குழந்தைகள் காரணம் தெரியாமல் வீரிட்டு அழும். வயிற்று வலியால் துடிக்கும். வாந்தி எடுக்கும். சரியாகத் தூங்காமல் பல்லைக் கடிக்கும். பெரியவர்களுக்குமே இந்த பிரச்சினைகள் வரும். எப்படி இந்த குடற் புழு, கீரிப்பூச்சிகள் வயிற்றில் வருகின்றன? இதை தவிர்க்கவும், வந்தால் வெளியேற்றவும் செய்ய வேண்டியவை என்ன? குடலில்  தொற்றி உள்ள  புழுக்கள் அல்லது  கீரி பூச்சிகளால் குழந்தைகளுக்கு பெரிய அளவில் உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றது. குடல்புழுக்களில் உருண்டை புழு, கொக்கி புழு, நூல் புழு, சாட்டை புழு, நாடா புழு எனப் பல வகைகள் ...

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த சித்த  மருத்துவ மூலிகை இது! இருமல், சளி, மூக்கடைப்பு, தொண்டை வலி, அலர்ஜி, ஆஸ்துமா, டி.பி எனும் காச நோய்.. என எல்லா வித சளி சம்பந்தமான நோய்களுக்கும் இதுவே முதலுதவி மூலிகையாகும்! ஆடு தொடாத இலை ஆடாதொடை எனப்பட்டது கிராமங்களில்  வேலியோரமாக நட்டு பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது.  இதன் இலை மாவிலை போன்று   நீண்டது,  அடர்த்தியாக  புதச்செடியாக வளரும். நகர்புறங்களில் கூட சாலையோரம் பார்க்கலாம். அதிக நடமாட்டமில்லாத தெரு ஓரங்களில் ...

நோய்கள் வராமல் ஆரோக்கியமாய் இருக்க நினைப்பவர்களும், வந்த நோயை விரட்ட நினைப்பவர்களும், முதுமையை வெல்லத் துடிப்பவர்களும் அதிக காசு செலவில்லாமல் உடல் நலம் பேண விரும்புபவர்களும் நெல்லிக் காயில் என்னென்னவெல்லாம் நன்மைகள் எனத் தெரிந்து கொள்ளுங்க.! தமிழ் சங்கப் பாடல்கள் பலவற்றில் அதிகம் பேசப்பட்ட கனிகளில் ஒன்று நெல்லிக்கனி. அதியமான் நெடுமான் அஞ்சி என்ற அரசன்  தனக்கு கிடைத்த   சிறப்புமிக்க  முதுமையை தள்ளி வைக்கும் அரிய வகை நெல்லிக்கனியை ‘ஞானப்பெண்ணான’  ஔவைக்கு வழங்கி மகிழ்ந்தான்.  அதனைப் பெற்று  அதன் சிறப்பையும்,  மன்னனையும் வாழ்த்தினார் ஒளவை ...

மரபான தொல்குடிகள் அனைத்திலும் வயது முதிர்ந்த பெண்களாலேயே பாரம்பரிய மருத்துவ அறிவு உட்பட தொல்கலாச்சாரங்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன. அந்த வகையில்  தமிழ்  பெண்களின் மருத்துவ அறிவை ”பாட்டி” வைத்தியம் என்று அழைப்பதுண்டு. சூதக வலி எனும் மாதவிடாய் பிரச்சனையை  தீர்க்கும் குன்ம குடோரி மெழுகு அபாரம்! அடிப்படையில் தமிழர் மருத்துவ அறிவை  மூன்று தொகுதிகளாக பிரிக்கலாம். பாட்டி வைத்தியம்,  வைத்தியர் மருத்துவம்,  சித்தர் மருத்துவம்  என்று. 1.பாட்டி வைத்தியம் -என்பது  அனுபவம் வாய்ந்த மூத்த பெண்களால் பெண்களுக்கு உள்ளாக அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும்  ...

சுற்றுச் சூழலும், சமூகச் சூழலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன! தலை வலி, உடல் வலி, மூட்டு வழி, மூச்சுத் திணறல் போன்ற பல வகை பாதிப்புகளுக்குமான அரியதொரு நிவாரணி தான் மின்சாரத் தைலம்! இதை பெரிய செலவில்லாமல் நாமே மிக சுலபமாக தயாரித்துக் கொள்ளலாம். சித்த மருத்துவத்தில்  உடல் வலியை நீக்கக்கூடிய, மேலே தடவ கூடிய  வெளி பூச்சு மருந்துகள்  நிறைய உள்ளன. அதில் முக்கியமான தலைவலி, உடல் வலி, மூட்டு வலி ,ஜலதோஷம் , ஆஸ்துமா, மூச்சுத் திணறல், ...

சோரியாசிஸ் எனப்படும் தோல் நோய் தற்போது பலருக்கும் வருகிறது.தோலானது செதில் செதிலாக உதிர்ந்து கொட்டும். தோல் வறட்சி,வெடிப்பு, அரிப்பு,  சிவந்து காணப்படும். மரபின் மாறுபாடு, தொடர் மன அழுத்தம், முறையற்ற உணவு பழக்கங்கள் காரணமாக வரும், இந்நோயை சித்த மருத்துவத்தில் சிரமின்றி குணப்படுத்தலாம். காளாஞ்சகப்படை  என்ற சோரியாசிஸ் பெரும்பாலும்  முழங்கை முழங்கால் வயிறு, முதுகு  தலையில்,  காது மடல், போன்ற பகுதியில் காணப்படும்.  சில வகைகளில் தோல் மடிப்பு உள்ள இடங்களில்  மார்பு அடிப்பகுதி, பிட்டம், இடுப்பு மடிப்பு போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது. வெகு ...

அகத்தியரின் பெயரில்  ஒரு  மிகச்சிறந்த சித்த  மருந்து ஒன்றுள்ளது.  இது அடிப்படையான சித்த மருந்துகளின் வரிசையில்  முதலானதாகும்!  ஒரு சித்த  மருத்துவர் எல்லா வகை  நோய்களிலும் முதலில் பயன்படுத்தக் கூடியதான இதன் பெயர் “அகஸ்தியர் குழம்பு”. நோயற்ற வாழ்வை விரும்புவோருக்கு இது முக்கியமானது! குழம்பு என்ற சொல், பொதுவாக அரை திரவ நிலையில் (கூழ்ம நிலை) உள்ள பொருளைக் குறிக்கிறது,   [ குழைந்த சோறு போன்ற, ].  சித்த மருத்துவத்தில் பல  மூலிகை சாறுகளை, மருந்து பொருட்களை கூட்டி நெருப்பில் சுண்ட காய்ச்சி எடுத்துக் ...

ஒவ்வொரு தனி நபருக்கும் நோயற்ற வாழ்வுக்கான சில அடிப்படையான தற்சார்பு மருத்துவ அறிவு தேவை! மருத்துவம் என்பது பெருவணிகமான நிலையில் – மருத்துவத் துறையில் மனிதாபிமானம் குறைந்து வரும் நிலையில் – தனி ஒரு மனிதனுக்கு குறைந்தபட்ச தற்சார்பு மருத்துவ அறிவேனும் தெரிந்திருக்க வேண்டும் எனக் கருதியே இந்த தொடரை எழுத ஆரம்பித்துள்ளேன். நம் முன்னோர்களிடம் இந்த தற்சார்பு மருத்துவ அறிவு இயற்கையாகவே பாரம்பரிய வழியில் இருந்துள்ளது. எந்த நோய்க்கு எந்த உணவை சாப்பிட வேண்டும். எதையெதை தவிர்க்க வேண்டும் என்பது பன் நெடுங்காலமாகவே ...

இன்றைய மனித குலம் மாத்திரை, மருந்துகளுடன் வாழ்க்கை நடத்துகிறது! ஒவ்வொரு குடும்பத்திலும் மளிகைக்கு ஒரு பட்ஜெட் இருப்பது போல, மெடிக்கலுக்கும் பட்ஜெட் போடுகிறார்கள்! எந்த மருந்து, மாத்திரைக்கும் ஒரு பக்க விளைவு உண்டு! மருந்தே உணவாக மாறுவது ஆபத்து! உணவே மருந்தாக இருந்தால் ஏது நோய்? `உணவே மருந்து மருந்தே உணவு’ என்று சொல்கிறது சித்த மருத்துவம். ஆனால், இன்றைய சூழலில் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் ஒருவேளை உணவைக் கூட உண்ண முடியாது, உயிர் வாழவும் முடியாது என்று சொல்லுமளவுக்கு நிலைமை மாறிப் போய்விட்டது. ...

‘முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் ‘ -மருத்துவம் சார்ந்த இந்தப் பழமொழியின் பொருள், நம்மை ஆரோக்கியத்துடனும், இளமையுடனும் வைத்துக் கொள்ளக் கூடியது முருங்கைக் கீரை  என்பதாகும்!  பற்பல அரும்பெரும் அற்புதங்களை நிகழ்த்தி பல நோய்களுக்கு தீர்வு தருகிறது! இந்தக் கீரையை யார் ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்கிறாரோ அவர் வயதானாலும் கையில் கம்பு, குச்சி ஊன்றாமல் நடந்து செல்வார் என்பதாகும். முருங்கை கீரை தாய்ப்பால் ஊறச் செய்யும், ஆண்மைக் குறை போக்கும்! ஆனால், நம்மில் பலர் இந்தப் பழமொழியை தவறாக புரிந்துகொண்டு, தங்கள் ...