கட்சிகள் அனைத்தும் கார்ப்பரேட்களுக்கான அரசியலையே முன்னெடுக்கின்றனர். உழவர்களின் தேவை என்ன? பிரச்சினைகள் என்ன? தீர்வு என்ன? என்பதை அறிந்தவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். உழவர்களுக்கான அரசியல் அதிகாரம் அவர்களின் எண்ணிக்கைகு ஏற்ப சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும்; பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பொருளியல் கொள்கை என்பது அம்பானி, ஆதானி போன்ற பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான உலகமய தாராளமய தனியார்மய பொருளியல் கொள்கையே. உழவர் உரிமை இயக்கம் முன்வைப்பது உழவர்களுக்கான உழைக்கும் மக்களுக்கான விவசாயப் பொருளியல் கொள்கை! எட்டு வழிச்சாலை, மேல்மா சிப்காட், பரந்தூர் விமான ...
தமிழகமெங்கும் கறிக்கோழி விவசாயிகள் போராடிக் கொண்டுள்ளனர். கோழிக்கறி கிலோ என்ன விலை என நாம் அறிவோம். ஆனால், கோழிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு தரப்படும் கூலி கிலோவுக்கு ரூ-6.50 பைசா தான்! இவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதான அதிர்ச்சி தகவல்கள்; மக்களின் உணவுத் தேவையில் சிக்கன் எனப்படும் கோழிக்கறிக்கு மிக முக்கியத்துவம் தற்போது ஏற்பட்டுள்ளது. வீட்டு விருந்தாகட்டும் ஹோட்டல் விருந்தாகட்டும் கோழிக்கறி என்பது பலவித முறைகளில் பரிமாறப்படுகிறது. அத்தகைய கோழிக்கறிக்கான கறிக்கோழி வளர்ப்பு சார்ந்து சுமார் ஐந்து லட்சம் விவசாயிகள் உள்ளனர். ...
தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளில் பல முக்கிய மாற்றங்கள் நடந்துள்ளன. இயற்கை வள அழிப்பு, விவசாய நிலங்கள் அபகரிப்பு, சுற்றுச் சூழலுக்கு கேடு தரும் தொழிற்சாலைகள் அதிகரிப்பு, நீராதாரங்கள் அழிப்பு, நில வளம் பாதிப்பு, விவசாயிகளின் தற்சார்பு வாழ்க்கை தகர்ப்பு..என பல அதிர்ச்சிகள் அரங்கேறி உள்ளன. இதற்கு எதிராக தமிழகம் முழுமையும் தொடர் போராட்டங்கள் வேளாண் குடிகளால் ஆங்காங்கே நாளும், பொழுதும் நிகழ்த்தப்படுவதை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து வருகின்றன. அவற்றை ஆதாரங்களுன் ஆவணப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். ஒரு நாடு செழிப்பாக இருப்பதற்கு அந்த ...
இந்திய விதை இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வண்ணம் மத்திய பாஜக அரசு விதைகள் மசோதா 2025 ஐ கொண்டு வந்துள்ளது. ‘விதைக்கு விலை வைப்பதே மடமை’ என்ற கோட்பாடுடைய நம் பாரம்பரியத்தை அழித்து, விதைகளுக்காக கார்ப்பரேட்களிடம் விவசாயிகள் கையேந்துவதை நிர்பந்திப்பதற்கு ஒரு சட்டமாம்; கட்டாயக் கண்காணிப்பு, சான்றிதழ் மற்றும் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் ..என்றெல்லாம் பம்மாத்து காட்டி, விதைகளை தனியார்மயமாக்க, ஏகபோகமாக்க, கட்டுப்படுத்த விரும்பும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக விதைகள் சட்டம் 2025 கொண்டு வரப்பட உள்ளது. விவசாயிகள் விதைகளை சேமிக்கவோ, அடுத்தவர்களுக்கு தந்து உதவவோ ...
வட கிழக்கு பருவமழை தமிழக விவசாயிகளை இந்த ஆண்டு வாட்டி வதைப்பதாக அமைந்துவிட்டது. முன்னேற்பாடு நடவடிக்கைகளில் எப்போதும் பின் தங்கி இருப்பதில் சாதனை படைப்பவர்களான நம் ஆட்சியாளர்கள் மழைக்காலங்களில் மீட்பர்களாகிவிடுகின்றனர். ஆயினும் விவசாயிகள் எதிர்கொள்ளும் இழப்புகள், சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல; எந்த ஒரு நல்லாட்சிக்குமான அளவுகோல் ஏரி, குளங்களை கண் போல பாதுகாத்து சேதாரமில்லாமல் நீரை தேக்கி வைப்பதும், அறுவடையான நெல்லை பாதுகாப்பாக மழையில் அழிந்து விடாமல் பாதுகாப்பதும் தான். அந்த வகையில் பார்த்தால் நமது ஆட்சியாளர்கள் மிகப் பெரிய தொடர் தோல்வியைத் தான் ...
சிப்காட்டிற்கு நிலம் தரமறுத்த விவசாயி கன்னியப்பன் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தையே திகுதிகுக்க வைத்துள்ளது. தொழில் அதிபர்களுக்கு நிலம் தருவதற்கு மறுத்தால் கொலையும் செய்யும் அரசாங்கம் என்பதற்கு சாட்சியாக இந்த சம்பவத்தை பார்க்கிறோம் என்கிறார், உழவர் உரிமை இயக்கத்தின் அருள் ஆறுமுகம்; இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் இருக்கிறது. விவசாயமே நமது நாட்டின் உயிர் நாடியாக உள்ளது என்றார், மகாத்மா காந்தி. ஆனால், தொழிற்சாலைகளை அதிகரிக்க, விவசாயத்தை வீழ்த்த எந்த எல்லைக்கும் செல்வோம் என்பதற்கு ஏற்ப இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ஏற்கனவே ...
இந்தியாவின் மக்கள் தொகையை குறைப்பதற்கான சதித் திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்குமோ.. என்று எண்ணத் தோன்றுகிறது. விஷத்தையே அமிர்தமென்றும், பசுமை அழிப்பையே பசுமை புரட்சி என்றும், மரபணு மாற்றுப் பயிர்களே மானுடத்தின் மீட்பு என்றும் விளம்பரங்கள் செய்யும் அரசுகள் குறித்த விழிப்புணர்வு அலசல்; மரபணு மாற்றப்பட்ட டி.ஆர்.எஸ் தன் (கமலா), பூசா டிஎஸ்டி ரைஸ் 1 என்கிற இரண்டு நெல் ரகங்களை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு. இதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் மிக அற்பமானவை என்பதால் தான், நமக்கு இப்படித் தோன்றுகிறது. # இது கூடுதலாக ...
இப்படியும் நடக்குமா? கல்குவாரிகள் வைத்திருப்பவர்கள் தான் இங்கே அரசாங்கத்தையே ஆட்டிப் படைக்கிறார்களா? கல்குவாரிக்கு நிலம் தர மறுத்த இந்த விவசாயக் குடும்பமே சுற்றிலும் இரும்பு முள்வேலி அமைத்து சிறை வைக்கப்பட்டுள்ளது; அரசாங்கத்திற்கு அனுப்பட்ட எந்த புகாருக்கும் பலனில்லையாம்; தமிழ்நாட்டில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் கல் குவாரிகள் அமைக்க ஆட்சியாளர்கள் தொடர்ந்து அனுமதித்து வருகிறார்கள். குறிப்பாக அமைச்சர் துரைமுருகன் இதில் அனைத்து சட்ட விதிமுறைகளையும் மீறி ஆர்வம் காட்டி வருகிறார். அப்படி அனுமதிக்கப் பட்டவர்கள் அங்கிருக்கும் மலைகளை மொட்டை அடித்து கிரஷர் அமைத்து பெரும் இயந்திரங்களைக் ...
திமுக ஆட்சியில் நகர விரிவாக்கம், கிராமங்களை இணைத்தல் என்பதில் தொடங்கி TIDCO – SIPCOT – SIDCO என எல்லா அரசு நிர்வாகங்களும் போட்டி போட்டுக் கொண்டு கிராமங்களையும் அதன் பசுமை வெளிகளையும் அழிக்க முனைகிறார்கள். மேல்மா உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களை விழுங்க அரசு செய்யும் கோல்மால்கள் எடுபடுமா? ஒரு அலசல்; திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே செழிப்பான விவசாய நிலங்களை கொண்டது தான் மேல்மா. இந்த மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு சிப்காட் தொழிற் கேந்திரங்கள் உள்ளன. அதிலேயே சுமார் 1,200 ஏக்கருக்கு ...
மேய்ச்சல் நிலங்களை பாய்ச்சலோடு ஆக்கிரமித்து அழித்து வருகிறது நமது நவீன வாழ்க்கை முறை. மேய்ச்சல் நிலங்கள் அழிந்தால் சுற்றுச் சூழலுக்கே காய்ச்சல் ஏற்படும். கால்நடைகளே செல்வங்கள். ஆடு, மாடு மேய்ப்பது இழிவல்ல. தற்சார்பு வாழ்க்கைக்கு தவிர்க்க முடியாதவை கால்நடைகளே.. கால்நடைகளின்றி மானுட வாழ்க்கையில்லை; ஒரு அலசல்; மேய்ச்சல் நிலங்கள் மேன்மையானவை. புறம்போக்கு நிலங்கள் புனிதமானவை. கால்நடைகள் நமக்கு பால் தருகின்றன…என்பது மட்டுமின்றி, நம் நிலத்திற்கு வளமான உரம் தருகின்றன. உழவுக்கும் பயன்படுகின்றன. அவை தருகின்ற சாணம், மூத்திரம் போன்ற இயற்கை உரத்தால் தான் பயிர்கள் ...


























