’’இவர் குற்றமற்றவர், புகாருக்கே முகாந்திரமில்லை.’’ என  விசாரணை செய்யாமலே உடனே தூய்மை சான்றிதழ் அளித்து விடுவிக்கப்பட்டுள்ளார் மத்தியப் பிரதேச நீதிபதி ஒருவர்! மாவட்ட நீதிபதி ஒருவரால் தான் பாலியல் பாதிப்புக்கு ஆளானதாக நீதித்துறை சார்ந்த பெண்ணின் வழக்கை விசாரித்த மத்தியப் பிரதேச நீதிமன்றம்  அந்த நீதிபதி மீது ஒழுங்கு விசாராணை நடத்த உத்தரவிட்டது. அந்த நீதிபதியோ, ’’என்னை விசாராணை செய்யக் கூடாது இது என் பதவி உயர்வை பாதிக்கிறது’’ என உச்ச நீதிமன்றத்தில் முறையிடுகிறார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ...

கண்டே பிடிக்கமுடியாத கைலாசா என்ற தனி நாடு, அதற்கான கரன்சி, தங்க நாணயம், ரிசர்வ் வங்கி, அந்த நாட்டுக்கான சட்டதிட்டங்கள், கொள்கைகள் ,இது உலகில் உள்ள அனைத்து இந்துக்களுக்குமான தேசம்….இங்கே முக்கிய பதவிகளுக்கான வேலை வாய்ப்புகள்…போன்ற அறிவிப்புகள்… என்று அதிரடியாக கலக்கிக் கொண்டிருக்கும் நித்தியானந்தாவின் உண்மை நிலை என்ன என்பதை இந்தக் கட்டுரை அம்பலப்படுத்துகிறது. உலகமே கொரோனா பிரச்சினையில் துவண்டு கொண்டிருக்க, குழந்தைகள் கடத்தல்,பாலியல் புகார்,கொலைவழக்கு ஆகியவற்றில் தேடப்படும் குற்றவாளியாக அறியப்பட்டவரான நித்தியானந்தாவால் எப்படி இவ்வாறு பிரம்மாண்டமான அறிவிப்புகளை வெளியிட முடிகிறது என்பது இருக்கட்டும் ...

’’அப்பாடா ஒழிந்தது…’’ என்று பெற்றோர்களை பெரு மூச்சுவிட செய்ததும் ’’ஐயோ பறிபோகிறதே…’’ என இளைய சமுதாயத்தை கதறவைத்திருப்பதும்…வேறு,வேறு அல்ல! ஒன்றே! அது தான் பப்ஜி போன்ற ’டென்சண்ட் கேம்ஸ்’! தடை செய்த செய்தி!ஆனால் அப்படி பெற்றோர்கள் நிம்மதி பெருமூச்சு விடமுடியாது என்ற வகையில் இந்திய நிறுவனமான பெங்களூரைச் சேர்ந்த என்கோர் கேம்ஸ் FAU-G என்ற பெயரில் ஒரு மொபைல் விளையாட்டைக் கொண்டு வர உள்ளதாம்! அழிவிற்கான விளையாட்டு விளையாட்டு என்றால் உடலும்,உள்ளமும் ஒருங்கே இசைந்து மகிழ்வது, நண்பர்களோடு தோழமை கொண்டு வளர்வது என்று நாம் ...

ஒரு பக்கம் பசித்த வயிறுகள்! மற்றொரு பக்கம் பாழாகும் நெல்மூட்டைகள்….! இது தான் தமிழக விவசாயிகள் வருடாவருடம் சந்திக்கும் அவலங்களாகும்! கொரோனா காலக் கொடுமையில் அனைத்து தொழில்களும் முடங்கி கிடக்கின்றன! வியாபார நிறுவனங்கள் விரக்தியில் உழல்கின்றன! ஆயினும், இந்த நேரத்தில் அனைவரையும் மகிழ்விக்கும் செய்தியாக விவசாய விளைச்சல் மட்டும் வீழ்ந்திடாமல் தாக்குபிடித்துவிட்டது. இயற்கையின் துணையை நம்பி விவசாயிகள் போட்ட உழைப்பு வீண் போகவில்லை! ஆனால், தயாரான நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்யாததாலும், தகுந்த முறையில் பாதுகாக்காததாலும், பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள், பல நூறு ...

உலகிலேயே ஒரு விஷயத்திற்கு நாம் உண்மையிலேயே அத்தாரிட்டி என்று சொல்லமுடியும் என்றால் அது நம் உணவுப் பண்பாட்டிற்குத் தான்! ஏனெனில், உணவு என்பது படிப்பறிவு சம்பந்தப்பட்டதல்ல,அது,பட்டறிவு மற்றும் பாரம்பரியம் சம்பந்தப்பட்டது. இன்னும் சொல்ல வேண்டுமானால் அது நுண்ணுணர்வு எனும் மெய்ஞானம் சம்பந்தப்பட்டது! உணவே மருந்தாக அனுசரிக்கக் கூடிய அளவுக்கு பல ஆயிரம் வகை அரிசி ரகங்கள்,சிறுதானியங்கள்,பயிறு வகைகள்,காய்கறிகள்,பழங்கள்,மூலிகைச் செடிகள்…ஆகியவற்றில் என்னென்ன பலன்கள், நோய் தீர்க்கும் அமசங்கள் உள்ளன என்பதை எந்தவித சோதனைக் கருவிகளும் இல்லாமல் அவர்கள் அறிந்து’அனுபவத்திலும் கைகொண்டிருந்தனர்! இன்று ஒரே ஒரு உணவுப் ...