது. தமிழக ஆட்சியாளர்களோ கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்கிறர்கள்..என்பதற்கு பெரியார் பல்கலைக் கழகத்தில் நடக்கும் சம்பவங்கள் சாட்சியாகும்; பெரியாரைப் பற்றி எப்படி ஆய்வு செய்யலாம்? என பெரியார் பெயரிலான ஒரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கடந்த ஓராண்டாக சொல்லொண்ணா அவமானங்களை சந்தித்து வருகிறார்! மற்ற சில நேர்மையான பேராசிரியர்களோ விசாரணை என்ற பெயரில் மிரட்டப்படுகின்றனர். அதே பல்கலைக் கழகத்தில்  ஊழல் முறைகேடுகளும், தகுதியற்ற ...

செம்மொழி தமிழாய்வு  நிறுவனத்தின் துணைத் தலைவராக புராண, இதிகாச கதாகாலாட்சேப பேச்சாளரான சுதா சேஷய்யனை நியமித்துள்ளது மத்திய கல்வி அமைச்சகம். சுதாவின் பின்புலமோ அதிர்ச்சியளிக்கிறது. இது செம்மொழி ஆய்வில் உண்மையான ஆய்வுகளை புறந்தள்ளி, எத்தகைய ஆபத்துகளை உருவாக்கவுள்ளது என்பது குறித்த அலசல்;’ மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், தமிழின் தொன்மை, அதன் இலக்கண, இலக்கிய செழுமை குறித்த ஆய்வுக்கானது. இதில் செவ்வியல் தமிழ் நூல்கள், பழங்கால இலக்கிய, இலக்கணம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இத்தகு ஆழ்ந்த ஆய்வு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சதா சர்வ ...

மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாததால் தான் தமிழகத்துக்கான கல்வி நிதியை மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது என்பது உண்மையா? எதார்தத்தில் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தி அல்லவா வருகிறது…? உண்மை என்ன..? ‘இந்தியாவில் பள்ளிக் கல்வியின் மிக முக்கியமான பிரச்சனை, அரசிடமிருந்து நிதி உதவி கிடைக்காதது தான்’ என்று  Uncertain Glory என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள் அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டிரஸ். தமிழ்நாட்டில் இயங்கும் ஒவ்வொரு செய்தி  ஊடகமும் இப்பிரச்சனையை ...

யோகா பயிற்சி, தியானப் பயிற்சி, உடற்கல்வி ..என பல வழிகளில் அரசு பள்ளிக்குள் சனாதன சக்திகள் கடந்த ஓராண்டாக நுழைந்த வண்ணம் இருக்கின்றனர் என ஆசிரியர்கள் சொல்லி வந்த போது அலட்சியம் காட்டப்பட்டது. இன்று கண்ணொளி இல்லா ஆசிரியரின் துணிச்சலால் உருவான காணொளி அம்பலப்பத்திவிட்டது; அசோக் நகர் அரசு பள்ளியில் ஆதிக்க சக்திகள் நடத்திய சம்பவம் வெளியில் தெரிய வந்ததால் இவ்வளவு பரபரப்பு! கடந்த ஓராண்டாகவே இது போல தமிழகம் முழுக்க பல பள்ளிகளில் சில அமைப்பினர் கல்வித் துறை அனுப்பியதாக யோகா பெயரிலும், ...

பள்ளிக் கல்வித் துறை படு வேகமாக வீழ்ந்து கொண்டுள்ளது பாதாளத்தில்! அடிதடி, ரகளை, ரத்தக் களரி, போதை வஸ்து பழக்கங்கள், சாதிய மோதல்கள், பாலியல் அத்துமீறல்கள்…எனக் கல்விக் கூடங்கள் கலவரக் கூடங்களாக மாறி வருகின்றன. என்ன காரணம்? யார் பொறுப்பு? செய்ய வேண்டியவை என்ன..? இரு மாணவர்களிடையே ஏற்பட்ட ஒரு சாதாரண வாய்த் தகறாறு முற்றி மோதலாகி, பதினொன்றாம் வகுப்பு மாணவர் ஆகாஷ் சமீபத்தில் (23/08/2024)  உயிரிழந்த செய்தி நம்மையெல்லாம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இடம், நாமக்கல் மாவட்டம் வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளி! பள்ளிக் கூடங்கள் ...

கொல்கத்தாவில் மருத்துவ மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் அநீதிக்கு ஒட்டு மொத்த இந்தியாவும் கொந்தளித்தது. கிருஷ்ணகிரி பள்ளியின் 13 மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் எந்தக் கட்சியும், எங்குமே போராட்டம் நடத்தவில்லை. என்ன நடந்து கொண்டு இருக்கிறது..? கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள கந்தி குப்பத்தில் இயங்கும் பிரபல தனியார் பள்ளியான கிங்ஸ்லி கார்டன் பள்ளியில் என்.சி.சி முகாம் என்பதாக போலியான ஆட்களை வைத்து நடத்தப்பட்ட முகாமில் 13 பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதும், பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் பள்ளி ஆசிரியர்களிடமும், முதல்வரிடமும் ...