கூச்சமில்லாமல் பொய் பேசுவதில் ஜெயமோகனுக்கு நிகராக யாருமில்லை! சமஸ்கிருத தொல் நூல்களெல்லாம் 18 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் மொழியாக்கமானதாம்! ஜெயமோகனுக்கும் உண்மைக்கும் துளியாவது சம்பந்தமுண்டா..? தமிழில் தொல் நூல்களே இல்லையா? வெளி நாட்டாரால் அதிகம் கொண்டாடப்பட்ட மொழி எது..? இன்றைய தமிழ்ச் சூழல், சிந்தனையாற்றல் நிறைந்த இளையவர்களை உருவாக்கும் அறிவுபூர்வமான கல்விச் செயல்பாடுகளில் பெரிதும் “நோஞ்சானாகவே” உள்ளது. இவ்வாறான அவலச் சூழ்நிலையையும் மீறி சிந்திக்கத் தொடங்கும் இளைஞர்களின் சிந்தையைக் குழப்பி விடுவதையே தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற, பல துறைகளைச் சேர்ந்த மனசாட்சியற்ற மனிதர்களும் ...

பாரதி, பாரதிதாசன் மரபின் தொடர்ச்சியாக கவிதைகள் புனைந்தவர் தமிழ் ஒளி! சமரசமற்ற எழுத்துப் போராளி! தெறிக்கும் சொல்லாட்சியும், நெஞ்சைப் பறிக்கும் கற்பனை வளமும் நிரம்பிய கவிதைகள் படைத்தவர்! இவ்வளவு சிறப்பு வாய்ந்த கவிஞன் புறக்கணிக்கப்பட்டது ஏன்? அவருக்கான அங்கீகாரம் மறுக்கப்படுவது ஏன்? 1924இல் பிறந்த விஜயரங்கம் எனும் தமிழ்ஒளி 1965இல் மறைந்தார். நாற்பத்தோரு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கவிஞர் தமிழ்ஒளி; மறைவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சுயவிளக்க அறிக்கையை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இது அவரைப் பற்றிய புரிதலை நமக்குத் தரும். நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் ஆகிய ...

விருப்பு, வெறுப்பின்றி கருணாநிதியின் படைப்புகளை மதிப்பீடு செய்யலாம்! இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் அவரது இடம் என்ன? திரைத்துறை சாதனையாளர்கள் வரிசையில் கருணாநிதியின் இடம் என்ன? அவரது படைப்புகளில் காலத்தால் மறையாத இலக்கியம் என்று சொல்லத் தக்கவை என்ன..?  கருணாநிதிக்கு கடலுக்குள் பேனாச் சின்னம் அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது! திராவிட இயக்க படைப்பாளிகளில் கருணாநிதியின் இடம் என்ன? பாவேந்தர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா, சி.பி.சிற்றரசு, எஸ்.எஸ்.தென்னரசு ,ஏ.கே.வில்வம், ராதாமணாளன், டி.கே.சீனிவாசன்.. என்ற வரிசையில் இவர்களை விஞ்சியவராக கருணாநிதியைச் சொல்ல முடியுமா? காலவெள்ளத்தில் ...

உலகப் பொதுமறை தந்த வள்ளுவர் நாம் வாழும் நெறியை வகுத்து தந்துள்ளார். அதில் அடக்கமுடைமை அதிகாரத்தில் தன்னைத் தானே அடக்க வல்ல – தவ வலிமை கொண்ட –  சான்றோரின் சிறப்பை எடுத்து இயம்பும் அழகே தனித்துவமானது! திருவள்ளுவர் தினத்தின் சிறப்பு கட்டுரை! நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது “நிலையில் திரியாது’ என்றால், ‘ஊசலாட்டமற்ற மனம்’  என்று பொருள்; ‘தவநிலை’ என்று பொருள். தவநிலை என்பது மூன்று படிகள் கொண்டது. தவத்திற்காக அமர்ந்த கோலம்! 2) அப்படி அமர்ந்த பின்னர் ...

பரிசல் சிவ. செந்தில்நாதன்  இலக்கிய ஆர்வலர்களுக்கு  மிக பரிச்சியமான பெயர்!  ‘நல்ல புத்தகங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்’ என்ற இலக்கோடு முப்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். பதிப்புலகம் சந்தித்து வரும் சவால்கள், நூலக இயக்கம் , வாசிப்புப் பழக்கம் போன்றவை குறித்து பேசுகிறார். நல்ல புத்தகங்களை கொண்டு வர நினைக்கும் உங்களைப் போன்ற சிறு பதிப்பகத்தார் சந்திக்கும் சவால்கள் என்ன? இங்கு மொழி பெயர்ப்பாளர்கள் குறைவு. மொழிபெயர்த்ததை  சரிபார்க்க, எடிட்டர்கள் இல்லை. ஒரு பதிப்பகம் என்றால் அதற்கு ஒரு கணினி, தட்டச்சு செய்பவர், ...

வீட்டுக்கு தெரியாமல் வேறொரு பெண்ணிடம் பழகி நம்பிக்கை தந்து, அனுபவித்துவிட்டு, பிறகு அந்தப் பெண்ணை தனக்கு தெரியவே தெரியாது எனச் சொல்லும் மைனர்கள் பலரை பார்க்கிறோம். சங்க காலத்தில் இப்படி பெண்ணை ஏமாற்றும் ஆணுக்கு என்ன தண்டனை தரப்பட்டது என்பதை சங்க இலக்கியமான அக நானூறு சொல்கிறது! அரசியல் ஆதாயத்திற்காக வரலாற்றில் நிகழ்வுகளை மாற்றிப் பேசி, கடந்த காலம் ஒரு பொற்காலமாக இருந்தததாகவும், நிகழ்காலம் தான் மிகவும் மோசமாகிவிட்டது என்றும் பிரச்சாரம் செய்பவர்கள் உண்டு! இப்பேர்பட்ட புனைவுகளுக்கு இவர்கள் தேர்ந்தெடுக்கும் விசயங்கள்  மதம், இனம், ...

20 ஆம் நூற்றாண்டு தமிழ் எழுத்தாளர்களில் மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்தவர் ஜெயகாந்தன்! அவரது சிறுகதைகளும், நாவல்களும் தமிழ் சமூகத்தில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியவை! அவரது படைப்புகள் பலரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை உருவாக்கியவை! ஜெயகாந்தன் படைப்புகள் பல இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன! ஆங்கில மொழியிலும், ருஷ்ய மொழியிலும் கூட மொழி பெயர்க்கப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளன! இந்திய அரசின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருதை பெற்றவர் ஜெயகாந்தன். சாகித்திய அகாதமி விருதும் பெற்றவர்.ரஷ்ய அரசின் மிக உயர்ந்த இலக்கிய விருதும் ...

ஜெயகாந்தனை நேசிக்கும் தீவிர வாசகப் பரப்புக்காக இரு நூல்கள் வெளி வந்துள்ளன. ஜெயகாந்தனை குறித்து எவ்வளவு வாசித்தாலும், பேசினாலும் திகட்டுவதே இல்லை! இரண்டு நூல்களையும் படைத்தவர், ஜெயகாந்தனைக் குறித்து உள்ளும், புறமும் நன்கறிந்த எழில்முத்து. அறியப்படாத கூடுதல் தகவல்கள்! நூலாசிரியர் எழில்முத்து மறைந்த புலவர் கோவேந்தனின் மகன்! கோவேந்தன் தமிழ் கூறும் நல்லுலகு அறிந்த நல்ல கவிஞர், கட்டுரையாளர், மொழிப் பெயர்ப்பாளரும் கூட. அது மட்டுமல்ல, நூலாசிரியரின் மாமனார் எழுத்தாளர் தேவபாரதியும் ஜெயகாந்தனின் நெருங்கிய மிக நெருங்கிய ஆரம்ப கால சகா தான்! நூலாசிரியர் ...

‘ஏழரைப் பங்காளி வகையறா’  மதுரை இஸ்மாயில்புரத்தை மையமாகக் கொண்டு, இஸ்லாமிய சமூகத்தின் வாழ்வியலை நேர்கோட்டில் சொல்லும் யதார்த்தமான நாவல் இது. எஸ். அர்ஷியா எழுதிய இந்த நாவல் எளிய மனிதர்களின் உண்மைக் கதையாகும் .வாழத் தெரியாதவன் குடும்பம் படும் பாட்டை பேசுகிறது! ‘ஒரு சமூகத்தின் வாழ்வியலை, மூன்று தலைமுறை ஊடாக,  பேசுகிறது. இது வளமான இலக்கிய நாவல்’ என்று கூறுகிறார் பேரா.எஸ்.தோதாத்ரி். தன் முன்னோர்களின் வாழ்வியலை இழையாகக் கொண்டு ஏழரைப் பங்காளி என்ற வம்சத்தின் பெயரையே நாவலாக்கி உள்ளார், அர்ஷியா. 15 ஆம் நூற்றாண்டில் இஸ்மாயில் ...

தீஸ்தா! அச்சமில்லாதவர்! மோடியை அஞ்ச வைத்துக் கொண்டிருக்கும் மனித உரிமைப் போராளி! குஜராத் படுகொலையையும், அதில் மோடியின் தொடர்பையும் உலகறியச் செய்தவர். ஜெயமோகனின் அறம் மகத்தான மானுட நேயப் படைப்பு! இதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு உண்மைக் கதையும் நம் உள்ளத்தை உலுக்குபவை. குஜராத் கலவர்ம் மற்றும் படுகொலைகளுக்கு நியாயம் கேட்டு இடையறாத சட்ட போராட்டதை நடத்திய தீஸ்தாவை தற்போது ஒன்றிய அரசு கைது செய்துள்ள நிலையில் இந்த நூல் முக்கியத்துவமாகிறது. பத்திரிகையாளரான தீஸ்தா செதல்வாட் எழுதிய  ‘ தீஸ்தா செதல்வாட் நினைவோடை – அரசமைப்புச் ...