விளம்பரங்களால் மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்துவிடுவதில்லை. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது குறிப்பிட்ட சில பகுதியினருக்கு சாத்தியமாகியும், பெரும்பாலான மக்களுக்கு அடைப்படை தேவைகளே நிறைவேறாத நிலைமையிலுமே உள்ளது. அரசுப் பணிகளே அரிதாகி வருகிறது; இதோ, சில மறுக்க முடியாத உண்மைகள்; சபாஷ்! வாழ்த்துக்கள் முதலமைச்சர் அவர்களே! இன்றைய தினம் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு உச்சத்தை தொட்டதாக பக்கம், பக்கமாக விளம்பரம் தந்துள்ளீர்கள்..! இதோ, நீங்கள் சொல்லாமல் விட்ட மு.க. ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளை பட்டியல் இட்டுள்ளேன். தமிழ்நாட்டின் கடனை நான்கே ஆண்டுகளில் இரட்டிப்பாக்கி, அதாவது ...
இது உலக நாடுகளில் எல்லாம் வரவேற்பு பெற்று ஓடிய ஒரு இந்தி திரைப்படம்! உலகின் முக்கிய திரைப்பட விழாக்களில் திரையிடப் பெற்று, பல விருதுகளை பெற்ற இந்த படத்தை இந்தியாவில் திரையிட மறுத்துள்ளது மோடி சர்க்கார். தற்போது ஆஸ்கார் விருதுக்கு இங்கிலாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட சந்தோஷ் படத்தை ஏன் திரையிட முடியவில்லை; இந்தப் படம் ஒரு வட இந்திய கிராமத்தின் நேர்மையான லேடி கான்ஸ்டபிள் சந்திக்கும் பிரச்சினைகளை பற்றி எடுக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் சைனி என்பது இந்தப் பெண்ணின் பெயராகும். இவளுடைய போலீஸ்கார கணவர் ஒரு ...
தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக முயற்சித்து வரும் தமிழக கல்வியாளர்களுக்காக இந்த கட்டுரையை சமர்ப்பிக்கின்றோம். கடந்த ஐந்து வருடங்களாக தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்வியாளர்கள் எதிர்த்து வருகின்றோம். தேசிய கல்விக் கொள்கை அதன் செயல்பாடுகளும் திட்டங்களும் தெளிவாக அரசின் அறிவிப்புகளாக வெளிவந்துவிட்டன. ஆகையால் ஒவ்வொரு கல்வியாளரும் அதனைப் புரிந்து அதனை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? அதனால் ஏற்படும் பாதகங்கள் என்ன என்பது பற்றித் புரிந்துள்ளோம் . கடந்த சில வருடங்களாக அரசின் தவறான கொள்கை முடிவினால் பல்கலைக்கழகங்கள் சீரழிந்து வருகின்றது. ...
ஆடாத ஆட்டமா? போடாதா கூத்தா? அனுபவிக்காத சுக போக இன்பங்கள் ஏதேனும் உண்டா…? தன்னையே கடவுள் என்றார்..! கைலாசா நாட்டின் அதிபர் என்றார்…! எத்தகு ஆற்றல்களாயினும் தன்னைத் தானே சுயகட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாத ஆளுமைக்கு இன்றென்ன நிலைமை? ஏனிந்த பரிதாபம்..! எத்தனையெத்தனையோ இன்பங்களை சாமியார் கெட் அப் தந்த சலுகையில் அனுபவித்து திளைத்த நித்தி, பல செய்யக் கூடாத தவறுகளையும் செய்து, பண்ணக் கூடாத பாவங்களையும் சேர்த்தே செய்த வகையில், அதிகார உயர்மட்டத்தில் இருந்த ஆதரவைக் கொண்டு தப்பித்து வந்தார். வினைப் பயன்களுக்கான ...
மகாராஷ்டிராவா? குஜராத்தா? தீர்வு என்ன?. தனி நபரா? அமைப்பா? தகராறு தொடருமா..? பிராமணனா? ஷத்திரியனா? மோடி உடன்பாட்டுக்கு வருவாரா? அல்லது உதறித் தள்ளி விட்டு போவாரா…? மோடியோ மக்கள் தலைவர். ஆர்.எஸ்.எஸ்சோ மாபெரும் இயக்கம்! வெற்றி பெறப் போவது யார்? நீண்ட நாட்களாக நீடித்துக் கொண்டிருக்கும் பனிப் போர் முடிவுக்கு வந்தாக வேண்டிய கால கட்டம் நெருங்கிவிட்டது. எந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் அடையாளம் பெற்று ஆளுமையாக ஆனாரோ, அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சங்காத்தமே வேண்டாம்..என்று தனி ஆவர்த்தனம் நடத்தி வந்த மோடி, இன்று ஆர்.எஸ்.எஸுக்கு ...
உண்மை சுடுகிறது! இந்துத்துவ வெறியர்கள் கொந்தளிக்கின்றனர். தயாரிப்பாளர் தேச விரோத சட்டத்தில் கைது செய்யப்படுவார். மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை நுழையும். இயக்குனர் பிரிதிவிராஜ் அமலாக்கத் துறையை எதிர்கொள்வார் ..என்று ஏகத்துக்கும் அச்சுறுத்தி, எம்புரான் படத்தில் அவசர, அவசரமாக கத்திரி வைத்து அதகளப்படுத்தி உள்ளனர்; சமகால மதவாத அரசியலால் சமூக தளத்தில் ஏற்பட்ட மாபெரும் பாதிப்பை கலை படைப்பின் வழியாக சுதந்திரமாக சொல்ல முடியாத அவல நிலை தோன்றி உள்ளது என்பதை தான் எம்புரான் படத்திற்கு மதவாத சக்திகளால் தரப்பட்ட கடும் அச்சுறுத்தல்களும், அதைத் ...
ஆன்மிக அரசியலை பேசும் பாஜக – சிவசேனாவினருக்கு தங்களை விமர்சிப்பவர்களை ஏன் அகிம்சை முறையிலோ, சட்டப்படியோ அணுக முடியவில்லை. மகாராஷ்டிரா பாஜக அரசு மாற்றுக் கருத்துக்களை வன்முறை மற்றும் புல்டோசர் மூலமே எதிர்கொள்கிறது என்பதற்கு அடுத்தடுத்த சம்பவங்களே சாட்சியாகும்; கூர்மையான அரசியல் விமர்சகர்! படைப்பாளி, பாடகர், நடிகர் என பல பரிமாணண்ங்கள் கொண்டவர். எள்ளல் கலந்த நகைச்சுவையுடன் இவர் வழங்கும் நகைச்சுவை நையாண்டி டாக்ஷோவுக்கு மகாராஷ்டிராவில் மகத்தான வரவேற்பு உள்ளது. குணால் காம்ரா என்றாலே வலதுசாரிகள் எரிச்சல் அடைகிறார்கள்! காரணம், தேச பக்தி, தேசியம் ...
100 நாள் வேலை திட்ட ஏழைகளுக்கு சம்பள பாக்கி! 15 ஆண்டுகளாக மருத்துவர்களுக்கு, கல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை. அரசு பணிகள் எல்லாம் ‘அவுட் சோர்சிங் ‘ என்றும், நிரந்தரமற்ற அத்துக் கூலி வேலையாகவும் மாற்றப்படுகிறது. ஆனால், எம்பிக்களுக்கோ சம்பளம் மற்றும் சலுகை என ஆண்டுக்கு 75 லட்சங்கள் தரப்படுகிறது ..! முழு விபரங்கள்; நாடெங்கும் அரசு பணிகளில் அவுட் சோர்சிங் அதிகமாகி வருகிறது. அரசு துறையிலும், தனியார் துறையிலும் ஆட்குறைப்பும், சம்பளக் குறைப்பும் ஒரு சேர அமலாகிறது. பாதிக்கப்படுவர்கள் நீதி கேட்டால், ...
எந்த ஒரு நல்ல விஷயமும் மக்களிடையே வரவேற்பு பெற்று காலூன்றும் போது பேராசைக்காரர்கள் அதை வேகமாக ஆக்கிரமித்து, செய்யக் கூடாதவற்றை செய்து மக்களை குழப்பி விடுகிறார்கள்! இங்கே மலர் மருத்துவத்தின் பெயரால் செய்யப்படும் அலப்பரைகள், மூடத்தனங்கள் குறித்து எச்சரிக்கை செய்கிறார் மருத்துவர் துர்காதேவி; மலர் மருத்துவத்தின் தாயகம் இங்கிலாந்து. மலர் மருத்துவத்தைப் பற்றியும் அதன் மகத்துவத்தை பற்றியும் முதல் முதலில் இவ்வுலகிற்கு கண்டுபிடித்து அறிவித்தவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த டாக்டர் எட்வர்ட் பேட்ச் அவர்கள் தான்! மலர் மருத்துவம் என்பது மனிதர்களோட மனதிற்கான மருத்துவம். என்பதையும், இதை ...
நீதிபதிகள் என்பவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. சுதந்திர இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் பதவி இழக்க வேண்டிய நிர்பந்தங்களை சந்தித்த நீதிபதிகளை நீதித் துறை கண்டுள்ளது. சில நீதிபதிகள் அவமானங்களை தவிர்க்க தாங்களே ராஜுனாமா செய்ததும் உண்டு. இவை பற்றி அலசுகிறார் நீதிபதி ஹரிபரந்தாமன்; டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பணக் குவியல் இந்தியா முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. அந்த நீதிபதியின் வீட்டில் தீப்பிடித்த நிகழ்வில் ஒரு அறையில் மிகப்பெரிய அளவில் பணக் குவியல் இருந்தது அம்பலமாகிவிட்டது. ஒரு அரசியல் ...