யானைகளை யாருக்குத் தான் பிடிக்காது. அதன் கம்பீரத்தை பார்க்கும் போதே ஏதோ ஒரு உற்சாக ஊற்று நமக்குள் தோன்றுகிறது! அது நடக்கும் நடையழகோ வித்தியாசமானது. அதன் மிகச் சிறிய கண்கள், பெரிய காதுகள், நீண்ட தும்பிக்கை..யாவும் பரவசம் தரக் கூடியவை! வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி. யானை முகம் கொண்ட கடவுளை ஆண்டு தோறும் வழிபடும் நாம் யானையை பாதுகாப்பதில் எவ்விதமான அக்கறையை கொண்டிருக்கிறோம்…? ஒரு பக்கம் யானையின் தலைதான் கடவுள். மற்றொரு பக்கம் உயிருள்ள அதே யானையை பிச்சை ...
அவன் நன்றாக படித்த இளைஞன், ஹிந்து மதத்தை சேர்ந்தவன், உ.பியின் கொராக்பூர் உனாவுலி கிரமத்தில் கிராம பஞ்சாயத்து செயலாளரும் கூட! பார்க்க அழகான தோற்றம் கொண்டவன்! பெயர் அனிஷ் கன்னோஜியா! முதலமைச்சர் ஆதித்திய நாத்தை நேரடியாக சந்தித்து பேசும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ்சின் தீவிர செயற்பாட்டாளர்! அவனை தீப்தி மிஸ்ரா என்ற பெண் காதலித்தாள்! அவனும் அவள் அழகால், பேச்சால் ஈர்க்கப்பட்டான்! எனினும், அந்தக் காதலை பெண் பிராமண குலம் என்பதால், அவன் முதலில் தவிர்த்துப் பார்த்தான். ஆனால், காலப் போக்கில் காதலில் வீழ்ந்தான். இருவரும் ...
ஆட்சிக்கு வந்ததும், ”அர்ச்சகர், ஓதுவார்கள் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்” என அறிவித்தது திமுக அரசு! அவ்வளவு தான்! பரம்பரை, பரம்பரையாக மட்டுமே இது வரை அர்ச்சகர் நியமனங்களை செயல்படுத்தும் கூட்டம் ”இது ஆகமவிதிகளுக்கு எதிரானது” என்று கோர்ட்டுக்கு சென்றுவிட்டது! ஆகமவிதி என்பது இறைவனை வழிபடும் பக்தி முறைகள் சம்பந்தமானதா..? அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் பிழைப்பு தொடர்பானதா..? ஆகமவிதிகள் என்று சொல்லப்படுவது வழிபாட்டுத் தலங்களின் அமைப்பு பற்றியதாகும். கருவறையின் அமைப்பு, வழிபடும் சிலையின் வடிவமைப்பு, எந்தெந்த திசையில் என்னென்ன இருக்க வேண்டும். எப்படி வழிபாடு ...
மகிழ்ச்சி, வெள்ளை அறிக்கையின் மூலம் ஒரு விவாதத்தை, விழிப்புணர்வை விதைத்தற்கு! பி.டி.ஆர்.தியாகராஜனின் வெளிப்படைத் தன்மைக்கு ஒரு சல்யூட்! ஐயோ..இவ்வளவு கடனா..? இவ்வளவு நெருக்கடிகளா..என வியக்கும் போது, இந்த விபரீதங்களுக்கு வித்திட்டது யார்..? அதிமுக மட்டுமே அத்தனைக்கும் பொறுப்பாகுமா..? ஒரு வகையில் வெள்ளை அறிக்கை மூலம் தன்னை வெளிப்படைத் தன்மைக்கு இந்த அரசு தயார்படுத்திக் கொண்டுள்ளது என்ற வகையில் மகிழ்ச்சியே! சென்ற ஆட்சியாளர்களின் தவறுகளை சொல்வதன் மூலம் தாங்களும் அதே பாதையில் பயணிக்க நேர்ந்தால் கேள்விக்கு உள்ளோவோம் என இவர்கள் உணர்ந்திருப்பார்கள் தானே! தமிழக நிதிஅமைச்சர் ...
மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது என்பதற்கேற்ப அறம் பேசும் உண்மைகள் சமூக, அரசியல் தளத்தில் அதிர்வுகளை தொடர்ந்து உருவாக்கி வருகின்றன! எழுதப்படும் வார்த்தைகளில் வாய்மை இருந்தால், அதற்கொரு வலு இயல்பாகவே ஏற்பட்டுவிடும்! அறச் சிந்தனையின் பாற்பட்ட வாசகர்களே இதழின் பலமாகும்! சமகால நிகழ்வுகள் குறித்த சமரசமற்ற விமர்சனங்கள்! சார்பு நிலையின்றி யதார்த்தங்களை உள்வாங்கி உண்மைகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைகள்! உள்ளுர் நிகழ்வுகள் தொடங்கி, உலக அரங்கில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் வரை அலசி, ஆய்வு செய்து சாரத்தை பிழிந்து எளிமைப்படுத்தி தரும் கட்டுரைகள்! இப்படியாக 11 ...
இது 18 ம் நூற்றாண்டு நாயக்கர் கால சமூகத்தை துல்லியமாக சித்தரிக்கும் நாவல்! சாதிகளுக்கிடையிலான நுட்பமான மோதல்களும், ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்வதற்கான சூழ்ச்சிகளும், அதனால் ஏற்படும் பேரழிவுகளும், பாதிப்பு ஏற்படுத்துவர்களின் பதற்றமும், பாதிக்கப்படுவர்களின் சீற்றமுமான வரலாற்றில் நாம் இழந்ததையும், மீண்டதையும் பல அரிய தகவல்களுடன் படு விறு, விறுப்புடன் சுவைபடச் சொல்கிறது இரா.முத்துநாகுவின் ’சுளுந்தீ’ ஒரு சமுதாயம் எந்தக் காலத்திலும், அதனளவில் நிறைவாகவே இருந்திருக்கிறது. இப்போது ‘அரசு இரகசியம்’ என்றால், அப்போது ‘அரண்மனைக் கமுக்கம்’; இப்போது ‘காவல்துறை’ என்றால், அப்போது ‘குடிபடை’ , ...
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடம்! உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் முதலிடம்! அதிக அளவில் பற்பல இனங்களை,கலாச்சாரக் குழுக்களை கொண்ட நாடுகளில் முதன்மை இடம்! உலகில் அதிக பணக்கார்களை கொண்ட நாடுகளில் ஆறாவது இடம்! உலகின் நுகர்வு சந்தை கலாச்சாரத்தில் மூன்றாவது இடம்! ஆனால், ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் மட்டும் 47 வது இடம்! நம்மை ஒத்த ஆசிய நாடான சீனா ஒலிம்பிக்கில் 38 தங்க பதக்கங்களுடன் மொத்தம் 87 பதக்கங்கள் பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவால் ஒரு ...
பாடப் புத்தகங்களில் உள்ள மிக முக்கிய தலைவர்கள், தமிழின் ஆளுமைகளை சாதி பின்னொட்டுடன் குறிப்பிட்ட வழக்கம் பல காலமாகவே தொடர்ந்துள்ளது. பெயருக்கு பின்னால் உள்ள சாதி பின்னொட்டை தூக்கி எறியும் செயலை சுதந்திர போராட்ட காலத்திலேயே பெரியார் செய்துவிட்டார். அவரைப் போலவே பல்வேறு தலைவர்களும் செய்தனர். சுதந்திர போராட்ட காலத்திலும், திராவிட மறுமலர்ச்சி தோன்றி பெருவெள்ளமென பாய்ந்த காலகட்டத்திலும் சாதி அடையாளத் துறப்பு இயல்பாகவே நடந்தேறியது. பொதுவுடமை சித்தாந்த இயக்கங்களிலும், தொழிலாளர் வர்க்க இயக்கங்களிலும் சாதி அடையாளத் துறப்பு மிக இயல்பாக இருந்ததை கண் ...
காந்தியின் ஆஸ்ரம வாழ்க்கையே அவர் வாழ்ந்த எளிமை, கைத்தறி உள்ளிட்ட கிராம கைத் தொழில்கள், கால்நடை வளர்ப்பு, லட்சிய வாழ்க்கைக்கான அடையாளம்! அதாவது காந்தி வாழ்ந்த இடமே அவரது லட்சியங்களை பறை சாற்றுவதாய் இருக்கும்! அது தான் பாஜக அரசின் பிரச்சினையாகிவிட்டது! அந்த மனுஷனை அழித்துவிட்டோம் என நிம்மதி பெருமூச்சுவிட முடியவில்லையே! அவர் வாழ்ந்த இடமே ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்ததாக உள்ளதே. லட்சக்கணக்கான மக்கள் விரும்பி வந்து தரிசித்து, அவரது உணர்வுகளை உள்வாங்கி, செய்திகளை எடுத்துச் செல்லும் திருத்தளமாக இருக்கிறதே! நம்ம ஆட்சியில் இதற்கொரு ...
“இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 5569 சிறைக்கைதிகள் இறந்து போனதாக மக்களவையில் உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார். 2018 – 2019 ஆம் ஆண்டு முதல் 27.7.2121 வரையுள்ள காலத்தில் தமிழ்நாட்டில் 232 சிறைக்கைதிகள் இறந்து போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”. அதாவது உத்திரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக காவல் மரணம் அதிக அளவில் அடையும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, மனிதவள மேம்பாட்டுக் குறியீடு(HDI) என பலதுறைகளிலும் சிறந்து விளங்கும் தமிழ்நாடு, சிறைக்கைதிகளின் சித்திரவதைகளிலும் ‘சிறந்து’ விளங்குகிறது என்ற அவப்பெயரை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு சாத்தன்குளம் காவல்நிலையத்தில் பென்னிக்ஸ் இமானுவேல் ...