இது லாகப் டெத் கூட இல்லை! நடு ரோட்டுச் சாவு அல்லது கொலை. சாத்தான்குளத்தில் ஒலித்த சாவு மணி ஏத்தாபூரில் ஏகத்திற்கும் தொடர்கிறது என்பது மட்டுமல்ல, இன்னும் அது தொடர்ந்து கொண்டே செல்வதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம்! இப்படி நிதானமின்றி நடந்தால் அதிகபட்சம் தற்காலிக பணி நீக்கம் தானே..பார்த்துக் கொள்ளலாம்! நான் போலீஸ், ஆகவே, நான் யாரையும் அடிக்க,உதைக்க உரிமையுள்ளவன். கொன்றாலும் நான் கொலைகாரனாக கருதப்பட்டு தண்டிக்கபடமாட்டேன் என்ற எண்ணம் காவலர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது போலும்! ஒவ்வொரு நாளும் ஏதேனும் சில இடங்களில் ...
பிடிக்காதவர்கள் மீது அவதூறு எழுதுவதும், பிடித்தவர்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய குற்றங்கள் செய்தாலும் மூடிமறைத்து அலட்சியப்படுத்துவதும் தினமலரின் வாடிக்கை! கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்கான போராட்டம், நீட் எதிர்ப்பு போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்டம்..போன்ற மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்தி எழுதும். கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களை இழிவுபடுத்தி எழுதும். முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என சித்தரிக்கும். காவல்துறை என்ன செய்தாலும் கண்ணை மூடி ஆதரிக்கும்! ஏத்தாபூர் வியாபாரி முருகேசன் போலீசால் தாக்கப்பட்டு இறந்த சம்பவம் விஷிவலாக வெளியாகி அனைவரும் ...
பத்து ஆண்டுகளாக நெடுஞ்சாலைத் துறையில் நடந்த ஊழல்களை, அந்த ஊழல்கள் மூலம் எவ்வளவு பணம் கொள்ளை அடிக்கப்பட்டது என்கிற விவரங்களைக் கண்டுபிடிக்க அதிவேகப் பாய்ச்சலுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தி.மு.க ஆட்சியின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு. ஆனால், அவரது நோக்கம் ஊழலை ஒழிக்கவா? ஒளிக்கவா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது..! அதிமுக ஆட்சியின் ஊழலை அம்பலப்படுத்த சாலைகளில் ஆய்வு எ,வ.வேலுவின் கவனம் முதலில் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தங்கள் மூலம் அ.தி.மு.க ஆட்சியில் நடந்த ‘ஐந்து வருட குத்தகை ஊழல்’ மீது சென்றது. 4,500 கோடி ...
ஒன்றல்ல, இரண்டல்ல, கணக்கிட முடியாத மோசடிகளைத் தொடர்ந்து செய்தவர்! இவர் கடன் பெறாத வங்கி ஏதாவது இருக்குமா தெரியவில்லை! அதில் ஏமாறாத வங்கி ஏதாவது தேறுமா..இருந்தால் ஆச்சரியம் தான்! குள்ளமான தோற்றம், தொந்தி வயிறு, சற்றே கறுப்பாக இருக்கும் சிவசங்கரன் ரோட்டில் நடந்தால் மல்டி மில்லினர் என்றோ..மிக செல்வாக்கான அரசியல் மற்றும் அறிவு ஜீவிகளை தன்வசம் கொண்டவர் என்றோ யாரும் நம்ப முடியாது! 1980 களில் தொழில்துறையில் காலடி எடுத்து வைத்தது முதல் மோசடியையே மூலதனமாகவும், அரசியல் செல்வாக்குகளையே அரணாவும் கொண்டு தைரியமாக உலா ...
வழக்கத்திற்கும் அதிகமாகவே இந்த சட்டமன்ற கூட்டத் தொடர் குறித்த விமர்சனங்கள் பொது வெளியில் விவாதிக்கப்பட்டு வருகின்றன! திமுக அரசின் மீதான மக்களின் எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும் அதிகரித்துள்ளதன் விளைவாகவே இதை பார்க்க முடிகிறது. இன்றைய கவர்னர் உரையில் வரவேற்கதக்க முதல் அம்சம் ஒரு திராவிட இயக்க அரசாங்கத்திற்கு இசைவாக கவர்னர் பேசியுள்ளார் என்பதே! எனினும், இது சந்தர்ப்ப சூழலுக்காக அவரது உதடு உரைக்கும் வார்த்தைகளே என்ற புரிதல் இல்லாமல் நாம் புளகாங்கிதமடைந்துவிடக் கூடாது! நீட் தேர்வு ரத்து முயற்சிகள், உழவர் சந்தை, விவசாயத்திற்கு தனி பட்ஜெட், ...
பத்தடிக்கு பத்தடி கொண்ட தகரக் கொட்டகை! வறுமையின் உச்சம்..! அடிப்படை வசதிகளற்ற அவலங்கள் சுதந்திரமாக நடமாட முடியாத கடுமையான கட்டுபாடுகள்..! மொத்ததில் ஒரு திறந்த வெளி சிறைச்சாலை போலத் தான் இருக்கிறது தமிழ் நாட்டில் 35 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை தமிழர்களின் நிலைமை..! ” இலங்கை தமிழர் அகதிகள் முகாமிற்கு நான் சென்று வரும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தாமல் வீடு திரும்பியதில்லை. அந்த அளவுக்கு அங்கு நிலைமை உள்ளது. வெயில் காலத்தில் வீட்டிற்குள் இருக்க முடியாது .வெளியில் வந்து மரத்தின் கீழ்தான் ...
தமிழக விவசாயிகளுக்குத் தொடரும் தொல்லைகள்…! காவிரியில் மேகே தாட்டு என்ற இடத்தில் 48 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இரு அணைகளைக் கட்டப் போவதாக கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அண்மையில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்திற்கு இனி சொட்டுத் தண்ணீர் கூட செல்லக் கூடாது என கர்நாடகம் திட்டமிடுகிறது…! இது வரையிலான கர்நாடகாவின் அநீதிகளும், நமது இயலாமைகளும் மேலும் தொடருமா..? நாம் செய்ய வேண்டியது என்ன..? ஆனால், இது, எந்த விதத்திலும் தமிழகத்தை பாதிக்காது என விளக்கம் அளித்துள்ளார், எடியூரப்பா! # கர்நாடகாவுக்கு உரிமையான 270 ...
மக்களை அதிகமாக பாதிக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு தருவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது! அதன்படி அரசு நிர்வாகங்களின் சேவையை காலம் தாழ்த்தாமல் உறுதிபடுத்தும் சேவை பெறும் உரிமை சட்டம் நிறைவேற்றப்படுமா..? இந்தியாவில் சுமார் 13 மாநிலங்கள் சேவை பெறும் உரிமையை சட்டமாக்கியுள்ளன! அவை சுமார் பத்தாண்டுகளாக டெல்லி, பஞ்சாப், ஜார்கண்ட், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக தமிழ் நாட்டை ஆட்சி செய்த அதிமுக அரசு இந்த நல்ல சட்டத்தை அமல்படுத்த மறுத்துவிட்டது. 2019 ...
அடக்குமுறைச் சட்டங்கள், மக்களை பிரித்தாளும் தந்திரங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள்..! இது தான் இன்றைய பாஜக அரசு! மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பயங்கவாத முத்திரை! தேச விரோத குற்றச்சாட்டுகள்..! சமீபகாலமாக உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி, மனித நேயத்தை காட்டி வருவதற்கு இந்த தீர்ப்பையும் உதாரணமாக சொல்லலாம்..! நடாஷா நார்வல், தேவாங்கனா கலிதா,அசீப் இக்பால் தன்ஹா என்ற மூன்று மாணவ மணிகளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி உயர்நீதி மன்றம் பிணை வழங்கியது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவிகளான ...
பப்ஜி மதன் விவகாரத்தின் உள்ளே சென்று பார்த்தால்.., இவன் மட்டுமல்ல, இவனை போல இன்னும் பல ஜித்தன்ங்க இந்த பீல்டுல குழந்தைகளை சின்னாபின்னப்படுத்திக் கிட்டு இருக்காங்கன்னு தெரியுது..! ஒன்றரை வருஷத்திற்கு முன்னால குழந்தைகள் செக்ஸ் படங்களை பார்க்கிறவங்களை கண்காணிக்கிறோம் அவங்க நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவாங்கன்னு காவல்துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்புக்கு பிறகு தான் இந்த மாதிரி விவகாரங்களே டாப் கீருல போயிருக்கு..! எத்தனையோ சமூக அரசியல் பிரச்சினைகளை பற்றி விலாவாரியாக எழுதிகிட்டு இருக்கேன். இந்த மதன் விவகாரம் வெளியே வந்த போது தான் ...