சுற்றுச் சூழலை சூறையாடும் தொழிற்சாலைகளை துவங்கிய பிறகு, சுற்றுச் சூழல் அனுமதியை முன் தேதியிட்டு வழங்கலாமாம்! மக்கள் நலன், இயற்கை வளம் ஆகியவற்றை விடவும், பெரு நிறுவனங்களின் வர்த்தக நலன்களே பெரிது என மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும், ஒரு சேர முடிவெடுத்துள்ளதன் பின்னணியை குறித்த ஒரு அலசல்; நம் நாட்டில் ஏற்கனவே உள்ள சுற்றுச் சூழல் சட்டங்களை துச்சமாக மதித்து நச்சுப் புகை மற்றும் ஆபத்தான ரசாயனக் கழிவுகளை வெளியிடும் தொழிற்சாலைகளையும், இயற்கையை அழித்து, நீர் நிலைகளை அபகரித்து, மக்கள் வாழ்வாதாரங்களை கேள்விக்குள்ளாக்கும் ...
சுதந்திர இந்தியாவில் இது வரையிலான போராட்டங்களிலேயே பெருந்திரள் மக்களின் கூடங்குளம் அணுமின் உலைக்கு எதிரான அமைதிவழி அகிம்சை போராட்டம் அதி முக்கியமானது. இதை வன்முறை பாதைக்கு மாற்றும் சூழ்ச்சிகளை அதிகார மையங்கள் முன்னெடுத்ததும், அது முறியடிக்கப்பட்டதும் ஒரு வரலாற்றுப் பதிவாகும்; கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் 1988 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் சோவியத் அதிபர் கொர்பசேவ்விற்கும் இடையில் கையெழுத்தாகியது. அப்போதில் இருந்து இந்த அணு உலைக்கு கடும் எதிர்ப்பை மக்கள் காட்டி வந்தனர். அணு உலைகளை பொறுத்தவரை, சுனாமி, கடல் ...
வனத்தையும் வன உயிரினங்களையும் பாதுகாப்பதா? அல்லது அப்பகுதியில் ஐந்து தலைமுறையாக விவசாயம் செய்து வாழும் மக்களை பாதுகாப்பதா? என்ற கேள்வி வருஷ நாடு பகுதியில் எழுந்துள்ளது. இதில் பன்னெடுங்காலமாக வசிக்கும் மலைவாழ் பழங்குடிகளின் வாழ்வும் கேள்விக்குறியாகி உள்ளது; வன உயிரினங்களின் சுதந்திரத்தை உறுதிபடுத்தவும், புலிகளை பாதுகாக்கவும் மேகமலை புலிகள் காப்பகத்தின் எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததையடுத்து பகுதிகளில் நான்கைந்து தலைமுறைகளாக வாழ்வோரின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது. தேனி வனக்கோட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, மேகமலை வன உயிரின சரணாலயம் ...
மதுரை நகருக்கருகில் மேலூர் அருகே கல்லங்காட்டில் சிப்காட், சிட்கோ மற்றும் எல்காட் ஆகியவற்றை அமைக்க திமுக அரசு திட்டமிட்டு, முதல் கட்டமாக மேலூர் பகுதியில் 278 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதானது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. இந்த எதிர்ப்பு தொழில் வளர்ச்சிக்கு எதிரானதா? முன்னதாக முதல்வர் முக.ஸ்டாலின் அரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மதுரையை தொழில்மயப்படுத்தவுள்ளதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சிக்கு வந்தது தொடங்கி மாநிலத்தில் அடுத்தடுத்து பல இடத்தில் தொழிற்பூங்கா அமைத்து வரும் வேளையில் மேலூரில் சிப்காட், ...
கேட்கும் போதே இன்பத்தேன் வந்து பாய்வது போலத் தான் இருக்கிறது! ”தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது” என அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையைத் தான் சொல்கிறேன். ”இதற்கும் மேலாக அவர் இது முதல்வர் ஸ்டாலினின் உறுதியான கொள்கை முடிவாகும்…”என்று கூறியுள்ளது மகிழ்ச்சியில் நம்மை திக்குமுக்காடச் செய்கிறது…! ஆனால், கொஞ்சம் நிதானித்து, இது வரை நடந்தவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, அச்சம் ஏற்படுகிறது. ஏழு மாதங்களில் தேர்தல் நெருங்கி வருகையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது நாள் வரை தமிழகம் ...
இந்தியாவின் மக்கள் தொகையை குறைப்பதற்கான சதித் திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்குமோ.. என்று எண்ணத் தோன்றுகிறது. விஷத்தையே அமிர்தமென்றும், பசுமை அழிப்பையே பசுமை புரட்சி என்றும், மரபணு மாற்றுப் பயிர்களே மானுடத்தின் மீட்பு என்றும் விளம்பரங்கள் செய்யும் அரசுகள் குறித்த விழிப்புணர்வு அலசல்; மரபணு மாற்றப்பட்ட டி.ஆர்.எஸ் தன் (கமலா), பூசா டிஎஸ்டி ரைஸ் 1 என்கிற இரண்டு நெல் ரகங்களை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு. இதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் மிக அற்பமானவை என்பதால் தான், நமக்கு இப்படித் தோன்றுகிறது. # இது கூடுதலாக ...
தமிழகத்தில் அரசு அதிகாரிகள், சுரங்க மாஃபியாக்கள், காவல் துறை என்ற வலுவான முத்தரப்பின் கூட்டிணைவு சட்டவிரோத குவாரி கொள்ளைகளுக்கு தீவிர ஆதரவளிக்கிறதா? இது போன்ற கனிமவள சுரண்டல்கள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் மேற்கொள்ளப்படுகிறதா?” என்று நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளனர்; தமிழ்நாட்டின் தெற்கு, மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஆற்று மணல், கடற்கரை மணல், சரளை மற்றும் சிவப்பு மண் போன்ற இயற்கை வளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுகிறது. இதற்கு எதிராக, உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும், பிற நீதி மன்றங்களிலும் தொடரப்பட்ட தொடர்ச்சியான ...
கடும் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் நவம்பர்-1 முதல் பழைய வாகனங்களுக்கு தடை விதித்துள்ளது டெல்லி அரசு. காற்று மாசுபாட்டில் இருந்து டில்லியை காப்பாற்ற 10 முதல் 15 ஆண்டுகள் பயன்பட்ட பழைய வாகனங்களை கயலான் கடைக்கு போடச் சொல்வது தீர்வாகுமா? இதற்கு மாற்று என்ன? இதில் காந்திய அணுகுமுறை சொல்லும் தீர்வு என்ன? முதலில் ஜுலை-1 முதல் பழைய வாகனங்களுக்கான தடை அமலாகி இரண்டே நாட்களில் நூற்றுக்கணக்கான பழைய வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து தலா 10,000 அபராதம் விதித்தனர். மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து இந்த ...
திண்டுக்கல் மாவட்ட மண்ணுக்குள் ‘மால்ப்டினம்’ கனிமம் இருப்பதாக மத்திய புவியியல் மற்றும் கனிமவள அமைச்சகத்தினர் நீண்ட நெடிய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு மாலிப்டினம் இருக்கிறதாம்…! இனி, சூறையாடப்படவுள்ளது திண்டுக்கல். பழனி மலைக்கே மொட்டையாம்! என்ன செய்யப் போகிறோம் நாம்? இது தமிழகத்தின் முந்தைய ஆட்சியாளர்கள், இன்றைய ஆட்சியாளர்கள் ஒத்துழைப்புடன் இந்த மிகப் பெரிய அய்வுகள் நடந்துள்ளதான தகவலே தற்போது தான் வெளியாகி உள்ளது. இந்த மாலிப்டினம் என்ற கனிமத்தை ராணுவத் தளவாடங்கள், வாகனங்கள் துருப்பிடிக்காமல் இருக்க பயன்படுத்துவார்களாம்,. ஏற்கனவே ...
விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூர் பகுதியை தேர்வு செய்திருப்பது தவறான முன் உதாரணம் மட்டுமின்றி, இயற்பியல் நிகழ்வுகளுக்கும் எதிரானது.இந்தப் பகுதிகளின் இயற்கை வளங்களை பட்டியலிட்டு பார்க்கும் போது இது மீண்டும் மீட்டெடுக்க முடியாத பேரிழப்பு என்பது உறுதியாகிறது; பசியாறுதல் என்பதே இயற்பியல் நிகழ்வில், ஓர் உயிரினத்தின் முதல் நிவர்த்தி. அதனால் தான் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும். இந்நாளில் உணவே மருந்து என்றும், அதை நஞ்சு இல்லா விவசாயத்தின் மூலமே அடைய முடியும். இந்தியாவில் அதன் ...






















