ஒரு பக்கம் பசித்த வயிறுகள்! மற்றொரு பக்கம் பாழாகும் நெல்மூட்டைகள்….! இது தான் தமிழக விவசாயிகள் வருடாவருடம் சந்திக்கும் அவலங்களாகும்! கொரோனா காலக் கொடுமையில் அனைத்து தொழில்களும் முடங்கி கிடக்கின்றன! வியாபார நிறுவனங்கள் விரக்தியில் உழல்கின்றன! ஆயினும், இந்த நேரத்தில் அனைவரையும் மகிழ்விக்கும் செய்தியாக விவசாய விளைச்சல் மட்டும் வீழ்ந்திடாமல் தாக்குபிடித்துவிட்டது. இயற்கையின் துணையை நம்பி விவசாயிகள் போட்ட உழைப்பு வீண் போகவில்லை! ஆனால், தயாரான நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்யாததாலும், தகுந்த முறையில் பாதுகாக்காததாலும், பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள், பல நூறு ...

உலகிலேயே ஒரு விஷயத்திற்கு நாம் உண்மையிலேயே அத்தாரிட்டி என்று சொல்லமுடியும் என்றால் அது நம் உணவுப் பண்பாட்டிற்குத் தான்! ஏனெனில், உணவு என்பது படிப்பறிவு சம்பந்தப்பட்டதல்ல,அது,பட்டறிவு மற்றும் பாரம்பரியம் சம்பந்தப்பட்டது. இன்னும் சொல்ல வேண்டுமானால் அது நுண்ணுணர்வு எனும் மெய்ஞானம் சம்பந்தப்பட்டது! உணவே மருந்தாக அனுசரிக்கக் கூடிய அளவுக்கு பல ஆயிரம் வகை அரிசி ரகங்கள்,சிறுதானியங்கள்,பயிறு வகைகள்,காய்கறிகள்,பழங்கள்,மூலிகைச் செடிகள்…ஆகியவற்றில் என்னென்ன பலன்கள், நோய் தீர்க்கும் அமசங்கள் உள்ளன என்பதை எந்தவித சோதனைக் கருவிகளும் இல்லாமல் அவர்கள் அறிந்து’அனுபவத்திலும் கைகொண்டிருந்தனர்! இன்று ஒரே ஒரு உணவுப் ...