தேவபூமி எனப்படும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதர் நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி எனும் நான்கு கோவில்களின் உறைவிடமான  ஆன்மீக பூமியை வன்மமும், வெறுப்பும் மிகுந்த நரகமாக மாற்றி வருகின்றனர் பாஜகவினர் என்பதற்கு அதிர்ச்சி தரும் இந்த சம்பவமே சாட்சியாகும்; உத்தராகாண்ட் மாநில தலைநகரான, டேராடூனில் ஜுலை 14 அன்று கிறித்துவர்களின் வழி பாட்டுத்தலமான ஒரு சிறிய தேவாலய இல்லத்தில், முப்பதுக்கும் மேற்பட்ட இந்து மத தீவிரவாதிகள்  புகுந்து அங்கிருந்தோரை தாக்கி, காயப்படுத்தி அங்கிருந்த பொருட்களையும் உடைத்து நொறுக்கி நாசப்படுத்தியுள்ளனர். டேராடூனின் நேரு காலனியில் ...

121 பேர் சாவுக்கு காரணமான பாபாவை சட்டத்தால் நெருங்க முடியவில்லை. போலே பாபா மீது எப்.ஐ.ஆர் போடுவதற்கு அரசாங்கத்திற்கு துணிவில்லை! துயரத்தில் உழல்வோரை சந்திக்காமல் தலைமறைவான சாமியாரை கைது செய்ய எந்தக் கட்சியும் வலியுறுத்தவில்லை. மறைக்கப்பட்ட உண்மைகள்! காப்பாற்றப்படும் சாமியார்! நடந்தது என்ன? ”சத்சங் நிகழ்ச்சியில் பங்கேற்ற 121 பேர் இறந்து போனதற்கு சமூக விரோதிகளே காரணம்” என போலே பாபா கூறியுள்ளார். ஆம், அவர் சொல்வது 100 சதவிகித உண்மையே! அந்த சமூக விரோதிகள் வேறு யாருமல்ல, அவரும், அவரது சீடர்களான குண்டர்களும் ...

கல்விக்கும், மருத்துவத்திற்கும் கணிசமான பங்களித்து வரும் கிறித்துவ சமுதாயத்தை கடும் தாக்குதலுக்கு இலக்காக்கி செயல்படுகிறது பாஜக என்பதை உறுதிபடுத்த இந்த தரவுகளே போதும்! தேவாலயங்களை தீக்கிரையாக்குதல், கிறித்துவர்கள் மீது அவதூறுகள், அராஜகங்கள்..என நீளும் சம்பவங்களின் பதற வைக்கும் பட்டியல்; வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு சமயம் பரப்புவதற்காக வந்த கிறித்தவர்கள் கிறித்தவ சமயத்தை பரப்பியதோடு, இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள பற்பபல இனங்களின் மொழியையும், பண்பாட்டையும், இனக்குழு அடையாளங்களையும் பாதுகாத்து வளர்த்தனர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அறியாமையில் வாழவைக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, மருத்துவம், ஆய்வுமுறை, அறிவு போன்றவற்றை கொடுத்து ...

தருமபுர ஆதீனகர்த்தர் மாசிலாமணி ஆபாச வீடியோ, ஆடியோ விவகாரத்தில் சிக்கிக் கொண்டார்! உள்ளூர் பாஜகவினர் அவரை மிரட்டி பணம் பறிக்கத் துடித்த நிலையில், திமுக அரசு தலையிட்டு அவரது பாலியல் லீலைகளை மூடி மறைத்து, அவரை காப்பாற்றியது சர்ச்சையாகியுள்ளது! இதன் உண்மையான பின்னணி என்ன? தற்போதைய தருமபுர ஆதினத்தை பொறுத்த வரை அவருக்கு சொந்த ஊரில் எந்த மதிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த அளவுக்கு அவர் பெயர் கெட்டுப் போயுள்ளது. ஆதினத்துடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள், ”அவர் செக்ஸ் ஜோக்கை அதிகம் விரும்புவர் என்றும், ...

முன்னெப்போதும் இல்லாத பதற்றம் இந்திய இஸ்லாமியர்களிடையே எழுந்துள்ளது! காரணம், பாபர் மசூதி இடிக்கப்பட்டு ராமர் கோவில் உருவாக்கத்திற்கு பிறகு தற்போது வாரணாசியின் ஞானவாபி, மதுராவின் ஷாயி ஈத்கா மசூதி, டெல்லியில் சுனேஹ்ரி போன்றவற்றை சங் பரிவாரங்கள் குறிவைத்து முன்னேறுகின்றன! இந்திய இஸ்லாமியர்களின் குழு ஒன்று குடியரசுத் தலைவரை சந்தித்து தங்கள் அச்சத்தையும், கவலையையும் எடுத்துச் சொல்ல நேரம் கேட்டுள்ளனர். இந்திய இஸ்லாமியர்களின் மசூதி மற்றும் வக்பு வாரிய சொத்துக்களை அபகரிக்கும் முயற்சிகள் தற்போது வேகம் பெற்று வருகின்றன. இதில் குடியரசுத் தலைவரின் கவனத்தை கோர ...

”சனாதனம் என் கொள்கை. அதற்காக பதவி விலகவும் தயார்” என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியுள்ள நிலையில், பெருந்தலைவர் காமராஜருக்கு கோவில்கள், நாத்திகம், கடவுள், வேண்டுதல்கள், புராணம், இதிகாசம், மதப் பண்டிகைகள்..ஆகியவை பற்றி எல்லாம் என்ன மதிப்பீடுகள் இருந்தன என்பதற்கு இதோ ஆதாரங்கள்; தலைவர் காமராஜரோடு நெருங்கி பழகியவர் சீர்காழி பெ.எத்திராஜ். ஒரு நெடிய பயணத்தில் அவர் காமராஜரோடு அருகிருந்து பார்த்தும், கேள்விகள் கேட்டும் பெற்ற விளக்கங்கள் இங்கே தரப்படுகிறது; தலைவர் காமராஜர் தஞ்சை மாவட்ட சுற்றுப்பயணத்தில் வந்தபோது ஒருபழம்பெருமை வாய்ந்த பாழடைந்த கோயிலை ...

சாமியார் கொலை வெறியோடு கொந்தளிக்கிறார்! வட இந்திய அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள், தலைவர்கள்  எதிர்க்கிறார்கள்! வரலாற்றின் பக்கங்களில் சனாதனம் செய்த சதிகளின் பட்டியல் சொல்வது என்ன? திராவிட வெறுப்பையும், ஒழிப்பையும் தூண்டி வேடிக்கை பார்த்தவர்களின்  சூழ்ச்சி பலிக்குமா..? என்ன புதிதாகப் பேசிவிட்டார் உதயநிதி! சனாதனம் என்பது ஒழிக்கப்பட வேண்டியது என்பதை நாம் தமிழ்நாட்டில் கடந்த நூற்றாண்டுகளாக பேசி வருகிறோம். ஆன்மீகப் பெரியோர்களான வள்ளலார், நாராயணகுரு தொடங்கி சமூக புரட்சியாளர்களான அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கார் வரை சனாதனம் குறித்து தெரிவித்த கருத்தை தான் உதயநிதி ஸ்டாலின் ...

மீனாட்சி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் கோவில்களில் எல்லாம் வெற்றிகரமான ஆலய நுழைவு சுதந்திரத்திற்கு முன்பே சாத்தியமாகியும், இன்னும் தமிழகத்தின் நூற்றுக்கணக்கான சிற்றூர் கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுப்பு தொடர்கிறது. இதில் சாதியக் கட்சிகளின் ஆதாய அரசியல் முடிவுக்கு வருமா? சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் இங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அந்த சுதந்திரம் சென்று சேரவில்லை என்பதை தான் தமிழகத்தின் பல பகுதிகளில் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்படும் விவகாரங்கள் உணர்த்துகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூர் அருகே மேல்பாதி  கிராமத்தின் ...

பல்லாண்டு போராட்டங்கள்! இன்னும், சிதம்பரம் கோவில் கனகசபையில் தேவாரம் பாட முடியவில்லை. எட்டுகோடி தமிழர்களையும், தமிழக அரசையும், அறநிலையத்துறையையும்  வெறும் 350 தீட்சிதர்கள்  துச்சமாக கருதுகிறார்கள்! இன்னும் எத்தனை காலம் தான் தீண்டாமை தொடருமோ? குழந்தை திருமணங்களை நடத்துவார்கள்! சட்டத்திற்கு கட்டுப்பட மாட்டார்கள், நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்க மாட்டார்கள், அராஜகம், அடாவடித்தனம் அவர்களின் இயல்பு! எத்தனையோ எப்.ஐ.ஆர் இருந்தும் அவர்களை கைது செய்ய முடிந்ததில்லை.தெலுங்கானா கவர்னர் தமிழிசை சென்ற போதும் தர்மசங்கடத்திற்கு ஆளானார். யாரும் கேள்வி கேட்க முடியாது. கடந்த ஆண்டு கனகசையில் தேவாரம் ...

தலித்கள் கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறினாலும், சாதி தகுதியை இழக்கமாட்டர் என்கிறது தமிழக அரசு. உண்மையில் மதம் மாறியதற்காக ஒருவருக்கு தரப்படும் தண்டனையாக சாதி இழப்பு இது வரை கருதப்பட்டது…! அதே சமயம் கிறிஸ்த்துவ தலித்களை அங்கீகரிப்பது மதமாற்றத்தை ஊக்கப்படுத்துவதாகுமா? தற்போது தமிழ்நாடு சட்டசபை ஒரு வரலாற்று முக்கியத்துவமான தீர்மானத்தை 18 ஏப்ரல் 2023 அன்று நிறைவேற்றி உள்ளது. அந்த தீர்மானத்தில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியல் இனத்தவர்களை, பட்டியல் இனத்தவர்களாக கருத வேண்டும் என்ற முறையில் அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யுமாறு ஒன்றிய ...