தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் என்ற பிரபல இருமல் மருந்தை உட்கொண்டு மத்திய பிரதேசத்தில் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்த மருந்து தமிழக மெடிக்கல் ஷாப்களிலும் பரவலாக விற்கப்பட்டவையே. தமிழ் நாட்டில் தரக்குறைவாக மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பல்கி பெருகியுள்ளதற்கு காரணம் என்ன? குழந்தைகள் இறப்புக்கு காரணமான இருமல் மருந்தில் டை எத்திலீன் கிளைகால் என்ற டி.இ.ஜி. மிக அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பெட்ரோலில்  இருந்து கிடைக்கும் ரசாயனமாகும். இது தொழிற்சாலை உபயோகத்திற்கும், பெயிண்ட் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுவதாகும். இதை இருமல் மருந்தில் ...

மதுரை நகருக்கருகில் மேலூர் அருகே கல்லங்காட்டில் சிப்காட், சிட்கோ மற்றும் எல்காட் ஆகியவற்றை அமைக்க திமுக அரசு திட்டமிட்டு, முதல் கட்டமாக மேலூர் பகுதியில் 278 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதானது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. இந்த எதிர்ப்பு தொழில் வளர்ச்சிக்கு எதிரானதா? முன்னதாக முதல்வர் முக.ஸ்டாலின் அரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மதுரையை தொழில்மயப்படுத்தவுள்ளதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சிக்கு வந்தது தொடங்கி மாநிலத்தில் அடுத்தடுத்து பல இடத்தில் தொழிற்பூங்கா அமைத்து வரும் வேளையில் மேலூரில் சிப்காட், ...

சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR) என்பதாக தேர்தல் நடவடிக்கைகளில் பல சீரழிவுச் செயல்பாடுகளை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது ஒன்றிய பாஜக அரசு. பீகாரில் பீதியை கிளப்பிய தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு நகர்வையும், நீதிமன்றத்தையே நிராகரிக்கத் துணிந்த அதன் சர்வாதிகார போக்குகளையும் குறித்த ஒரு அலசல்; பத்து ஆண்டுகளாக ஒரு பொய் பிரச்சாரம் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது –  பங்களாதேஷிலிருந்து சட்ட விரோதமாக வந்த  இஸ்லாமிய தீவிரவாதிகள் இங்கு தேர்தலில் வாக்களித்து, பாஜகவின் எதிரிகளை வெற்றி பெற செய்கிறார்கள்” – என்பதே அந்தப் பிரச்சாரம். ...

தலைமை நீதிபதி தாக்கப்படப் போகிறார் என்பதற்கு கட்டியம் கூறுவது போல சனாதன வெறியர்கள் சமூக ஊடகங்களில் வன்மத்தை தொடர்ந்து விதைத்தனர். அதை ஆட்சியாளர்கள்  ரகசியமாக ரசித்தனர். அவர் செருப்பு வீசித் தாக்கப்பட்ட பின்னரும் தாக்கியவரை சம்பிராதாயமாக விசாரித்து உடனே விடுவித்தனர். இதன் பின்னுள்ள அரசியல் என்ன? அக்டோபர் 6 ஆம் தேதி திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தலமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது மயூர் விகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் செருப்பை வீசி தாக்கினார். ஆனால், அது குறி தவறி அவரது அருகில் ...

உற்சாகமும், உத்வேகமும் தருகிறது முதலைமைச்சர் ஸ்டாலினின் அறிக்கை! அட, சூப்பர். ”உண்மையிலேயே தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் – மக்களுக்காக!” என நானும் உரக்க சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. ஆனால், அவர் கூறிய விடயங்கள் மட்டும் போதுமானதில்லை. இன்னும் கூடுதலாக பாஜகவை எதிர்க்கவும், தமிழ் மண்ணின் நலம் பேணவும் அவசியம் என உணர்ந்தேன்; தேசியக் கல்வியை தமிழக கல்வி கொள்கையாக்கி திணிக்கும் தந்திரத்தை எதிர்த்து தமிழ்நாட்டு மக்கள் போராடுவார்கள். பெரியார் மண்ணின் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் – புரட்டுக் கதைகளையும் சொல்லும் ...

கரூரில் நடந்துள்ள பெருந் துயரத்தில் விஜய்க்கு எதிரான கருத்துருவாக்கங்கள் ஆளும் கட்சியாலும், அவர்கள் ஆதரவாளர்களாலும் தீவிரமாக பரப்பப்படுகின்றன. இந்த சம்பவத்தில் விடை தெரியாத மர்மங்கள் உள்ளன. உண்மைகள் வெளிவர தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத விசாரணை அமைப்பின் தேவையை விவரிக்கிறார் வழக்கறிஞர் எம்.எல்.ரவி. த.வெ.க தலைவர் விஜய் திமுகவை கடுமையாக சாடி வரும் நிலையில் – இருதரப்புக்கும் ஒருவருக்கொருவர் பகைமை முற்றியுள்ள அரசியல் சூழலில் – விஜய் பேசும் கூட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை – குற்றம் சாட்டப்படும்  திமுக அரசின் காவல் துறையே ...

நோபல் விருது பெறும் கனவிலுள்ள அதிபர் டிரம்ப்  காசா போரை முடிவுக்கு கொண்டு வர தந்துள்ளது அமைதி திட்டமா? டிரம்பின் அமைதி திட்டம் காசாவை கபளீகரம் செய்யும் சூழ்ச்சியா?  அமைதி நாயகன் வேடம்  டிரம்புக்கு பொருந்துகிறதா? தீராப் பழியிலிருந்து  நேதன்யாகு விடுபடும் முயற்சி பலிக்குமா? ஒரு அலசல்; அமைதி திட்டத்தின் முக்கிய கூறுகள் என்ன? # தாக்குதலை நிறுத்துதல். ஹமாஸ் இஸ்ரேல்  இரு தரப்பும் பிணைக்கைதிகளை விடுவித்தல். ஆனால், காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின் வாங்கப்படாதாம். #  மேற்படிக்கு ஒத்துக் கொண்டால் ...

மது பாட்டிலுக்கு ரூ 10 அதிகமாக வாங்கப்படுவது குறித்து செந்தில் பாலாஜி அசத்தலான விளக்கம் அளித்தார். என்ன ஒரு நிதானம்! தெளிவு, அருமையான விளக்கம்…!  வாவ்! பெரிய திறமைசாலி. ஆனால், அவர் எப்படி உண்மையை ஊமையாக்கப் பார்க்கிறார், முறைகேடுகளை முறைப்படுத்தி திறம்பட நிர்வகிக்கிறார்…என ஆதாரங்களோடு பார்ப்போம்; அதாவது 10 ரூபாய் அதிகமாக வசூலிப்பது அதிமுக ஆட்சியிலும் இருந்தது, தற்போதும் உள்ளது. அப்போதும் அந்தப் புகார்களுக்கு  அபராதம் வசூலிக்கப்பட்டது. தற்போதும்  அந்தப் புகார்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. ..என துல்லியமான கணக்கை முன் வைத்துள்ளார், செந்தில் பாலாஜி, ...

நம்பிக்கை அளிக்கிறது, நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களின் துரிதமான, அக்கறையான செயல்பாடுகள்! இந்த வயதிலும் உடனே களத்தில் இறங்கி, சம்பவ இடத்திற்கும், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கும் நேரடியாக சென்று அவர் விசாரணை நடத்தும் பாங்கு வியக்க வைக்கிறது. இன்னும் ஒரே மாதத்தில் அவரிடம் இருந்து தெளிவான அறிக்கை வர வாய்ப்புள்ளது என்றே கருதுகிறேன். நேர்மையான முறையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வில் விசாரணை நடத்தி, அறிக்கை தந்தவர் நீதிபதி அருணா ஜெகதீசன் என்பதை நாம் நன்றியுடன் நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளோம். அந்த கொடிய துப்பாக்கி சூடு ...

தவிர்த்திருக்க கூடிய ஒரு பெரும் அசம்பாவிதம் அரங்கேறிவிட்டது! விஜய் , காவல்துறை, அரசு நிர்வாகம் என முத்தரப்பிலும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் உள்ளன. அலட்சியம், பொறுப்பின்மையோடு அறிவின்மையும் கைகோர்த்து நின்று 40 மனித உயிர்களை பலி கொடுத்த துயர நிகழ்வு ஒரு அலசல்; இந்த விவகாரத்தில் இன்னாருக்கு ஆதரவு, இன்னாருக்கு எதிர்ப்பு என்று தீர்மானித்துக் கொள்ளாமல் என்ன நடந்தது? எதை தவிர்த்திருக்கலாம் என்று பார்ப்போம்; நெரிசலான இடங்களில் ரோடு ஷோவும், அரசியல்  பரப்புரையும் நடத்துவது கடும் நெருக்கடியாகிறது. ஆபத்துக்கு வாய்ப்பிருக்கிறது  என்ற பட்டறிவை ...