ஆறுகளைத் தேடி – 6 பச்சை நிற மலைகளுக்கும், நீல நிறக் கடலுக்கும் இடையில் ரத்த நாளங்களை போல வெள்ளி நிற நீரோடைகள் பாய்ந்தோடும் ஒரு அழகிய நிலப்பரப்பு குமரி மாவட்டம்! மலைகள், அருவிகள், ஓடைகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், வயல் வெளிகள், பாக்கு, தென்னந் தோப்புகள், நீரோடும் வாய்க்கால்கள், கடற்கரையோர பொழிமுக பகுதிகள், அலையாத்திக் காடுகள் என ஒட்டு மொத்தமாக இயற்கையின் அழகை ஒரே இடத்தில் காண முடியும். என்றும் இளமையாக இருக்கும் ஓர் நிலப் பரப்புக்கு குமரி என்று பெயர் வைத்தவர்கள், ...

கன்னியாகுமரி மாவட்டம் மகேந்திரகிரி மலைத்தொடர்களின் தெற்கு சரிவில் தோன்றுகிறது பறளியாறு. கோதையாறு போல பழமையான பாசன கட்டுமானங்களை கொண்டது பறளியாறு. அதன் தொன்மை பற்றி அறியும் முன் பறளியாற்றை வளமிக்க ஆறாக வைத்திருக்கும் காட்டாறுகளை குறித்து அறிந்துக் கொள்வோம். வல்வன்கல் மலை, பாலமோர், மாறாமலை, வில்லுசாரிமலை, ஆலம்பாறை, வலியமலை, புறாவிளை, சாம்பகுச்சி, முடுவன்பொற்றை, இஞ்சிக்கடவு, கொட்டப்பாறை, கூவைக்காடுமலை, வெள்ளாம்பி உள்ளிட்ட மலைகளில் தோன்றும் ஊற்றுக்கள், ஓடைகள், காட்டாறுகள் பறளியாற்றை வளமிக்க ஆறாக வைத்திருக்கிறது. பெருஞ்சாணி அணை என்கிற பெரும்பள்ளத்தில் தேக்கிவைத்திருக்கும் பறளியாற்றில் பல காட்டாறுகள் ...

ஆறுகளைத் தேடி -4 தமிழ் நாட்டில் இயற்கை எழில் கொஞ்சும் பேரதிசயங்களை கொண்டது கன்னியாகுமரிமாவட்டம்! கொட்டித் தீர்க்கும்! குதூகலித்து ஓடும்! கண்களை விரிய வைக்கும்! இதயங்களை அள்ளும்! மனதை வருடும், மயக்கம் கொள்ள வைக்கும்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்..! இங்கே ஒரு சிறிய அறிமுகம்; குமரி மாவட்டத்தில் ஓடும் தாமிரபாணி ஆற்றை நலம் விசாரிக்க எண்ணி நீங்கள் ஒரு மடல் எழுதினால், அதன் முகவரியில், கோதையாறும் பறளியாறும் தோன்றும் வனப்பகுதியும் இடம் பெற்றாக வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி மேற்கு திசையில் பாய்ந்தோடி ...

ஆறுகளைத் தேடி – 3 கோதையாறு, பறளியாறு, குழித்துறையாறு, வள்ளியாறு, பழையாறு உள்ளிட்ட சிறிதும் பெரிதுமாக 20க்கும் மேற்பட்ட ஆறுகள் பாய்கிறது கன்னியாகுமரியில்! பல்லாயிரமாண்டுகளாக நாஞ்சில் நாடான குமரி மாவட்டத்தை வளமுடன் வைத்திருக்கும் ஆறுகள் பற்றி அறிந்து கொள்வது காலத்தின் தேவையாகும்; இந்த பயணத்தை தெற்கில் இருந்து துவங்கலாம். குமரியை தமிழ்நாட்டின் தென் எல்லையாக தொல்காப்பியத்தின் சிறப்புப்பாயிரம் குறிப்பிடுகிறது. ”வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகு” கன்னியாகுமரியின் மேற்கில் மேற்குத்தொடர்ச்சி மலைகளும், தெற்கில் இந்திய பெருங்கடலும், கிழக்கில் வங்க கடலும் வடக்கில் திருநெல்வேலியும் ...

ஆறுகளைத் தேடி – 2 ஆறுகள் உலக இயற்கை வளங்களின் ஒரு அங்கம். இயற்கையின் சுழற்சியில்  பல்வேறு விதங்களில் எவ்வாறு ஆறுகள் உருவாகின்றன என்பதே சுவாரஷ்யமாகும்.காலம் தோறும் ஆறுகள் தங்கள் வழித் தடத்தை மாற்றி கொண்டும் ஓடுகின்றன! ஆறுகள் என்பவை இயற்கையின் ரகசிய உயிரோட்டமாகும்; பொதுவாக மேடுகளில் இருந்து பள்ளங்களை நோக்கிப் பாயும் இயற்கையான நீர்வழித்தடங்களை ஆறுகள் என்கிறோம். இரு கரைகளுக்குள்ளாக வெள்ளம் பாய்ந்தோடும் இயற்கை நீரியல் அமைப்பை ஆறுகள் என்று நீரியல் அறிஞர் கே.எல் ராவ் கூறுகிறார். மனித முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட நீர்வழித் ...

மூச்சுவிட முடியவில்லை! இரும்பை உருக்கும் நாற்றம் குடலை புரட்டுகிறது! ஆலையின் புகையால் ஊரில் காணும் இடமெல்லாம் கருமை படிந்து கிடக்கிறது! செடிகள், இலைகள், நீர் நிலைகள், நிலமெல்லாம் கருந்துகள்கள்! வாழ்வாதாரத்தை அழிக்கும் தொழிற்சாலைகள், குவாரிகளின் பின்னணியில் ஆட்சியாளர்களா..? பாத்திரத்தில் தண்ணீர் பிடித்துவைத்துவிட்டு சற்று நேரம் கழித்து பார்த்தால் கருந்துகள்கள் மிதக்கின்றன! விவசாயக் கிணறுகள் எல்லாம் கருந்துகள்கள்! இதனால் ஊரில் உள்ள மூன்று கிணறுகளுமே மூலியாகிவிட்டன!ஊரில் கருந்துகள் படிந்த செடிகளை உண்டு ஆடு, மாடுகள் மடிந்து சாகின்றன! கடந்த சில ஆண்டுகளில் பல்லடம் தாலுகாவில் உள்ள ...

நம் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் இயற்கை பற்றிய புரிதல் இன்றியே நாம் வாழ்கிறோம். தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் வாழ்வாதாரமாக உள்ள ஆறுகள் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளன! அவற்றை மீட்டெடுக்கும் நோக்கமே இந்த தொடர்! இது தமிழ்நாட்டில் ஓடும் இயற்கை நீர் வழித் தடங்களின் ஆவணம்! ஆறுகள் மனித சமூகத்தின் நாகரிகத் தொட்டிலாக விளங்குகின்றன. உலகின் பல்வேறு தொன்மையான நகரங்கள் ஆற்றங் கரைகளில் தான் அமைந்துள்ளன. எனவே, ஆறுகள் பண்பாட்டு முக்கியத்துவம் பெறுகின்றன. உலகெங்கும் ஆறுகள் வேளாண்மை, குடிநீர் ,மின்னாற்றல், தொழிற்கூட பொருளுற்பத்திக்கு அடிப்படைத் ...

வடசென்னை முற்றிலும் வாழத் தகுதியற்ற இடமாகிவிட்டது! அங்குள்ள மனிதர்களை அரசும், தனியார் நிறுவனங்களும் ‘வோர்க்கிங் சோர்ஸ்’ ஆகத் தான் பார்க்கிறார்களே அன்றி, மனிதர்களாகப் பார்ப்பதில்லை.  25 ஆபத்தான தொழிற்சாலைகள் அணிவகுக்கும் பகுதி! ஒன்றடுத்து ஒன்றென பல விபத்துக்கள் வாடிக்கையாகிவிட்டதே..! எத்தனை கோர அனுபவங்கள் கிடைத்தாலும், முன்கூட்டியே செய்ய வேண்டிய அடிப்படையான முன் எச்சரிக்கை ஏற்பாடுகளைக் கூட, எப்போதும் செய்வதில்லை என தனியார் நிறுவனங்கள் பிடிவாதம் செய்கின்றன. அவர்களை கண்காணித்து வழிக்கு கொண்டு வர வேண்டிய அரசின் மாசுக் கட்டுபாடு வாரியமோ, காசு கலெக்‌ஷன் வாரியமாக, ...

இயற்கை தருகிறது பாடம்! அதை கற்க மறந்ததால் தேடுகிறோம் ஓடம்! வரமான மழையை ஏன் சாபமாக்கி கொள்ள வேண்டும். நாம் கற்க தவறியமை என்ன? கற்க வேண்டியவை என்ன? பெற்ற வலிகள் என்னென்ன..? வரப் போகும் காலங்களை எதிர்கொள்ள என்ன திட்டம்..? ஒரு அலசல்; பருவமழை மீண்டும் அதன் கோர உருவப் படத்தை தமிழ் நாட்டில் வரைந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில், தீவிர மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையால், வட தமிழ்நாட்டின் ...

மிக்ஜம் புயலில் வட சென்னையின் மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் (CPCL) ஏற்பட்ட மிகப் பெரிய எண்ணெய் கசிவு குடியிருப்புகளில் புகுந்து சகலவற்றையும் சர்வநாசம் செய்துள்ளது! இந்த பேரவலம் இன்னும் தொடர்கிறது. எண்ணெய் பரவலால் 25 கீ,மீ வரை கடலில்  மீன்கள் செத்து மிதக்கின்றன! மீளாத் துயரில் மீனவர்கள்!  சென்னை மணலி பகுதியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடட் (சிபிசிஎல்) நிறுவனத்தில் இருந்து கசிந்த பெரிய அளவிலான எண்ணெய்க் கசிவால் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக பரவிய எண்ணெய் படலம் வட சென்னை மக்களின் ...