விவசாயக் கூலி, தள்ளுவண்டிக்காரர், தினக் கூலிகள், ஆட்டோ தொழிலாளி, வீட்டு வேலை செய்யும் பெண்கள் இவர்களைப் போன்ற ஏழை, எளியவர்கள் எல்லாம் 60 வயதானதும் பென்ஷன் வாங்குவதற்கு அரசு ஒரு எளிய திட்டம் வைத்துள்ளது! அதை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், நிரந்தரமில்லாத வேலை செய்து கொண்டு இருக்கும் ஏழை, எளியவர்கள், தினக் கூலியாளர்கள் எந்த நேரமும் பொருளாதாரச் சிக்கலில் இருப்பார்கள். வருமானம் பற்றாக்குறையாகவே இருக்கும். 60 வயதுக்கு பிறகு பொருளாதார ரீதியாக எப்படி வாழப் போகிறோம் என்று யோசித்தே ...
எப்படி சேமிப்பது? எப்படி பாதுகாப்பாக முதலீடு செய்து வளர்த்து எடுப்பது? என்பது தெரியாத காரணத்தாலேயே பல துன்பவியல் சம்பவங்கள்,தற்கொலைகள் நிகழ்கின்றன! உண்மையில் சேமிப்பு என்பதை அறியாமலே வாழ் நாள் முழுக்க கடனாளியாக வாழ்ந்து மடிபவர்களும் உண்டு..! நாம் சிக்கனம் செய்து சேமித்து வைத்திருக்கும் பணத்தை என்ன செய்யலாம் என்றால், சீட்டுப் போடுங்கள் என்று நண்பர்கள், உறவினர்கள் சொல்வார்கள். நாமும் நம் பகுதியில் சீட்டு பிடிப்பவர்களிடம் கட்ட தொடங்குவோம். இன்று நம் மக்களின் முக்கிய முதலீடு சீட்டுக் கட்டுவதாக உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு முறையாவது சீட்டுக் ...
பணத்தை சேமிப்பது ஒரு கலை! பண முதலீட்டில் ஏமாற்றங்களைத் தவிர்ப்பது அதைவிட பெரிய கலை! இங்கு நம் அரசாங்கம் பாதுகாப்பான சேமிப்புக்கும், முதலீட்டிற்கும் செய்துள்ள வாய்ப்புகள் என்னென்ன? அதைக் கடந்து நாம் என்ன செய்ய முடியும்.. ஒரு அலசல்! பணத்தை சேமிக்கத் தான் நாம் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். ஆனால், முதலீடு செய்ய கஷ்டப்பட வேண்டியதில்லை. இருந்தாலும், காலம் முழுவதும் உழைத்துக் கொண்டு இருக்கிறோமே தவிர, எளிதாகச் செய்யக் கூடிய முதலீட்டை 95 சதவிகிதம் மக்கள் செய்வதில்லை. பலரும் பணத்தைச் சேமித்தால் போதும் அவையே ...
லாபகரமான பொதுத் துறை நிறுவனங்களை – விற்கவே கூடாத தேசத்தின் மாணிக்க மகுடமான எல்.ஐ.சியை – நாட்டு மக்களின் பொதுச் சொத்தை – அடிமாட்டு விலைக்கு விற்கிறது பாஜக அரசு! காலத்தை வென்ற இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் தலையானது எல்.ஐ. சி எனப்படும் ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகும் . இந்தியா விடுதலை அடைந்த பொழுது நாட்டின் மக்கள் தொகை 34.5 கோடியாகவும், தனி நபர் வருமானம் தலா 250/- ரூபாயாகவும் மிக ஏழ்மை நிலையில் இருந்தது. படிப்பறிவோ மக்கள் தொகையில் 12 சதவிகிதமே இருந்தது. ...
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இலங்கை தத்தளிக்கிறது. கிட்டத்தட்ட அத்தகைய ஒரு நெருக்கடியை நோக்கி இந்தியாவும் நகர்ந்து கொண்டிருக்கிறது! மூச்சை திணறடிக்கும் வெளி நாட்டுக் கடன்கள், கடுமையான உரத்தட்டுபாடு, வங்கிகளின் வாராக் கடன்கள்…உள்ளிட்டவை மிரட்டுகின்றன! அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கண்மூடித்தனமான சொத்து குவிப்பும், நேர்மையின்மையும் ஏற்கனவே மக்கள் வாழ்க்கையை பின்னுக்கு தள்ளியுள்ளது ஒரு புறமிருக்க, நமது தற்சார்பின்மையும், இறக்குமதியை நம்பியே விவசாயம், பார்மஸி, பெட்ரோலியம்..உள்ளிட்ட பல துறைகள் இயங்குவதும் நமக்கு பல சிக்கலை தந்து கொண்டுள்ளன. வருங்காலத்தில் இவை வீரியமடையும். மேலும் நாம் அளவுக்கு ...
அறிவார்ந்த செயல்பாடுகளை ஊக்குவிக்க கல்விக்கும், நூலக வாசிப்புக்கும் அதிக நிதி ஒதுக்கீடு, சுற்றுச் சூழலில் கவனம், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கை என்பதோடு – கொள்கை சார்ந்த பார்வைகளை அச்சமின்றி வெளிப்படுத்தியதது சிறப்பு! அதே சமயம், வாங்கி குவிக்கும் கடன்கள் தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும்! பள்ளிக்கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு ரூ.32,599 கோடியிலிருந்து, ரூ.36,895 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் சிறப்பான அம்சமாகும்! இது ஒரு வகையில் யானைப்பசிக்கு சோளப் பொறி போன்றதாகும். ஏனெனில், பள்ளிக் கல்வித்துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப இந்த தொகை ...
கிரிப்டோ கரன்ஸி குறித்த அரசின் அணுகுமுறைகள் கருப்பு பண புழக்கத்தை கணிசமாக அதிகரிக்க எப்படி வழிவகுக்கும் என்பதையும், எளிய நடுத்தரப் பிரிவு மக்களை எப்படி நடுத்தெருவிற்கு இழுத்து வந்துவிடும் என்பதையும் சற்றே பார்ப்போம். ஒரு செயலை சரி-தவறு என்று சொல்வதற்குப் பல வருடங்கள் எடுத்து, இன்னமும் முடிவு எடுக்க முடியாமல், அல்லது எடுக்க விருப்பம் இல்லாமல் அந்த செயலை செய்பவர்களைப் பார்த்து உங்களுடைய செயலுக்குப் பணம் கொடுங்கள் என்று கேட்டால்? என்னவென்று சொல்வது. இதுதான் கிரிப்டோகரன்சி விஷயத்தில் நடந்து வருகிறது. கடந்த 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் ...
கொரானா பீதியைக் காட்டி சட்டமன்ற தேர்தல்களோ, உள்ளாட்சி தேர்தல்களோ தள்ளிப் போடப் படுவதில்லை. புத்தகக் கண்காட்சியை மட்டும் தடுத்துவிட்டு, ஏகப்பட்ட கெடுபிடிகளோடு தற்போது நடத்தச் சொல்கிறார்கள்! உற்சாகத்தோடு நடத்த வேண்டிய விழாவை, உறுத்தலோடு நடத்தச் செய்கிறார்கள்! தமிழ் பதிப்பகங்களின் ஒரே நம்பிக்கை வருடத் தொடக்கத்தில் வரும் சென்னை புத்தக கண்காட்சி தாம்! இந்த வருடம் தொடக்கத்தில் நடக்க இருந்ததை, கோவிட் பரவலை காரணமாக்கி, தமிழக அரசு நடத்தக் கூடாது என்று தடை விதித்துவிட்டது! இந்த கடைசி நேர அறிவிப்பால் ஜனவரி 6 தொடங்க இருந்த ...
பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கியே தீருவது என்பதில் படிப்படியாக முன்னேறி வருகிறது பாஜக அரசு. அரசுத்துறை வங்கிகளை அணுவணுவாக பலவீனப்படுத்தி, தனியார் வங்கிகளை மட்டுமே தழைத்தோங்கச் செய்வதே அரசின் திட்டமாக அரங்கேறி வருகிறது! சமீபத்தில் கூட ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்ற நிலையில், அவ்வங்கி தனியார் மயமாக்கப்பட்டது. தற்போது நடந்து கொண்டிருக்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பொதுத் துறை வங்கிகளில் அரசின் பங்கை குறைப்பதற்கான சட்டதிட்டங்களை அரசு கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. இதை எதிர்த்து தான் இந்தியா முழுமையும் வங்கி ஊழியர்கள் ...
Gpay, Paytm, Phonepe, Amazon Pay போன்ற பணப் பரிவர்த்தனை ஆப்கள் போட்டி போட்டுக்கொண்டு இலவசமாக நமக்குச் சேவையைத் தருகின்றன! நாம் என்ன தொகையை அனுப்புகிறோமோ, அதே தொகை அனுப்பியவர்களுக்கு அப்படியே தந்துவிடுகின்றன! அதற்கு நம்மிடம் இருந்து எந்தவித கட்டணமும் வாங்குவதில்லை. இலவச சேவையை எப்படி வழங்குகின்றன, இந்த நிறுவனங்கள்? இதனால் இந்த நிறுவனங்களுக்கு என்ன லாபம்? முற்றிலும் இலவசம் என்றால், நஷ்டம் வரவே அதிக வாய்ப்பு உண்டு. இந்த ஆப்களை பயன்படுத்தும் நமக்கு இப்படிப் பல கேள்விகள் தோன்றலாம். உண்மையில் இவை நமக்கு ...