138 கோடி மக்கள் வாழக்கூடிய இந்தியா,  கொரோனாவை சமாளிக்க தனியார் நிறுவனங்களின் தயவை எதிர்பார்த்து காத்து, விழி பிதுங்கி  நிற்கிறது. இந்தியாவில் அரசின் பொதுத் துறை தடுப்பூசி தன்னிறைவு குலைந்தழிந்து போனதற்கு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர்  அன்புமணியே காரணம்! – ஆங்கில பத்திரிகை அம்பலப்படுத்துகிறது! ‘’தடுப்பூசி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாகத் திகழ்ந்த நமது இந்தியா இன்று இரண்டு தனியார் நிறுவனத்தின் தயவை நம்பி இருப்பது ஏன்?’’ என்ற கேள்வி இன்று அனைவர் மனதிலும் எழுகிறது! மே 8 ஆம் தேதி ஒரு ...

எல்லோரையும் சட்டம் போட்டு முடக்கிவிடறாங்க..ஆனா, கொரோனாவை முடக்க வழி தெரியல! தீர்வு என்ன என்று தெரியாமல் குருட்டாம் போக்கில் ஏதாவது செய்தாக வேண்டுமே என நினைத்து செய்யப்படுவது தான் ஊரடங்கு! ‘’இதுவும் தீர்வாகுமா பார்ப்போமே..’’ என்ற நம்பிக்கையே தடுப்பூசி..! மொத்ததில் சிக்கலை அதிகப்படுத்துகிறோம்! தீர்வை கண்டடைய முடியவில்லை. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் சக்திக்கு மீறி வேலை பார்த்து சோர்வுற்ற வண்ணம் உள்ளனர்! புதிதாக பொறுப்பேற்ற அரசாங்க தலைமையும் சரி, அனைத்து மட்டத்தில் இருப்பவர்களும் சரி பம்பரமாக சுற்றிச் சுழன்று ...

எப்போது தடுப்பூசி ஒரு பேரியக்கமாக தொடங்கப்பட்டதோ ..அப்போது முதல் கொரோனா இரண்டாம் அலையும் அதற்கேற்ப வீரியம் கொண்டு வருகிறது என்றால், தடுப்பூசிக்கும், கொரோனா பரவலுக்கும் என்ன தொடர்பு…? கட்டுப்படுத்த முடியாத கொரோனா பெருக்கத்திற்கு என்ன காரணம்..? இன்றைக்கு நம் அரசுகள் நோய் தீர்க்கவென்று நீர்பந்திக்கும் அணுகுமுறைகளே காரணம்! இந்த மருந்தை தான் உட்கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசியால் தான் நோய் தொற்றை தவிர்க்க முடியும் என அரசாங்கம் நமக்கு அடையாளம் காட்டி நிர்பந்திப்பதன் வழியாகத் தான் நோய் வீரியம் அடைகிறது என்ற குற்றச்சாட்டு பல ...

கொரோனா இரண்டாம் கட்டம் மிக வீரியமாக மக்களை தாக்கி வருகிறது. இந்த நேரத்தில் மக்களின் உயிரை காப்பாற்றுவது தான் குறிக்கோளாக இருக்கணும். இந்த சூழலில் எல்லா நல் வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும். சித்தா, ஆயூர்வேதா, ஹோமியோபதி போன்ற பாரம்பரிய முறைகளில் உள்ள எந்தெந்த நல்ல மருந்துகள் கொரானாவை குணப்படுத்த உதவுகிறதோ…, அவற்றை ஒருங்கிணைத்து பயன்படுத்துவதில் ஏன் இத்தனை தயக்கங்கள், எதிர்ப்புகள்..? முதல் கொரானா தொற்று ஏற்பட்ட போது, நீண்ட தயக்கத்திற்குப் பிறகு தான் சித்த மருத்துவம், ஆயூர்வேதம், ஹோமியோபதி..ஆகிய பாரம்பரிய மருத்துவமுறைகளையும் அனுமதித்தார்கள்! ஆனால், ...

இது கொரானா தடுப்பூசிக்கு எதிரான பதிவல்ல. அவரவர்கள் தங்கள் சொந்த பட்டறிவையும், பகுத்தறிவையும் சார்ந்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்! ஆனால்,சில நிதர்சனங்களை புறம் தள்ளாதீர்கள் என சொல்வதற்காகவே இதை எழுதுகிறேன். கே.வி.ஆனந்த் மிக சமீபத்தில் தான் கொரானா தடுப்பூசி முதல் டோஸ் போட்டார்! அது போடும் வரை உற்சாகமாக இருந்தவர் போட்ட பிறகு உடல் நலன் குன்றியுள்ளார். இதற்கு முன்பில்லாத வகையில் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமமும், நெஞ்சுவலியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனை சென்று சோதித்ததில் அவருக்கு கொரானா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ரத்த உறைதல் ஏற்பட்டதா..? எனத் தெரியவில்லை. ...

சமமற்ற கொரோனா தடுப்பூசி கொள்கைகளால், உலகம் தார்மீக ரீதியாக பெரிய தோல்வியை சந்திக்கவிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு ஒரு எச்சரிக்கையை பதிவு செய்ததோடு சரி! உலகம் இன்று சர்வதேச கார்ப்பரேட் மருந்து நிறுவனங்களின் வேட்டைக் காடாக மாறிக் கொண்டு உள்ளது. நான் வெளிப்படையாக பேசுகிறேன். உலகம் தார்மீக ரீதியில் பெரிய தோல்வியைச் சந்திக்கவிருக்கிறது. இந்த தார்மீக ரீதியிலான தோல்விக்கு, ஏழை நாடுகளின் மக்களும், அவர்களின் வாழ்கையும் தான் விலையாகக் கொடுக்கப்படும்” என மூன்று மாதங்களுக்கு முன்பு (ஜனவரி 18, 2021) நடந்த உலக ...

கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டையே ஆட்டம் காண வைத்துவிட்டது என்று பிரதமர் மோடியே வேதனைப்பட்டு சொல்லும் அளவுக்கு நிலைமை தற்போது மிக மோசமாக உள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியின் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விளைவாக கொத்துக்கொத்தாக மனித உயிர்கள் பலியாகி வருகின்றன. கொரோனா வின் இரண்டாவது அலை எவ்வளவு கொடூரமானது என்பதற்கு இந்தியா ஒரு உதாரணம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்து இந்நாட்டை பார்த்து மற்ற நாடுகள் எச்சரிக்கையாக இருங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகள் அனைத்துமே இந்திய பயணிகள் ...

மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன..! ஆக்சிஜன் பற்றாகுறையாலும், ஆளுமை பற்றாகுறையாலும் கொத்து, கொத்தாக மரணங்கள்…! முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் செய்யாமல், மக்களின் உயிர்பாதுகாப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு.., அயோத்தி, காசி, மதுரா..என்று ஒவ்வொரு அஜெண்டாவையும் அரங்கேற்றிச் செல்கிறது பாஜக அரசு..! இந்த ஓராண்டு கால அவகாசத்தில் பேரிடர் கால நிர்வாகத்திற்கான அனுபவத்தையோ, அறிவையோ ஏன் பெறவில்லை என்று பலர் கேட்கிறார்கள்! அதில் விருப்பமில்லாத அரசுக்கு எத்தனை ஆண்டு அவகாசம் தந்தாலும், எத்தனை பெருந்தொற்று வந்து எத்தனை பேர் மடிந்தாலும் அது எதையும் கற்காது! காலரா, ...

கொள்ளை லாபம், மனித நேயம் இல்லாத மருத்துவம், செயற்கை தட்டுப்பாடு, ஆகியவற்றால் இந்திய மருத்துவத் துறை திணறுகிறது! மக்கள் உயிர்காக்கும் விவகாரத்தில் அரசு முற்றிலும் தனியாரை சார்ந்து நிற்கும் அவல நிலையில் உள்ளது! மக்களின் உயிர்காக்கும் மருந்து,மாத்திரைகள் தயாரிக்கும் அரசு பொதுத்துறை நிறுவனங்களை செயல் இழக்க செய்ததன் விளைவை நாடு இன்று சந்திக்கிறது. கொரானா சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகளாகட்டும், கொரானா தடுப்பூசிக்கான மருந்துகளாகட்டும் தனியார் வைத்ததே விலை என்றாகிவிட்டது. கோஷில்டு மருந்தை மத்திய அரசுக்கு ரூ 150 , மாநில அரசுக்கு ரூ 600 ...

பெரும்பான்மையோருக்கு பிரச்சினையில்லை. ஆனால்,சிலருக்கு கொரோனா தடுப்பூசியினால் சோர்வு, முக வீக்கம், கண் சிவத்தல், தோல் அரிப்பு, நெடிய தூக்கம்,பலவீனம்.. போன்ற பல பக்க விளைவுகள்..! இத்துடன் தடுப்பூசி போட்ட நான்கு நாட்களுக்குள் கணிசமான மரணங்கள்…! இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டிய AEFI என்ற, தடுப்பூசி பாதகங்கள் கண்காணிப்பு கமிட்டி என்ன தான் செய்கிறது…? கொரோனா தடுப்பூசி போட்ட பின் பல்வேறு பக்கவிளைவுகளும்,மரணங்களும், ஏன் கொரோனாவும் கூட வருவதை நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இவற்றையெல்லாம் முறையாக பதிவு செய்ய வேண்டிய AEFIல் அதை சரியாக ...