சாமியார் கொலை வெறியோடு கொந்தளிக்கிறார்! வட இந்திய அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள், தலைவர்கள் எதிர்க்கிறார்கள்! வரலாற்றின் பக்கங்களில் சனாதனம் செய்த சதிகளின் பட்டியல் சொல்வது என்ன? திராவிட வெறுப்பையும், ஒழிப்பையும் தூண்டி வேடிக்கை பார்த்தவர்களின் சூழ்ச்சி பலிக்குமா..? என்ன புதிதாகப் பேசிவிட்டார் உதயநிதி! சனாதனம் என்பது ஒழிக்கப்பட வேண்டியது என்பதை நாம் தமிழ்நாட்டில் கடந்த நூற்றாண்டுகளாக பேசி வருகிறோம். ஆன்மீகப் பெரியோர்களான வள்ளலார், நாராயணகுரு தொடங்கி சமூக புரட்சியாளர்களான அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கார் வரை சனாதனம் குறித்து தெரிவித்த கருத்தை தான் உதயநிதி ஸ்டாலின் ...
மீனாட்சி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் கோவில்களில் எல்லாம் வெற்றிகரமான ஆலய நுழைவு சுதந்திரத்திற்கு முன்பே சாத்தியமாகியும், இன்னும் தமிழகத்தின் நூற்றுக்கணக்கான சிற்றூர் கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுப்பு தொடர்கிறது. இதில் சாதியக் கட்சிகளின் ஆதாய அரசியல் முடிவுக்கு வருமா? சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் இங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அந்த சுதந்திரம் சென்று சேரவில்லை என்பதை தான் தமிழகத்தின் பல பகுதிகளில் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்படும் விவகாரங்கள் உணர்த்துகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தின் ...
பல்லாண்டு போராட்டங்கள்! இன்னும், சிதம்பரம் கோவில் கனகசபையில் தேவாரம் பாட முடியவில்லை. எட்டுகோடி தமிழர்களையும், தமிழக அரசையும், அறநிலையத்துறையையும் வெறும் 350 தீட்சிதர்கள் துச்சமாக கருதுகிறார்கள்! இன்னும் எத்தனை காலம் தான் தீண்டாமை தொடருமோ? குழந்தை திருமணங்களை நடத்துவார்கள்! சட்டத்திற்கு கட்டுப்பட மாட்டார்கள், நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்க மாட்டார்கள், அராஜகம், அடாவடித்தனம் அவர்களின் இயல்பு! எத்தனையோ எப்.ஐ.ஆர் இருந்தும் அவர்களை கைது செய்ய முடிந்ததில்லை.தெலுங்கானா கவர்னர் தமிழிசை சென்ற போதும் தர்மசங்கடத்திற்கு ஆளானார். யாரும் கேள்வி கேட்க முடியாது. கடந்த ஆண்டு கனகசையில் தேவாரம் ...
தலித்கள் கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறினாலும், சாதி தகுதியை இழக்கமாட்டர் என்கிறது தமிழக அரசு. உண்மையில் மதம் மாறியதற்காக ஒருவருக்கு தரப்படும் தண்டனையாக சாதி இழப்பு இது வரை கருதப்பட்டது…! அதே சமயம் கிறிஸ்த்துவ தலித்களை அங்கீகரிப்பது மதமாற்றத்தை ஊக்கப்படுத்துவதாகுமா? தற்போது தமிழ்நாடு சட்டசபை ஒரு வரலாற்று முக்கியத்துவமான தீர்மானத்தை 18 ஏப்ரல் 2023 அன்று நிறைவேற்றி உள்ளது. அந்த தீர்மானத்தில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியல் இனத்தவர்களை, பட்டியல் இனத்தவர்களாக கருத வேண்டும் என்ற முறையில் அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யுமாறு ஒன்றிய ...
எவ்வளவு போராட்டங்கள்! எத்தனை தீர்ப்புகள்! தமிழக அரசே தமிழ் அர்ச்சனைக்கான பயிற்சி பள்ளி நடத்தியது! தமிழ் அர்ச்சகர்களை உருவாக்கியது. ஆயினும், நடைமுறையில் கோவில்களில் தமிழை ஒலிக்கச் செய்வது சாத்தியமற்றே உள்ளது என்பதற்கு பழனி முருகன் கோவில் குட முழுக்கே சாட்சியாகும்! என்ன நடந்தது பார்ப்போம். 16 வருடத்திற்கு பிறகு நடந்துள்ள பழனி கோவில் குட முழுக்கு முழுக்க, முழுக்க சமஸ்கிருதத்தில் மட்டுமே நடத்தப்பட்டு உள்ளது தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பழனி முருகன் திருக்கோயில் குடமுழுக்கின் முன்னேற்பாடாக ஜனவரி 23 அன்றே கால ...
“தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!” என்பதற்கு இன்னும் எத்தனை காலம் போராடப் போகிறோம்? ஏன் நடைமுறைப்படுத்த முடியவில்லை? என்ன தடைகள்? யாரால் இந்தப் பின்னடைவு? என்ன செய்யப் போகிறோம்? தீர்வு என்ன? அனைத்தையும் அலசியது இந்தக் கருத்தரங்கம்! சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் – தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் “தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு குழப்பமான தீர்ப்பை தந்துள்ளது. ...
இந்து என்பது ஆதிக்கத்திற்கான மந்திரம்! அரசியல் பிழைப்பாளர்களின் தந்திரம்! இன்னும் சிலருக்கு வயிறு வளர்க்கும் உபாயம்! இதை நாம் அம்பலப்படுத்தினால் வருகிறது கோபம்! எழுகிறது வன்மம்! எல்லா மதங்களையும் தின்று செறித்ததே இந்து மதம்? ராஜராஜ சோழனை யாராவது இந்து எனச் சொல்லி இருந்தால் தலையை சீவீ இருப்பான்! மூச்சுக்கு முன்னூறு முறை இந்து, இந்து எனச் சொல்பவர்கள், இந்து மதம் தான் பழமையானது என பீற்றிக் கொள்பவர்கள் இதற்கு மனசாட்சியைத் தொட்டு பதில் சொல்லட்டும்! சனாதனிகளின் மூன்று பிரதான நீதி நூல்கள் உபநிடதம், ...
பார்ப்பதற்கு சாது! அருள் சிந்தும் மலர்முகம்! கருணையிலோ கடல்! ஆனால், பாடும் கவிதையில் சூறாவளி! அநீதியை எதிர்ப்பதில், மூட பழக்கவழக்கங்களை, சனாதனத்தை எதிர்ப்பதில் தீப்பந்தம்! பெரியாரின் குரு! சமதர்ம சித்தாந்தத்தின் கரு! ஐயகோ, கொடுமை! காந்தியைப் போலவே இவரையும் நாம் காக்கத் தவறினோமே. ஆதிகாலத்தில் சமணம், சார்வாகம், ஆஜீவகம் போன்ற மரபினர் வேதங்கள், சடங்குகளை எதிர்த்து நாத்திகம் பேசினர். அவர்களில் உத்தாலகர், விருஷப தேவர், பிரகஸ்பதி, அஜிதகேச கம்பளன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்! ஆனால், வள்ளலார் நாத்திகவாதியல்ல, உருவ வழிபாடுகள், சமயச் சடங்குகளை தவிர்த்து, தனக்குள் ...
தமிழ்நாட்டில் கோவில் குட முழுக்குகளை சமஸ்கிருதத்துடன் தமிழ் மந்திரங்களும் சேர்ந்து நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் சென்ற ஆண்டு தீர்ப்பளித்தும் இன்று வரை திமுக அரசால் ஏனோ நடைமுறைப்படுத்த முடியவில்லை! தமிழக அரசு தொடர்ந்து சமஸ்கிருதத்தில் மட்டுமே நடத்துவதின் பின்னணி என்ன? 2020 ஆம் ஆண்டு தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடந்த போது சமஸ்கிருதத்துடன் தமிழையும் சேர்த்து நடத்த தெய்வத் தமிழ் பேரவை, இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் போன்ற அமைப்புகள் வலிமையாக வலியுறுத்தி ஒரளவு வெற்றியும் கிடைத்தது. பிறகு, ‘கரூர் பசுபதி ...
காளியம்மன் குறித்த லீனா மணிமேகலை வெளியிட்ட போஸ்டர் குறித்து இந்து சனாதனிகள் கொந்தளிக்கின்றனர். அவரவர் விருப்பப்படி கடவுளை கற்பிதம் செய்து கொள்ளும் வழிமுறை நமது பாரம்பரியத்தில் காலம் காலமாக உள்ள ஒன்று தான்! சனாதனிகள் வைத்ததே சட்டமாகிவிடுமா? காளி புகை பிடிப்பதைப் போலவும் பாலியல் சுதந்திரத்தை வலியுறுத்தும் கொடி ஒன்றை பிடித்திருப்பதுமான உள்ள காளி தேவியின் படம் அது! இது குறித்து தான் சனாதனவாதிகள் கொந்தளிக்கின்றனர். ”காளிதேவியை இழிவுபடுத்திவிட்டாய் விட்டேனா பார் உன்னை!” ”தலையை வெட்டுவேன், கண்டந்துண்டமாகக் கொலை செய்வேன்” என ஆளாளுக்கு பேசியுள்ளனர். ...