இது வரை இந்திய வரலாற்றில் இல்லாத அதிசயமாக தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் மருத்துவர்களிடமும்,அரசியல்வாதிகளிடமும்,முக்கியஸ்தர்களிடமும் ஒரு பெரும் தயக்கம் நிலவுவது கண்கூடாகத் தெரிகிறது! இது,”தங்களை சோதனை எலிகளாக்கிக் கொள்ள அரசியல்வாதிகளும், வி.வி.ஐபிக்களும்,மருத்துவர்களும் தயாராக இல்லை’ என்பதையே காட்டுகிறது! உலகத்தை அச்சுறுத்தும் ஒரு நோய்க்கு எதிராக ஒரு தடுப்பூசி கொண்டு வரப்பட்டு,அதனால் நன்மை ஏற்படுமென்றால், அதை ஏற்பதில் நமக்கு எந்த தயக்கமுமில்லை! ஆனால், நூற்றுக்கணக்கான நாடுகளும், தனியார் அமைப்புகளும் தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டிருக்கும் நிலையில் – மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு போவதற்கு முன்பாகவே – அவசர அவசரமாக ...
சமீபத்தில் ரயிலில் மதுரையில் இருந்து சென்னை வந்தேன்! பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஏசி கோச் முழுக்க இடைவெளியின்றி மக்கள் உட்கார வைக்கப்படுமளவுக்கு நிரம்பியிருந்தது! வெண்டிலேசன் இல்லாத முழு இருக்கைகளும் நிரப்பட்ட ஏசிகோச்சில் தான் இரவு முழுவதும் பயணப்பட நேரிட்டது! மிக இயல்பாக மக்கள் பேசிப் பழகி, சாப்பிட்டு,உறங்கி வெளியேறினர்! நானும் அவ்வாறே பயணப்பட்டேன்! இதே போல ஏர்போர்டிலும் கூட்டம் நிறைந்து இருந்ததைக் கண்டேன். விமான இருக்கைகளும் இடைவெளியின்றி நிரப்பட்டு மக்கள் உட்கார வைக்கப்படுகின்றனர்! நானும் அவ்வாறே பயணப்பட்டேன்! காய்கறி சந்தையில் மக்கள் மிக இயல்பாக நெரிசல்களுடன் ...
எதைத் தான் அரசியல் செய்வது என்ற விவஸ்தையில்லாமல் தற்போது தடுப்பூசியை வைத்து மத்திய மாநில ஆட்சியாளர்கள் அரசியல் ஆதாயம் அடையத் துடிக்கிறார்கள்! தடுப்பூசிகள் குறித்தும் நவீன அறிவியல் மருத்துவத்தின் மீதும் பொய்யான பிம்பங்களை கட்டமைத்து அமைச்சர்களும், முக்கிய அரசுப் பதவிகளில் இருப்போரும், மூட நம்பிக்கைகளைப் பரப்பி வருவது கவலையளிக்கிறது! அரசியல் லாபத்திற்காகவும், தடுப்பூசிகளை உருவாக்கியுள்ள சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்யும் நோக்கிலும், அவர்களின் வர்த்தகத்தைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசிகளை அவசரக் கோலத்தில் பயன்பாட்டுக்கு மத்திய அரசு கொண்டு வருகிறதோ என்ற ஐயம் ...
கொரோனாவை வெற்றிகரமாக சமாளித்து, மக்களை குணப்படுத்தியதில் அரசு மருத்துவர்களின் பங்களிப்பு மறுக்க முடியாததாகும்! தமிழகத்தில் இது வரை 7,22,000 க்கு மேற்பட்டவர்கள் கொரானாவில் பாதிக்கப்பட்டு,அதில் 6,88,000 பேர் குணமடைந்துள்ளனர் என்றால்,அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பால் தான் குணமடைந்துள்ளனர் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் உண்மையாகும்! வெறும் பதினெட்டாயிரம் அரசு மருத்துவர்கள் கடும் உழைப்பை ஈந்ததில் தான் இது சாத்தியப்பட்டது. இதில் அரசு மருத்துவர்களோடு பட்ட மேற்படிப்பு மாணவர்களும் சேர்ந்து பாடுபட்டனர். நோயாளிகளை குணப்படுத்தும் போது ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவர்களும் கொரனாவால் தாக்கப்பட்டனர். ...
மாபெரும் இசைக் கலைஞனான எஸ்.பி.பியின் மரணத்திற்குத் தவறான முறையில் தரப்பட்ட அலோபதி மருத்துவச் சிகிச்சையே காரணம் என்றும், அவர் மருத்துவமனை செல்லாமல் இருந்திருக்கலாம் என்றும் பரவலான மக்கள் கருத்து உள்ளது! ஆனால், அலோபதி என்பது அறிவியல்பூர்வமான சிகிச்சை அது பற்றித் தெரியாமல் பேசுவது முற்றிலும் தவறு, அறியாமை ….என்றெல்லாம் பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டுள்ளன! ஒரு கலைஞனின் மரணம், ஊடகங்களிலும் மக்களின் பார்வையிலும் இன்றைய விவசாய மசோதா முதற்கொண்டு பல முக்கிய சமூக பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது. மக்கள் மனம் கவர்ந்த கலைஞன் அல்லவா? இழப்பின் வருத்தம் ...