சொற்களால் மனிதன் உயர்ந்து நின்றான். மனிதர்களிலே சொற்களை நயமாக கையாளத் தெரிந்தவர்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதையும், அவற்றைப் பயன்படுத்த தெரியாதவர்கள் பாதாளத்தில் கிடப்பதையும் பார்க்கிறோம். நாம் பயன்படுத்தும் தகவல் பரிமாற்றம் நம் வாழ்வையே தீர்மானிக்கிறது; உரையாடலால் உயர்ந்தான் மனிதன். மனிதன்,பேசும் திறனால் மகத்தானவன் ஆனான். பேச்சு அவனை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்தியது. எழுத்து அவனை நாகரீகப்படுத்தியது. கடிதம் மனித இதயங்களை இணைத்தது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லுமே மகத்துவம் உடையது என்பதை அறிந்து கொள்ளாமலே நாம் பயன்படுத்துகிறோம். சொற்கள் வலிமை வாய்ந்தவை. சரியான தருணத்தில் ...

அதிசயக் கலையான அவதானம் தமிழர்களின் தொன்மைக் கலையாகும்! இது மிகக் கடும் பயிற்சிகளால் மட்டுமே சாத்தியமாகும்! ஒரே நேரத்தில் எட்டு முதல் 16 வகையான செயல்களை பிசிறின்றி மிகுந்த நினைவாற்றலுடன், மனப் பயிற்சியுடன் செய்து பெருவியப்பை தோற்றுவிக்கும் இந்தக் கலையின் இன்றைய நிலை என்ன? எல்லா மனிதர்களுக்கும் ஒரு தலை, ஒரு கைகளே உள்ளன! நம்மைப் போலவே உள்ள அவதானிகள் ஒரே நேரத்தில் பத்து தலைகளோ, இருபது கைகளோ இருக்கின்ற அதிசயப் பிறவி போல பல அவதாரங்கள் எடுத்து செயல்படும் கலையே அவதானக் கலையாகும்! ...

சட்டம், வாதங்கள், நீதிமன்றம் என்ற பின்னணியில் விதவிதமான வழக்குகளை எடுத்து கொண்டு, அதில் நீதிக்கான போராட்டத்தை விறுவிறுப்பாக காட்டும் இது போன்ற வித்தியாசமான கதைக் களங்களை எடுப்பதே மகிழ்ச்சியளிக்கிறது. அதை நாடகத்தனமில்லாமல் யதார்த்தமாகவும், சுவாரஷ்யமாகவும் எடுத்துள்ளது வியப்பளிக்கிறது! இயக்குனர் ஷெபாலி பூஷன் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளிவந்துள்ள பத்து எபிசோடுகள் கொண்ட வெப் தொடர் தான் ‘Guilty Mind’. ஒவ்வொரு எபிசோடிலும், முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படுவது வெகு சுவாரஷ்யமாக எடுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் தீபக் ராணா மற்றும் கஷாஃப் குவாஸ் கதாபாத்திரத்தில் ...

சமகால சமூக, அரசியலின் பிரதிபலிப்பே ரவிபேலட் ஓவியங்கள்! ஓலையில் எழுத்தாணியில் தொடங்கி, பேனா, பென்சில், பிரஸ் என்று மாறி, oil painting, water colour, acrylic போன்ற வடிவங்களை கடந்து, கணினி டிஜிட்டல் ஓவியங்கள் மனதை அள்ளுகின்றன! அறச்சீற்றங்களை அற்புத ஓவியமாக்கும் ரவியோடு நேர்காணல்; மதுரையைச் சார்ந்த ஓவியரான ரவி பேலட்  சென்னையில் டிஜிடல் ஓவியக் கண்காட்சி நடத்தி வருகிறார். கலைகளின் முக்கியத்துவம், பள்ளிகளில் அவைகளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம், டிஜிடல் ஓவியங்கள்  போன்றவை குறித்து பேசுகிறார். கண்காட்சி நடந்து வரும் சோல் ஸ்பேஸ் ...

விருதுகளின் பின்னணியில் இத்தனை வில்லங்கங்களா..? தேசிய விருதுகளுக்கு பாஜக அரசு வைத்துள்ள அளவுகோல்கள் என்ன? விருதுகளின் பின்னணியில் இருக்கும் அரசியலை விமர்சிக்காமல் கடப்பது அரசியல் தலைவர்களுக்கு அழகா..? யமுனா ராஜேந்திரன் நேர்காணல்; சர்ச்சைக்கு உள்ளான காஷ்மீர் ஃபைல்ஸ், விண்வெளி விஞ்ஞானியாக மாதவன் நடித்த ராக்கெட்டரி, கடைசி விவசாயி போன்ற படங்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் ஜெய்பீம், கர்ணன், சர்தார் உத்தம் சிங், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திரை விமர்சகரான யமுனா ராஜேந்திரன் விருது வழங்குவதன் அடிப்படை, அதிலுள்ள ...

பொய்களால் பொழுதளந்து, மாயைகளால் வரலாறு படைத்து, இல்லாத வரலாற்றுக்கு விளக்கம் கொடுக்கிறார்கள்! பரத நாட்டியமாம்!  அதென்ன பரத நாட்டியம்? அது யாரிடம் திருடப்பட்டது? யாரால் திருடப்பட்டது? எப்படி மடைமாற்றம் செய்யப்பட்டது? தமிழரின்  தொன்மையான நாட்டிய மரபு  தொலைந்தது எப்படி? 1935க்கு முன்னால் யாராவது ‘பரதநாட்டியம்’ என்று சொல்லியிருந்தால் “அப்படின்னா…. என்ன?” என்று தான் மக்கள் எதிர்கேள்வி வைத்திருப்பார்கள்! அப்படியொரு பெயாரால் தமிழகத்திலோ, அல்லது வேறு எங்குமோ யாருமே அது வரை  நாட்டியமாடியதில்லை. பரதநாட்டியம் என்ற பெயர் தமிழர் பண்பாட்டு மரபில் எந்த தமிழ் இலக்கியத்திலும் ...

லாபம் எதிர்பார்க்கலை. கலை வெளிப்பாட்டிற்கான வாய்ப்பும், மக்களின் கைதட்டல்களும் போதுமானவை! ஜனங்க முன்னால் நடிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும், உற்சாகமும் தான் எங்களையும், நாடகக் கலையையும் உயிர்ப்போடு வைத்துள்ளன! பொன்னியின் செல்வன் நாடகத்தை கட்டணமின்றி காணலாம்! எண்ணற்ற தொலைகாட்சித் தொடர்கள், ஏசி மால்களில் சினிமா, யூ டியூப் ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலத்திலும் மேடை நாடகங்களை விடாமல் நடத்தி வரும் கலைஞர்களுக்கும் பஞ்சமில்லை என்பது வியக்க வைக்கிறது! பொன்னியின் செல்வன் நாடகம் சென்னையில் ஏப்ரல் 16 அன்று மீண்டும் அரங்கேற உள்ளது. பார்வையாளர் ...

 50 வருடங்களாக கேட்டு உருகியும், மயங்கியும், நெகிழ்ந்தும், அழுதும், தவித்தும் நம்மை பலவித மனநிலைகளுக்கு கொண்டு சென்ற கான தேவதையின் குரல் தொடர்ந்து அனைவர் மனதிலும் மேலெழுந்து வருகிறது. வாணி ஜெயராமின் நவரசம் சொட்டும் தேனிசை கீதங்களை மீளவும் நினைவு கூர்ந்தால்.. சில ரகசியங்கள் சொல்கிறது! வாணி ஜெயராம் இந்திய இசை உலகில் பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர், யார் மனதையும் காயப்படுத்தாமல் பேசும் பண்பாளர் எனப் பெயரெடுத்தவர். 50 ஆண்டுகளைக் கடந்த போதிலும் அவரது குரலில் மாற்றமோ, நடுக்கமோ, பிசிரோ சிறிதும் இல்லை! இறை ...

 ‘68,85,45 + 12 லட்சம்’ என்ற இந்த நாடகம் ஒரு தலித் இளைஞனின் பார்வையில், நிலம், நீர், தீ, காற்று ஆகியவை  மீதான உரிமைகள் தலித் மக்களுக்கு  மறுக்கப்படுவதை காட்சிப்படுத்தி, பௌத்தம் தழுவிய அம்பேத்கரின் செய்தியை இறுதியாக வைக்கிறது! ஆடல், பாடல், இசை என்ற மூன்றும் இணைந்த வழியில் காட்சிப் படுத்தப்படுகிறது! சமீபத்திய புதுக்கோட்டை வேங்கை வயல் அவலம் நெஞ்சைத் தைக்கிறது. ஸ்ரீராமானுஜர், காந்தி, பெரியார், அம்பேத்கார் தொட்டு எத்தனையோ ஆயிரம் பெரியவர்களின் கருத்துப் பிரச்சாரத்தாலும் உபதேசங்களாலும் சாதி ஒழியவில்லை என்பது மட்டுமல்ல; இன்னமும் ...

ஜான் லுக் கோடார்டு என்பவர் ஒரு கலையுலக புரட்சியாளர்! இலக்கணங்களை மீறிய இலக்கியமாக சினிமாவைக் கையாண்டவர்! வணிகத்தை மையப்படுத்திய சினிமாக்களுக்கு இடையே வாழ்க்கையை மையப்படுத்திய சினிமாவை தந்தவர்! உலக சினிமாவின் உன்னத முன்னோடியாக பார்க்கப்பட்டார்! “ஒரு சினிமாவுக்கு ஒரு தொடக்கம், ஒரு நடுப்பகுதி, ஒரு முடிவுப்பகுதி இருக்க வேண்டும்; ஆனால் அவை அந்த வரிசையில் இருக்க வேண்டியதில்லை” என்கிற புரட்சிகரமான கோட்பாட்டை சினிமா உலகுக்கு அளித்த ஜான் லூக் கோடார்டு என்னும் மகத்தான சினிமா கலைஞன் கடந்த செப்டம்பர் 13ம் நாள் தனது மரணத்தை ...