நீதிபதி சுவாமிநாதன் குறித்து கடுமையான பல விமர்சனங்கள் உள்ளன. ஆனால், சட்டப்படியாக அவர் வழங்கிய தீர்ப்பு எப்படிப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளாமல், முரட்டுத்தனமான அணுகுமுறைகளில் அவரது தீர்ப்பை அரசியல் ரீதியாக முறியடிக்க முடியுமா? சட்ட வழிமுறைகளின் சாத்தியம் என்ன என்பது குறித்த அலசல்; திருபரங்குன்றத்தில் கார்த்திகைநாளில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சினை  இரு மதத்தினருக்கு இடையிலான பிரச்சினை அல்ல. ஒருபுறம், இந்து அமைப்பினரும் பாரதிய ஜனதாவும் திராவிட மாடல் ஆட்சியில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை, இந்துக்களின் உணர்வுகளும் உரிமைகளும் மதிக்கப்படுவதில்லை, நீதிமன்றம் அனுமதித்த பின்னரும் அதை ...

திராவிட மாடல் ஆட்சியில் திருக்கோயில்கள் செழிக்கின்றன…! தமிழ்நாட்டிலே வேறெந்த துறைகளையும் விட இந்து சமய அறநிலையத் துறை தான் ஜெகத்ஜோதியாக பிரகாசிக்கிறது…!பிராமண அர்ச்சகர்கள் காட்டில் அடை மழை பொழிகிறது!  இங்கு 100 சதவிகித சனாதனம் சமரசமின்றி அமலாகும் விதத்தை பார்ப்போமா; சுகாதாரத் துறை தொடங்கி பள்ளிக் கல்வி வரை எல்லா துறைகளிலும் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள், போராட்டங்கள்.. நடந்து கொண்டே இருப்பதை நாம் பார்க்கலாம். ஆனால், அறநிலையத் துறை இந்த ஆட்சியில் அதிர்ஷ்டக்கார துறையாக உள்ளது என்பதை யார் ஏற்கிறார்களோ இல்லையோ.., பார்ப்பன ...

இந்தியாவில் பத்து கோடிக்கு மேற்பட்ட பழங்குடிகள் உள்ளனர். ஆதிவாசிகளின் சம்மதமின்றி எங்களை இந்துக்களாக அரசாங்கம் பதிவு செய்வதை ஏற்கமாட்டோம். இந்து மதம் பற்றி எதுவும் எங்களுக்கு தெரியாது. எங்கள் தொன்மை அடையாளத்தை ஏன் அழிக்கத் துடிக்கிறீர்கள்..? என அரசாங்கத்தை எதிர்த்து ஆதிவாசிகள் போராடி வருவது குறித்த அலசல்; மத்திய பிரதேசத்தில்,  ‘பில்’ என்கிற மிகப் பெரிய பழங்குடி இனத்தினர் உள்ளனர். இச் சமூகத்தைச் சேர்ந்த உமாங் சிங்கர், பழங்குடியினர் கூட்டம் ஒன்றில் சமீபத்தில் பேசியது அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. ”நாங்கள் ஆதிவாசிகள். இந்து மதத்தினர் ...

‘ஆன்மீக மையங்கள் எவ்வாறு அதிகார மையங்களாகத் திகழ்கின்றன?’ என்பதற்கு இந்த இடமே சாட்சி..! சட்டமோ, நீதியோ, காவல்துறையோ கூட இங்கே நெருங்க முடியாது. இந்த தர்மஸ்தலாவை சுற்றிலும் பாலியல் கொடுமை செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் புதைக்கப்பட்டுள்ளனர், எரிக்கப்பட்டுள்ளனர்.. என்ற தகவல் பெரும் அதிர்வை தந்துள்ளது;  கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் மிகவும் பிரச்சித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். 800 ஆண்டு பழமையான இந்த வழிபாட்டுத் தளம் அடிப்படையில் சமணத்தவர்கள் கோவிலாக இருந்து ...

பிராமணர் அல்லாதவர் கதா காலட்சேபம் செய்யக் கூடாதாம். செய்தால் கடும் தண்டனையை அமல்படுத்தி தண்டிக்கும் சூழல்கள் இன்றும் நிலவுகிறது! இதை அகில இந்திய பிராமண சபை நியாயப்படுத்துவதா..? நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் நாம் நவீன இந்தியாவில் தான் வாழ்கிறோமா…? என அதிர்ச்சி தருகிறது; பிராமணர்கள் இந்துக்களின் தலைமை பீடத்துக்கு உரியவர்களாம்! இந்துக்களின் பாதுகாவலர்களாம். அப்படி என்றால், பகவத் கீதையின் பெருமையை பேசும் ஒரு சாதாரண இந்துவை போட்டு இந்த சாத்து சாத்துவது ஏன்? என்று நமக்கு புரியவில்லை. விவகாரம் இது தான்; உத்திரபிரதேசத்தில் எட்டவா ...

உலகின் மிக சக்தி வாய்ந்த மதகுருவான போப் ஆண்டவர் தேர்வில் உள்ள அரசியல்களையும், சிக்கல்களையும் இவ்வளவு வெளிப்படையாக எடுக்க முடிவதே நம்மை வியக்க வைக்கிறது. யார் அடுத்த போப் என்பதில் கடைசி வரை ஊகிக்க முடியாத வகையிலான திரைக் கதை! பிரபல இயக்குநர் எட்வர்ட் பெர்கர் இயக்கிய திரில்லர் படம் இது; கான்க்லேவ் (Conclave) : போப் ஆண்டவர் தேர்தலைக் காட்டும் படம் போப் ஆண்டவர் இறந்த பிறகு, அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும், கர்தினால்கள் ஒன்று கூடி, தமக்குள் ஒருவரை போப் ஆண்டவராக  ...

மடாதிபதிகளெல்லாம் துறவிகளாம்..! அனைத்தையும் துறந்ததாகக் கூறி காவி, கமண்டலத்துடன், ருத்திராட்சிர மாலை அணிந்து, அனைத்தையும் துய்த்து இன்புறுகிறார் சிலர்! நாட்டு நலனுக்காக அநீதிகளை எதிர்த்து, ஆதிக்க சக்திகளை, அதிகார மையங்களை எதிர்த்து, உயிரையே துறக்கிறார் சிலர்! எது உண்மையான துறவு; தங்கள் குடும்பம், உற்றார், உறவினர்கள், சொத்து, சுகம் அனைத்தையும் ‘துறந்த பின்னரே’ஒருவர் மத பீடங்களான மடங்களின் ‘மடாதிபதிகளாக’ பொறுப்பேற்கிறார் என்பதே பிரபல ஊடகங்களின் வழியே பொது வெளியில் கட்டமைக்கப்பட்ட  ஒரு கருத்து! இது உண்மையா? இந்து மதங்களின் மடங்கள் மட்டுமல்ல . . ...

ஒரு லட்சம் கோடிகளுக்கும் அதிகமான சொத்துள்ள காஞ்சி சங்கரமடத்தின் அடுத்த வாரிசுக்கான நியமணத்தில் உருவான தடைகளை, போட்டிகளை  களைந்து, ஒருவழியாக தான் விரும்பியபடியே தன் தெலுங்கு  வம்சத்தில் இருந்து ஒரு வாரிசை மடத்தின் அடுத்த பீடாதிபதியாக்கிய விஜயேந்திரரின் காய் நகர்த்தல்கள் சுவாராசியமானதாகும்; பார்ப்பதற்கு எளிமையாக ஒரு சன்யாசி போல காட்சியளிக்கும் சங்கராச்சாரியார்களும், அந்த மடமும் உண்மையில் ஒரு மாபெரும் சாம்ராஜ்யம். கோடிக் கணக்கில் பணம் புழங்கும்  பெரிய கல்லூரிகள், காஸ்டிலியான பள்ளிக் கூடங்கள், அதிக பணம் வசூலிக்கும் மருத்துவமனைகள், ஏராளமான விடுதிகள், ரியல் எஸ்டேட் ...

மூட நம்பிக்கைகள் எல்லாம் இப்போ இருக்குதா என்ன? எதுக்கு சட்டமெல்லாம்? இதனால் மத நம்பிக்கை உள்ளவர்கள் மனம் புண்படுமே…. எனப் பொதுவாக பலர் பேசுகின்றனர்.  மூட நம்பிக்கை ஒழிப்பு என்பதை நாத்திகத்தோடு சம்பந்தப்படுத்தி இந்த சந்தேகம் வருகிறது. இல்லை, இது மத நம்பிக்கையாளர்களுக்கே அதிகம் தேவையாகிறது? எப்படி..? கடந்த இரண்டு நாட்களாக இந்த விவகாரம் தான் அனல் பறக்க சூடாக விவாதிக்கப்படுகிறது. சட்ட சபையில் ”மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்” என எழிலன் எம்.எல்.ஏ பேசியதற்கு ஆதரவாக ஏகப்பட்டோர் பதிவிட்டு ...

ஒவ்வொரு ஆண்டும் மிகப் பெரிய வி.வி.ஐப்பிக்களின் வருகையோடு ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி விழா அரங்கேறுகிறது! ஒரு ஆன்மீக மையம் பிரதமர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் என ஆகப் பெரிய அதிகார மையங்களை  இதற்கு தொடர்ந்து அழைப்பது ஏன்? அதிகார மையங்களிடம் இருந்து விலகி நிற்றல் அல்லவா ஆன்மீகத்தின் இயல்பாக இருக்க முடியும். காரணம், மிக எளிமையானது! தன்னுடைய சட்ட விரோத, சமூக விரோத செயல்பாடுகள் மீது அரசு அமைப்புகள் எதுவும் ...