இதோ மெரீனா கடற்கரை புதிய கோலம் கொண்டுள்ளது. பல கோடிகளில் பணத்தை கொட்டி புதுப் புது ஜோடனைகள் செய்கிறார்கள். இயற்கையான கடற்கரையின் அழகை செயற்கை அழகூட்டி அமர்க்களப்படுத்துவது எதற்காக..? சிறு கடைகளுக்கு அனுமதி மறுப்பு எதற்காக? இனி காற்று வாங்க கடற்கரை போனால் கூட காசு தான்; டென்​மார்க்கை சேர்ந்த சுற்​றுச்​சூழல் நிறு​வனம், உலகம் முழு​வதும் உள்ள பல்​வேறு கடற்​கரைகளின் பல்​வேறு அம்​சங்​களை ஆராய்ந்து சர்​வ​தேச அங்கீ​காரத்​துக்​கான நீலக்​கொடி சான்​றிதழை அளித்து வரு​கிறதாம்…! தமிழகத்​தில் ஏற்​கெனவே கோவளம் கடற்​கரைக்கு அந்த சான்​றிதழ் கிடைத்​துள்​ளது. இந்​நிலை​யில், ...

திருடுவதையே தியானமாகவும், கொள்ளை அடிப்பதையே கொள்கையாகவும் கொண்ட லட்சியவாதிகளால் மட்டுமே இத்தகைய அசுரத்தனமான இயற்கை வளச் சுரண்டல் சாதனைகளை நிகழ்த்த முடியும்! இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தாலும், தமிழகம் இழந்த இயற்கை வளப் பாதிப்புகளை சரி செய்ய முடியாது; 250 வருட பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் கூட இவ்வளவு கொடூர சுரண்டல் நடந்ததில்லை. ”அதெல்லாம் ஒன்றுமேயில்லை” என்பது போல,  திராவிட  மாடல் ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிவிட்டனர். பொறுமைக்கு பேர் இன்னும் பூமா தேவி எவ்வளவு  பொறுப்பாளோ, தெரியவில்லை! ஆனால், அவள் பொங்கி எழும் ...

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் ராட்ச வேகத்தில் திருடப்பட்டும் மணல் கொள்ளையால் ஆற்று மணல் பரப்பே அதகளமாகியுள்ளது. ஆற்றுப்படுகை விவசாயிகள்  அல்லல்படுகிறார்கள். மணல் கொள்ளையை தட்டிக் கேட்போர் மீது போலீசையும், ரவுடிகளையும் ஏவி மிரட்டும் செந்தில் பாலாஜியின் அராஜகம் மாவட்ட மக்களை மருள வைத்துள்ளது; கரூர் மாவட்டத்தில் திருமுக்கூடலூர், அரங்கநாதன் பேட்டை, புதுப்பாளையம் , நெரூர் தென் பாகம் மற்றும் வடபாகம், முனியப்பனூர், மல்லம்பாளையம், வாங்கல், காளிபாளையம், கடம்பன்குறிச்சி, மேட்டுபாளையம், கிழக்கு தவுட்டுப் பாளையம், தோட்டக் குறிச்சி, மறவாபாளையம் மற்றும் குளித்தலை வரை காவிரி ...

இயற்கையை அழிக்க தடை செய்யும் சட்டங்களை தகர்த்து புதிய சட்டங்கள் இயற்றுவது, தன் ஆத்ம நண்பர் அதானிக்கு ஆரவல்லி மலைத் தொடரை அர்ப்பணிப்பது, அதற்கு நீதிமன்றங்களை நிர்பந்தப்படுத்துவது, எதிர்ப்போர் மீது எல்லா அடக்குமுறைகளையும் ஏவுவது..என்ற பாஜக அரசின் பகாசூர இயற்கை அழிப்புக்கு எழுந்துள்ள எதிர்ப்பலைகள் ஒரு அலசல்; இமயமலைத் தொடரை விட பழமையான ஆரவல்லிக் குன்றுகள்! உயரம் குறைந்த மலைத்தொடர் ஆனாலும் வட இந்திய மக்களின் உயிர் மூச்சாக திகழ்கிறது. ஏறத்தாழ 700 கி.மீ நீளமுள்ள இந்த மலைத்தொடர் புது தில்லியில் தொடங்கி ஹரியானா ...

சுற்றுச் சூழலை சூறையாடும் தொழிற்சாலைகளை துவங்கிய பிறகு, சுற்றுச் சூழல் அனுமதியை முன் தேதியிட்டு வழங்கலாமாம்!  மக்கள் நலன், இயற்கை வளம் ஆகியவற்றை விடவும், பெரு நிறுவனங்களின் வர்த்தக நலன்களே பெரிது என மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும், ஒரு சேர முடிவெடுத்துள்ளதன் பின்னணியை  குறித்த ஒரு அலசல்; நம் நாட்டில் ஏற்கனவே உள்ள சுற்றுச் சூழல் சட்டங்களை துச்சமாக மதித்து  நச்சுப் புகை மற்றும் ஆபத்தான ரசாயனக் கழிவுகளை வெளியிடும் தொழிற்சாலைகளையும், இயற்கையை அழித்து, நீர் நிலைகளை அபகரித்து, மக்கள் வாழ்வாதாரங்களை கேள்விக்குள்ளாக்கும் ...

சுதந்திர இந்தியாவில் இது வரையிலான போராட்டங்களிலேயே பெருந்திரள் மக்களின்  கூடங்குளம் அணுமின் உலைக்கு எதிரான அமைதிவழி அகிம்சை போராட்டம் அதி முக்கியமானது. இதை வன்முறை பாதைக்கு மாற்றும் சூழ்ச்சிகளை அதிகார மையங்கள் முன்னெடுத்ததும், அது முறியடிக்கப்பட்டதும் ஒரு வரலாற்றுப் பதிவாகும்; கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் 1988 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் சோவியத் அதிபர் கொர்பசேவ்விற்கும் இடையில் கையெழுத்தாகியது.  அப்போதில் இருந்து இந்த அணு உலைக்கு கடும் எதிர்ப்பை மக்கள் காட்டி வந்தனர். அணு உலைகளை பொறுத்தவரை, சுனாமி, கடல் ...

வனத்தையும் வன உயிரினங்களையும் பாதுகாப்பதா? அல்லது அப்பகுதியில் ஐந்து தலைமுறையாக விவசாயம் செய்து வாழும் மக்களை பாதுகாப்பதா? என்ற கேள்வி வருஷ நாடு பகுதியில் எழுந்துள்ளது. இதில் பன்னெடுங்காலமாக வசிக்கும் மலைவாழ் பழங்குடிகளின் வாழ்வும் கேள்விக்குறியாகி உள்ளது; வன உயிரினங்களின் சுதந்திரத்தை உறுதிபடுத்தவும், புலிகளை பாதுகாக்கவும் மேகமலை புலிகள் காப்பகத்தின் எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததையடுத்து பகுதிகளில் நான்கைந்து தலைமுறைகளாக வாழ்வோரின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது. தேனி வனக்கோட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, மேகமலை வன உயிரின சரணாலயம் ...

மதுரை நகருக்கருகில் மேலூர் அருகே கல்லங்காட்டில் சிப்காட், சிட்கோ மற்றும் எல்காட் ஆகியவற்றை அமைக்க திமுக அரசு திட்டமிட்டு, முதல் கட்டமாக மேலூர் பகுதியில் 278 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதானது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. இந்த எதிர்ப்பு தொழில் வளர்ச்சிக்கு எதிரானதா? முன்னதாக முதல்வர் முக.ஸ்டாலின் அரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மதுரையை தொழில்மயப்படுத்தவுள்ளதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சிக்கு வந்தது தொடங்கி மாநிலத்தில் அடுத்தடுத்து பல இடத்தில் தொழிற்பூங்கா அமைத்து வரும் வேளையில் மேலூரில் சிப்காட், ...

கேட்கும் போதே இன்பத்தேன் வந்து பாய்வது போலத் தான் இருக்கிறது! ”தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது” என அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையைத் தான் சொல்கிறேன். ”இதற்கும் மேலாக அவர் இது முதல்வர் ஸ்டாலினின் உறுதியான கொள்கை முடிவாகும்…”என்று கூறியுள்ளது மகிழ்ச்சியில் நம்மை திக்குமுக்காடச் செய்கிறது…! ஆனால், கொஞ்சம் நிதானித்து, இது வரை நடந்தவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, அச்சம் ஏற்படுகிறது. ஏழு மாதங்களில் தேர்தல் நெருங்கி வருகையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது நாள் வரை தமிழகம் ...

இந்தியாவின் மக்கள் தொகையை குறைப்பதற்கான சதித் திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்குமோ.. என்று எண்ணத் தோன்றுகிறது. விஷத்தையே அமிர்தமென்றும், பசுமை அழிப்பையே பசுமை புரட்சி என்றும், மரபணு மாற்றுப் பயிர்களே மானுடத்தின் மீட்பு என்றும் விளம்பரங்கள் செய்யும் அரசுகள் குறித்த விழிப்புணர்வு அலசல்; மரபணு மாற்றப்பட்ட டி.ஆர்.எஸ் தன் (கமலா), பூசா டிஎஸ்டி ரைஸ் 1 என்கிற இரண்டு நெல் ரகங்களை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு. இதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் மிக அற்பமானவை என்பதால் தான், நமக்கு இப்படித் தோன்றுகிறது. # இது கூடுதலாக ...