உலகத்தின் பழமையான தொழில் விவசாயம். தற்போது விவசாயிகள் புதுதில்லியை முற்றுகை இட்டு, தங்கள் வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாய சட்டங்களையும், மின்சாரச் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும்போது இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க முடியுமா என்று நீதிபதிகள் கேட்டனர்; ஆனால் அரசு வழக்கறிஞர் ’முடியாது’ என்கிறார். உச்சநீதிமன்றம் இந்த சட்டங்களுக்கு தடை விதிக்கவில்லை. அதே நேரம் போராட்டத்திற்கு தடை விதிக்கவும் இல்லை. ஏனெனில் அவர்களால் ...
விவசாயிகள் போராட்டம் இன்னும் பலருக்கு சரிவரப் புரியவில்லை..! ஏன் விவசாயிகள் இவ்வளவு ஆக்ரோசமாகப் போராடுகிறாங்க…அப்படி என்ன பெரிய தீமை நடந்திருச்சு..? ஒன்னும் பெரிசா நடந்திடலை..! விவசாயத்தையும்,உணவு பாதுகாப்பையும் தன் பொறுப்பிலிருந்து அம்பானிக்கு கொஞ்சமும், அதானிக்கு கொஞ்சமுமாக அரசாங்கம் பிரித்து தாரை வார்த்துவிட்டது! அவ்வளவு தான்! ’’அதெப்படி கொடுக்க முடியும்? இப்படி புரூடா விடக்கூடாது’’ ன்னு சொல்றவங்க பொறுமையாக ஐந்து நிமிடம் இதைப் படியுங்கள்! விவசாயிகளுக்கும், அரசாங்கத்திற்குமான தொடர்பு என்ன? விவசாயிகள் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது என்ன? ”எனக்கு ஒன்னுன்னா அரசாங்கம் துணையிருக்கு’’ என்ற ஒரு நம்பிக்கை ...
தில்லியில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் மற்ற மாநிலங்களைவிடவும் பஞ்சாப் விவசாயிகள் வீறுகொண்டு போராடி வருகின்றனர்! பொதுவாக பஞ்சாபியர்கள் வீரம் செறிந்தவர்கள் என்றாலும், இதில் ஒரு விஷேச காரணம் உள்ளது.கடந்த காலங்களில் நாட்டில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட பசுமைப் புரட்சியின் படுபாதகமான விளைவுகளை சந்தித்த பிரதேசம் பஞ்சாப் தான்! அதிலிருந்து விவசாயிகளை மீட்டு குறைந்தபட்சமேனும் பாதுகாப்பு தருவதற்காக முந்தைய அரசால் உருவாக்கப்பட்ட வேளாண் சட்டங்களை தான் தற்போதைய அரசு உருக்குலைய செய்துள்ளது என்பது மட்டுமல்ல… கட்டியுள்ள கடைசி கோவணத்தையும் உருவப்பார்க்கிறது… இந்திய தலைநகரம் தன் சொந்த மண்ணின் ...
டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் அனைத்து தரப்பு விவசாயிகளிடமும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.ஆகவே, தாங்களும் தாங்கள் வாழும் இடத்திலேயே டெல்லிவிவசாயிகளுக்கு ஆதரவாக எழுச்சிகரமாக போராட்டம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது.தற்போது தமிழகத்தில் அங்குமிங்குமாக சில விவசாய அமைப்புகள் போராடிவருகின்றன. எனினும் அதை வலுவாக பெரிய அளவில் ஒருங்கிணைத்து செய்ய தமிழக விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. விவசாயிகள் போராட்டம் கட்சி எல்லைகளைக் கடந்து நடந்தாலும், அந்தந்த கட்சியில் உள்ள விவசாயிகள் இதில் பெருந்திரளாக பங்கெடுத்து வருகின்றனர். பாஜகவைத் தவிர்த்த ...
இந்திய வரலாறு முன்பின் காணாத வகையில் விவசாயிகள் போராட்டம் தலை நகர் டெல்லியை உலுக்கிக் கொண்டுள்ளது! எந்த அரசியல் கட்சியையும் தங்கள் போராட்ட மேடையில் அனுமதிக்காமல் விவசாயிகள் என்ற ஒற்றை அடையாளத்துடன் போராடி வருகின்றனர். கட்சி, சாதி, மதம், இனம், பணம், அந்தஸ்து, கெளரவம் என எதுவும் அவர்களை பிரிக்கவில்லை! குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக மதத்தின் பெயரால் மக்களை பிரித்து, ஆட்சி அதிகாரத்தை அடைந்த பாஜகவிற்கு விவசாயிகள் எந்த அடையாளங்களையும் பொருட்படுத்தாமல் ஒன்றுபட்டுள்ளது பேரதிர்ச்சியை தந்துள்ளது. அதனால்,பாஜகவும் அவர்களின் ஆதரவாளர்களும் இந்தப் போராட்டத்தை ...
டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் அகில இந்திய அளவில் மட்டுமல்ல,அகில உலக அளவிலும் இது வரை காணாத போராட்டமாக உருவெடுத்துள்ளது! பல்லாயிரக்கணக்கில் டிராக்டர்கள், டிரக்குகள், பேருந்துகள் ,வேன்கள் ஆகிவற்றில் வந்து சேர்ந்துள்ள பல லட்சம் விவசாயிகளின் வீரம் செறிந்த எழுச்சியை வெகுஜன ஊடகங்கள் உரிய முக்கியத்துவம் தராமல் தவிர்ப்பதன் மூலம் மக்களிடம் நன்கு அம்பலப்பட்டுவிட்டனர். நான்காவது நாளாகத் தொடரும் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு இன்று இன்னும் விவசாயிகள் வந்து சேர்ந்தவண்ணம் உள்ளனர். கடும் பனிப் பொழிவு,போலீசார் தரும் நெருக்கடிகள்,சாலைகளில் பள்ளம் தோண்டியும்,கற்குவியல்களை வைத்தும் ஏற்படுத்தப்படும் ...
ஒரு பக்கம் பட்டினி வறுமை குறித்த நெஞ்சை கனக்க வைக்கும் செய்திகள், மறுபக்கம் தஞ்சை தரணியில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களில் மழையால் நனைந்து வீணான செய்திகள்…என இரு வேறு இந்தியாவை பார்க்கிறோம்! ஒரு வாரத்திற்கு முன்பு மதுரை மாவட்ட திறந்த வெளி குடோனில்9,492 மெட்ரிக் டன் நெல்மூட்டைகள் நனைந்து வீணான செய்தி,அதைத் தொடர்ந்து,கடலூர்,திருநெல்வேலி…என ஒவ்வொரு இடத்திலும் பாழாகும் நெல்மணிகள் குறித்த செய்திகள்…என வந்து கொண்டே இருந்தன! இந்த ஆண்டு என்றில்லை, ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு சில லட்சம் நெல்மூட்டைகள் ...
ஒய்வறியா உழைப்பு, நேர்மையான அரசியல்,வெளிப்படைத் தன்மை ஆகிய குணாம்சங்களைக் கொண்டவர் கே.பாலகிருஷ்ணன்! யோகேந்திர யாதவ் தலைவராக இருக்கும் ’ஸ்வராஜ் இந்தியா’ (சுயஆட்சி இந்தியா) கட்சியின் தமிழக தலைவராக இருக்கிறார் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தமிழகத் தலைவராகவும் உள்ளார்.அவரது நேர்காணல்! ’ஸ்வராஜ் இந்தியா’ கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறிவர்களால் ஆரம்பிக்கப்பட்டது தானே? ஆமாம், அன்னா ஹசாரே போராட்டம் நடத்தியபோது அதில் நான் ஆர்வமாக கலந்து கொண்டேன். கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகிய மூவரும் சேர்ந்து அதன் ...
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் நெல் விற்கச் செல்லும்போது அசல் சிட்டா-அடங்கல் ஆவணம் வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கெடுபிடி செய்வதாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சிவ இளங்கோ கண்டன அறிக்கை வெளியிடுள்ளார். டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடந்துவரும் இந்த வேளையில், தஞ்சை உள்ளிட்ட பெரும்பாலான . டெல்டா மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்க செல்லும்போது விவசாயிகளிடம் நகல் (Xerox) சிட்டா- அடங்கல் இருந்தால் போதும் என்ற உத்திரவு அங்கு நடைமுறையில் உள்ளது. ஆனால் திருவாரூர் ...
இந்த அவசர சட்டங்களும் அதிரடிச் சட்டங்களும் எதற்காக? மத்திய அரசு வேளாண்மை தொடர்பாக மூன்று அவசர சட்டங்களை பெரும் அமளிக்கிடையில் நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் மட்டுமல்ல இதற்கு முன் வந்த சில சட்டங்களும் வேளாண்மையை மேம்படுத்த , விவசாய வருவாயை இரட்டிப்பாக்க என்ற விளம்பர வார்த்தைகளோடு கொண்டு வரப்பட்டன. கால்நடை இனப்பெருக்க சட்டம், மின்சார திருத்தச் சட்டம் – கூட்டுறவு சங்கங்களை மேலாண்மை செய்வதற்கான மாற்றங்கள் போன்றவைகளும் இப்படியான அறிவிப்புகளுடன் தான் வந்தன – சில வெகு முன்பாகவே. பெருவாரியான மக்களின் பார்வையை ஈர்க்காமலேயே. ...