இத்தனை லட்சம் டன்களா இறக்குமதியாகிறது! இத்தனை லட்சம் டன்களா உற்பத்தியாகிறது..? இதன் விளைவுகள் விபரீதங்கள் என்ன? ஏதேனும் ஆராய்ச்சி உண்டா? மண்ணை மலடாக்க, மக்களை நோயாளியாக்க இன்னும் எத்தனை காலம் சொந்தக் காசில் சூனியம் வைப்பது..? அடிமை இந்தியாவில்  நமது நாட்டை எத்தனையோ அன்னியர்கள் ஆட்சி செய்துள்ளனர்! அவர்கள் பொன், பொருள்கள், தானியங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்! அப்போதும் கூட இந்த நாடு ஒன்றும் பெரிதாக பாதிக்கப்படவில்லை! ‘இனி மீளவே வழியில்லை’ என்ற நிலை முன் எப்போதும் ஏற்படவில்லை.ஆம்,ஏற்பட்டதேயில்லை! ஆனால், சுதந்திரத்திற்கு பிறகான இந்த 75 ...

நஞ்சானது விவசாயம்! நலம் குன்றியது வாழ்க்கை! பூச்சிக் கொல்லி மருந்துகளின் அளவுகதிகமான பயன்பாடுகள் அதிர்ச்சி தரும் விளைவுகள்! அரசுகளோ கார்ப்பரேட்டுகளின் கைப்பாவை! பெரு நிறுவனங்களின் லாபம், விவசாயிகளின் சோகம்! கலங்கடிக்கும் சுற்றுச் சூழல் ஒரு பார்வை! 60 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் செலவில்லாத ஒர் தொழிலாக இருந்தது விவசாயம்! விதை, உரம், தண்ணீர்,பூச்சிவிரட்டி எதற்கும் செலவில்லாமல் உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்ட தொழிலாக விவசாயம் இருந்தது.உணவு என்பது முற்றிலும் இயற்கையின் கொடை! பருவகாலம் அறிந்து பயிர் செய்வது ஒன்றே மனிதனின் கடமை என்பதாக இருந்தது! ...

விவசாயிகளையும், விவசாயத்தையும் ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில்  மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு 8 வகையான மானியங்கள் தருவதாக சொல்கின்றன! இப்படி பல்லாயிரம் கோடிகள் விவசாயிகளுக்கு தரப்படுவதாக சொல்லப்பட்டாலும், விவசாயிகள் ஏன் வறுமையில் உழல்கிறார்கள்..? இந்தியாவில், ‘விவசாயிகளுக்கு அள்ளித் தருகிறோம்’ என்ற கணக்கில் பல ஆயிரம் கோடிகள் விவசாய மானியங்களாக கணக்கு காட்டப்படுகின்றன! இவ்வளவு கோடிகள் தந்து கொண்டிருப்பதாக அரசாங்கம் சொன்ன போதிலும், நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வரும் தொழிலாக ஏன் மாறிக் கொண்டிருக்கிறது? இந்த நாட்டில் வரலாறு நெடுக பார்த்தோமென்றால், விவசாயிகள் தரும் ...

ரேஷன் கடைகளை ஒழிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் சதிக்கு திமுக அரசு துணை போகிறதா? நெல் கொள் முதலில் இனி அரசு நேரடியாக ஈடுபடாதாம்! அரிசி ஆலைகளை தனியாருக்கு தரப் போகிறார்களாம்! பொது விநியோகத் திட்டம் ஊழலில் புழுத்துக் கிடக்க என்ன காரணம்..?சி.சந்திரகுமார் நேர்காணல். தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள,  நுகர்பொருள் வாணிபக் கழகத்தை கூட்டுறவுத் துறைக்கு மாற்றக் கூடாது. அரிசி ஆலைகளை தனியாருக்கு தரக்கூடாது. நிர்வாகச் சீர்கேட்டை தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், நுகர்வோருக்கும் சேவை செய்துவரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்  ...

முந்திரி பருப்புக்கு நல்ல மவுசு இருக்குது. ஆனால்,சத்துமிக்க முந்திரி பழம் பல்லாயிரம் டன்கள் அப்படியே வீணடிக்கப்படுகின்றன! இதில் இருந்து பழச்சாறு மற்றும் ஆரோக்கியமான மதுபானம் தயாரிக்க முடியும்! அதில் நமக்கு ஆர்வம் இல்லாததால் விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் பலன் இல்லாமல் அழிகின்றன! தீர்வு என்ன? இன்றைய சட்டமன்ற நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வீணாகும் முந்திரி பழத்தை பயன்படுத்தி பழச்சாறு மற்றும் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை துவங்க முன் வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார். அமைச்சர் தங்கம் தென்னரசுவும் இந்த ...

விவசாய பட்ஜெட் பரவலாக மேம்போக்காக வரவேற்கப்பட்டுள்ளது! பொதுவாக நம் அரசுகளின் விவசாய பட்ஜெட் என்பது விவசாயிகளுக்கும்,வேளாண்ச் சூழலுக்கும் எதிராகவே போடப் படுகின்றன! அடிப்படை பிரச்சினைகளை அலட்சியப்படுத்தி விட்டு, அவசியமற்ற அறிவிப்புகள் செய்கின்றன..! வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படுமாம். மகிழ்ச்சி! அதே சமயம் இயற்கை வேளாண்மை கொள்கை என்ற ஒன்றையே நீங்கள் இது வரை உருவாக்கவில்லையே! அதன் அவசியத்தை இன்னும் உணரவில்லையே! இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக பசுந்தாள் உர விதைகள், மண்புழு உரம், அமிர்த கரைசல் போன்ற இயற்கை இடுபொருட்களை உற்பத்தி செய்யும் ...

விவசாயிகள் இன்று சந்திக்கும் பிரச்சினைகளை அடி முதல் நுனி வரை அதன் உண்மைத் தன்மையுடன் பேசும் படம்! 80 வயது விவசாய தாத்தா கதாநாயகனாக நம் மனதில் பதிகிறார். இயற்கையை நேசிக்க கற்றுத் தரும் படம், அதிகாரத்தின் பொய் முகங்களை அம்பலப்படுத்துகிறது! இது வரை வந்த படங்களிலேயே விவசாயத்தை இவ்வளவு உயிர்ப்பான மண் வாசனையுடன் வெளிப்படுத்திய படம் இதுவாகத்தானிருக்கும்! விவசாயம் எவ்வளவு சிக்கலானது, விவசாயிகள் எதிர்கொள்ளும் இன்னல்கள் என்னவென்பதை கவித்துவமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.  இது இயற்கை விவசாயம், மரபணுமாற்றுப் பயிர்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் நிலத்திற்காக செய்யப்படும் ...

வீரம் செறிந்த விவசாயிகள் போராட்டம் கடந்து வந்த பாதை, உள்ளூர் அளவிலும்,உலக அளவிலும் அது ஏற்படுத்திய அதிர்வுகள், தாக்கங்கள்!  மோடியின் அதிரடி வாபஸ் அறிவிப்பு நம்ப வைத்து கழுத்தறுக்கும் தந்திரமா..? ஆகிய சந்தேகங்கள் பற்றியெல்லாம் அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் நேர்காணல். தமிழ்நாட்டில், 60 க்கும் மேற்பட்ட விவசாயச்  சங்கங்கள் ஒன்றிணைந்து, ‘ஐக்கிய விவசாயிகள் முன்னணி’ என்ற அமைப்பு உருவாகியுள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளராக, கடந்த ஓராண்டு காலமாக  போராட்டத்தை வழிநடத்தி வருபவர்   கே.பாலகிருஷ்ணன்.  பிரதமரின் திடீர் அறிவிப்புக்கான  காரணம்,  ...

வேளாண் சட்டங்கள் வாபஸ் வாங்கப்பட்டதாக மோடி வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தால், அது தன் தவறுகளை உணர்ந்தோ, மனம் மாறியோ அல்லது விவசாயிகளின் போராட்டத்தில் உள்ள நியாயங்களைக் கருதியோ அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை என எவருமே உணரலாம்! அந்த அறிக்கை இப்படிச் சொல்கிறது; நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தம் கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். சிறு விவசாயிகளை முன்னேற்றவே அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவே இந்த சட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பிறகே ...

இன்னும் எத்தனைக் காலம் தான் மெல்லக் கொள்ளும் விஷமான டாஸ்மாக் மது உற்பத்தியாளர்களை போஷித்து, வளர்த்து வருவார்கள்? ஆரோக்கியமான கள் உலக அளவில் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் ஏன் அதற்குத் தடை? லட்சக்கணக்கான விவசாயிகளை வஞ்சித்து, விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில பெருமுதலாளிகள் கொள்ளை லாபம் பார்க்க அரசு உதவுவதா? – விவசாயிகள் சங்கத் தலைவர் நல்லசாமி ஆவேசம்! உலகில் 108 நாடுகளில், தென்னை,பனை மரங்கள் உள்ளன! எந்த ஒரு நாட்டிலுமே கள் இறக்கவோ, பருகவோ தடையில்லை! இந்தியாவிலேயே கூட தமிழகத்தைத் தவிர ...