ஒரு படைப்பு எந்த காலகட்டத்தில் கொண்டு வரப்படுகிறது என்பது முக்கியம்! டாஸ்மாக் முறைகேடுகள் , அதில் ஆகாஷ் பாஸ்கரனின் பங்கு, தலைமறைவு, மறைமுகமாக நடந்தேறிய பேரங்கள், இதன் பிறகு நீதிமன்றம் வழியே..விடுவிக்கப்பட்டது போன்ற தோற்றப்பாடு..எல்லாமே ஆடிட்டர் ஸ்கிரிப்ட் தானா? இன்றைக்கு இந்தி திணிப்போடு, சமஸ்கிருத திணிப்பும், சனாதன மேலாதிக்கமும் பாய்ச்சலோடு நடக்கின்ற சூழலில் புதிய பராசக்தி வந்துள்ளது. நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சி என்பது பாஜக எதிர்ப்பைப் பேசிக் கொண்டே பாஜகவின் அஜந்தாக்களை அச்சுபிசகாமல் நிறைவேற்றித் தரும் ஆட்சியாக உள்ளது என்பதை தொடர்ந்து ஆழமான ...
பராசக்தி சொல்ல வரும் செய்தி என்ன? காங்கிரஸ் மீதான அதி தீவிர வெறுப்பை ஆழமாக விதைப்பதா? இளைய தலைமுறைக்கு பாஜகவை விட காங்கிரஸ் தான் மிகப் பெரிய வில்லன், அழிக்கப்பட வேண்டிய நாசகார சக்தி என்ற உணர்வை தோற்றுவிப்பதா..? இந்தி எதிர்ப்பால் ஆட்சிக்கு வந்த திமுக இன்று செய்து கொண்டிருப்பது என்ன..? மிகுந்த ஆர்வத்தோடு பராசக்தி படம் பார்க்கச் சென்றேன். தமிழ்நாட்டு வரலாற்றில் தமிழ் காக்க நடத்தப்பட்ட மகத்தான உணர்வெழுச்சியே இந்தி எதிர்ப்பு போராட்டங்களாகும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஆவணப்படுத்தும் வகையில் இது வரை ...
இந்த ஆண்டு (2026) இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்காக ஹோம்பவுண்ட்’ படத்தை அனுப்பியுள்ளனர்! முக்கியத்துவம் வாய்ந்த சமகால உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து – சாதி, மத தாக்கத்தை கடந்து – இரு இணைபிரியா நண்பர்களின் நட்பினூடாக –உருவான இந்த கலைப் படைப்பு சமூகத்திற்கு தரும் செய்திகள் நுட்பமானாவை; 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது, நூற்றுக்கணக்கான மைல்கள் கால்நடையாகத் தங்கள் ஊருக்குப் பயணம் செய்த இரு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது ஹோம்பவுண்ட் திரைப்படம்! ‘மசான்’ (Masaan) திரைப்படத்தின் ...
நினைத்துப் பார்த்தால் வியப்பாக உள்ளது. அன்றைய தினத்தில் இருந்து சமீபமான சுஜாதா காலம் வரை அறிவியல் கதைகளிலும், சினிமாக்களிலும் புனைவுகளாக சொல்லப்பட்ட எல்லாம் காசப்மெரின், ஸ்மார்ட் போன், லேப்டாப், ஜிபிஎஸ், ட்ரோன்…என அன்றாடக் கருவிகளாக வடிவெடுத்துள்ளன; ஒரு சுவையான அலசல்; நினைவுகள், நிகழ்வுகள், கனவுகள் ஆகியவற்றின் உணர்வும் அறிவும் அழகியலும் கலப்பதன் வெளிப்பாடுதான் இலக்கியம். அதன் ஒரு கிளை தான் அறிவியல் இலக்கியம். அறிவியல் புனைக் கதைகள் ஆராய்ச்சியாளர்களின் சாதனைகள் பற்றிய நிகழ்கால வாழ்க்கையை மட்டும் பேசுவதில்லை, வருங்கால அனுபவமாகக் கூடிய புதிய தொழில்நுட்பங்கள், ...
75 வயதிலும் துடிப்பான ரஜினிகாந்த்! ஈர்ப்பைத் தரும் ஸ்டைல் நடிப்பு, அதிரடி சண்டைகள், ரத்தம் சொட்டும் வன்முறை, கணக்கு வழக்கில்லாமல் நடக்கும் கொலைகள்.. என அதகளம் காட்டும் படத்தில் கதை இருக்கிறதா? நல்ல மெசேஜ் இருக்கிறதா? குழந்தைகள், பெண்கள் என குடும்பத்தோடு பார்க்க முடியுமா? ஒரு அலசல்; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம், அவரது திரையுலக பயணத்தில் 50-ம் ஆண்டை நிறைவு செய்யும் திரைப்படமாக வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் திரைப்படம் வெளியாகிறது என்றாலே, அது வொரு திருவிழா போல அமைந்துவிடுகிறது அவரது ரசிகர்களுக்கு.. சன் ...
சமீபகாலமாக நூற்றுக்கணக்கான கோடிகளை கொட்டி, வன்முறை, ஹீரோ பில்டப், வெற்று ஆரவாரங்களோடு கதை, திரைக்கதை எதுவுமின்றி பிரமாண்ட செலவில் வரும் படங்கள், முதல் நாள் முதல் காட்சியிலேயே தோல்வியை சந்திக்கின்றன! இப்படமோ, கச்சிதமான திரைக்கதை, இயல்பான கதாபாத்திரங்கள், தேர்ந்த கிளைமாக்ஸ்.. என அழகாக எடுக்கப்பட்டுள்ளது; இந்த சினிமாக்களுக்கு மாற்றாக அத்தி பூத்தாற் போல், சில எளிய முதலீட்டு படங்கள் வெளிவரத்தான் செய்கின்றன! மிகக் குறைந்த முதலீட்டில் வெளியான குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்களை அந்த வகையில் குறிப்பிடலாம். குறிப்பாக டூரிஸ்ட் பேமிலி படம் ...
‘விட்டு விடுதலையாகி நிற்பாய், இந்த சிட்டுக் குருவியைப் போலே’ என்பான் பாரதி. இந்தப் படம் நமக்குள் கடத்திச் செல்லும் செய்தி இது தான்! வழக்கமான சினிமா மசாலாத்தனங்களில் இருந்து விலகி வாழ்க்கையை அதன் வலிகளுடனும், வசந்தமான சந்தோஷங்களுடனும் இந்தப் படம் பேசுகிறது; நுகர்வு கலாச்சார ஆசையில் நுகத்தடி பூட்டிய மாடு போல பொருளாதாரத் தேடலை நோக்கி பயணப்பட்டே தனக்கான நிம்மதியான வாழ்க்கையை தொலைத்து விடுகிற இன்றைய நடுத்தர வர்க்க தம்பதியர் வாழ்க்கை குறித்த அற்புதமான பதிவு தான் இந்தப் படம். தங்கள் மகனை அதிக ...
திரைப்பட விழாக்களில் கொண்டாடப்பட்ட ஸ்டோலன் ( Hindi) தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் நுட்பமான திரை மொழியோடு எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை திருட்டை மையப்படுத்தி தேடல், தவிப்பு, ஏக்கம், மோதல்.. என்ற உணர்ச்சி கலவையோடு சொல்லப்பட்ட பரபரப்பான படம்; நாடு முழுவதும் பெரும் விவாதத்தை தூண்டியிருக்கிற ஸ்டோலன் படத்தின் கதை உண்மை சம்பவம் ஒன்றை தழுவி எடுக்கப்பட்டது. அசாமில் 2018-ல் இரு இளைஞர்களுக்கு நடந்த சம்பவத்தை மையமாக வைத்து திரைக்கதை வடிவமைக்கபட்டுள்ளது. வட இந்திய ரயில் நிலையத்தில் ஒரு பெண் ஐந்து ...
ஒரு இனத்தின் அடையாளம் என்பது மொழி தான்! நமது சுய அடையாளத்தையே இழப்பது போல ஆங்கிலத் தலைப்புகளில் தமிழ்த் திரைப்படங்கள் வரிசை கட்டி வந்து கொண்டுள்ளன. ‘தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு’ என அறிவிக்கப்பட்ட முன்னெடுப்பு தொடங்கி, தற்போதைய காலம் வரை ‘திரைப்படத் தலைப்புகளில் தவிர்க்கப்பட்டு வரும் தமிழ்’ குறித்த ஒரு அலசல்; பிரேக்கிங் நியூஸ், 3 பிஹெச், ஸ்வீட்டி நாட்டி கிரேசி, ஆலிஸ், தி ப்ரூப், ப்ரீடம், பார்டர், லிங்க், டூப்ளிகேட், ஜிங்கிள், அட்ரஸ்.. என்ன ஆங்கில வார்த்தைகளாக இருக்கிறது என பார்க்கிறீர்களா…? ...
மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த ‘தக்லைப்’ தந்துள்ளதோ, மிகுந்த அதிர்ச்சியை! ஆகச் சிறந்த இயக்குனரும், உலக மகா கலைஞனும் இந்தப் படத்தின் வழியே சினிமா ரசிகர்களுக்கும் , சமூகத்திற்கும் சொல்லும் செய்தி என்ன.? தக்லைப் குறித்து பலரும் பேச மறுக்கும் விசயங்களை கவனப்படுத்தவே இந்த கட்டுரை; நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, இயக்கம்… இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தத் திரைப்படம் சொல்ல வருவது என்ன என்பது தான் முக்கியம். படம் சொல்லும் இரண்டே விசயங்கள்; வன்முறையைக் கொண்டாடுவது, பெண்ணடித்தனத்தை போற்றுவது. இவை தான். முதல் ...




















