ஆருத்ரா கோல்டு, ஐ.எப்.எஸ்..போன்ற மோசடி நிறுவன வரிசையில் ஹிஜாவு அசோசியேட்டும் இணைந்துள்ளது. இந்த மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் சுமார் 40 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆட்சியாளர்களுக்கும், காவல்துறைக்கும் தெரியாமலா இவ்வளவு மோசடிகள் அரங்கேறுகின்றன..? காலம்தோறும் இது போன்ற மோசடி நிறுவனங்கள் முளைத்து வந்து வந்து நம்ப முடியாத அளவு வட்டிப் பணம் தருவதாக விளம்பரபப்டுத்தி வசூல் வேட்டை நடத்துவதும்,பின்னர் வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது. ஒவ்வொரு முறையும் ஏமாற்றும் நிறுவனத்தின் பெயர் மாறுகிறது. ஏமாற்றும் முறை மாறுகிறது! ...
அடுத்தடுத்து என 44 மனித உயிர்கள் பலியாகியுள்ளன! பல லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன! தமிழக சட்டசபை ஒருமித்து நிறைவேற்றிய ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி. ”இது அரசமைப்புச் சட்டப்படி சரியான செயல் தானா..?” என அலசுகிறார் ஹரிபரந்தாமன். பத்திரிகைகளில் காணும் தகவல்களின்படி, ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு கூறும் மையமான காரணம், ‘இந்த மசோதா சட்டமானால், இது ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை நடத்தும் முதலாளிகளின் தொழில் செய்யும் அடிப்படை உரிமையை ...
தனியார் பேருந்துகளை 1972-ல் அரசுடமையாக்கினார் கருணாநிதி! இன்று அவர் மகன் ஸ்டாலினோ அரசு போக்குவரத்தை படிப்படியாக தனியார் மயமாக்கி வருகிறார்! பொதுத் துறையானதால் மக்கள் அடைந்த நன்மைகள் என்ன? நஷ்டங்கள் என்ன..? தனியார் மயத்தால் நஷ்டங்கள் குறையுமா? தீர்வு கிடைக்குமா? கருணாநிதி போக்குவரத்து துறையை பொதுத் துறையாக்கிய ஆண்டு 1972. பொன் விழா ஆண்டான 2022 ஆம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபையில் அரசு போக்குவரத்தை தனியார்மயப்படுத்தும் கொள்கை முடிவை ஸ்டாலின் அரசு அறிவித்தது. இது மத்திய பாஜக அரசின் பொதுத் துறை ...
பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதை என விளம்பரப்படுத்தி வெளியாகியுள்ளது அயோத்தி! அந்தக் கதை ஒரு உண்மை சம்பவம். அதில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் எஸ்ராவை தொடர்பு கொண்டால், ஓடி ஒளிகிறார்! நாமும் தொடர்பு கொண்டோம். போன் எடுத்துப் பேச முன் வரவில்லை! என்ன நடந்தது..? ”தமிழ் சினிமாவில் இது வரை ஆயிரக்கணக்கான கதைகள் வந்துள்ளன! ஆனால், இது மாதிரியான ஒரு கதை இது வரை வந்ததே இல்லை என தாரளமாகச் சொல்லலாம்” என்றும், ”உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்” என்றும் விளம்பரப்படுத்தி, வெளியாகியுள்ள படம் ...
வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்தான கொடூர வதந்தியை பரப்பியது என்பது ஏதோ தவறுதலாக நடந்தல்ல! வெகு நாட்கள் திட்டமிடப்பட்டு, சிஸ்டமேட்டிக்காக நடத்தப்பட்டதே இது! திமுக அரசு பலவீனமான அரசு என்ற நம்பிக்கையில், பாஜக கையில் எடுத்துள்ள ஆயுதமே பொய்கள், வதந்திகள்! என்ன செய்யப் போகிறது திமுக அரசு? ஆகவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு போட்டால் மட்டும் போதாது! கண்டணங்கள் தெரிவித்தால் மட்டும் போதாது! கண்டிப்பாக இவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாகும்! வட இந்திய தொழிலாலர்கள் விவகாரத்தை எடுத்துக் கொண்டு இங்கு ...
க.அப்துல்கலாம், ஹைதராபாத். தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும்..? அதைத் தான் ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறாரே – கூட்டணி கட்சிகளுக்கு குழி தோண்டிய படி! கு. தங்கவேல், நாமக்கல் லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு கிளைமாக்ஸ் இப்போது கேட்க கூடாது என்கிறாரே கமல்? அரசியலைக் கூட சினிமாவைப் போல் தான் அணுகுகிறார் கமல்! ஆதாயங்கள் கிடைக்கும் வரை ஒட்டி உறவாடுவதும், சந்தர்ப்பம் பார்த்து வெட்டிக் கொண்டு விலகிச் செல்வதும், அவருக்கு புதிதல்ல! எஸ், கோபிநாத், ஆத்தூர், சேலம் சட்டசபை கூட்டத் ...
போலிகளே நிஜங்களைப் போலும், பொய்மைகளே சத்தியத்தைப் போலும் வேஷம் கட்டி விளையாடும் சமூகச் சூழல்களுக்கு இடையே சமரசமின்றி, சத்தியத்தின் பார்வையில் அறம் பயணித்துக் கொண்டுள்ளதை வாசகர்கள் அறிவீர்! அறம் வாசகர் பங்களிப்பில் மட்டுமே இது வரை வந்து கொண்டுள்ளது. இனியும் அவ்வாறே வெளிவரும்! ஆனால், வாசகர்கள் பங்களிப்பு என்பது வெகு சொற்பமான அளவில் தான் உள்ளது என்பதை சொல்லத் தான் வேண்டியுள்ளது. திரளான வாசகர் பரப்பை சென்று சேர்ந்தாலுமே கூட, மாதாமாதம் தாங்களாவே சந்தா அனுப்பும் வாசக நண்பர்கள் விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேயே தொடர்கின்றனர். ...
இனங்களுக்கு இடையிலான போரா? மதங்களுக்கு இடையிலான போரா? யூத மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் மூன்றுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த இடமாக பாலஸ்தீனத்தின் ஜேருசலேம் அமைந்ததுள்ளது மட்டுமல்ல, இஸ்ரயேலர், பாலத்தீனியர்களுக்கும் இது தான் புனித தலம்! இங்கு நடந்தது என்ன? இது ஏன் தொடர்ந்து அமைதியை தொலைத்துக் கொண்டிருக்கும் பூமியாக உள்ளது? அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஆக்டோபஸ் கரங்களோடு குரூர குணத்துடன் பல அடையாளத்தோடு நிமிர்ந்து நிற்கும் பல இனங்களை அழித்து, அங்கு தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இன்றளவும் பாலஸ்தீன பிரச்சினையில் ...
தலைப்பைப் பார்த்தால், இது தமிழ்ப் படம் என்று தோன்றலாம். ஆனால், இது மலையாளத்தில் வெளி வந்திருக்கும் தமிழ்க் கதை. லிஜோ ஜோஸ் இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி தமிழிலும், மலையாளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. புதிய அனுபவங்களைத் தருகிறது. மம்முட்டி வெளுத்து வாங்கி இருக்கிறார்! ஒரு மலையாள சினிமா தமிழ் வாழ்வை புறநிலையிலிருந்து பார்க்கும் ஒரு வினோத அனுபவத்தை படம் தருகிறது. கதை வழக்கம் போல எளிமையானது. வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வரும் ஜேம்ஸ் கேரளா திரும்பும் வழியில் தூங்கி விடுகிறார். ஒரு கிராமத்தின் அருகே ...
“ஒவ்வொரு மனிதனின் தேவையையும் பூர்த்தி செய்வதற்கு போதுமான வளம் பூமியிடம் இருக்கிறது. ஆனால், பேராசையை பூர்த்தி செய்ய அல்ல” என்றார் மகாத்மா காந்தி. சூழலியலுக்கும், நம் வாழ்க்கைக்கும் உள்ள பிணைப்பு என்ன? நாம் உண்ணும் உணவுக்கான உற்பத்தியில் பல்லுயிர்கள் அளிக்கும் பங்களிப்புகள் என்ன..? இயற்கை வளங்களே உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கான பெருங் கருணையாகும்! விரிந்த கடல், பரந்த ஆகாயம், உயர்ந்த மலைகள், ஒளி தரும் நெருப்பு , சூறாவளியும் தென்றலும் போன்ற காற்று என அனைத்தும் நம்மை வியப்படையச் செய்கின்றன! சுற்றுச் சூழலில் நம்மைச் சுற்றி ...