இன்றைய இந்தியாவிற்கு தேவையான ஒரு அற்புதமான திரைப்படம் இது! ஆயிரம் மேடை போட்டு சொன்னாலும் இவ்வளவு உன்னதமான மனித நேயத்தை உணர்த்திவிட முடியாது! ஒரு   நிஜ சம்பவம் நெஞ்சைத் தொடும் திரைக் காவியமாகி உள்ளது! யதார்த்ததுடன் நுட்பமான கலை வடிவம் கண்டுள்ளது! வட இந்தியாவைச் சேர்ந்த அயோத்தியில் இருந்து புறப்பட்ட ஒரு பழமைவாத இந்துக் குடும்பம் ராமேஸ்வரத்திற்கு வருகிறது. விமானத்திலிருந்து இறங்கிக் காரில் ராமேஸ்வரத்திற்குப் பயணம் செய்கின்றனர். வழியில் ஏற்படும் விபத்தில் அந்தக் குடும்பம் பேரிடரைச் சந்திக்கிறது. தகப்பனும் மகளும் மகனும் பெருத்த காயங்களோடு ...

சுதந்திரத்திற்கு பிறகு நடைபெற்ற மட்டஞ்சேரி துறைமுக கலவரம் குறித்து எந்த அதிகாரபூர்வ பதிவுகளும் இல்லை!  ‘இடதுசாரி சினிமா’ என்ற பெயரில் சாகசவாத சினிமாக்கள் வரும் இந்தச் சூழலில், வர்க்கப் போராட்டத்தின் தீவிரத்தை- உக்கிரத்தை – ரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்தி இருக்கும் ‘துறமுகம்’ சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல். இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் ரவியின் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் மலையாள படம் துறமுகம். இது ஒரு வரலாற்றுப் படம். 1930க்கும் 1955க்கும் இடைப்பட்ட காலத்தில் கொச்சிக்கு அருகே இருக்கும் மட்டஞ்சேரியில் தொழிலாளர்கள் மீது நடைபெற்ற ...

பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதை என விளம்பரப்படுத்தி வெளியாகியுள்ளது அயோத்தி! அந்தக் கதை ஒரு உண்மை சம்பவம். அதில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் எஸ்ராவை தொடர்பு கொண்டால், ஓடி ஒளிகிறார்! நாமும் தொடர்பு கொண்டோம். போன் எடுத்துப் பேச முன் வரவில்லை! என்ன நடந்தது..? ”தமிழ் சினிமாவில் இது வரை ஆயிரக்கணக்கான கதைகள் வந்துள்ளன! ஆனால், இது மாதிரியான ஒரு கதை இது வரை வந்ததே இல்லை என தாரளமாகச் சொல்லலாம்” என்றும், ”உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்” என்றும் விளம்பரப்படுத்தி, வெளியாகியுள்ள படம் ...

தலைப்பைப் பார்த்தால், இது தமிழ்ப் படம் என்று தோன்றலாம். ஆனால், இது மலையாளத்தில் வெளி வந்திருக்கும் தமிழ்க் கதை. லிஜோ ஜோஸ் இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி தமிழிலும், மலையாளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. புதிய அனுபவங்களைத் தருகிறது. மம்முட்டி வெளுத்து வாங்கி இருக்கிறார்! ஒரு மலையாள சினிமா தமிழ் வாழ்வை புறநிலையிலிருந்து பார்க்கும் ஒரு வினோத அனுபவத்தை படம் தருகிறது. கதை வழக்கம் போல எளிமையானது.  வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வரும் ஜேம்ஸ் கேரளா திரும்பும் வழியில் தூங்கி விடுகிறார். ஒரு கிராமத்தின் அருகே ...

கட்டுக்கடங்கா ஆர்வ மிகுதி, தலைகால் தெரியாத கொண்டாட்ட மன நிலை, உயிரையும் துச்சமாக மதிக்கும் துணிச்சல்..இப்படிப்பட்ட  இளம் ரசிகர்கள் தான் இவர்களின் இலக்கு! கொஞ்சம் ஸ்டைல், பைட், துள்ளலான பாட்டு, டான்ஸ், தொழில் நுட்ப மிரட்டல்கள்… இவை போதுமானது! கதையாவது, கருத்தாவது, புடலங்காவாது! பொங்கல் தினத்தையொட்டி, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் துணிவு, வாரிசு ஆகியவை வெளியாகி இருக்கின்றன. மிகுந்த ஆரவாரத்துடனும் அதீத எதிர்பார்ப்புகளுக்கிடையிலும் இவ்விரண்டு படங்களும் தற்போது ஓடிக் கொண்டிக்கின்றன. பொதுவாக தமிழ்நாட்டில், வேறு எந்த மாநிலம் ...

அருமையான குடும்ப படம்! மனைவிகளின் உணர்வுகளை, எண்ணங்களை உணர முடியாத கோடானு கோடி இந்திய கணவன்மார்களின் பிரதிபலிப்பாக கதாநாயகன்! எவ்வளவு தான் கணவனுக்கு அடங்கிப் போவது எனத் தெரியாமல் தடுமாறி, எதிர்க்கத் துணியும் இளம் மனைவி!  நகைச்சுவை ததும்ப எடுத்துள்ளனர்! நமது தேசிய கீதத்தின் கடைசி வரி தான், இந்தப் படத்தின் பெயர். இந்தப் பாடலை பாடினால், அந்த விழா அதோடு முடிந்ததாக பொருள். அதே போல இந்தப் படத்தில் வரும் ராஜேஷ் – ஜெயாவின் திருமண வாழ்க்கையும் அதோடு முடிந்துவிடுமோ… என்பதால் இந்தப் ...

இந்தச் சமூகம் சுகாதாரத்துடன் திகழ, தங்கள் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் கடைக்கோடி மனிதர்களின் வலியை ரத்தமும், சதையுமாக உயிர்ப்போடு காட்சிப்படுத்துகிறது படம்! மலக்குழி மரணங்களின் அரசியல் சாட்சியமாக, தமிழ்ச் சினிமா இது வரை பேசத் துணியாத கதைக் களத்தை காட்டும் ஒரு அபூர்வ வரவு! அறிமுக இயக்குனர் தீபக் ஒளிப்பதிவு, இயக்கத்தில் ‘விட்னெஸ்’ தமிழ் திரைப்படம் தற்போது ‘சோனி லைவ் ஓடிடி’ தளத்தில் வெளியாகி உள்ளது. படம் மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் நிகழும் மரணத்தின் கொடூரமான அரசியலை பேசுகிறது. எரிச்சலான ...

குடும்பத்தில் தந்தை என்ற மிக சக்தி வாய்ந்த ஸ்தானத்தில் ஒரு அப்பன் பேரன்மையும் விதைக்க முடியும். பெருந் துன்பத்தையும் திணிக்க முடியும். சுய நலமிக்க தந்தையால் ஒரு குடும்பம் சந்திக்கும் இன்னல்களை அணுவணுவாக காட்சிப்படுத்தி, குடும்ப வன்முறை களத்தை தத்ரூபமாக படம் பிடித்துள்ளனர்! சோனி ஓடிடியில் வெளியாகியிருக்கும் அப்பன் என்னும் மலையாள சினிமா கொடூரமான, சுயநலமான தந்தை கதாபாத்திரத்தின் மூலம், வாழ்வின் இருத்தலை கேள்விக்குள்ளாக்குகிறது.  வழக்கமாக, செண்டிமெண்டல் பாத்திரமாக மட்டுமே வடிவமைக்கப்படும் அப்பா பாத்திரத்தை, இப்படியும் ஒரு மனிதனா? என்று நினைக்கும் அளவுக்கு சுயநலமும், ...

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ள படம் லாஸ்ட் பிலிம் ஷோ என்ற குஜராத்தி திரைப்படம்! தற்போது இந்தியா முழுவதும் வெளியாகி உள்ளது. பதின் பருவச் சிறுவர்களை சினிமா எப்படியெல்லாம் ஆகர்ஷித்து, ஆட்டிப் படைக்கிறது என்பதை நுட்பமான கலை அம்சத்துடன் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்தப் படத்திற்கு ஆஸ்கர் கிடைக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யக்கூடிய தகுதியோடு படம் உருவாகி உள்ளது என்பதை மறுக்க முடியாது. பான் நலின் எழுதி தயாரித்து, இயக்கியுள்ள இத்திரைப்படம் எதார்த்தமான சினிமாவாக உருவாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமான பவின் ...

எத்தனை வகையான விமர்சன அம்புகள், அவதூறுகளை வீசினாலும் அவற்றையெல்லாம் தாண்டி, இந்தப் படம் மக்கள் மத்தியில் சென்று மகுடம் சூட்டிக் கொண்டு விட்டது. அறிவு ஜீவிகள் சிலர் பேசுகிற பேச்செல்லாம் காற்றில் கலந்து போய் விடும். அணுவணுவாக ரசித்து, கொண்டாடி மகிழத் தான் எத்தனை அம்சங்கள் இருக்கின்றன..! அமரர் கல்கி இலக்கிய உலகத்தில் கொடி கட்டிப் பறந்தவர். இந்திய விடுதலைப் போராட்ட கால தேசபக்தர். அவர் சாதி, மத,இன, மொழி, வேறுபாடுகளைத் தாண்டி வாழ்ந்த தேசியவாதி. அவர் தமிழர்களைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்றோ, தமிழ் ...