கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம்,சென்னை திமுக அரசின் மீதான ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடும் விமர்சனங்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்? திமுக அரசின் மீது, முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் மீது ஆளுநருக்கு ஏன் இவ்வளவு பாசம், அக்கறை என நான் ஆச்சரியப்படுகிறேன். ஆளுநர் தன்னுடைய கர்ண கடூரமான, முட்டாள்தனமான, ஏற்றுக் கொள்ளவே முடியாத அடாவடி பேச்சுக்களின் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பையும் தன்பால் திருப்பிக் கொள்கிறார்! எதையாவது அடிக்கடிப் பேசி, நம் அனைவரையும் சரியாக உசுப்பிவிடுகிறார்! அடுத்த பத்து, பதினைந்து நாட்களுக்கு அதுவே நமது ...

கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம்,சென்னை சமீபத்தில் ‘ஸ்டிங்டிக் ஆபரேஷன்’ என்ற பெயரில் யூ டியூபர்கள், பத்திரிகையாளர்கள் சிலர் அம்பலமாகி உள்ளனர். அது பற்றி உங்கள் கருத்து என்ன? என்னை பொறுத்தவரை இது அதிர்ச்சியும் அல்ல, ஆச்சரியமும் அல்ல! அம்பலப்பட்டவர்கள் மிகக் குறைவு. அம்பலமாகாமல் உலா வருபவர்கள் மிக அதிகம். பல ஊடகப் பெருந்தலைகள் – வெளி உலகில் பெருமதிப்புடன் நடமாடும் பலர் –  இவ்விதம் சோரம் போனவர்களே! பொதுவாக ஊடகத்துறை உள்ளீடின்றி உளுத்துக் கிடக்கிறது –  உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை ! எப்போது அரசியல் ...

க.அப்துல்கலாம், ஹைதராபாத். தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும்..? அதைத் தான் ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறாரே – கூட்டணி கட்சிகளுக்கு குழி தோண்டிய படி! கு. தங்கவேல், நாமக்கல் லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு கிளைமாக்ஸ் இப்போது கேட்க கூடாது என்கிறாரே கமல்? அரசியலைக் கூட சினிமாவைப் போல் தான் அணுகுகிறார் கமல்! ஆதாயங்கள் கிடைக்கும் வரை ஒட்டி உறவாடுவதும், சந்தர்ப்பம் பார்த்து வெட்டிக் கொண்டு விலகிச் செல்வதும், அவருக்கு புதிதல்ல! எஸ், கோபிநாத், ஆத்தூர், சேலம் சட்டசபை கூட்டத் ...

ஜோதிலிங்கம், சிவகாசி, விருதுநகர் ஈரோடு கிழக்கு தொகுதியில்  மிகப் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்து விட்டார், ஓபிஎஸ் என்கிறார்களே..? அவர் விட்டுக் கொடுக்க முன் வந்தது பாஜகவிற்கு! அவர்கள், அவரை விட்டுவிட்டு சென்றுவிட்டனர் எடப்பாடியின் அதிமுகவிற்கு! முட்டி மோதி முயன்றார், அதிமுகவின் சரிவிற்கு! ஐயோ பாவம்! அதில் அவரே சரிந்து போனார் ! விட்டு ஓடுவதை தவிர வேறு வழியில்லை ஓபிஎஸ்க்கு! லஷ்மணன், பெங்களூர் மக்கள் நீதி மையம் திமுகவை ஆதரிக்கிறதே..? ஐயோ பாவம்! நிலைமை இப்படி ஆகிவிட்டது! பாபு, புதுக்கோட்டை ஷாக்கடிக்கும் தகவல் ஏதாவது ...

க.செபாஷ்டின், வேலூர் உழைத்தவர்களை ஓரம் கட்டி ஒண்ட வந்தவர்களுக்கு அரியாசனம் தருகிறது தலைமை என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி அங்கலாய்துள்ளாரே? திமுக தொண்டர்கள் பலரின் குமுறலாக அவர் வெளிப்பட்டுதாகவே கருதுகிறேன். அதிமுக தலைமை கழித்துக்கட்டிய எச்ச.சொச்சங்களைக் கொண்டு தான் தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறதா என்ன? அதிமுகவில் இருந்து வந்த எட்டு பேருக்கு தற்போது அமைச்சர் பதவி! இது போல மாவட்டம் தொடங்கி ஒன்றியம்,வட்டம் வரை அதிமுகவில் இருந்து வந்தவர்களே திமுகவை ஆக்கிரமித்துள்ளனர். சொந்தக் கட்சிக்காரனுக்கு சூனியம்! அடுத்த கட்சியில் இருந்து வருபவனுக்கு ...

மு. ரத்தினவேல், விருதாச்சலம் சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்பட போட்டி பிரிவின் தேர்வு குழு தலைவர் நாடக் லேபிட்டின் காஷ்மீர் பைல்ஸ் பற்றிய விமர்சனம் சரியானது தானா? நாடக் லேபிட் கூறி இருப்பதாவது; ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ஆல்  தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்தோம். இது பரப்புரை நோக்கம் கொண்ட கொச்சையான திரைப்படம் என்ற எண்ணம் எங்களுக்கு தோன்றியது. இது போன்ற மிகவும் மதிப்புமிக்க திரைப்படவிழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல. வாழ்க்கைக்கும், கலைக்கும் விமர்சனம் குறித்து ஆலோசிப்பது ...

கருப்பசாமி, அருப்புக் கோட்டை பாஜகவிடம் தாங்கள் வியக்கும் அம்சம் என்ன? இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக அது மாறி இருப்பது! காங்கிரசை காலியாக்கிக் கொண்டிருப்பது! திராவிடக் கட்சிகளை அடிமைகளாக ஆட்டுவிப்பது! பாமக போன்ற ஏராளமான சாதிக் கட்சிகளை பொம்மலாட்டம் ஆட வைப்பது! கண்ணுக்கு தெரிந்த வரை – இன்றைய நிலையில் – மற்ற கட்சிகளின் தலை விதியை தீர்மானிக்கும் நிலையில் உள்ள பாஜகவை தீர்த்துக் கட்டும் அரசியல் சக்தி ஒன்றைக் கூட காண இயலவில்லையே! க.செபாஷ்டின், வேலூர் ‘அரசுப் ...

பாண்டித்துரை, அரசரடி, மதுரை கனியாமுத்தூர் பள்ளி தொடர்பாக ஊடகங்களில் இரண்டு பிரேத அறிக்கைகளை ஒப்பிட்டு வழக்கறிஞர்கள் பேசினால் நடவடிக்கை எடுக்கபடும் என்கிறாரே நீதிபதி சதீஸ்குமார்? ஜனநாயகத்தை காப்பதற்காகத் தான் நீதிமன்றம்! அழிப்பதற்காகவல்ல! மடியில் கனமிருப்பவர்கள் பதற்றப்படவே செய்வர்! நீதிபதி ஏன் பதறுகிறார். க.செபாஷ்டின், வேலூர். ‘செந்தில் பாலாஜியை இன்னும் வலுவாக தாக்கி பேசுங்கள்’ என திமுக அமைச்சர்கள் சிலரே தன்னிடம் ஏர்போர்டில் பேசியதாக அண்ணாமலை கூறியுள்ளாரே..? நான் விசாரித்த வகையில் இது உண்மை தான்! ஸ்டாலின் தலைமையில் திமுகவின் அதிகாரமட்டத்தில் நிலவும் குழப்பத்தின் அறிகுறி ...

ரேஷன் கடைகளை ஒழிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் சதிக்கு திமுக அரசு துணை போகிறதா? நெல் கொள் முதலில் இனி அரசு நேரடியாக ஈடுபடாதாம்! அரிசி ஆலைகளை தனியாருக்கு தரப் போகிறார்களாம்! பொது விநியோகத் திட்டம் ஊழலில் புழுத்துக் கிடக்க என்ன காரணம்..?சி.சந்திரகுமார் நேர்காணல். தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள,  நுகர்பொருள் வாணிபக் கழகத்தை கூட்டுறவுத் துறைக்கு மாற்றக் கூடாது. அரிசி ஆலைகளை தனியாருக்கு தரக்கூடாது. நிர்வாகச் சீர்கேட்டை தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், நுகர்வோருக்கும் சேவை செய்துவரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்  ...

சுரேஷ்குமார், கும்பகோணம், தஞ்சாவூர் ஒ.பி.எஸ்சுக்கு தற்போதைய ‘பாஸ்’ யார்? உங்கள் கேள்வியிலேயே அவர் தனக்கான பாஸ்களை மாற்றிக் கொள்பவர் என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கிறது! அவரது முதல் பாஸ் டி.டி.வி தினகரன், அதற்குப் பிறகு சசிகலா, பிறகு ஜெயலலிதா, இதன் பிறகு மோடி, குருமூர்த்தி..என்பதாகத் தொடர்ந்தது. தற்போது எதிர் முகாமிலேயே தனக்கு பாதுகாப்பான பாஸ் ஒருவரை கண்டறிந்துள்ளார். ஒன்றிய அரசின் தயவை விட, உள்ளூர் அரசின் தயவால் தான் தன் அரசியல் எதிரிகளோடு மோத முடியும் என அவர் சமீபகாலமாக சார்ந்து நிற்கக் கூடிய ...