சினிமாவை வர்த்தக சூதாட்டமாக அணுகும் நடிகர் அல்லு அர்ஜுன், புஷ்பா -2 பட பிரமோஷனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் மனநிலையிலேயே இயங்கியுள்ளார். காவல்துறை மறுத்தும் ரோட்ஷோவாக தியேட்டருக்கு வந்தது தொடங்கி ஒவ்வொரு நகர்வையும் பட பிரமோஷனுக்கானதாகவே மாற்றியது அம்பலம்; முன்னதாக இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்ய அவர் வீட்டிற்கு சென்ற போது, அவர் பெட்ரூமில் இருந்தாராம். கைது செய்யப்பட விருக்கிறோம். மீடியாக்கள் எல்லாம் வந்துள்ளன என்பதை அறிந்து கொண்டு புஷ்பா படத்தின் டீ சர்ட்டை போட்டவாறு வெளியில் வந்துள்ளார். அல்லு ...
சமீபத்தில் வெளியான கங்குவா படம் குறித்து சமூக வலைத்தளங்களில் வன்மத்தை கக்கும் விமர்சனங்கள் வெளிப்பட்டன. அவை கங்குவா என்ற படத்தைக் கடந்து நடிகர் சூர்யா குடும்பத்தை தாக்கும் விமர்சனமாகவும் தூக்கலாக வெளிப்பட்டது. இந்தச் சூழலுக்கு இயக்குனர் இரா.சரவணன் மிக சிறப்பாக எதிர் வினையாற்றி இருக்கிறார்; இவர் மிகச் சமீபத்தில் வெளியான நந்தன் படத்தின் இயக்குனர். இந்தப் படம் உள்ளாட்சிகளில் பட்டியலினத் தலைவர்கள் தற்காலத்தில் சந்திக்க நேரும் அவமானங்கள் குறித்து மிகுந்த சமூக அக்கறையுடன் கவனப்படுத்தி இருந்தது. இவரது முந்திய படங்களான கத்துக்குட்டி, உடன்பிறப்பே போன்றவையும் ...
400 படங்களுக்கு மேல் நடித்து நவரசங்களையும் வெளிப்படுத்தியவர் டெல்லி கணேஷ்! இவர் கடந்து வந்த பாதைகள், முன்னணி இயக்குனர்கள், ஸ்டார் நடிகர்களுடனான கலையுலகச் சாதனைகள், அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாடகங்களிலும், திரையிலுமான கலைப் பயணங்கள் குறித்த ஒரு பார்வை; இயக்குனர் கே.பாலச்சந்தர், காத்தாடி ராமமூர்த்தி குழுவினர் போட்ட பட்டினப்பிரவேசம் நாடகம் மிகவும் பிடித்துப் போய் அதைத் திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார். கிராமத்திலிருந்து சொத்துக்களை விற்றுவிட்டு நகரத்துக்குக் குடிபெயர்ந்த குடும்பத்தினர் படும் கஷ்டங்களை சிந்தனையைத் தூண்டும் விதமாக விசு எழுதிய நாடகம் அது. ஸ்டுடியோவை விட்டு ...
தேச பக்தியையும், உயிர்ப்பான காதலையும் ஆழமாக காட்சிப்படுத்தியதில் படம் முழு வெற்றி பெற்றுள்ளது. ராணுவ வீரர்களின் வீரம், தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை மெய் சிலிர்க்க வைக்கின்றன. ஆனால், சொந்த மக்களுக்கு எதிராக ராணுவம் ஏன் இவ்வாறு செயல்பட வேண்டும் போன்ற கேள்விகளை படம் ஏற்படுத்துகிறது; காதல், வீரம், தேசபக்தி, தியாகம்..என கலவையாக வெளிவந்துள்ள அமரன் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள ஒரு திரைக் காவியம் என்பதில் சந்தேகமில்லை. மேஜர் முகுந்த் தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரியில் படிக்கும் போது இயல்பாக மலரும் காதல், அதை இரு வீட்டார்களும் ...
ஒரு பக்கா ரஜினி படத்தை சமகால சமூக பிரச்சினைகளை உள்ளடக்கி சொல்ல முயன்றுள்ளனர். வாழைப் பழத்தில் ஊசி சொருகுவது போல, பல விஷமத்தனமான விஷயங்களை அதி சிறந்த தொழில் நுட்பத்தில் மாஸாக காட்டிக் கொண்டே, கடைசியில் முற்போக்கு படம் போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறார் இயக்குனர் ஞானவேல்; ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முற்போக்கு கருத்துக்களை பேசி வெளியாகி இருக்கிறது வேட்டையன். ஜெய்பீம் படத்தின் மூலம் நல்ல சினிமா படைப்பாளியாக பேசப்பட்டவர் ஞானவேல். படம் திரையரங்குகளில் வெளியாகி ...
கதையே இல்லாமல் ரத்தம் தெறிக்கும் வன்முறைகளோடு களம் கண்டு வருகிற தமிழ் சினிமாக்களுக்கு இடையே அழுத்தமான கதை, அச்சு அசலான வாழ்க்கையைச் சொல்லும் கதாபாத்திரங்கள், எளிமையான கிராமத்துப் பின்புலம் ஆகியவற்றுடன் மானுடத்தின் உன்னதப் பக்கங்களை காட்டுகிறது இந்தப்படம்; விசாரணையே இல்லாமல் சந்தேகப்பட்டு கொடூரமாக தாக்கும் கணவனிடம் வாழ முடியாமல் ஓடி வாழ்க்கையை தொலைத்த பெண், கைவிடப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கை போராட்டங்கள், அண்ணன் – தங்கை பாசம், ஒரு தலைக் காதல், மன்னிக்கும் குணம்..இப்படியாக பின்னப்பட்டுள்ளது திரைக்கதை. மிலிட்டிரியில் வேலை பார்க்கும் அண்ணனின் மனைவியை தவறாகச் ...
இந்த ஆட்டம் படத்தின் கதைக் களனோடு மலையாள திரைத்துறை ஆண்களின் பாலியல் ஆட்டம் அம்பலப்பட்ட நிகழ்வுகள் தான் எவ்வளவு பொருந்தி போகின்றன…!பாலியல் சீண்டலில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை இந்த ஆணாதிக்க சமுதாயம் அணுகும் மனநிலையை எந்த படமும் இவ்வளவு துல்லியமாக படம் பிடித்ததில்லை..! சமீபத்தில் நடைபெற்ற 70-வது தேசிய திரைப்பட விழாவில், ‘ஆட்டம்’ திரைப் படம் 2024 ம் ஆண்டின் மூன்று மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது. அதாவது, சிறந்த திரைப் படம், சிறந்த திரைக் கதை, சிறந்த எடிட்டிங் ஆகிய விருதுகள் இந்தப் படத்திற்கு ...
தமிழக கிராமத்து வாழ்க்கையை அச்சு அசலாக காட்டும் அற்புதக் கலைப் படைப்பு. தமிழ் மண்ணுக்கே உரித்தான சாதி ஆதிக்கம், பெண் அடிமைத்தனம், பேய் ஓட்டுவது போன்ற மூட நம்பிக்கைகள், மாப்பிள்ளை குடும்பத்தாரின் அதிகாரங்கள், அடங்க மறுக்கும் ஒரு பெண்.. எனக் காட்சி வழியில் ஒரு கவித்துவ சினிமா; அறம் ஆன்லைனில் அவ்வப்போது சினிமா விமர்சனமோ அல்லது அறிமுகமோ எழுதும் போது ஆசிரியர் சாவித்திரி கண்ணன், “எப்போதுமே வேறு மொழிப் படங்கள் குறித்தே எழுதுகிறீர்களே? தமிழில் வரும் படங்கள் குறித்து எழுதலாமே” என்று கேட்பார். அதற்கு ...
என்னதான் ஆயிற்று தமிழ் சினிமாவிற்கு? ரத்தம் தெறிக்கும் கொலைகள், மனதை பதற வைக்கும் கொடூர வன்முறைகள் இல்லையென்றால் படமே பார்க்கமாட்டோம் என தமிழ் சினிமா ரசிகர்கள் சபதம் செய்துவிட்டார்களா? நல்ல சினிமாவை நோக்கிய நகர்வில் தமிழ் சினிமா எப்படி திசைமாறியது என ஒரு அலசல்; தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் ஒரு காட்சி. கொலைகளை செய்து விட்டு வரும் தனுஷை அவரது தங்கை நீர் ஊற்றி குளிப்பாட்டுவார். தண்ணீர் முழுவதும் இரத்தமாக ஓடும். இது போல பார்த்து விட்டு வீட்டுக்கு ...
மனவளர்ச்சி குன்றிய ஒருவனின் காதலை மிக நுட்பமாக மன முதிர்ச்சியோடு எடுத்திருக்கிறார் இயக்குனர். மொழிகளைக் கடந்த ரசனைக்குரியது காதல். ஸ்பானிய மொழியில் எடுக்கப்பட்ட அர்ஜென்டினா நாட்டுக் காதலை அழகியலுடன் சொல்கிறது, கோயோ! மானுட உறவுகளின் மாண்பைச் சொல்லும் படம்; கோயோ என்பவன் அருங்காட்சியகத்தின் வழிகாட்டியாக இருக்கிறான். 1..2..3…என்று எண்ணிக் கொண்டே அவன் படிகளில் ஏறுவதில் கதை தொடங்குகிறது. அங்குள்ள கலைப் பொருட்களின் விவரம், தொன்மை போன்ற விவரங்களை மிக நுட்பமாக பார்வையாளர்களுக்கு விவரிக்கிறான். ஆனால், அவன் ஆட்டிசம் என்ற மன வளர்ச்சி்க் குறைபாடு கொண்டவன். ...