இப்படியும் ஒரு மனிதன் இருக்கமுடியுமா? என்று வியக்க வைக்கிறார் உடுமலை செந்தில்! கோவை உடுமலையை பூர்வீகமாகக் கொண்ட செந்திலுக்கு சிறுவயது முதலே நாட்டியத்தை தவிர வேறொன்றும் தெரியாது! அதிலும் கோயில்களில் ஆடுவதென்றால் அலாதி ஆர்வம்! உடுமலை பாகவதர்,முத்துசாமி பிள்ளை,கணபதி ஸ்தபதி அகியோரிடம் நாட்டிய சாஸ்த்திர மரபுகளை நன்கு கற்று உள்வாங்கிய செந்தில் அந்த நாட்டியக் கலையை, மரபின் தொடர்ச்சியான மக்கள் கலையாக வளர்த்தெடுப்பதில், நடைமுறைப் படுத்துவதில் பேரார்வம் கொண்டவராக உள்ளார்! கடந்த முப்பதாண்டுகளாக நாட்டியமே மூச்சு என்று வாழும் செந்தில், நமது மரபில் கோவில்களில் ...
நீட் தேர்வை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என்றால், ’’நிச்சயமாக எதிர்க்கிறேன்’’ என்பது தான் என்னுடைய பதில்! ’’கல்வி என்பது மாநில அதிகாரத்தில் இருக்க வேண்டுமா? மத்திய அதிகாரத்தில் இருக்க வேண்டுமா?’’ என்றால்,சந்தேகமே இல்லாமல் சொல்வேன்; ’’மாநில அரசின் அதிகாரத்தில் இருக்க வேண்டும்! அதே சமயம் ,மத்திய அரசிடம் ஆலோசனை கலந்து செயல்பட வேண்டும்!’’ ஆனால்,தற்போது தமிழகத்தில் நடைபெறும் நீட் தொடர்பான உணர்ச்சிகரமான அரசியல் நாடகங்கள் சகிக்க முடியாதவை! கடந்த மூன்றாண்டுகளில் அனிதா தொடங்கி தற்போது ஜோதி துர்கா,ஆதித்யா,மோதிலால் வரை 16 மாணவர்களின் தற்கொலைக்கு யார் காரணம்? யார் இதற்குப் பொறுப்பேற்பீர்கள்? ...
கடவுளை அரசியல் பிழைப்புக்கு பயன்படுத்துவதை கடைசி வரை எதிர்த்த ஒப்பற்ற துறவி சுவாமி அக்னிவேஷ்! ஒரு உண்மையான ஆன்மீகவாதிக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் சுவாமி அக்னிவேஷ்! ’’கடவுளை கோயிலில் தேடாதீர்கள்…,அன்பு,கருணை, நீதி,கருணை ஆகிய வடிவங்களில் வெளிப்படுவதே கடவுள்…’’என்றவர் கடைசி வரை விளிம்பு நிலை மனிதர்களில் ஒருவனாகவே வாழ்ந்து மறைந்தார். ’’அர்ச்சகர்களையெல்லாம் சாமியாக்கிவிடாதீர்கள்! அதுவும் பிழைப்புக்கான ஒரு தொழில்! அர்சகர்கள் என்பது வேறு,அருளாளர்கள் என்பது வேறு’’ ’’இன்னினாரெல்லாம் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்றால்,அங்கே ஆண்டவன் மட்டும் எப்படி நுழைந்து குடியிருக்க முடியும்…’’ இறைவனை வழிபட வேண்டும் என்று ...
சீனா ஒரு ஆபத்தான நாடு என்பதில் சந்தேகமில்லை. அது உலக அளவில் ஒரு ஆக்கிரமிப்பாளராக உருமாறி வருகிறது என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை! ஆனால்,தற்போதைய சீன இந்திய மோதலுக்கு சீனா மட்டுமே காரணம் என்றால்,அது நம்மை நாமே ஏமாற்றுவதாகத் தான் முடியும்! ரஷ்யாவில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருக்கும்,சீன வெளியுறவு அமைச்சர் வாங்யிக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவை இரு நாடுகளாலும் எட்டமுடியவில்லை! அதற்கு முன்பு ராஜ்நாத்சிங் சீன அமைச்சரிடம் பேசியது பலனளிக்கவில்லை. இரு தரப்புமே ஒன்றையொன்று நம்ப தயாராயில்லாததே காரணமாகும்! எல்லையில் எந்த நேரம் ...
வெறும் சம்பிரதாயத்திற்காக, ஒரு சடங்கை நிறைவேற்றுவது போல, நாங்களும் சட்டமன்றத்தில் ஜனநாயக பூர்வமாக எதிர்கட்சியோடு விவாதித்து மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து தான் செயல்படுகிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக மூன்று நாட்கள் கலைவாணர் அரங்கத்தில் கூடவுள்ளது சட்டமன்றம்! இதில் முதல் நாள் இறந்த சட்டமன்ற உறுப்பினர்கள்,தலைவர்களுக்கான இரங்கல் நிகழ்வில் போய்விடும்! அடுத்த இரண்டு நாட்களில் ஏராளமான சட்ட மசோதாக்கள் அவசர கதியில் அறிவிக்கப்பட்டு விவாதமின்றி நிறைவேறவுள்ளது. முக்கியமாக எட்டுமாதத்திற்கான துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன விடுபட்டுள்ளது,எவற்றை கூடுதல் கவனப்படுத்த வேண்டும் என்றெல்லாம் ...
கங்கனாவை ஒரு மிகப் பெரிய மக்கள் தலைவியாக்கியே தீருவதென்று சிவசேனா தீர்மானித்துவிட்டது என்பதாகத் தான் சம்பவங்கள் போய்க் கொண்டுள்ளன! கங்கனா ரணாவத்துக்கும் சிவசேனாவிற்குமான மோதலில் சிவசேனை தன்னுடைய பக்குவமற்ற அணுகுமுறையின் மூலமாகப் படுமோசமான விளைவுகளைச் சந்தித்து வருகிறது! இந்தியாவிலேயே மிக மோசமான ஒரு பாசிஸ்ட் அரசியல் இயக்கம் என்றால்,யாருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிவசேனா தான்! அந்த அளவுக்கு டெரரான ஒரு அரசியல் கட்சியான சிவசேனை சமீப காலமாகச் சரிவைக் கண்டு வருகிறது! இந்து மதத்தையும்,மகாராஷ்டிர பாரம்பரியப் பெருமைகளையும் உயர்த்தி பிடிப்பதற்கும், பாதுகாப்பதற்குமான இயக்கமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சிவசேனைக்கு ஒரு மிகப் பெரிய மரியாதையும்,ஆதரவும் குறிப்பிடத்தக்க அளவில் ஒரு காலத்திலிருந்தது என்பதை மறுக்கமுடியாது.ஆனால்,அந்த தகுதியை தன் நடவடிக்கைகளின் மூலம் காலப்போக்கில் அது ...
தமிழகமும்,இந்தியாவும் இதற்கு முன்பில்லாத நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் நிலையில் திமுக என்ற எதிர்கட்சி ஆக்கபூர்வமாக செயல்பட்டு களம் காண வேண்டும் என்று தமிழக மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால்,அந்த கட்சி இதை உணர்ந்ததா என்று தெரியவில்லை! இன்றைக்கு நடக்கும் பொதுக் குழு கூட்டத்தில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக 82 வயது துரைமுருகனும்,பொருளாராக 80 வயதை தொடவுள்ள டி.ஆர் பாலுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. அந்தக் கட்சி முதியோர்களின் கூடாரமாகவே தொடர வேண்டுமா? என்பது தான் கட்சியில் இருப்பவர்கள் மற்றும் கட்சி அபிமானிகள் ...
ஒரு கட்சிக்குள் இரு தலைவர்கள்! இருவருமே ஒருவரை ஒருவர் காலி பண்ணத் துடிக்கிறார்கள்! இருவருக்குமே கட்சி மீதும் அக்கரையில்லை! ஆட்சி நிர்வாகத்திலும் அக்கரையில்லை! இருவருமே பாஜகவின் பதந்தாங்கிகள்! இருவருமே தலைவனுக்குள்ள எந்தப் பண்பு நலனும்,தலைமை குணமும் அறவே இல்லாதவர்கள் இருவருக்குமே சுய அடையாளம் கிடையாது! இருவருமே பொதுச் சொத்தை சூறையாடுவதில் மன்னர்கள்! இருவருமே சுயநலத்தின் உச்சம்! இருவருமே சசிகலா வந்தால் சரணாகதி அடையக் காத்திருப்பவர்கள்! ஆட்சி அதிகாரம் மட்டுமே இருவரையும் இணைத்துள்ளது! அத்துடன் பாஜகவின் நிர்பந்தத்தால் மட்டுமே இவர்கள் இணைப்பு இறுக்கி பிடித்து காப்பாற்றப்பட்டு ...
’’இவர் குற்றமற்றவர், புகாருக்கே முகாந்திரமில்லை.’’ என விசாரணை செய்யாமலே உடனே தூய்மை சான்றிதழ் அளித்து விடுவிக்கப்பட்டுள்ளார் மத்தியப் பிரதேச நீதிபதி ஒருவர்! மாவட்ட நீதிபதி ஒருவரால் தான் பாலியல் பாதிப்புக்கு ஆளானதாக நீதித்துறை சார்ந்த பெண்ணின் வழக்கை விசாரித்த மத்தியப் பிரதேச நீதிமன்றம் அந்த நீதிபதி மீது ஒழுங்கு விசாராணை நடத்த உத்தரவிட்டது. அந்த நீதிபதியோ, ’’என்னை விசாராணை செய்யக் கூடாது இது என் பதவி உயர்வை பாதிக்கிறது’’ என உச்ச நீதிமன்றத்தில் முறையிடுகிறார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ...
கண்டே பிடிக்கமுடியாத கைலாசா என்ற தனி நாடு, அதற்கான கரன்சி, தங்க நாணயம், ரிசர்வ் வங்கி, அந்த நாட்டுக்கான சட்டதிட்டங்கள், கொள்கைகள் ,இது உலகில் உள்ள அனைத்து இந்துக்களுக்குமான தேசம்….இங்கே முக்கிய பதவிகளுக்கான வேலை வாய்ப்புகள்…போன்ற அறிவிப்புகள்… என்று அதிரடியாக கலக்கிக் கொண்டிருக்கும் நித்தியானந்தாவின் உண்மை நிலை என்ன என்பதை இந்தக் கட்டுரை அம்பலப்படுத்துகிறது. உலகமே கொரோனா பிரச்சினையில் துவண்டு கொண்டிருக்க, குழந்தைகள் கடத்தல்,பாலியல் புகார்,கொலைவழக்கு ஆகியவற்றில் தேடப்படும் குற்றவாளியாக அறியப்பட்டவரான நித்தியானந்தாவால் எப்படி இவ்வாறு பிரம்மாண்டமான அறிவிப்புகளை வெளியிட முடிகிறது என்பது இருக்கட்டும் ...