”அரசாங்கத்தையே தட்டிக் கேட்பீர்களா? பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பீர்களா? அநீதிகளை அரங்கேற்ற விடாமல் முட்டுக் கட்டை போடுவதா? எனில் உங்களை எங்களால் பழி வாங்க முடியும்! கெஞ்ச வைப்போம், கொந்தளிக்க வைப்போம், கையறு நிலையில் கதற வைப்போம் ..ஜாக்கிரதை” என நீதித் துறையோடு மோதும் பாஜக! பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட எல்லா அமைப்புகளின் பொதுத் தன்மையையும் சிதைக்கும்படி தனக்கு சாதகமான நபர்களை உயர்பதவியில் அமர்த்தி, தான் நினைத்ததை சாதித்து வருகிறது. அதே போல, ‘நீதித் துறையிலும் தனக்கு ...
கருணை நிறைந்த கம்யூனிஸ்ட் வழக்கறிஞர் என்.டி.வி! தனிமனித ஒழுக்கத்தின் சிகரம்! எவ்வளவு பணம் தந்தாலும் தவறான நபர்களுக்காக வாதாடமாட்டார். பல புகழ்பெற்ற வழக்குகளின் வழக்கறிஞர்! பல நீதிபதிகளை உருவாக்கியவர். இவர் எப்படி தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றார்..! என் டி வானமாமலையின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவருக்கான ஒரு நினைவு மலரை – இஸ்கப் அமைப்பினர் செப்டெம்பர் 9 ஆம் நாள் – சென்னையில் வெளியிட்டார்கள். அத்துடன் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தும் கருத்தரங்கமும் நடைபெற்றது. அவரது நூற்றாண்டு நினைவு மலரை உச்ச ...
அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்ட புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது பாஜக அரசு! தேசத் துரோக குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான தண்டனையாம்! ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைக்காவிடில் நீதிபதியே கூட கைதாகலாமாம்! மக்களாட்சியை சிதைத்து மன்னராட்சியாக்கவா சட்டங்கள்? இ.பி.கோ. என இந்திய நாட்டு மக்களால் பெரிதும் அறியப்பட்ட இந்திய தண்டனைச்சட்டம் Indian Penal Code (IPC), இந்திய சான்று சட்டம் (Indian Evidence Act) மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் Criminal Procedure Code (CrPC) ஆகிய மூன்று சட்டங்களை ஒழித்துவிட்டு, அதற்கு மாற்றாக பாரதீய நியாய ...
அரசியல்வாதிகள் ஊழல் வழக்கில் தப்பித்து விடுவார்கள். அவர்களை தண்டிப்பது அரிதினும் அரிது என்பதை சுக்கு நூறாக்கும் விதத்தில் மாற்றங்கள்! எத்தனையோ ஊழல்கள்! எத்தனையோ வழக்குகள்! எல்லாம் வெறும் சலசலப்புடன் முடிந்தன! ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் தப்பிக் கொள்ள முயன்று வசமாக மாட்டிக் கொண்டார்! நான் பார்த்ததிலேயே மிக மோசமான முறையில் விசாரிக்கப்பட்ட வழக்கு இது தான் என பொன்முடி அவர் மனைவி விசாலாட்சி உள்ளிட்ட ஐவர் சொத்துகுவிப்பு ஊழல் தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ...
ஒரு விசாரணை அனுமதிக்கே அமலாக்கத் துறைக்கு ஒருமாத நீதிமன்றப் போராட்டம் நிர்பந்திக்கப்பட்டது ஏன்? இந்த காலகட்டத்தில் நடத்தப்பட்ட பேரங்கள் என்ன..? பழைய வழக்கிற்காக மட்டும் விசாரணையா? டாஸ்மாக் கொள்ளை விவகாரமும் உள்ளதா..? செந்தில் பாலாஜி தம்பியை விட்டுப் பிடிப்பது ஏன்? இன்றைக்கு மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் வழங்கி இருக்கும் தீர்ப்பு யாரும் எதிர்பாராததல்ல. இந்த நியாயத்தை சொல்ல பெரிய திறமையோ, சட்ட அறிவோ அவசியமில்லை. கடத்தப்பட்டு, கண் காணாத இடத்தில் வைத்திருக்கப்படும் நபரை கண்டுபிடித்துக் கொடுக்க போடப்படுவது தான் ஆட்கொணர்வு மனு. அனைவரும் அறிய ...
சனாதன நீதிபதிகள்! சாஸ்திரத்தின் மீதான நம்பிக்கைகள்! அரசமைப்பு சட்டமெல்லாம் படிப்புக்கும், பேச்சுக்கும் தானா? நடைமுறை யாவும் பழம் பஞ்சாங்கமும், சாஸ்திரங்களும் தாமா? இந்திய நீதித் துறையில் சில நீதிபதிகள் நமது சமூகத்தை பல நூற்றாண்டுகள் பின்னுக்கு இழுக்கின்றனர் என்பதற்கு இந்த இரு வழக்குகளின் தீர்ப்புகளே சாட்சி! சமீபத்தில் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் இருவர் வெவ்வேறு வழக்குகளில் வழங்கிய உத்தரவுகள் மிகவும் கலக்கத்தை அளிக்கிறது. காரணம், இந்த உத்தரவுகள் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அமையாமல்,சனாதானத்தின் அடிப்படையிலும், மனுஸ்மிருதியின் அடிப்படையிலும் அமைந்துள்ளது தான். அதில் ஒன்று, உத்தரப்பிரதேச ...
சுதந்திரமான நீதித் துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக பாஜக ஆட்சியில் பல முன்னெடுப்புகள் நடக்கின்றன! நீதித்துறையை அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் பதுமையாக மாற்றும் முயற்சிகளை வெறித்தனமாக முன்னெடுத்தவர் தான் கிரண் ரிஜிஜு! இவர் மாற்றப்பட்டதன் பின்னணியை அலசுகிறது இந்தக் கட்டுரை! நீதித்துறையுடன் குறிப்பாக உச்ச நீதிமன்றத்துடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வந்த ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் இருந்து சட்ட அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, அவர் புவி அறிவியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 2014 இல் பாஜக ஒன்றிய அரசை கைப்பற்றிய காலத்தில் ...
உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கே வராத விவகாரத்தில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பால் மணிப்பூர் பற்றி எரிகிறது! மேட்டுக்குடி மக்களை பழங்குடியினராக அறிவிப்பது பாஜகவின் விருப்பம். சென்னையில் இருந்து மணிப்பூர் சென்ற நீதிபதியால் வழங்கப்பட்டது தீர்ப்பு! இதையடுத்துத் தான் மணிப்பூர் பற்றி எரிகிறது. முழு விவரமாவது; தற்போது மணிப்பூரின் கலவரம் மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் ஏராளமான கிறிஸ்துவ தேவாலயங்கள், மருத்துவமனைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பழங்குடியினரின் வீடுகள், வாகனங்கள், கடைகள் தீக்கிரை யாக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கணக்கான மக்கள் அகதிகளாகி அரசு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மலைப் ...
பிரிட்டிஷாரால் செய்ய முடிந்த சாதி வாரி கணக்கெடுப்பை, பிறகு வந்த சுதேசிய ஆட்சியாளர்களால் செய்ய முடியாமல் போனது ஏன்? எதற்காக காலம் கடத்துகிறார்கள்? மாநில அரசுக்கு இந்த உரிமை மறுக்கப்படுவதன் மர்மம் என்ன? சாதிவாரி கணக்கெடுப்பிற்கு தடையாய் இருக்கும் சமூக, அரசியல் பின்னணி என்ன..? இந்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை தொடர்ந்து மறுதலித்து வருகிறது. இந்த நிலையில் பிகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவெடுத்ததை அடுத்து, முதல்கட்ட கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 7ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடத்தப்பட்டது. இரண்டாம் ...
கடற்கரை நகரமான சென்னையின் பூர்வீகக் குடிகள் என்றால், அது மீனவர்களே! ஆனால், சிங்காரச் சென்னையின் பெயரால் மீனவர்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்து கிறார்கள்! கடற்கரை லூப் சாலையின் மீன் கடைகளை அதிரடியாக அகற்றிய நடவடிக்கை சொல்ல வரும் செய்தி என்ன..? சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதி முழுவதும் மீனவர் குப்பங்களாக ,அவர்கள் வாழ்விடமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்தது. அந்த மீனவ குப்பங்களுக்கு மேற்கே விவசாய கிராமங்கள் இருந்தன. தொழில் வளர்ச்சி என்பதன் பெயரால் சென்னை நகரத்தின் கடற்கரையை ஒட்டி தொழிற்சாலைகளும் ,துறைமுகங்களும் ...