நீதிபதிகளை நாம் கடவுளுக்கு இணையாகப் பாவிக்கிறோம்! அரசாங்கமே தவறு செய்தாலும், நீதிமன்றத்தில் நியாயம் பெற்றுவிடலாம் என நம்புகிறோம். ஆனால், நீதிபதிகளோ, அரசாங்கத்தின் அறிவிக்கப்படாத கூட்டாளியாக தீர்ப்புகள் தருவதும், அதற்கு பிரதியுபகாரமாக பதவிகள் பெறுவதும் நீதித் துறையின் மீதான நம்பிக்கைகளை சிதைத்துவிடாதா? அரசியல்வாதிகளைக் கூட தண்டிக்க வழியுண்டு மக்கள் மன்றத்தின் வழியே! ஆனால், நீதிபதிகளை தண்டிப்பது என்பதை நினைத்தே பார்க்க முடியாது. அந்த அளவுக்கு நமது அரசியல் சட்டத்திலேயே ஆகச் சிறந்த பாதுகாப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும், அவர்களுக்கு வசிக்க பங்களா, கார் உள்ளிட்ட ...
தேசீய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தால், நீதித்துறையில் அரசியல் விளையாட்டுகளை நிகழ்த்த துடிக்கிறது பாஜக அரசு! இந்த சட்டம் நீதித் துறையில் தற்போதுள்ள கொஞ்ச நஞ்ச சுதந்திரத்தையும் பறித்து விடும்! ஜெயிக்கப் போவது யார்? சுதந்திரமான நீதித் துறையா? சூது நிறைந்த பாஜக அரசின் சர்வாதிகாரமா? ஒரு ஜனநாயக நாட்டில் நீதித்துறையும் நீதிபதிகளும் எந்தவித சார்பும் இன்றி சுதந்திரமாக ,நேர்மையாக செயல்படுவது மிக அவசியம் . நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டு மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். தவறுகள் திருத்தப்படும், உரிமை மீறல்கள் தடுக்கப்படும் ...
தமிழ்நாட்டில் அநீதிகளை அரங்கேற்றும் தீய சக்திகள் சிலருக்கு துணை போகும் வண்ணம் நீதி துறையில் சில தீர்ப்புகள் வெளியாயின! அவற்றில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, உண்மையை நிலை நாட்டுகின்ற நகர்வுகள் தற்போது அரங்கேறி வருகின்றன! இந்த வகையில் மாரிதாஸும், ரவிக்குமாரும் மறுபடி சிறைப்படலாம்! வெறுப்பு, வன்மம், துவேஷம் ஆகியவற்றை பரப்புவதையே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருபவர் மாரிதாஸ்! இந்தியாவின் மிகப் பெரிய முப்படைத் தளபதி தமிழ்கத்தில் நடந்த விமான விபத்தில் இறந்த அதிர்ச்சியில் இந்த தேசமே உறைந்திருக்கும் வேளையில், தடாலடியாக அவதூறு பரப்பும் வண்ணமும், ...
நீதிமன்றம் என்ன சொன்னாலும் நாங்க என்ன செய்வோமா , அதை தான் செய்வோம் என ஒன்றிய அரசு மூர்க்கமாக இயங்குகிறதா ..? தேர்தல் ஆணையர் தேர்வே சரியில்லை என்றால், ஜனநாயகத்திற்கு சவால் விடுவதாக தான் அர்த்தமாகும். இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவு 324 நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு தலைமை தேர்தல் அதிகாரியும், இரு தேர்தல் அதிகாரிகளும் இருப்பார்கள். நேர்மையான தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்க வேண்டும். எனவேதான் தலைமை தேர்தல் ...
தேர்தல் ஆணையர் சுதந்திரமாக செயல்பட முடியாதா? ஏன் இத்தனை சிக்கல்கள்! தேர்தல் ஆணையரை கைப்பாவையாக்கும் பாஜக அரசுக்கு நீதிமன்றம் கடிவாளம் போட முன் வந்துள்ளது! இதில் வெகுண்ட சொலிசிடர் ஜெனரல், நீதிபதிகளையே மிரட்டுகிறார். வெற்றி பெறப் போவது நீதிமன்றமா? பாஜக அரசின் அதிகாரமா..? ஒரு வாரமாக தேர்தல் ஆணையம் அதன் ஆணையர்கள் அவர்களது நியமனம் மற்றும் செயல்பாடு பற்றி ஊடகங்கள் பரவலாக பேசி வருகின்றன. இதற்கு காரணம் நடந் து முடிந்த இமாச்சல் மாநில தேர்தலோ அல்லது நடக்கவிருகின்ற குஜராத் தேர்தலோ அல்ல. மாறாக தேர்தல் ...
அப்பழுக்கற்ற பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் மூத்த வழக்கறிஞர் ரத்தினம்! ‘எளிய, கடைக்கோடி மனிதனுக்கு நீதி மறுக்கபடக் கூடாது’ என்பதில் ஆர்வம் காட்டுவார்! கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்! அம்பேத்கார் சட்டப் பணிகள் சங்கம் என்றும் பவுத்த பொதுவுடமை இயக்கம் எனவும் இயங்கி வருகிறார்! நேற்றைய தினம் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் பொது நலன் சார்ந்து செயல்படும் முக்கியமான வழக்கறிஞர்கள் பலர் ஒன்றிணைந்து மகாத்மா காந்தி, புரட்சியாளர் பகத்சிங் ஆகிய இருவரையும் மையப்படுத்தி நினைவுகூறும் விதமாக ஒரு ...
கள்ளக்குறிச்சி வழக்கு காவல்துறை விசாரணையில் உள்ளது! ஜிப்மர் கொடுத்தது ஒரு மருத்துவ ஒபினியன் தானே! அதை பொதுவெளியில் வைக்க மறுத்து, தன்னிச்சையாக கருத்துரைப்பதா? இது விசாரணையின் போக்கை கடுமையாக பாதிக்குமே! நீதிமன்றத்தின் மாண்பையே கேள்விக்குள்ளாக்கி விட்டார் நீதிபதி! ‘ஆட்சியாளர்கள் தப்பு செய்தாலும், காவல்துறை தப்பு செய்தாலும் கூட கடைகோடி மனிதனின் கடைசி புகலிடமாக விளங்கி வருவது நீதித் துறை தான்! கோடானு கோடி மக்களின் அந்த மகத்தான நம்பிக்கையை ஒரு போதும் சீர்குலைந்து விடக் கூடாது’ என்பதே நம் ஆதங்கம்! கள்ளக் குறிச்சி வழக்கில் ...
நமது நீதிமன்றங்களில் சுமார் 5 கோடி 50 லட்சத்திற்கு மேற்பட்ட வழக்குகள் தேங்கியுள்ளன! பாட்டன் போட்ட வழக்கை பேரன் நடத்தும் நிலைமைகள்! வழக்கிற்காக வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம்! ஏன் வழக்குகள் தேங்கின்றன? நீதித் துறைக்குள் நிலவும் சிக்கல்கள் என்ன? விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகு செம்மையான அரசியல் சாசனத்தை பெற்ற இந்திய மக்கள் 1950 ஆண்டு முதல் இந்திய உச்ச நீதி மன்றத்தின் தலைமையில் இந்திய நீதி துறை செயல்பட தொடங்கியதை கவனித்து வருகிறார்கள். எத்தனையோ வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை உச்ச ...
‘ஒரு பெண் தன்னார்வத்துடன் கொள்ளும் பாலியல் உறவு குற்றமாகாது, சட்டத்திற்கு புறம்பாகாது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை கண்ணியக் குறைவாக யாரும் நடத்தக் கூடாது’ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது! மிக நுட்பமாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய இந்த தீர்ப்பு குறித்து சில பெண் ஆளுமைகளின் கருத்து! ”என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே, இது தான் ஐயா பொன்னகரம்” என்று ஒரு புகழ்பெற்ற கதை முத்தாய்ப்பாக முடியும். அடிபட்டு கிடக்கும் தன் கணவனுக்கு பால், கஞ்சி வாங்குவதற்காக, அம்மாளு இருளில் ஒதுங்கி முக்கால் ...
மகாத்மா காந்தி கொலைக் குற்றவாளிகளை நமது அரசுகளும், நீதித் துறையும் அணுகிய விதத்திற்கும் ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை அணுகிய விதத்திற்கும் தான் எவ்வளவு வேறுபாடுகள்! 15 ந்தே ஆண்டுகளில் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலையானதும், 31 ஆண்டுகள் இவர்களின் சிறைவாசம் தொடர்வதும் குறித்த ஒரு அலசல்! காந்தி கொலையில் மொத்தம் ஒன்பது பேர் தான் கைதானார்கள்! ஏராளமானவர்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டனர்! சமீபத்தில் கூட மகாத்மா காந்தியின் படுகொலை குறித்து தீவிரமாக ஆய்வு நடத்தி வரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் பாண்டா ...