இந்திய விதை இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வண்ணம் மத்திய பாஜக அரசு விதைகள் மசோதா 2025 ஐ கொண்டு வந்துள்ளது. ‘விதைக்கு விலை வைப்பதே மடமை’ என்ற கோட்பாடுடைய நம் பாரம்பரியத்தை அழித்து, விதைகளுக்காக கார்ப்பரேட்களிடம் விவசாயிகள் கையேந்துவதை நிர்பந்திப்பதற்கு  ஒரு சட்டமாம்; கட்டாயக் கண்காணிப்பு, சான்றிதழ் மற்றும் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் ..என்றெல்லாம் பம்மாத்து காட்டி, விதைகளை தனியார்மயமாக்க, ஏகபோகமாக்க, கட்டுப்படுத்த விரும்பும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக விதைகள் சட்டம் 2025 கொண்டு வரப்பட உள்ளது. விவசாயிகள் விதைகளை சேமிக்கவோ, அடுத்தவர்களுக்கு தந்து உதவவோ ...

வட கிழக்கு பருவமழை தமிழக விவசாயிகளை இந்த ஆண்டு வாட்டி வதைப்பதாக அமைந்துவிட்டது. முன்னேற்பாடு நடவடிக்கைகளில் எப்போதும் பின் தங்கி இருப்பதில் சாதனை படைப்பவர்களான  நம் ஆட்சியாளர்கள் மழைக்காலங்களில் மீட்பர்களாகிவிடுகின்றனர். ஆயினும் விவசாயிகள் எதிர்கொள்ளும் இழப்புகள், சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல; எந்த ஒரு நல்லாட்சிக்குமான அளவுகோல் ஏரி, குளங்களை கண் போல பாதுகாத்து சேதாரமில்லாமல் நீரை தேக்கி வைப்பதும், அறுவடையான நெல்லை பாதுகாப்பாக மழையில் அழிந்து விடாமல் பாதுகாப்பதும் தான். அந்த வகையில் பார்த்தால் நமது ஆட்சியாளர்கள் மிகப் பெரிய தொடர் தோல்வியைத் தான் ...

சிப்காட்டிற்கு நிலம் தரமறுத்த விவசாயி கன்னியப்பன் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தையே திகுதிகுக்க வைத்துள்ளது. தொழில் அதிபர்களுக்கு நிலம் தருவதற்கு மறுத்தால் கொலையும் செய்யும் அரசாங்கம் என்பதற்கு சாட்சியாக இந்த சம்பவத்தை பார்க்கிறோம் என்கிறார், உழவர் உரிமை இயக்கத்தின் அருள் ஆறுமுகம்; இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் இருக்கிறது. விவசாயமே நமது நாட்டின் உயிர் நாடியாக உள்ளது என்றார், மகாத்மா காந்தி. ஆனால், தொழிற்சாலைகளை  அதிகரிக்க, விவசாயத்தை வீழ்த்த எந்த எல்லைக்கும் செல்வோம் என்பதற்கு ஏற்ப இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ஏற்கனவே ...

இந்தியாவின் மக்கள் தொகையை குறைப்பதற்கான சதித் திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்குமோ.. என்று எண்ணத் தோன்றுகிறது. விஷத்தையே அமிர்தமென்றும், பசுமை அழிப்பையே பசுமை புரட்சி என்றும், மரபணு மாற்றுப் பயிர்களே மானுடத்தின் மீட்பு என்றும் விளம்பரங்கள் செய்யும் அரசுகள் குறித்த விழிப்புணர்வு அலசல்; மரபணு மாற்றப்பட்ட டி.ஆர்.எஸ் தன் (கமலா), பூசா டிஎஸ்டி ரைஸ் 1 என்கிற இரண்டு நெல் ரகங்களை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு. இதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் மிக அற்பமானவை என்பதால் தான், நமக்கு இப்படித் தோன்றுகிறது. # இது கூடுதலாக ...

இப்படியும் நடக்குமா? கல்குவாரிகள் வைத்திருப்பவர்கள் தான் இங்கே அரசாங்கத்தையே ஆட்டிப் படைக்கிறார்களா? கல்குவாரிக்கு நிலம் தர மறுத்த இந்த  விவசாயக் குடும்பமே சுற்றிலும் இரும்பு முள்வேலி அமைத்து சிறை வைக்கப்பட்டுள்ளது; அரசாங்கத்திற்கு அனுப்பட்ட எந்த புகாருக்கும் பலனில்லையாம்; தமிழ்நாட்டில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் கல் குவாரிகள் அமைக்க ஆட்சியாளர்கள் தொடர்ந்து அனுமதித்து வருகிறார்கள். குறிப்பாக அமைச்சர் துரைமுருகன் இதில் அனைத்து சட்ட விதிமுறைகளையும் மீறி ஆர்வம் காட்டி வருகிறார். அப்படி அனுமதிக்கப் பட்டவர்கள் அங்கிருக்கும் மலைகளை மொட்டை அடித்து கிரஷர் அமைத்து பெரும் இயந்திரங்களைக் ...

திமுக ஆட்சியில் நகர விரிவாக்கம், கிராமங்களை இணைத்தல் என்பதில் தொடங்கி TIDCO – SIPCOT – SIDCO என எல்லா அரசு  நிர்வாகங்களும் போட்டி போட்டுக் கொண்டு கிராமங்களையும் அதன் பசுமை வெளிகளையும் அழிக்க முனைகிறார்கள். மேல்மா உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களை விழுங்க அரசு செய்யும் கோல்மால்கள் எடுபடுமா? ஒரு அலசல்; திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே செழிப்பான விவசாய நிலங்களை கொண்டது தான் மேல்மா. இந்த மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு சிப்காட் தொழிற் கேந்திரங்கள் உள்ளன. அதிலேயே சுமார் 1,200 ஏக்கருக்கு ...

மேய்ச்சல் நிலங்களை பாய்ச்சலோடு ஆக்கிரமித்து அழித்து வருகிறது நமது நவீன வாழ்க்கை முறை. மேய்ச்சல் நிலங்கள் அழிந்தால் சுற்றுச் சூழலுக்கே காய்ச்சல் ஏற்படும். கால்நடைகளே செல்வங்கள். ஆடு, மாடு மேய்ப்பது இழிவல்ல. தற்சார்பு வாழ்க்கைக்கு தவிர்க்க முடியாதவை கால்நடைகளே.. கால்நடைகளின்றி மானுட வாழ்க்கையில்லை; ஒரு அலசல்; மேய்ச்சல் நிலங்கள் மேன்மையானவை. புறம்போக்கு நிலங்கள் புனிதமானவை. கால்நடைகள் நமக்கு பால் தருகின்றன…என்பது மட்டுமின்றி, நம் நிலத்திற்கு வளமான உரம் தருகின்றன. உழவுக்கும் பயன்படுகின்றன. அவை தருகின்ற சாணம், மூத்திரம் போன்ற இயற்கை உரத்தால் தான் பயிர்கள் ...

விவசாயிகளுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசின் தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் திட்டத்தை எதிர்த்து இந்தியாவெங்கும் விவசாய அமைப்புகள், இடதுசாரிக் கட்சிகள் போர் முழக்கம் செய்து கொண்டுள்ளனர். ஆனால், இந்த அநீதியை தமிழக அரசு கச்சிதமாக மத்திய பாஜக அரசின் உத்தரவுக்கு இணங்க செய்து கொண்டுள்ளது; மத்திய பாஜக அரசின் விவசாயக் கொள்கையை எதிர்ப்பதாக திமுக தொடர்ந்து சொல்கிறது. ஆனால், தற்போது தமிழக விவசாயிகள் மற்றும் விவசாய சங்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நெல் கொள்முதலை தனியார் கைகளுக்கு மாற்றும் காரியத்தை செய்கிறது. விவசாயத்திற்கான ...

வெள்ளை ஈ  மற்றும் வாடல் நோய் தாக்குதல் காரணமாக தமிழ் நாட்டில் தென்னை விவசாயிகள் தான்கொணாத துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து ஓராண்டாகவே பல்லாயிரம் ஏக்கர் தென்னை மரங்கள் இதனால் வெட்டி வீழ்த்தப்பட்டு வருகிறது. இதனால் தான் வரலாறு காணாத அளவி இள நீர் மற்றும் தேங்காய் விலைகள் அதிகரித்து வருகின்றது; தமிழக விவசாயிகளின் பிரதான தொழிலாக தென்னை வளர்ப்பு உள்ளது. ஒட்டுமொத்த தமிழகம் என்று பார்க்கும் போது சுமார் 16 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடக்கிறது! தமிழகத்தில் பரவலாக 29 மாவட்டங்களில் தென்னை ...

தமிழக நெல் கொள் முதல் நிலையங்களில் 25 லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. எந்த நேரம் மழை வந்தாலும் இவை அதோ கதியாகும் அவல நிலையில் உள்ளன. ஒரு மாதமாக தொடரும் கொந்தளிப்பு சூழலும்,  விவசாயிகள், மற்றும் நெல் கொள்முதல் பணியாளர்களின் கதறல்களும் ஆட்சியாளர்களின் கவனத்தை எட்டவில்லையோ..! விவசாயம் என்பது தான் இருப்பதிலேயே சவாலான தொழிலாகும். எப்போது வேண்டுமானாலும் ஏற்படும் பெருமழை, வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி படை எடுப்புகள் இத்தனையையும் எதிர் கொண்டு தான் விவசாயம் நடக்கின்றது. கடனை வாங்கியோ, அடகு ...