சினிமா ஆய்வாளரான நிழல் திருநாவுக்கரசு சமுக அக்கறையுள்ள இளம் திரைக் கலைஞர்களை உருவாக்குதல், உலகளாவிய சினிமா ரசனையை வளர்த்தெடுப்பது ஆகிய நோக்கத்துடன் 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறார். இதற்கான பயிற்சி பட்டறைகள் நடத்தி வருகிறார். அவருடனான பீட்டர் துரைராஜுன் நேர்காணல்; ‘நிழல்’,  சினிமா காலாண்டிதழ் 26 ஆம் ஆண்டில்  அடியெடுத்து வைக்கிறது . சினிமா உலகிற்கு நிழல் இதழின் பங்களிப்பு என்ன? 2001 ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நிழல் என்ற இதழை நடத்தி வருகிறேன். தமிழில் இப்படி ஒரு பத்திரிகை வருவது ...

மூளையை மழுங்கடித்து பெரும் வசூலை அள்ளும் பிரம்மாண்ட திரைப் படங்களோ, பெரிய நடிகர்களின் படங்களோ சினிமாவை வாழ வைக்காது. மக்களின் வாழ்க்கையை அழகியலோடு, அர்த்தத்துடன் அணுகும் சிறு பட்ஜெட் படங்கள் அதிகம் வருவதே கலைத் துறையை உயிர்ப்போடு வைத்திருக்கும். அதற்கு செய்ய வேண்டியது என்ன? – அலசுகிறார், இயக்குனர் சீனு ராமசாமி; ​​பல நூறு கோடிகள் புழங்கும் பிரம்மாண்டங்களின் நிழலில், ஒரு சாமானிய மனிதனின் மூச்சுக் காற்று எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது? ​வாழ்வின் கதைகளில் வரும் மனிதர்களைப் போல, வாழ்வின் மிக நுணுக்கமான வலிகளையும், ...

​வெறித்தனமாக அன்பு செலுத்தும் லட்சோப லட்சம் ரசிகர்களைக் கொண்ட உச்சபட்ச நாயக பிம்பமாக விஜய் உருவானது எப்படி? விஜய்யின் இத்தகைய பிரம்மாண்ட வளர்ச்சி எப்படி சாத்தியமானது? இதன் பின்னணியில் பின்னிப் பிணைந்திருக்கும் காரணங்களை வரலாற்று பூர்வமாக அலசுகிறார், இயக்குனர் சீனு ராமசாமி; தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியத் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாகவும், அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும் உருவெடுத்துள்ளார் விஜய். ஒரு சாதாரண நடிகராக அறிமுகமாகி, இன்று இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை அவர் கட்டமைத்ததற்கு அவரது தனிப்பட்ட உழைப்பு, நடனம், பொறுமை ஆகியவற்றோடு அவரது தந்தை ...

நீளிரா என்றால் நீண்ட இரவு என்று பொருள். இப்படம் இந்திய அமைதிப் படைக்கும், புலிகளுக்கும் இடையே அரங்கேறிய மோதலை அலசுகிறது! போர்ச் சூழலில் சிக்கி கொள்ளும் தமிழ் மக்கள் இந்திய ராணுவத்தையும், போராளிகளையும் எப்படி சமாளித்தார்கள் என்பதை உயிர்ப்புடன் எடுத்திருக்கிறார்கள். போர்ச் சூழலில் சிக்கி தடுமாறும் காதலையும் பேசுகிறது; தமிழ் ஈழப் போராட்ட போர்க் காலங்களில் இலங்கை தமிழ் மக்கள் எதிர் கொண்ட இன்னல்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ நீளிரா’. கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இயக்குனர்  சோமிதரன் எழுதி இயக்கியது. இந்த ...

பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாழ்க்கையை அச்சு அசலாக நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்து மிக இயல்பாக காட்சிபடுத்தி உள்ளது படம். அந்த வயதுக்கேயான சேட்டைகள், காதல், மோதல்,போதை பழக்கத்தின் மீதான ஈர்ப்பு, ஆசிரியர் கண்டிப்பு, பெற்றோர் அணுகுமுறை ஆகியவற்றை விறு,விறுப்பாகவும், சுவைபடவும் சொல்கிறது; கடந்த 2024 வெளிவந்த வாழா மலையாளத் திரைப்படம் ஒரு பாக்ஸ் ஆபீஸ் படமாக வசூலை வாரி குவித்ததன் வெளிப்பாடாக “வாழா” இரண்டாம் பாகம் எஸ்.ஏ.சாவின் இயக்கத்தில் சமீபத்தில் வெளி வந்து இந்த படமும் அரங்கு நிறைந்த காட்சியாய் ஓடிக் கொண்டிருக்கிறது. மீசை ...

மலையாளத்தில் அதிகமான அரசியல் படங்கள் வெளிவருகின்றன. புகழ் பெற்ற அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டிய தொடக்க காலம் பிறகு, அரசியல் சதிராட்டங்களை அப்பட்டமாகத் தோலுரித்து காட்டுவதாக மாறியது. இதில்  ‘பிரதிச்சாயா’ பேசும் அதிகாரப் போட்டி அரசியல் பிரமிக்கதக்கது; “பிரதிச்சாயா” திரைப்படம் ஒரு முக்கிய மாற்றத்தை சுட்டிக் காட்டுகிறது. அரசியல் கட்சிகள் இன்று கொள்கைகளால் அல்ல, தங்களால் கட்டமைக்கப்படும் பொதுப் பிம்பத்தை வைத்தே போட்டியிடுகின்றன. அந்தப் பிம்பத்தை உருவாக்குவதில் சினிமா ஒரு சக்தி வாய்ந்த கருவியாக உள்ளது. மலையாள சினிமாவின் அரசியல் மரபில், ...

இப்படியும் படம் எடுக்க முடியுமா? மரணிக்கும் தருவாயிலும் மனிதத்தை உணர்த்தி – தன்னை கொல்லத் துணிந்த காவல்துறையினரை குற்றவுணர்வு மிகுந்து கதிகலங்க வைக்கும்  – ஒரு புரட்சிகர கதாபாத்திரம் மெய் சிலிர்க்க வைக்கிறது..! சிங்கள மொழியில் ஒரு உலகத் தரம் வாய்ந்த உன்னத படைப்பு; பல சர்வதேச பட விழாக்களில் விருதுகளை வென்று கொண்டிருக்கும் படம் ரிவஸ்டோன். மனிதம் பேசும் படங்களை எடுப்பதில் கவனம் பெற்றவரான லலித் ரத்ன நாயக்கே இயக்கியுள்ள இந்தப் படம் பார்ப்பவர்களை பல படிகள் மேன்மையாக பயணிக்க வைப்பதாக உள்ளது. ...

பேய் படம் என்றாலும், அச்சுறுத்தும் காட்சிகள் இல்லை! மனதை கொள்ளை கொள்ளும் மலையாளப் படம்!  அழகிய இளம் பெண் ஆவியாக வந்து காதல் குறும்புத் தனங்கள் செய்கிறாள்!  ஒரு காதல் பேயை வைத்து படு ஜாலியாக  இனிய அனுபவத்தை தரும் சினிமா. திகில் காட்சிகள் இல்லாத காமெடி கலந்த திரில்லிங் படம்; ‘எல்லாம் மாயை’ என்ற பொருள்படும் ‘சர்வம் மாயா’ என்ற நகைச் சுவைப் படம் தற்போது நன்றாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இளமை ததும்பும் அழகிய நாயகன் நிவின் பாலி நடித்துள்ளதால், காதல் ...

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படைத் தளபதிகள் நடத்திய கொலை பாதகங்களை காட்சிப்படுத்துவதிலும், சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து தண்டிப்பதிலும் நல்ல மைலேஜ் செய்துள்ளது. இதே போன்ற ஒரு விசாரணையை இஸ்ரேலின் நெதன்யாகுவும், அமெரிக்க டிரம்பும் எதிர்கொள்வார்களா..? என ஏங்க வைப்பதே இந்தப் படத்தின் வெற்றி; உலகையே வீழ்த்த நினைத்த ஹிட்லர், இரண்டாம் உலகப் போரின் இறுதியில் தற்கொலை செய்து கொண்டான். அவனுடைய கொள்கை பரப்பு அமைச்சராக இருந்த கோயபல்சும் தற்கொலை செய்து கொண்டான். உயிரோடு இருந்த, அடுத்த இராணுவ தளபதியான ஹெர்மன் கோரிங், அமெரிக்கப் ...

ஒரு படைப்பு எந்த காலகட்டத்தில் கொண்டு வரப்படுகிறது என்பது முக்கியம்!  டாஸ்மாக் முறைகேடுகள் , அதில் ஆகாஷ் பாஸ்கரனின் பங்கு, தலைமறைவு, மறைமுகமாக நடந்தேறிய பேரங்கள், இதன் பிறகு நீதிமன்றம் வழியே..விடுவிக்கப்பட்டது போன்ற தோற்றப்பாடு..எல்லாமே ஆடிட்டர் ஸ்கிரிப்ட் தானா? இன்றைக்கு இந்தி திணிப்போடு, சமஸ்கிருத திணிப்பும், சனாதன மேலாதிக்கமும் பாய்ச்சலோடு நடக்கின்ற சூழலில்  புதிய பராசக்தி வந்துள்ளது. நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சி என்பது பாஜக எதிர்ப்பைப் பேசிக் கொண்டே பாஜகவின் அஜந்தாக்களை  அச்சுபிசகாமல் நிறைவேற்றித் தரும் ஆட்சியாக உள்ளது என்பதை தொடர்ந்து ஆழமான ...