தமிழக நெல் கொள் முதல் நிலையங்களில் 25 லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. எந்த நேரம் மழை வந்தாலும் இவை அதோ கதியாகும் அவல நிலையில் உள்ளன. ஒரு மாதமாக தொடரும் கொந்தளிப்பு சூழலும், விவசாயிகள், மற்றும் நெல் கொள்முதல் பணியாளர்களின் கதறல்களும் ஆட்சியாளர்களின் கவனத்தை எட்டவில்லையோ..! விவசாயம் என்பது தான் இருப்பதிலேயே சவாலான தொழிலாகும். எப்போது வேண்டுமானாலும் ஏற்படும் பெருமழை, வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி படை எடுப்புகள் இத்தனையையும் எதிர் கொண்டு தான் விவசாயம் நடக்கின்றது. கடனை வாங்கியோ, அடகு ...
நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா? நம்மை ஆட்சி செய்பவர்கள் நாம் ஓட்டு போட்டு அனுப்பியவர்கள் தானா…? அல்லது வானத்தில் இருந்து குதித்த அவதார புருஷர்களா? கிட்டத்தட்ட 600 நாட்களாக ”நாங்கள் வாழும் நிலத்தை அபகரிக்காதீர்கள்” எனப் போராடும் விவசாயிகள் பல முறை முயற்சித்தும் முதல்வரை பார்க்க முடியவில்லை.. உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், கவன ஈர்ப்பு பேரணி, ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகளை துறக்கும் போராட்டம்.. ஆகிய பலகட்ட போராட்டங்களை நடத்திய மேல்மா விவசாயிகள் மீது கடுமையான அடக்குமுறைகளை ஏவி, ஏகப்பட்ட வழக்குகள், குண்டர் சட்டம், ...
சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இந்திய விவசாயத்தில் தொழிற்சாலைகளோ, தொழில் அதிபர்களோ சம்பந்தப்பட்டிருக்கவில்லை. ஆனால், இன்று தொழிற்சாலைகள் சாராமல் விவசாயமே இல்லை. அதுவும் அதானி, அம்பானி இல்லாமல் இன்றைய விவசாயமே இல்லை. இது போன்ற நிலை எப்படி உருவானது? இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஆயுத நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த அணு ஆயுதங்களை விவசாயத்திற்கான ரசாயன உரமாக மாற்றலாம் என்ற தொழில் நுட்பத்தை காண்கின்றனர். அதற்குப் பிறகு தான் மேற்கத்திய நிறுவனங்கள் கூலிப் படை விஞ்ஞானிகளை களத்தில் இறக்கி அதிக விளைச்சலுக்கு ரசாயன உரத்தை பசுமை ...
இத்தனை போராட்டங்களுக்கு பிறகும் போடுகின்ற பட்ஜெட்கள் எல்லாம் கார்ப்பரேட்களை மேன் மேலும் கொழுக்க வைக்கவும், கார்ப்பரேட்களின் கொத்தடிமைகளாக விவசாயிகளை தாரை வார்க்கவுமே என சபதம் போட்டு வேலை செய்கிறது பாஜக அரசு என்பது இதோ பட்டவர்த்தனமாக தெரிந்து விட்டது; நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் முந்தைய பத்து பட்ஜெட்டுகளைக் கருத்தில் கொண்டால், வரவிருக்கும் பதினொன்றாவது பட்ஜெட்டில் இருந்து இந்தியாவின் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தின் மீது இன்னும் கடுமையான தாக்குதல்களைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. வெளிப்படையாகச் சொன்னால், மோடி ...
மத்திய பாஜக அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பதோடு, கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக ‘நிலம் கையகபடுத்துதல் சட்டம்’ கொண்டு வந்ததன் மூலம் இயற்கை செழுமையுள்ள மதுரை அரிட்டாபட்டி போன்ற இடங்களை தூக்கி கார்ப்பரேட்களுக்கு தந்து வருகிறது. இதனால் மீண்டும் பெரியதொரு போராட்டம் வெடித்துள்ளது; மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி 2019ம் ஆண்டு அமைந்ததும், 2020ம் ஆண்டு படுபாதகமான மூன்று புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது. இது அதானி, அம்பானி போன்றவர்களுக்கு நிலங்களை தாரை வார்த்து விவசாயிகளை நிலமற்ற விவசாயக் கூலிகளாக மாற்றும் சூழ்ச்சி எனக் ...
விவசாயிகளுக்கு தரமான விதைகள்,மரக் கன்றுகள், இயற்கை உரங்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட தமிழக அரசின் 216 விவசாயப் பண்ணைகள் தற்போது அழிந்து வருகின்றன. ஏன்? எதனால்? தமிழ்நாடு அரசு மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக பண்ணைத் தொழிலாளர் சங்கத் தலைவர் உ. அரசப்பன் நேர்காணல்; அரசின் விவசாயப் பண்ணைகள் எதற்காக உருவாயின? அவற்றின் பணிகள் என்ன? பொதுச் சந்தையில் தரமான விதைகள், செடி மற்றும் மரக் கன்றுகள் சரியாக கிடைப்பதில்லை. ஆகவே, விவசாயிகளுக்கு இவற்றை தரமாகவும், நியாய விலையிலும் தர இவை ஆரம்பிக்கப்பட்டன. அத்துடம் விவசாயக் கூலிகள் ...
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு மசோதாவின் கொடும் விளைவாக திருவண்ணாமலை மேல்மா, காஞ்சி பரந்தூர் விமான நிலையம், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக நெல் வயல்கள் அபகரிப்பு…. எனத் தொடர்ந்து, தற்போது திருவாரூர் மாவட்டமே திகுதிகுக்கும் காரியத்தை திமுக அரசு செய்கிறது; திருத்துறைப்பூண்டி அருகில் கொருக்கை கிராமத்தில் 495 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசின் உம்பளச்சேரி நாட்டு மாடுகள் பண்ணையும், அதற்கான மேய்ச்சல் நிலமும் அமைந்துள்ளது. 1960 களின் இறுதியில் இப்பண்ணையை உருவாக்க அப்பகுதியில் வாழ்ந்த தகைசால் பெரியோர்கள் தானமாக வழங்கியதே இந்த நிலமாகும். இங்கு தற்போது ...
வெயில், மழை பாராமல் நாளும், பொழுதும் பாடுபட்டு பயிர் விளைவித்து உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்கே இந்தப் பாடுபடுத்த வேண்டுமா? லஞ்சமின்றி நேர்மையான கொள்முதல் சாத்தியமே இல்லையா? தற்கொலைக்கு தள்ளும் அளவுக்கு மன உளைச்சல் தருவதா? நம்மை பசியாற வைக்கும் விவசாயிகளை விவசாயத்தைவிட்டே வெளியேறச் செய்யும் அளவுக்கு நெல்கொள் முதல் நிலையங்கள் பணம் பறிக்கும் வழிப்பறி கொள்ளை நடத்துவதை ஆட்சியாளர்களால் ஏன் தடுக்க முடியவில்லை…? மிகச் சமீபத்தில் கடலூர் மாவட்டம், திருமுட்டம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயி சந்தோஷ் குமார் ...
நிலவளத்தை நிர்மூலமாக்கிக் கொண்டுள்ளது பசுமை புரட்சியின் உடன்பிறப்பான ரசாயன உரப் பயன்பாடு. இயற்கை விவசாயத்தை மீட்க அரசு முனைந்தாலும், அதை அனுமதிக்க மறுக்கும் கார்ப்பரேட்கள்! கார்ப்பரேட் நலன்களுக்காக பயணிக்கும் ஆலகால அழிவை நோக்கிய விவசாயத்தை விலக்கி வைப்பது எப்படி..? மானுட வாழ்க்கைக்கு உணவு உற்பத்தி தொழிலாளான விவசாயமே அடைப்படையாகும். அப்படிப்பட்ட உயிர்களின் பசிப் பிணி தீர்க்கும் விவசாயத்தை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செய்கின்ற சூழல் அரிதாகி வருகிறது. விவசாயி விரும்பாவிட்டாலும் அவனிடம் வீரிய விதைகள் திணிக்கப்படுகின்றன. உயிர்ச் சூழலுக்கு எதிரான ரசாயன உரங்கள் நிர்பந்திக்கபடுகின்றன. இதன் ...
நீர் மேலாண்மையில் தமிழக ஆட்சியாளர்களின் தற்குறித் தனத்திற்கு தற்போதைய காவிரி நீர் தினசரி 15 டிஎம்சி கடலில் சென்று வீணாவதே சாட்சியாகும். காவிரி பாசன கடைமடை பகுதிகளில் பயிர்கள் தண்ணீர் வரத்தின்றி வாடிக் கிடக்கின்றன..! மணல் குவாரிகளின் விளைவால் வெள்ள நிவாரண முகாம்கள்.. காவிரி ஆற்றுப் படுகைகள் மணல் குவாரிகளால் பள்ளத்தாக்குகளாகி கிடப்பதால் காவிரி வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து டெல்டா மாவட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் நிவாரண முகாம்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். காவிரியில் வரும் தண்ணிர் கிளை ஆறுகள் வழியே வாய்க்கால்களில் பயணப்பட்டு பயிர்களை ...